உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
வாடா தம்பி வீட்டுக்குப் போலாம்
என்ன குழம்பாம்
சிக்கனாம்
நாட்டுக்கோழி
இல்லையே
பிரச்சனை
என்னன்னு
தெரியலை
ஊரைவிட்டு
கிளம்பணுமாம்
பாத்துக்
காலை வை
முள்ளு
இருக்கப்
போகுது
ஒன்னுக்கு
வந்தா சொல்லு
சட்டையை
ஈரமாக்காதே
பொடிப்பயல்ன்னு
சொல்றாங்களே
அப்டின்னா என்ன
காலைலேர்ந்து
பசி ஒருத்தனும்
ஒருவாய்ச்சோறு
தரமாட்றான்
என்ன
அப்பனுக்கும்
ஆத்தாளுக்கும்
மறுபடியும்
சண்டையா
ஒழுகாதக்
கூரை
நமக்கு
எப்போ
வாய்க்கும்
வழுக்கி
விழுந்தான்
சிரிச்சேன்
கன்னத்துல
அடிக்கிறான்
பக்கத்துல
பாப்பாவுக்கு
துணியேயில்ல
சோறு கொடுத்தேன்
என்னமோ
காசுன்றாங்க
வாழ்க்கைன்றாங்க
மிருகமாட்டம்
நடந்துக்குறாங்க
குறும்பில
குறும்பாப்
போட்டி
நீயும் வா
துண்டைக்
காணோம்
துணியக்
காணோம்
நாமளா
உலகம்
உருண்டையாமே
நாம எப்படி
நடக்கிறதாம்
பள்ளிக்கூடத்திற்குக்
கூப்பிடாத படிச்சு
காந்தியே
செத்துட்டாராமே
ஒரே ஏக்கமா
இருக்குப்பா
அம்மாவ
எப்போ
பார்ப்போம்
மீன்குழம்பு
வாசனை
நம்மள்தா
பக்கத்து வீடா
தோடா
பெரிய மனுஷி
வந்துட்டா
சோதரான்னுட்டு
பகல்ல
நட்சத்திரம்
எல்லாம்
எங்கே
தங்கும்
பூவும்
பொன்னும்
ஒன்னு
கேட்காம
பறிக்கக்கூடாது
காலையில
குடிச்ச காடி
பைப்புத்தண்ணி
கிடைக்குமா
பசிக்குத்
தின்னா
அதுக்குப் பேர்
திருட்டாக்கா
இளமையில்
வறுமை கொடிது
பிஞ்சு வயதில்
நாமெல்லாம்
தேவையில்லைன்னா
இந்தப் பூமியேன்
பொறந்துச்சு
ஆடுமாடு
ஒன்னாயிருக்கு
மனுசன் மட்டும்
ஏனிவ்வாறு
பயப்படாதக்கா
நண்பன்
அரை பிஸ்கோத்து
கொடுத்தான்
ரொம்ப
தூரமாம்
கையப்
பிடிச்சுக்கோ
போய்டலாம்
-
நடராஜன் பெருமாள்