தொடர் : 37
உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
ரகுவீர்-மனதின் வார்த்தைகள்
காதலால் என் மனதை களவாடியவளே
மைவிழியால் என்னை மயக்கியவளே
தேனாக இசைத்தடி நின் காணம்.
தெவிட்டாத தெள்ளமுது நின் பேச்சு
மாயம் செய்து என்னை மாற்றவே
மலை விடுத்து இவ்விடம் வந்தாயோ
எனக்காகக் காயம் பட்டது நின் மேனி
உனக்காக உருகுதடி என் ஆவி
ராமன் தேடினான் சிதையை, என்னுயிர்
ஜானகி தேடினாள் இந்த ரகுவீரனை!
ரகுவீரின் மனதில் வடிவாகி உருவாகி உருகிய வார்த்தை என்னவென்று சொல்வது. ஜானகி, என் புவாஷாவின் மகள். எனக்காக என் அத்தை பெற்ற ரத்தினமோ?
"ஜானகிக்கா அமுதன் அண்ணாவின் அம்மா. என் பெரியப்பா சிவகுரு நாதனின் மனைவி ஸ்வர்ண ராகினி. உங்கள் அத்தை, ஐ மீன் புவாஷா. " என விலாவாரியான விளக்கம் தந்தான் கணேஷ். தன் பெரியம்மாவைப் பற்றிச் சொன்ன வார்த்தைகள், எத்தகையது என அவன் அறிய மாட்டான்.
ரகுவீர், தன்னவளின் நதிமூலம் இங்கிருந்தே உருவானது என அறிந்தப் பின்னே அதிர்ந்து தான் நின்றான். பேசும் மொழி மறந்து போனது அவனுக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பதையும் ,மறந்து ஸ்தம்பித்து நின்றான்.
"அண்ணா. அண்ணா!!!" என அமிர்தா அழைக்க சிவகணேஷ், தன் முன்னால் நிற்பதை உணர்ந்து, "உண்மையாவே புவாஷா அங்க தான் இருக்காங்களா?" என்றவன் கண்களிலிருந்து தாரையாகக் கண்ணீர் வழிந்தது.
"தாங்க்ஸ் சோட்டூ தாங்க் யூ வெரிமச்." என உணர்ச்சி வயப்பட்டுச் சிவகணேஷை கட்டி அணைத்துக் கொண்டான்.
"நீ, உண்மையில் என் வாழ்க்கையின் மிகப் பெரிய சந்தோஷத்தை திருப்பித் தந்திருக்கச் சோட்டூ." என அவனை மீண்டும் அணைத்தவன் , வா என அவனை அழைத்துச் சென்று ஷோபாவில் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டான்.
"ஜூகுனு, வீட்டில் இருக்கும் எல்லா இனிப்பும் எடுத்துட்டு வா." எனக் கட்டளை இட்டவன், "உனக்குத் தெரியுமா எனக்கு எங்க புவாஷான்னா ரொம்ப இஷ்டம். மாஷா மடியிலிருந்ததை விட, அவர்கள் மடியில் தான் வளர்ந்தேன்." என உணர்ச்சிப் பெருக்கில் அதே நான்கு வயது சிறுவனான் ரகுவீர் சிங் ராத்தோட்.
ஜூகுனு கொண்டு வந்த இனிப்புகளைத் தன் கையால் சிவகணேஷ்க்கு ஊட்டி விட்டான். "அம்ரூ, எடுத்துக்கோ என் புவாஷா கிடைச்சிட்டாங்க." எனக் கண் கலங்கி நெகிழ்ந்தான்.
"புவாஷாவின் இப்ப உள்ள போட்டோ இருக்கா?" என ரகுவீர், ஆவலாக கேட்க, சிவகணேஷ், தன் பேமலி போட்டவை காண்பித்தான். தீபாவளி பண்டிகை அன்று, ஒன்று கூடிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும், கணேஷ் தனக்கு இருந்த போட்டோகிராபி ஆசையால், தன் விலையுயர்ந்த கேமராவில் அழகாய் பிடித்து வைத்திருந்தான்.
தன் மொபைலில், வைத்திருந்த புகைப்படங்களை ரகுவீரிடம் காட்டினான். ராகினியின் தற்போதைய நிழற்படம், கண்ணீர் பெருக்கோடு ஆசையாக வருடினான். "புவாஷா!" என அழைத்துக் கொண்டான்
ரகுவீரின் உணர்வு பெருக்கு நிலை அமிர்தாவுக்கும் கண்ணீரை வரவழைத்தது. வரிசையாக ராகினி சிவகுருவின் படம், "இது எங்கள் மாமா", என்ற அமிர்தா, "சாரி அண்ணா, நம்ம மாமா, உங்கள் புஃபாஷா." என்றாள்.
அவன் கவனமாகச் சிவகுருநாதனைப் பார்த்து, "இவங்களை நான் சின்னப் பையனா இருந்தபோது, ஹேமந்த் பூபாஷாவோட பார்த்திருக்கேன்." என்றான் ரகுவீர்.
"ராகினி அத்தை மேல் உயிரையே வச்சிருக்காங்க மாமா. அத்தை, மாமா அவ்வளவு அன்யோன்யம். எங்க அம்மா சொல்லுவாங்க, 'இவங்க இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தரென்று வரம் வாங்கிப் பிறந்தவங்க , இல்லைனா, எங்கோ வடக்க இருந்த மகராசி, இங்க வந்து அரசாளுமா?' அப்படின்னு சொல்லுவாங்க." என்றாள் அமிர்தா.
"அத்தான், உங்களைப் பார்க்கும் போது பேசனும்னே, நாங்கள் ஹிந்தி கத்துக் கிட்டோம். ஏன்னா, ராகிம்மாவின் வர்ணனையால் நீங்க எங்களுக்குப் 'பால் கோபால்- வீரூஜீ'." எனச் சிரித்தான் சிவகணேஷ்.
ரகுவீருக்கு, இவர்கள் பேச்சைக் கேட்டதில் வியப்பு மேலிட்டது. நான் என் புவாஷா, என்னை மறந்ததாக நினைக்க, அவர் தன் குடும்பத்தையே, என்னை நினைக்க வைத்துள்ளார் எனத் தன் மனதில் புவாஷாவை நினைத்துப் பெருமிதம் கொண்டான். ஜானகியின் வீருஜியும் இப்போது புரிந்தது.
அடுத்தப் படங்கள் ஜானகியின் பல்வேறு போஸ்களில், பட்டுச் சேலைக் கட்டி, பின்னலிட்டு, தலை நிறைய மல்லிகைப் பூச்சூடி, ஒரு கன்றுக்குட்டியை அணைத்த வண்ணம் இருந்தாள் . அடுத்தடுத்த போட்டோக்களில் ஜானகி அசத்தலாக, விதவிதமாக நின்றாள். ரகுவீர் இமைக்காமல் கண்களில் காதல் வழியப் பார்த்திருந்தான். அமிர்தாவின் மொபைலை வாங்கி, ரகுவீர் ரியாக்ஷனை அவனறியாமல் வீடியோ எடுத்தான் கணேஷ்.
"அத்தான், இந்தப் போட்டோஸ் உள்ள ஃபோல்டர், உங்களுக்கு அனுப்புறேன். அடுத்து என அமுதன், பாலன், கணேஷ் ட்ரையோ போஸ். இவங்க எங்கள் தாத்தா, அப்பத்தா எனக் காட்டினான். இவர்கள் தான் தன் காதலுக்கு மரியாதை தந்து, துணைப் புரிவார்கள் என்பதை அறியாமல் பார்த்தான். எங்க அம்மா, அப்பா, எனக் காட்டினான், "இவர்களுடன் தொலைப்பேசியில் பேசி இருக்கேன்." என்றான் ரகுவீர்.
"எங்கம்மாக்கு, சுட்டுப் போட்டாலும் ஹிந்தி வராதே எப்படிப் பேசுனீங்க?" என கணேஷ், கேலியாக கேட்கவும், "அவங்களும் இதையே தான் சொன்னாங்க." என்றான் ரகுவீர்.
அமிர்தாவின் குடும்பப் போட்டோவும் காட்டினான். "எங்கள் அத்தை, இவர்கள் அம்மா, அப்பா, அண்ணன்கள், அண்ணிகள், அண்ட் குட்டீஸ்." என அறிமுகப் படலம் முடிந்தது.
"எல்லாப் போட்டோலையும், ஜான்வி எப்படி இருக்கா?" என ரகுவீர் கேட்க,. "டைரக்டரே, எங்க அக்கா தான் இப்படி நில்லுங்க, உட்காருங்கள் சிரி சிரிக்காதே, அங்க பாரு, இங்க பாருன்னு உயிரை வாங்கும். நம்ம சொன்னா, போஸ் கொடுக்க மாட்டாங்க அக்கா சொன்னால் மறுப்பே கிடையாது." என அக்காள் புராணம் பாடினான் சிவகணேஷ்.
"இன்னைக்கு, மும்பை வந்ததே, அதை வச்சுத் தான். சிறுமலை பற்றிய என் போட்டோகிராபி, காம்படீஸனுக்குச் செலக்ட் ஆனது, அதோடு கொஞ்சம் கடல் தீவு இதெல்லாம் வேண்டும். ஒரு சோசியல் மீடியா ஃப்ரண்டு, தான் அரேஞ்ச் பண்றாங்க. ஒரு கேங் நாளைக்கு அங்க போகிறோம். இரண்டு நாள் சூட்டிங் பெர்மிஷன் வாங்கியாச்சு." எனத் தன் மும்பை விசிட்டுக்கான, காரணமும் சொன்னான் சிவகணேஷ்.
செகாவத் ஹவேலியில் மஞ்சரியின், பெரியப்பா மகள் மோனலின் ஷாதிக்கான ஆரம்பம் கணேஷ் பூஜையுடன் அங்கே ஆரம்பமானது. ராத்தோட் குடும்பத்தினர் ஜானகியை உடன் அழைத்துச் சென்று அதில் கலந்து கொண்டனர்.
அடுத்த நாள் காலையில், ஹரிணி, அமர்சிங் டாக்கூர் குடும்பச் சகிதமாக உதய்பூர் வர இருந்தனர்.
உதய்பூரில், கணேஷ் பூஜையுடன், ஷாதியின் சுப ஆரம்பம் ஆனது. இங்கே மும்பையில், சிவகணேஷ், தன் அக்காளின் மனப் புத்தகத்தின் பக்கங்களை, தன் அத்தானுக்குப் புரட்டிக் காட்டிக் கொண்டு இருந்தான்.
"அத்தான், உங்களை எப்படி அடையாளம் கண்டு பிடிச்சேன்னு நீங்க கேட்கவே இல்லையே?" என்றான் சிவகணேஷ்.
"சோட்டே,(சின்னவனே) நீ, என்னைய முறை சொல்லி கூப்பிட்டப் பாரு, சூப்பர்டா. அதிலையே, உங்கக்கா மனசில் நான் தான் தெரிந்து போச்சு. அவள் ஒரு கல்பிரிட், மேடம் என்கிட்ட தான் முறைப்பா, மறைப்பா உங்க எல்லார்க்கும் அவள் என்னை விரும்புறான்னு தெரியும் அப்படித்தானே?" என்றான் ரகுவீர்.
"எப்படித்தான் இவ்வளவு கான்பிடென்ட், அவள் மனசை ஸ்கேன் பண்ண மாதிரி சொல்றீங்க." என்றான் கணேஷ்.
"அது அப்படித்தான், நீ லவ் பண்ணும் போது தெரிஞ்சுக்க." என்றவன், "அப்ப நான் மட்டும் தான் பாகல் கைக்கா, மற்ற எல்லார்க்கும் தெரியும் அப்படித்தானே?" என்றான் ரகுவீர்.
"பெரியவர்களில் அமரேன் அங்கிள்க்கு மட்டும் தெரியும். சிறியவர்களில் ரன்வீருக்குத் தெரியாது அங்க அத்தை மாமாவுக்குத் தெரியாது.” என்றாள் அமிர்தா.
"அம்ரூ, நான் உன்னை மயூ மாதிரி தான் நினைக்கிறேன், ஆனால் மயூவே என்கிட்ட மறைக்கும் போது, நான் வேற யாரைக் குறை சொல்றது?" எனத் தன் தம்பி, தங்கை தன்னை நம்பி விசயத்தைச் சொல்லவில்லை என்ற ஏமாற்றத்தில் பேச,
"அண்ணா ப்ளீஸ்! என்னை மன்னிச்சிடுங்க, உங்களுக்கு ஜானியைப் பத்தி தெரியும் தானே. அவள் தான் மறுத்தாள். நான் என்ன செய்ய முடியும்?" என அம்ரூ தன்னிலை விளக்கம் தந்தாள்.
"புவாஷா, உதய்பூரில் இருக்கும் போது நான் இங்க கையைக் கட்டிட்டு உட்கார முடியாது. நிச்சயம் ஏதாவது பிரச்சினை வரும். கணேஷ் உன் ப்ளான் என்ன என்றான்?" ரகுவீர்.
"நாளைக்கு சாயந்திரம், அந்தத் தீவுக்குச் சூட்டிங் போறோம், காலைல நான் ப்ரண்ட்ஸ் கூட மீட்டிங், நீங்க கிளம்புங்க நீங்க திரும்பி வரும் போது நானும் வந்துடுவேன் அக்காவைப் பார்த்துட்டு தான் சென்னை." என்றான் கணேஷ்.
"ஓகே குட் நாளைக்கு மார்னிங் ப்ளைட்ல நாம உதய்பூர் போகலாம் அம்ரூ கிளம்பு" என்றான் ரகுவீர்.
அமிர்தாவிடம், பாலனிடம் புவாஷா வரும் பயண ஷெட்யூலை வாங்கச் சொன்னான் ரகுவீர். அதன்படி, ராகினி வரும் ப்ளைட்டுக்கு முன்னர் இவன் உதய்பூர் சென்று விட டிக்கெட் புக்கிங் செய்தான்.
ஹேமந்த் செகாவத், தன் நண்பர்களுக்காகத் தாஜ் லேக் பார்க்கில், பத்து ரூம்களை புக்கிங் செய்து வைத்திருந்தார். அமுதன், சென்னையிலிருந்து ஜெய்ப்பூருக்கு ப்ளைட் பிடித்தவன் காலையில் கார் மூலம் உதய்பூர் வந்து சேர்கிறான்.
ஓம்பிரகாஷ் பல்லா மற்றும் ப்ரீத்தோ ஜெய் மற்றும் ஹர்லீனை அழைத்துக் கொண்டு இரவே உதய்பூர் வந்து சேர்ந்து விட்டனர்.
அதிகாலை ஆறு மணிக்கு எல்லாம் மும்பை- உதய்பூர் விமானம் தரையிறங்கி விட்டது. ரகுவீர் அமிர்தாவுடன் வந்தவன், நேரே அவளைத் தங்கள் ஹவேலிக்கு அழைத்துச் சென்றான். ராஜிடம் அமிர்தாவை வேறு அறையில் தங்க வைக்கச் சொன்னவன், தான் மயூரியை அழைத்து வருவதாகச் சென்றான்.
உதய்பூரிலிருந்து சற்றே தூரத்திலிருந்த, மஹாராணா விமான நிலையத்துக்கு தன் புவாஷாவைக் காணும் ஆவலுடன் அதே நான்கு வயது சிறுவனாக வந்து நின்றான் ரகுவீர்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே போல், ஒருநாளில் தான் அவனது புவாஷா, அழுத கண்களுடன் அந்த ஆடவரின் பின்னால் சென்றார், அதற்கு ரகுவீர் சாட்சி. அதே போல் இன்று விமான நிலையத்தில் கூலர்ஸ் அணிந்து, லாபியில் புவாஷா வருகைக்காகக் காத்திருந்தான்.
டெல்லியிலிருந்து வரும், விமானம் தரையிறங்கும் அறிவிப்பு வந்தது. அரைமணியில் பயனிகள் வெளியே வந்தனர். ஹேமந்த் சரியாக அதே நேரம் தன் நண்பர்களை வரவேற்க வந்து சேர்ந்தார்.
முதலில் தொப்பையுடன் தோரணையாக மங்கள் பாண்டே தன் மனைவி பர்க்காவுடன் வந்தார். அவர்கள் பின்னே கம்பீரமாகச் சந்திரசேகர் ரெட்டியும், பார்வதி அம்மாவும், குழந்தை தியாவுடன், ஶ்ரீநிதியும் அவளோடு மயூரி, மஞ்சரியும் லக்கேஜ் ட்ராலியுடன் வந்தனர்.
கடைசியாக புவாஷாவை, ஒரு கையில் அணைத்தவாறு மறு கையில் ட்ராலியைத் தள்ளிக் கொண்டு சிவகுரு நாதன் வந்து சேர்ந்தார்.
"ஸ்வர்ணி, நீ சும்மா இருக்கியா, டோன்ட் கெட் எமோஷனல், நடந்துருவியா இல்லை தூக்கனுமா?" என அவர் கேலி பேச பதட்டம் நிறைந்த ராகினியின் முகத்தில் சிறுநகை எட்டிப் பார்த்தது.
"ஹலோ ஓல்ட் மேன் நீ இன்னும் ஜவான் லட்கா இல்லை மறந்துடாதே." எனப் பாண்டே பின்னால் திரும்பி கிண்டல் செய்தார்.
"உன்னளவு ஓல்ட் கிடையாதுடா நான் பிட் தெரியுமா, மலை ஏறி இறங்குறவன்டா. மயூ இந்த ட்ராலியை பிடிடா ஸ்வர்ணியை தூக்கிக் காட்டவா?" எனச் செயலில் இறங்கப் பார்த்தார்.
"சோடியேஜீ எல்லாரும் பார்க்குறாங்க. நான் ஒன்னும் டென்ஷன் ஆகலை." என்றார் ராகினி.
ரகுவீர், தன் புவாஷாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவரைப் பூஃபாஷா தாங்குவதைப் பார்த்தவன் மனம் திருப்தி அடைந்தது.
ஹேமந்த் நண்பர்கள் மூவரையும் பார்த்து, கட்டியணைத்துக் கொண்டார். கண்கள் கலங்கி இருந்து. ராகினியிடம் கை கூப்பி நின்றவர், இராஜஸ்தானி மொழியில், "நான் உன்னுடைய குற்றவாளி, முடிந்தால் என்னை மன்னித்துவிடு ராகினிமா!" என மன்னிப்புக் கோரினார்.
"ஜீஜூஷா, இதென்ன பப்ளிக் ப்ளேஸ்ல, நான் அதெல்லாம் மறந்துட்டேன். இதோ இங்க வந்ததே அதற்குச் சாட்சி. பம்மி நல்லா இருக்கிறாளா?" என வினவினார்.
"நல்லா இருக்காம்மா." என்றவரை சிவகுரு, "விடுடா பேரன் பேத்தி எடுத்த பிறகும் இதையே சொல்லுவியா? ராகினியை நான் தான் சமாளிக்க முடியும்னு ஆண்டவனே என்னோடு அனுப்பிட்டார்." என்றார் சிவகுரு.
"ஏம்மா, அவ்வளவு டெரராகவா மாறிட்ட, சிவா இப்படிப் புலம்புறானே." என்றார்.
"பாயீஷா, எல்லா மர்த்தும்(ஆண்கள்) இப்படித்தான் மனைவிக்குப் பயந்த மாதிரி நடிக்கிறது. பம்மி பாபியை கேட்டால் சொல்லுவாங்க நீங்களும் அப்படித்தான்னு." என்றார் பர்க்கா.
"பஹன்ஜீ, நான் சரண்டர். பம்மியை உங்கள் லிஸ்ட்ல சேர்காதீங்க. அது படாகா, மஞ்சுமா பாபுஷா சரியா சொன்னேன் தானே?" என மகளைச் சப்போர்ட்டுக்கு அழைக்க,
"மாமிஜீ, எங்க மாஷா இருக்காங்களே, ஓ காட் இதில் என்னையும் எங்க பாபுஷாவையும் தான் பயங்கர டார்ச்சர்." எனப் பாபுஷாவுக்கு ஜால்ரா போட்டாள்.
மயூரி, ஹேமந்தை வணங்க அவளை அணைத்துக் கொண்டார். மயூரி, மஞ்சரியைப் பார்த்து, "இன்னைக்கு உங்களால் தான் என் நண்பன் கிடைத்தான்." என உருகினார்.
"பூபாஷா ராஜ் பய்யா என்ன பிக்கப் பண்ண வரேன்னு சொன்னாங்க." என்றாள். "இன்னும் வரலைப் போல, நான் போற வழியில் ட்ராப் பண்றேன்." என்றார்.
இவர்கள் கிளம்பும் நேரம், "பூபி, புவாஷா, தூ, மண்ணே சாத் நஹி லே ஜாவோகி?" (அத்தை,என்னை கூடக் கூட்டிட்டு போக மாட்டியா) எனக் கேட்டான் ரகுவீர்.
ராகினி அந்த வார்த்தைகளில் ஸ்தம்பித்துத் திரும்பினார். கண்களில் அருவியாகக் கண்ணீர் கொட்ட, "வீரு, தூ கித்தே ஹோ?" எனச் சத்தமாகக் கேட்டார் ராகினி.
"தாரே சாம்னே ஹை, பூபி பைசான் நஹி கயோ?" (உன் முன்னாடி தான் இருக்கிறேன் அடையாளம் தெரியலையா?) என்றபடி ராகினியின் முன்னால் வந்து நின்றான் ரகுவீர்.
தன் முன்னே ஆறடி ஆண்மகனாக, இராஜஸ்தானிகளுக்கு உரிய கம்பீரத்துடன் நின்ற இளைஞனைப் பார்த்த ராகினி, "தூ???” என அவனுக்கு நேராகக் கையை நீட்டினார். அவர் கையைப் பிடித்துத் தன் கன்னத்தில் வைத்துக் கொண்ட ரகுவீர், "புவாஷா என்னை மறந்துட்டியா?" என்று சிறுபிள்ளையாக அழுதான்.
"இல்லை வீரு உன்னை எப்படி மறப்பேன் நீ என்னோட ஜான் இல்லையா!" என அவனை அணைத்துக் கொண்டார் ராகினி. அவனின் முதுகில், தலையில் தடவுவதுமாக தனது மகனாக வளர்த்த பாஞ்சாவை தொட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தார்.
இந்த அத்தை மருமகன் உணர்வு பூர்வமான சந்திப்பைப் பார்த்து நெகிழ்ந்த மற்றவர்கள் அவர்களுக்குத் தனிமை கொடுத்து காபி ஷாப்புக்குள் சென்றனர். மயூரியும் சிவகுருவும் மட்டும் உடன் இருந்தனர்.
இருவரையும் ஓரத்திலிருந்த ஷோபாவில் அமர வைத்தார் சிவகுரு. ராகினியின் ஹேண்ட் பேகை, மயூரி வாங்கிக் கொண்டாள். ராகினியைக் கட்டிக் கொண்டு விடவே இல்லை ,அவரை அணைப்பதும் முத்தமிடுவதுமாகவே இருந்தான் ரகுவீர்.
"புவாஷா, நான் உங்களை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா? நீங்க அந்த அங்கிளோட அழுதுகிட்டே போனதைப் பார்த்தேன். தூங்கும் போது, நீங்க அழுதது ஞாபகம் வந்து நானும் அழுவேன்." என்றான் சிறுவனாக. இவ்வளவு நாள் யாரிடமும் பகிராத ரகசியங்களைச் சொல்ல, ஏதோ அவன் இப்போதுதான் அப்படி இருந்தது போல் அவன் கன்னங்களை கைகளில் ஏந்தி முத்தமிட்டார்.
"என்னை விட்டுட்டு போய்ட்டிங்கன்னு உங்கள் மேல் பயங்கரக் கோபம் புவாஷா, பேசவே கூடாதுன்னு இருந்தேன். இப்ப பாருங்க ஏதோ மேஜிக் வச்சுருக்கீங்க நீங்க."என அவர் மீதே சாய்ந்துக் கொண்டான் ரகுவீர்.
"நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன் வீரூ. உன்னைப் பிரிந்தது தான் எல்லாத்தையும் விடத் தாங்க முடியாமல் போனது." எனக் கண்ணீர் வடித்தார்.
"புவாஷா, போதும் இனி நோ மோர் டியர்ஸ்." எனக் கொஞ்சினான். ஜானகியோ, அமுதனோ பார்த்திருந்தால் நிச்சயமாகப் பொறாமையில் வெந்திருப்பார்கள், அவ்வளவு அன்யோன்யம் இந்த அத்தை மருமகனிடம்.
தனது படேபையாவை கம்பீரம் குறையாமல் ஒரு பிஸ்னஸ் மேனாக, தந்தை ஸ்தானத்தில் வைத்துப் பார்த்த மயூரி, புவாஷாவுடன் அவன் நெருக்கத்தைப் பார்த்து அதிசயித்தாள். அவன் தனது மாஷாவிடம் கூட இவ்வளவு நெருக்கத்தைக் காட்டியது இல்லை.
ஹேமந்த் மற்றவர்களைக் காரில் லேக் பேலஸுக்கு அனுப்பி வைத்து விட்டார். மஞ்சரியுடன் இவர்கள் இருந்த இடத்திற்கு வந்தவர், "ஜமாயிஷா, ஹவேலிக்கு போக வேண்டாமா புவாஷாவை இங்கேயே காக்க வைப்பிங்களா?" எனக் கேட்டார்.
அதன் பின்னரே சுற்றுப்புறம் உணர்ந்தான் ரகுவீர். "பெரிய பிஸ்னஸ் மேன், இப்படியா நான்கு வயசு பையன் மாதிரி இருக்கிறது. பூஃபாஷாவை வாங்கனு கேளுங்கள்." எனச் சொல்லிக் கொடுத்தார் ஹேமந்த்.
தன்னைச் சமன் படுத்திக் கொண்ட ரகுவீர், எழுந்து நின்று, சிவகுரு நாதன் காலைத் தொட்டு வணங்கி, கைக் கூப்பி "கம்மாகனி பூஃபாஷா, வாங்க. இவ்வளவு நாள் எங்கள் புவாஷாவை கண் போல் பார்த்துக் கிட்டத்துக்கு நன்றி. எங்க மேல இருக்கும் தவறையும் மன்னிச்சிடுங்க." எனக் கை கூப்பி நின்றான்.
"இதென்ன தம்பி நீங்களும் அமுதன் மாதிரி ஒரு மகன் தான். இந்த ஃபார்மாலிட்டி எல்லாம் வேண்டாம். நடந்ததை நினைச்சு யாருக்கு என்ன லாபம். விடுங்க. ஸ்வர்ணி அவள் குடும்பத்தோடு சேரனும். அது தான் முக்கியம்." என்றவர் ராகினியிடம்,
"ஸ்வர்ணி, இந்தக் குட்டிப் பையன் தானே நமக்கு இடையில் ஒடுனது, இப்பப் பார் ஜவான் லட்காவா நிற்கிறார். நமக்கு வயசாகிடுச்சா என்ன?" என்றார் சிவகுரு.
"இல்லைடா சிவா, இன்னொரு முறை கையைப் பிடிச்சிகிட்டு ஹீரோயிசம் செய்ற அளவு ஜவான் நீ." எனக் கேலி செய்தார் ஹேமந்த்.
"புவாஷா, பூஃபாஷா வாங்க, நம்ம ஹவேலிக்குப் போகலாம்.” என அழைத்தான் ரகுவீர்.
ஹேமந் தான், "நஹி ஜமாயிஷா, காலையில் பதினோரு மணிக்கு சில முக்கியமான ஆட்களுடன் உங்க ஹவேலிக்கு வர்றேன். கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு . லேக் ஹோட்டல் வாங்க. அங்க விளக்கமாகச் சொல்கிறேன்." என்றவர் முதல் காரில் மஞ்சரி, மயூரியை அழைத்துச் சென்றார்.
பின்னாடியே ரகுவீர், தன் அத்தை, மாமாவை பின்சீட்டில் அமர்த்தி லேக் ஹோட்டலை நோக்கி காரை செலுத்தினான். வழி நெடுக ராகினி அந்த ஊரின் மாற்றங்களை அதிசயித்துப் பார்த்து வந்தார். தன் பிறந்தகத்தில் எல்லாரைப் பற்றியும் கேட்டு அறிந்து கொண்டார் ராகினி.
தாஜ் லேக் வ்யூ ஹோட்டல், ராயல் லுக்குடன் மிகவும் ரம்யமாக இருந்தது. அதில் ஒரு டபுள் சூட்டில், இவர்கள் வருகைக்காக அனைவரும் காத்திருந்தனர். ரகுவீர் காரை பார்க் செய்து, புவாஷாவுடன் வந்து சேர்ந்தான். சிவகுருவை பல்லாஜீ கட்டியணைத்து வரவேற்றார்.
"வீர்ஜீ, எப்படி இருக்கீங்க, பாபிஜீ சங்கா ஹைனா?" என விசாரித்தார் ராகினி. ப்ரீத்தோ தான், "ஆயியே நநத்ஜீ, உங்கள் புண்ணியத்தில் நாங்களும் உதய்பூர் பார்த்திட்டோம்." என்றார்.
அங்கே, ஓமி பல்லா, ப்ரீத்தோ ஆண்டிக்கு நமஸ்தே சொன்னான் ரகுவீர். "ஆயியே புத்தர்ஜீ, ஜீத்தே ரஹோ." என்றனர். ஜெய் பல்லா வந்து ஆவோ பாயீ என அணைத்துக் கொண்டான். ஹேமந்த், ரகுவீருக்கு ஒவ்வொருவராக அறிமுகம் செய்து வைத்தார். அவர்களை நமஸ்தே சொல்லி வணங்கினான்.
"ஜமாயிஷா, நாங்கள் ஜந்து நண்பர்கள் பஞ்சபாண்டவர்கள் போல இருந்தோம். டில்லியில் ஒன்னா சிவில் இன்ஜினியரிங் படிச்சோம். இவங்க மங்கள் பாண்டே, பர்க்கா பாண்டே யூபி காரங்க. இப்போது டில்லியில் பிஸ்னஸ். இரண்டு பசங்க, முதல் மகன் ஆரவ்பாண்டே, ஐஏஎஸ் ஆபீஸர், மருமகளும் ஐஏஎஸ், சின்ன மகன் அமித்பாண்டே, ஏர்போர்ஸ் பைலட்.
இவன் சந்திரசேகர ரெட்டி, பார்வதிரெட்டி, இரண்டு பொண்ணுங்க. ஶ்ரீமதி, ஶ்ரீநிதி. பெரிய பொண்ணு சாப்ட்வேர் இன்ஜினியர் மருமகனும் அதே. சின்ன மகள் எம்பிபிஎஸ் ஹவுஸ்சர்ஜன்” என அறிமுகப் படுத்தியவர்,
“ இப்போ விசயத்துக்கு வருவோம், எனக்கும், ராகினிக்கும் ஷாதி நிச்சயம் பண்ணி இருந்தாங்க, ஆனால் அதுக்கு முன்னமே பங்குரியும் நானும் விரும்பினோம். பெரியவங்க வார்த்தையை மீறவும் முடியாத நிலமை பங்குரி சூஸைட் அட்டண்ட் பண்ணினாள் எப்படியோ, நான் காப்பாத்திட்டேன். இது ராகினிக்கு தெரிய வந்தது. ஷாதியை நிறுத்தனும்னு முடிவெடுத்தோம்.
அப்போது இன்னொரு பெரிய பிரச்சினை எங்கள் முன்னால் வந்தது. உங்கள் குடும்பத்தோடு சம்பந்தம், உங்கள் புவாஷாவின் ஷாதி என்பது பெரிய ப்ரஸ்டீஜியஸ் விசயம்,
ராத்தோட்ஸ் குடும்பத்தோட, ரெனாவத் செகாவத் குடும்பங்கள் பல தலைமுறை சம்பந்தம் உடையவங்க. உங்கள் பர்தாதிஷா ரெனாவத் குடும்பம். பெரிய ராணியாக ஒரே பொண்ணு. மேவாட் ராஜ குடும்பத்தின் வழிவந்தவர்கள். அவர்கள் கிட்ட ராஜ பரம்பரை விலை மதிப்பற்ற நகைகள் உண்டு. அதனால் உங்கள் குடும்பச் சம்பந்தம் பெரிய மரியாதை உடையது.
அதில் ஒரு பகுதியை எங்க படிமாஷா, உங்கள் பாபுஷாவோட, புவாஷாவுக்கு, ஷாதி செய்த போது போட்டாங்க. அவங்களுக்கு வாரிசு கிடையாது. ஆனாலும் படே பாபுஷாவுக்குக் குடும்பப் பெருமை அதிகம். அதனால் தம்பி மகனான என்னை, ராத்தோட்ஸ் சரிசமமாகக் கான்வெண்ட் படிப்பு, இன்ஜினியரிங் எனப் படிக்க வைத்தார். எப்படியாவது இன்னொரு பகுதி நகையும் இங்க வந்து பெருமை அதிகமாகனும்னு, ராகினியை எனக்குப் பேசுனாங்க.
நான் பங்குரியை பார்த்த அளவு, ராகினியை பார்த்தது இல்லை. எனக்கு பங்குரி மேல் விருப்பம், அவளும் உங்கள் குடும்பம் தான். ஏற்கனவே ராத்தோட் குடும்பப் பெண் மற்றும் நகைக்காக,ரெனாவத், செகாவத் இரண்டு குடும்பத்துக்கும் பயங்கரப் போட்டி” என நடந்ததை சொன்னார்.
ஷாதி நடக்கும் போது, பொண்ணை மாற்றும் முடிவு, ராகினி உடையது. இது ராகினியின் தாதிஷாவுக்குத் தெரிந்து விட்டது, அவர்களுக்கு இங்கு இருக்கும் , முரட்டுக் கும்பலைப் பற்றியும் நன்கு தெரியும். அதனால் ஹேமந்த்தின் நண்பர்கள்,நால்வரையும் அழைச்சார். ராகினிக்காக, சிவாவின் தவிப்பைப் பார்த்தவர் உடனே முடிவெடுத்தார். சிவாவின் பூர்வீகம் பற்றிக் கேட்டவர் அவன் தாத்தாவுக்குப் போன் செய்யச் சொன்னார். சிவாவின் தாத்தாவிடம் , உங்களுக்கு ஒரு தங்கையாக இருந்து கேட்கிறேன். "என் பேத்தியை அனுப்பி வைக்கிறேன். அவளைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு." என ஸ்வர்ண மஹாலக்ஷ்மி ராத்தோட் கேட்டார்.
"நீங்க அனுப்புங்கள் தங்கச்சி என் பேத்தி மாதிரி பார்த்துக்கிறேன்." என வாக்கு கொடுத்தார் சிவாவின் தாத்தா. மொழி தெரியாத ஊருக்கு, தன் பேத்தியின் உயிரைக் காக்க இந்தத் தமிழனின் நம்பிக்கையில், என் நண்பர்கள் உதவியுடன் அனுப்பி வைத்தார் தாதிஷா.
"நான், பங்குரியை விரும்பிய விசயம் வெளியே வந்தால், ராத்தோட்களின் பகை வரும் எனக் கணக்குப் போட்ட என் படே பாபுஷா, ராகினி யாருக்கும் தெரியாமல் ஓடியதாகக் கதை கட்டினார். ரெனாவத்களைத் தூண்டி இன உணர்வு எனச் சொல்லி திசைத் திருப்பினார். என் படிமாஷா இப்போது இல்லை, ஆனால் படே பாபுஷா இருக்கிறார். நான் இன்னும் இரண்டு மணிநேரம் கழித்து உங்கள் ஹவேலிக்கு கூட்டிட்டு வரேன். என் நண்பர்களும் வருவாங்க, ராகினியின் கலங்கம் துடைக்கப் பட வேண்டும். அதன் பிறகு நீங்களே உங்கள் புவாஷாவை கூட்டிட்டு வாங்க." என முடித்தார் ஹேமந்த் செகாவத்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, அமுதனும் வந்து சேர்ந்தான். ஹேமந்த், மஞ்சரியை அழைத்துக் கொண்டு, ரகுவீர் மயூரியை அழைத்துக் கொண்டு அவரவர் ஹவேலிக்கு கிளம்பினர்.
கிளம்பும் முன் தன் புவாஷாவிடம் வந்த ரகுவீர், "பூபி, இன்றைக்குப் பிரச்சினை முடிந்து உங்கள் கையில் தான் எனக்குச் சாப்பாடு. அதுவரைக்கும் விரதம் தான். உங்கள் வீருக்கு தால் ரொட்டி ஊட்ட வந்துடனும்." எனச் சொல்லி கன்னத்தில் முத்தமிட்டுச் சென்றான்.