Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு களஞ்சியம்

வகைகள் : களஞ்சியம்

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


களஞ்சியம்
80- இந்தியாவின் பெருமை 

 

சக்தி -ஜானகி ரகுவீர் சிங் ராத்தோட் 

நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஒரு மாலை நேரம் ராத்தோட் ஸ்வர்ண மஹலில் ருத்ரா காரை துடைத்து வைத்துக் கொண்டு தயாராக நின்றான். இன்று அவனின் ராணிஷாவிற்கு விருது வழங்குகிறார்கள், அதுவும் 'பிரைட் ஆப் இந்தியா!’ எனும்  அங்கீகாரம். ஒரு பிரபல நாளிதழும், பெரிய நடிகரின் அமைப்பும் சேர்ந்து சமூகத்திற்கு  நன்மை செய்யும் தன்னார்வத் தொண்டு அமைப்புகள், மற்றும் அதன் நிறுவனர்கள், சாதனையாளர்களுக்கு இந்த விருதைத் தருகின்றனர்.

 இந்த நான்கு வருடத்தில், மும்பாவை கைப்பற்றிய ஜானகியின் பார்வையில் அதே போன்ற பாதிக்கப் பட்டப்  பெண்கள் அவள் கண்களில் பட்டனர். இவர்களுக்கு நன்மை செய்ய என ஒரு அமைப்பை ஏற்படுத்தினாள். ரகுவீர் ஆதரவும், ருத்ராவின் பாதுகாப்பும், சைலேந்திரனின் உதவியும் இருந்ததால் பாதிக்கப்பட்டப் பெண்களை மீட்க முடிந்தது. ஜானகியை எதிர்வந்த மிரட்டல்களை அவளே அலட்சியமாகத்தான் பார்ப்பாள், அது அவள் இயல்பு, ஆனால் ரகுவீர் தோள் தந்தான், கூரை ஏறிக் கொடிப் பிடித்தாள், அவளை ஆபத்து நெருங்காது வண்ணம் ருத்ரா சுவராக நின்றான். ருத்ராவைக் கொண்டே ரகுவீர் ஜானகியையும் காத்து வந்தான் என்றே சொல்ல வேண்டும்.

 விழாவிற்கு  ராஜ், மஞ்சரி தாதாஷா, தாதிஷாவுடன் காரில் வெளியேறினர், அதே நேரம் தன்னுடைய காரிலிருந்து இறங்கிய ரகுவீர், "ருத்ரா உங்கள் ராணிஷா ரெடியா?" எனக் கேட்டான்.

 

"உங்களுக்காகத் தான் ராத்தோட்ஷா எதிர்பார்த்துக் காத்திருக்காங்க." என்றான் ருத்ரா. "சரி நீ ரெடியா இரு. இதோ வந்துடுறேன். ஃபங்சன் ஆரம்பிக்கும் முன்னால் போகனும்." என்றவாறு லிப்டில் ஏறினான்.

மூன்றாம் தளத்தில் இறங்கும் போதே, "படே பப்பா மை கை சிஹூம்." எனத் தக்கி முக்கிய மழலையில் கேட்டது ராஜ்வீர், மஞ்சரி மகள் இரண்டரை வயது ஸ்வர்ண ஸ்ருதி.

"ஓ மேரி ஸோனு, பகூத் அச்சிஹோ." எனத் தூக்கி ஆரத் தழுவி கன்னத்தில் முத்தமிட்டான் ரகுவீர்.

"படே பப்பா மேக்கப் கராப் ஹோகயி." எனத் தனது பவுடர் பூச்சைக் காட்டி இறக்கி விடச்சொன்னது.

"வீரூபா, நீ ஏன் இவ்வளவு லேட். ஜானுமா அவார்ட் ஃபங்சனுக்கு இவ்வளவு லேட் பண்ணுவியா, பஹூத் கந்தா ஹை. கித்னே தேர் இந்தஜார் கர்தே ஹை. பாத் மத் கர்ணா. உன் கச்சி டூ." எனத் தமிழ் ஹிந்தி இராஜஸ்தானியில் கலந்துக் கட்டி சண்டைப் போட்டாள் ஸ்வர்ன ராகவி. ரகுவீர் ஜானகியின் சீமந்தப்புத்ரி. 

"மேரி ஸோனு குடி ஹைனா. பாபா சே பாத் கரோ ஸ்வராகி." [அப்பாவின் தங்கப் பிள்ளை, பேசுங்கடா]எனக் கெஞ்சினான் ரகுவீர். அது மேலும் முறைத்துக் கொண்டது.

'அம்மா மாதிரியே அடம்.' என மனதில் நினைத்த நேரம்.

"பாபு. அவளை விடுங்க. ஜல்தி ரெடி ஹோ ஜாவ். மாஷா வெயிட்டிங்!" எனப் பெரிய மனிதனாகத் தீர்ப்புச் சொன்னான் விஜேன் எனும் விஜயேந்தர் சிங் ராத்தோட். குட்டி

அவன் மகள் கோபமாக இருப்பதில் நிற்க, "ரகுவீ சீக்கிரம் ரெடியாகு. நாங்கள் எல்லாரும், குழந்தைகளோடு போகிறோம். ருத்ரா வண்டியோடு இருப்பான். நீயும் ஜானியும் வந்து சேருங்க. இப்பப் போனால் தான் முதல் வரிசையில் உட்கார முடியும்." என ஷப்னம் பேரன், பேத்திகளை அழைத்துக் கொண்டு கிளம்பினார். ராஜேன், கஜேன், ஸர்குன், பூனம் அனைவரும் சீக்கிரம் வந்துடு ரகுவி எனச் சென்றனர்.

 "தாதாஷா, தாதிஷாவை ராஜ்வி, மஞ்சரி கூட்டிட்டுப் போயிட்டாங்க." என உபரித் தகவலைத் தந்து போனார் அமரேன். "எதிர்க்கப் பார்த்தேன் சாச்சா." என்றான் ரகுவீர்.

 ரகுவீர் மேல் தளத்திற்குத் தங்கள் அறைக்குச் சென்றான். ஜானகி ட்ரெஸ்ஸிங் ரூமில் ப்ளவுஸோடு போராடிக் கொண்டிருந்தாள். ரகுவீர் உள்ளே நுழைந்து சேலை தழுவாத அவள் மேனியைக் கண்டு மோகத்தோடு பின்னியிருந்து அணைத்துக் கொண்டான். அவளோடு இழைந்து, "என்னோடைய பிரைடை இன்னைக்கு இந்தியா, தன்னுடைய பிரைடா சொல்லிக்குதுடி.வாழ்த்துக்கள்டி லுகாயி, என்ன கிப்ட் வேணும் சொல்லு." என்றான்.

 "ம்க்கும், அதுவும் உங்களால்தான், உங்க சப்போர்ட் இல்லமால் உங்கள் லுகாயி ஒண்ணுமே இல்லை." என அவனோடு இழைந்து குழைந்துக் கொண்டிருந்தவள், நினைவு வந்தவளாக

 "வீரூஜி ரொமான்ஸுக்கு நேரமில்லை ஃபங்சனுக்கு நேரம் ஆச்சு. ப்ளவுஸ் ஹூக்கை மாட்டி விடுங்கள். உங்களுக்கும் ட்ரெஸ் எடுத்து வச்சிருக்கேன் போட்டுக் கிளம்புங்கள் ப்ளீஸ்." என  டென்ஷனாகச் சொன்னாள்.

 "மேரிஜான், நீ விட்டால் தான் நான் கிளம்ப முடியும். பூகி ஸேர்ணி. என்னைக் காளையன்னு சொல்லுவ நீ என்னவாம்?" என்றான்.

 "நீங்க வேற கடுப்ப கிளப்பாதீங்க. இரண்டு ரூம் கட்டி என்ன பண்றது, என் புருஷனைக் கட்டிக்கிட்டு தூங்க கூட விட மாட்டேங்குதுங்க. மூனுத்துக்கும் நம்ம பெட் தான் வேணுமாம், மஞ்சி இங்க தள்ளிட்டு ஆனந்தமாக இருக்கா." எனப் புலம்பினாள் ஜானகி.

 ரகுவீர் ஹாஹா எனப் பெரிய சிரிப்பாகச் சிரித்தவன். "மாட்டிட்டேன். சேலையைக் கட்டிட்டுக் கிளம்பு. இராத்திரி பஞ்சாயத்தை வச்சுக்கலாம்." என அவள் லிப்ஸ்டிக் போடாததை உறுதிப் படுத்திக் கொண்டு வன்மையான இதழொற்றளை தந்து போனான்.

 அரங்கம் நிரம்பி இருந்தது. நாம் ஏற்கனவே சொன்னது போல் நாட்டின் முன்னணி நாளிதழும், பெரும் நடிகர் ஒருவரின் அமைப்பும் சேர்ந்து பல்வேறு நல்ல விசயங்களைச் செய்யும் நல்லவர்களை ஊக்கப் படுத்தத் தரப்படும் உயரிய விருது. 'ப்ரைட் ஆப் இந்தியா' அதனை இன்று ஜானகியும் பெறுகிறாள்.

 ராத்தோட்ஸ் தாதாஷா, தாதிஷா முதல் ஸ்வர்ண ஸ்ருதி வரை எல்லா ராதாதோட்ஸ்களும் ஆஜர். ஜானகி, சிம்பிள் அண்ட் எலிகண்ட் டிசைனர் ப்ளவுஸ் மற்றும் உயர் ரகக் காட்டன் சேலையோடு மிடுக்காக இருந்தாள். ரகுவீர் கோட் சூட்டில் வர இருவருமாக ஃபங்சனுக்கு வந்து சேர்ந்தனர்.

 விருது வாங்குபவர்களுக்காகத் தனி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ரகுவீருக்கும் அங்கே இருக்கை இருந்தது. விழா ஆரம்பித்துப் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

 விழாவைத் தொகுத்து வழங்கும் நபர் அடுத்த அறிவிப்பை தொடர்ந்தார்.

"அடுத்து நாம் விருது வழங்க இருப்பது ஓர் இளம் பெண்மணிக்கு, இவர் இளமையான தாய். தங்கள் குடும்பத் தொழிலை நிர்வகிக்கும் சிறந்த நிர்வாகி. புகுந்த வீடே கொண்டாடும் அதிசய மருமகள்.

  இத்தனைக்கும் மேலாக அவருடைய சாதனையாக நாம் காண்பது அவரின் சக்தி. நூற்றுக்கணக்கான வழி தவறி, பாதை மாறியப் பெண்களின் வாழ்வைச் சீர்படுத்தி அவர்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்தித் தரும் 'SAKTHI' எனும் பெண்கள் சுய முன்னேற்ற நல அமைப்பின் ஸ்தாபகர் திருமதி. ஜானகி தேவி ரகுவீர் சிங் ராத்தோட். கரவொலியோடு அவரை மேடைக்கு அழைக்கிறோம். அவருக்கு விருது வழங்க மும்பை மகிளா நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரகுமாரி சர்மாவை மேடைக்கு அழைக்கிறோம். அதற்குள் இவரைப் பற்றிய குறும்படம்." என வீடியோவை ஓடவிட்டனர்.

 "மும்பையின் செல்வச் செழிப்புள்ள குடும்பத்தின் மருமகளான, ஜானகி சிங் ராத்தோட், அபயம் எனத் தன்னை நாடி வரும் பெண்களுக்கு ஒளிவிளக்காகத் திகழ்கிறார். ஆதரவற்று, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களுக்கு மறுவாழ்வு அமைத்துத் தருவதே இந்தச் சக்தி அமைப்பின் முதல் உத்தேசம் எனச் சொல்லும் ஜானகி சிங் ராத்தோட், பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வாளெடுத்துப் போராடவும் தயாராக நிற்கும் கலியுக ஜான்சிராணி.

 இவர்களது சக்தி அமைப்பின் மூலம் இந்தக் குறுகிய வருடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காப்பாற்றப் பட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளனர். ஒரு கடத்தல் கும்பலிடம் இருந்து ஒரே நேரத்தில் மும்பை காவல்துறையோடு சேர்ந்த முப்பது பெண்களை மீட்டனர். இவ்வாறு பல பெண்களுக்கு வழி காட்டியாக அபயகரம் நீட்டி அரவணைக்கும் சக்தி அமைப்பையும், அதன் நிறுவனர் ஜானகி சிங் ராத்தோடையும் கவுரவிப்பதில் எங்கள் நாளிதழ் பெருமை கொள்கிறது. இவர்களுக்கு ப்ரைட் ஆப் இந்தியா என்ற விருது சரியான அர்த்தத்தில் தரப்படும் விருது என்பதில் ஐயமில்லை." என அவர்கள் அமைப்பின் கட்டிடம், செயல் பாட்டு முறை ஜானகியின் சாதனை எனச் சொல்லி முடிந்தது.

 கரவொலி அரங்கை அதிர வைத்தது. இருபதின் கடைசியில் இருக்கும் சிறிய பெண் இத்தனை சாதித்தாரா என்ற வியப்பு அரங்கத்தில் உள்ளோரின் முகங்களில் தெரிந்தது.

 ஜானகி உணர்ச்சிப் பெருக்கில் மேடை ஏறியவள், "அனைவருக்கும் வணக்கம். நான் இப்படி ஒரு அமைப்பை உருவாக்க நினைத்தது முதல் அது நினைவாகி இன்று வெற்றிகரமாக நடந்து, பல பெண்களை மீட்டது வரை அனைத்திலும் என் கணவர் ரகுவீர் சிங் ராத்தோட் உறுதுணையாக இருக்கிறார். வீரூஜி மேலே வாங்க." என அவள் அழைக்கவும் தயங்கி பின் நீதிபதியும் அழைத்தவுடன் மேடை ஏறினான்.

 

"இன்று இத்தனை பெண்களின் நல்வாழ்வுக்கு வழி ஏற்படுத்தித் தந்ததும் எனது கணவர் தான். ஐந்து வருடங்களுக்கு முன் நானும் மனரீதியாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டேன்." எனச் சொல்லும் போது ஜானகியின் தோள்களை அணைத்து நின்றான் ரகுவீர்.

 "இரும்புக் கோட்டை போன்ற எங்கள் ஹவேலியில் இருந்தே நான் கடத்தப் பட்டேன். செல்வச் செழிப்பு மிக்க, பாதுகாப்பான கோட்டை, சொந்த பந்தங்களுக்கு நடுவில், என்னை உயிராய் நினைப்பவர்கள் மத்தியிலிருந்தே கடத்தப் பட்டேன்.  என்னை எங்கள் படைபலம், உறவினர் நண்பர்கள் என்று அனைத்து சாதகமான சூழ்நிலையும் இருந்ததால் இருபத்தி நான்கு மணி நேரத்தில் என் கணவரால் மீட்கப் பட்டேன். ஆனாலும் மனநிலை மோசமாகப் பாதிக்கப்பட்டது. எனது கணவரின் பொறுமை, விடா முயற்சியின் பலனாக மீண்டு வந்தேன். எனது இரு குடும்பங்களும் என்னைக் கையில் வைத்துத் தாங்கினர். நான் சிதையாமல் மீண்டேன்.

 என்னைப் போல் இத்தனை பின்புலம் இல்லாத பெண்களின் நிலை என்னவாகும், இந்தச் சிந்தனையில், பெண்களின் மீதான அக்கறையில் அதற்காகத் தொடங்கப் பட்டதே சக்தி. இது மகிளா சக்தி. தன் வலிமையை உலகுக்குக் காட்டும் பெண்களின் சக்தி.

 பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மனநிலையைச் சீர் படுத்தி, மனவலிமை உடல்வலிமை, சுயச்சார்பாக இருக்கப் பொருளாதார வலிமையை உருவாக்கித் தருகிறோம். அபலையாக வரும் பெண், தன்னைச் சார்ந்த மற்றவரையும் காக்கும் வல்லமையோடு புதிய சக்தியாக வெளி உலகிற்குச் செல்கிறாள்." என நீண்ட உரையைத் தந்தாள் ஜானகி.

 மகிளா நீதிமன்ற நீதிபதி, "வசதியான குடும்பத்தில் தங்களுக்கெனத் தொழில் பொழுது போக்குக்குக் குறைவில்லாத செல்வம் இத்தனையும் இருந்தும், பாதிக்கப்பட்ட பெண்களைக் காப்பாற்றிக் கை தூக்கிவிடும் துணிச்சல் மிகு செயலைச் செய்யும் ஜானகி சிங் ராத்தோடிற்கு இந்த விருதை வழங்குவதில் ஒரு பெண்ணாகவும், மகிளா நீதிமன்ற நீதிபதியாகவும் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இவருக்கு உறுதுணையாக இருக்கும் மிஸ்டர் ராத்தோட் மற்றும் அவரது குடும்பத்திற்கும் எனது பாராட்டுக்கள்." எனப் பாராட்டினார்.

 அரங்கம் கரவொலி எழுப்ப நீதிபதி கையால் விருது வழங்கப்பட்டது. ஜானகி ரகுவீர் அருகில் இருக்கப் பெற்றுக் கொண்டாள். இந்த நிகழ்ச்சியை லைவாகப் பார்த்தனர் சிவகுருவும், ராகினியும். நண்பர் குடும்பங்கள் லைவில் பார்த்து மகிழ்ந்து நின்றனர்.

 

விழா முடிந்து திரும்பிய ராத்தோட் குடும்பம் அதைப் பற்றியே பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தனர்.வீடு வந்து சேர்ந்தனர்.

 ஜானகிக்கு சிவகுருவிடமிருந்து போன் வந்தது ஸ்பீக்கரில் போட்டபடிப் பேசினா ஜானகி . "ஜானும்மா ரொம்பச் சந்தோஷம்டா. விருது எல்லாம் வாங்கிக் கலக்குற. என் மகள்னு சொல்லும் போது கர்வமாக இருக்கு. அதே நேரம் ஆபத்து வருமோன்னு பயமா இருக்குடா." என்றார் சிவகுரு.

 "அப்பாஜான் பயப்படாதீங்க. உங்கள் மருமகன் அரண் மாதிரி என்னைப் பாதுகாக்கிறார். ரெஸ்க்யூ டீம் இருக்குப்பா. கோ ஆர்டினேட் பண்றதுதான் என் வேலை. பயப்படாதீங்க." என்றாள். போனை பிடுங்கிய ராகவி

 "ஹேய் தாத்தா, பயப்படாதே, ஜானும்மா ஸ்ட்ராங் லேடி. வீரூப்பாவையே அடி பின்னி ஜெயிச்சிடும். சிந்தா மத் கர்ணா. நாநிஷா எங்கே?" என்றாள்.

"அடிப் பாவி, நான் எப்படி உங்கப்பாவை அடிச்சேன். அப்பாஜான் இவள் பொய் சொல்றா." எனக் கத்தினாள் ஜானகி. சிவகுரு பேத்தியின் பேச்சில் மகிழ்ந்தவர். 

"எங்கள் தேவதை பேத்தி இருக்கும் போது என்ன கவலை. அம்மாவைப் பார்த்துக்கங்க. உங்கள் நாநிஷா கார்த்திக், பவித்ராக்கு கதை சொல்லிக்கிட்டு இருக்காங்க." என்றார்.

 கார்த்திக் மூன்று வயது அமுதன் மயூரி மகன். பவித்ரா இரண்டரை வயது பாலன் அமிர்தா மகள்.  "நாநிஷாகிட்ட குடுங்க. அவங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் கதையா. ராகவிக்கு ஒண்ணுமே சொல்லலை." என்றாள் குட்டி ஜானகி.

"இதோ குடுக்குறேன் மகாராணி." எனச் சிவகுரு ராகினியிடம் நீட்டினார். "நாநிஷா, நீ ஜானும்மா அவார்டு ஃபங்சன் பார்க்காமல் கதை சொல்லிக்கிட்டு இருந்தியா?" எனக் கேட்டாள். ஜானகி, "ஸ்வராகி நீங்க. இருந்தீங்களான்னு மரியாதையா பேசனும்.” என்றாள்.

"அப்ப நீயே பேசு நான் போறேன், முஜே பாத் நஹி கர்ணா." எனக் கோபித்து ஜானகியிடம் போனை தூக்கிப் போட்டுச் சென்றாள் ராகவி.

"அடியேய் போனைத் தூக்கிப் போடுற, அடிப் பின்னிடுவேன்." என மகளை மிரட்டியவள், "மாதாஜி இப்ப கேட்டதெல்லாம் காதுக்குக் குளிர்ச்சியா இருந்திருக்குமே." என்றாள் ஜானகி.

"கங்கிராட்ஸ் டா ஜானும்மா. நீ எங்கள் எல்லாரையும் விட ஒருபடி மேலப் போயிட்ட. நான் எதை உன்னுடைய அதிகப்பிரசங்கித்தனம்னு நினைச்சேனோ, அதுவே உன்னுடைய இயல்பான பலம் ஜானும்மா. ரொம்பச் சந்தோஷம்டி, எத்தனை பெண்களுக்கு உன்னால் மறுவாழ்வு கிடைச்சிருக்கு. வாழ்த்துக்கள் ஜானும்மா." என்றார் ராகினி.

"மாதாஜி என்ன இவ்வளவு எமோசனல், எல்லாம் உங்கள் வீரூ தான் இதுக்கெல்லாம் காரணம். அவர் சப்போர்ட் பண்ணலைனா நான் என்ன செய்ய முடியும். சரிம்மா ரொம்ப நேரம் ஆச்சு. அண்ணன் மயூ, பாலன், அமித்து எல்லாம் எங்கே?" என்றாள்.

"ஶ்ரீராம் தங்கையுடைய ரிஷப்ஷன், அதனால் தெய்வா, தம்பியோடு நாலுபேரும் மதுரைக்குப் போயிருக்காங்க. பசங்களை நாங்கள் பார்த்துக்குறோம். சரிடா உன் மருமகன், மருமகள் சாமியாடுதுங்க. தூங்க வைக்கிறேன்." எனப் போனை வைத்தார்.

அமுதன், பாலன், மயூரி, அமிர்தா, தெய்வா சண்முகம் வீடியோ காலில் தங்கள் வாழ்த்துக்களைச் சொன்னார்கள்.

ரன்வீருக்கு தீப்தியிமிருந்து போன் வந்தது. "ரன்வீ, ஜானி தீதி கலக்கிட்டாங்க. நாங்களும் லைவ் பார்த்தோம்." என்றாள்.

தீப்தி, சிவகணேஷ், சாந்தினி சேர்ந்து போட்டோகிராபி மேற்படிப்பு படித்து, தனியாகச் சென்னையில் அட்வர்டைசிங் கம்பெனி வைத்து நடத்துகிறார்கள்.

ரன்வீர் அவ்வப்போது அவர்களுக்காக மாடலிங் செய்யச் சென்று வருவான். இதைச் சாக்காக வைத்து தீப்தியைப் பார்த்து வருவான்.

"ராஜ் பேபி, ஜானகி அவார்ட் வாங்கினதில் ஜீஜூக்கு எவ்வளவு பெருமை. பூரிச்சு இருந்தார். ரெனாவத்துக்குத் தண்டனை வாங்கித் தந்த தருணத்தை விட இன்னைக்குத் தான் ஹேப்பியா இருந்தார்." என்றாள் மஞ்சரி தங்கள் அறையில் விழாவிற்கு சென்று வந்த ஆடைகளை மாட்டிக்கொண்டே பேசினாள் .

"ஆமாம் பேபி, ஜானிக்கிட்ட தான் எத்தனை மாற்றம். எல்லாம் பையாவால் தான் சாத்தியம் ஆனது. ஆனால் ரெனாவத்துக்குத் தண்டனை எங்கக் கொடுத்தார். அவனே ஹேண்டிக் காப்டா ஜெயிலில் சடையிறான். அவன் குடும்பத்துக்கு இன்னும் உதவி செய்கிறார். கேட்டாள் படி தாதிஷா பிறந்த குடும்பமாம். சரி விடு. ஆமாம் நாம பெற்ற மகள் எங்கடி?" என்றான்.

"அது எங்க இங்க வருது, எல்லாத்துக்கும் ஜானிம்மா தான் வேணும். அவங்க பெட்டில் படுத்துக்கிட்டு வரமாட்டேங்குறா. ஜீஜூ நீ போ நாங்க பார்த்துக்குறோம்னு சொல்லிட்டாங்க." என்றாள்.

 

"உனக்கு வசதி தான்." என ராஜ்வீர் சொல்லவும் மஞ்சரி கோபமாக முறைத்தாள். இல்லடா பேபி எனச் சமாதானத்தில் இறங்கினான் ராஜ்வீர்.

ரகுவீர், "ஜானும்மா தீதியும், ஜீஜூவும் போன் பண்ணாங்க. அவங்களும் லைவ் பார்த்தாங்களாம். ரொம்ம சந்தோஷம்னு சொன்னாங்க." என்றான்.

ரகுவீர் பெட்டின் ஒரு கோடியில் இருக்க, ஜானகி மறு கோடியிலிருந்தாள். நடுவில் ரகுவீர் கழுத்தைக் கட்டிய படி, கால்களை அவன் மேல் தூக்கிப் போட்டு ஸ்வராகி எனப் பெற்றவர்களால் அழைக்கப்படும் ஸ்வர்ன ராகவி படுத்திருந்தாள். ஜானகியை கட்டிக் கொண்டு ஸ்ருதி மஞ்சரி மகள் படுத்துக் கிடக்க, நடுவில் விஜேன் படுத்திருந்தான்.

"எனக்கும் மெசேஜ் போட்டிருந்தாங்க. பல்லா மாமாஜி, பாண்டே மாமாஜி, ரெட்டி மாமையா எல்லாரும் மெசேஜ் செய்து இருந்தாங்க." என்றாள்.

"ஜெய், ஆரவ் பசங்க நம்ம பசங்களை விட மூத்தவங்க தானே." என்றான் ரகுவீர்.

"மூன்று மாசத்துக்கு மூத்ததுங்க. அமித் ஶ்ரீநிதி டெல்லியில் செட்டில் ஆகிட்டாங்களாம். மாமாஜியோட பிஸ்னஸ் பார்த்துக்கிறான்னு ஒரே சந்தோஷமா அன்னைக்குப் பேசினாங்க."

"பைலட் பிஸ்னஸ் மேன் ஆகிட்டானா. ரெனாவத் ரிசார்டில் என்னை அவன் இறக்கி விட்டதுக்கு நான் அவனுக்குக் கடமை பட்டிருக்கேன்." என்றான்.

"நீங்க யாருக்குத் தான் கடமைப்படலை. என்னைக் காப்பாற்ற வந்த அத்தனை பேருக்கும் ஏதோ ஒரு வகையில் நன்மை செய்துக்கிட்டே தான் இருக்கீங்க." என்றாள் ஜானகி.

"என் லுகாயிக்காக உழைத்த அத்தனை பேருக்கும் செய்வேண்டி." என்றவன் கண்களால் அவளை அழைத்தான். அவள் பிள்ளைகளைப் பார்த்தாள்.

பிள்ளையோடு கட்டில் நடுவில் நகர்ந்தவன், அவளையும் அதே போல் வரச் சொன்னான். ரகுவீர் ஜானகி முகம் மட்டும் தலையணையில் நெருங்கி இருந்தது. உடலில் கங்காருக் குட்டி போல் அவ்வீட்டின் இளைய இளவரசிகள் தொங்கிக் கொண்டிருந்தனர்.

ரகுவீர் காதலாகி அவளைப் பார்த்து, நெற்றியில் முத்தமிட, ம்ம் என முகத்தைச் சுழித்தாள். கண்களில் கன்னங்களில் எனப் பயணித்து இதழை சிறைபிடித்தான் அவளின் ஆசைக் கணவன் வீரூஜி.

ராகவி கையைத் தூக்கி ரகுவீர் நெஞ்சில் சத்தெனப் போட்டது. ரகுவீர் ஜானகியிடமிருந்து விலகி தன் மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டான். ஜானகி கிலுக்கிச் சிரித்தாள். அதை ஆசையாகப் பார்த்தபடி, "உனக்கா எதுவும் செய்வேனடி மேரிஜான்." என மனதில் வார்த்தைகளைப் படித்தான்.

 

"உனக்காகப் பிறந்தேனே எனதழகா" என ஜானகி, மனதின் வார்த்தைகளைப் பாட்டாக வடித்து ரகுவீரை கண்களில் நிறைத்து காதாலாகப் பாடிக் கொண்டிருந்தாள், ரகுவீர் அவளின் விழிகளில் லயித்திருந்தான்.

இத்தோடு ராத்தோட்களின் ஸ்வர்ண மஹலை, ரகுவீர் ஜானகியைத் தற்காலிகமாகப் பிரிந்து செல்வோம். பிறிதொரு காலத்தில் ரகுவீரோ, ஜானகியோ தங்கள் வாழ்வின் லட்சியங்களை விவரிக்க அழைத்தால் அவர்கள் பயணங்களின் ஸ்வாரஸ்யங்களைப் பகிர நினைத்தால் வந்து பார்ப்போம். அதுவரை ஒருவர் மனதை மற்றவர் புரிந்து நடந்து கொள்ளட்டும். தொடரட்டும் இவர்கள் காதல் பயணம், லட்சியங்களோடு கூடிய வாழ்க்கைப் பயணம். நாமும் விடை பெறுவோம். 

கம்மாகனி ராணிஷா, கம்மாகனி ராத்தோட்ஷா.

 

 

 

களஞ்சியம்
79.வீட்டில விசேஷம்

 

சிவமாளிகையில் அந்த வீட்டின் பெண்ணரசி ஜானகி, ஆவலாக அன்றைய தினத்தின் அதிகாலையில் விழிப்புத் தட்டி விட மணி எப்போது ஆறு ஆகும் எனப் பார்த்திருந்தாள். வயிறு லேசாக மேடிட்டு இருந்தது. இன்றோடு தொண்ணூறு நாட்கள் ஆகிறது, ரகுவீர் அவளை விட்டுச் சென்றும் நாற்பது நாட்கள் ஆகியிருந்தன. மும்பை சென்று நடுவில் வந்து செல்ல அவன் செய்த முயற்சிகள், வர இயலாதவாறு தோற்றுப் போயின.

ஜானகி இங்கு மசக்கையில் அவதிப்பட்டால் எனில், ரகுவீர் அதை அங்கே சிடுசிடுத்தவாறே எதிரொலித்தான். வீட்டில் காட்ட இயலாத கோபத்தை ஆபீஸ், ஃபாக்டரியில் காட்டினான். ராஜ்வீர் ஹனிமூன் முடித்து வந்து ஒரு வாரத்தில் கிளம்பினான்.

 

அமுதன், மயூரி திருமண வரவேற்பு மும்பையில் ஒரு வாரத்தில் நடந்தது. ராகினி சிவகுரு சென்று திரும்பியவரிடம் ரகுவீர் ஜானகிக்குப் பிடித்த சில பதார்த்தங்களை அனுப்புவதாகப் போனில் சொல்லும் போது, இல்லை வீரூஜி நீங்க விரும்பி சாப்பிடுவதை அனுப்பி வைங்க.

உங்க பேபிக்கு அதுதான் வேணுமாம் என்று சொல்லவும், இத்தனை நாள் தனக்கு எது பிடிக்கும் என அறியாது இருந்தவன் இப்போது யோசிக்க ஆரம்பித்தான். ஷப்னம், ஜானகி இருவரும் அவனுக்குப் பிடித்ததைச் சொன்னார்கள். இது போல் சில இராஜஸ்தானி டிஷ் மாத கணக்கில் வைத்துச் சாப்பிடக் கூடியதையும் அனுப்பி வைத்தான்.

ஜானகியைக் கீழே உள்ள விருந்தினர் அறையில், முன்பு ரகுவீர் காயம் பட்ட போது இருந்த அறையில் தங்கச் சொன்னார்கள். அவளுக்கும் அந்த அறை அவனோடான நெருக்கத்தின் சாட்சியாகப் பிடித்தமானதாகவே இருந்தது 

சிவகுரு மகளை எந்நேரமும் கவனித்த வண்ணம் இருப்பார். அப்பத்தா முக்கால் வாசி அவள் அறையில் தான் தங்கினார்.

 சண்முகம் அவர்கள் தோட்டத்தின் சிறந்த பழங்களைக் கொண்டு வந்து தள்ளுவார். "பாப்பா, இதைச் சாப்பிட்டுப் பாரு, தெய்வா அம்மா மசக்கையா இருந்தப்ப இது தான் கேட்டாள்." எனப் புளியம்பழம், புளித்த மாங்காயைக் கொண்டு வந்தார். அந்த ருசியும் ஜானகிக்குப் பிடித்துப் போக, அவ்வப்போது தோட்டத்திலிருந்து வரும்.

அமுதன், மயூரி ஒரு வாரம் மும்பையிலிருந்து விட்டு வந்தனர். பாலன் அமிர்தா இரவு தூங்கும் நேரம் தவிர மற்ற நேரம் ஜானகியுடன் பொழுதைக் கழித்தனர். இந்த ஜோடிகள், தங்கள் ஹனிமூன் பயணத்தை ஜானகி மும்பை சென்ற பிறகு வைத்துக் கொள்வதாகச் சொல்லி விட்டனர்.

எத்தனை பேர் எத்தனை விதமாக அவளைக் கவனித்துக் கொண்ட போதும், ரகுவீரின் அணைப்புக்காக ஏங்குவாள் ஜானகி. அவனோடு எடுத்துக் கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களைப் பார்த்துக் கொண்டே இருப்பாள்.

இன்று காலை ஃப்ளைட்டில் ரகுவீர் வந்து இறங்குகிறான், அவனை அழைத்து வர அமுதன் அதிகாலையில் கிளம்பிவிட்டான், அதிலிருந்து ஜானகி கேட்டைப் பார்த்தவண்ணம் இருக்கிறாள். 

காலைக் காபி பருகியபடி முன்பக்க ஸ்டோன் பென்சில் அமர்ந்து இருந்தாள். மயூரியும் அவளோடு அமர்ந்திருந்தாள். இருவருமாகப் பேசிக் கொண்டு இருக்கும் போதே அமுதன் கார் ஹாரன் கேட்டது.

 

"ஜானி வேகமா எழுந்திரிக்காதே பையாவே இங்கே வருவாங்க." என மயூரி அவள் கையைப் பற்றி நிறுத்தியிருந்தாள். கண்கள் காரையும், அதன் கதவைத் திறந்து இறங்கும் தன்னவனையும் ஆவலாகப் பார்த்து இருந்தன.

"ஜானும்மா, எப்படி டா இருக்க?" என அவளை நோக்கி வந்து கை நீட்டியபடி இருந்தவளை அணைத்துக் கொண்டான். இத்தனை நாள் இதற்காக ஏங்கிய ஜானகியின் வதனம் அவனோடு ஒட்டிக் கொண்டது. ஜானகியை அணைத்தவண்ணம் "சோட்டி இங்க அங்க சந்தோஷத்தில் வெயிட் போட்டு இருக்கடா." எனத் தங்கையின் தலையில் கை வைத்து அவளையும் அணைத்துக் கொண்டான். பேசியவாறே உள்ளே செல்ல வீட்டினர் முகமன் கூறி வரவேற்றனர்.

“ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்.” என ஜானகி இருக்கும் அறைக்குள் நுழைய ஜானகி பின்னோடு வந்து கதவை தாழிட்டாள். "அத்தான்!" என அவனைக் கட்டிக் கொள்ள அவனும் அவளை அணைத்து கழுத்து வளைவில் முகர்ந்து அவளைக் கிறங்கடித்தான் .அவனது கைகள் அவள் எதிர்பார்த்த தழுவலைத் தந்தது. லேசாக மேடிட்ட வயிற்றைத் தடவியவன், "நம்ம சொல்ற தேதி தப்பா ஜானும்மா, நானும் நெட்டில் இதைப் பற்றிப் படித்ததை விடப் பெரிசா இல்லை." என்றான்.

"இன்னைக்கு ஸ்கேன் பண்ணாத் தெரியும், இரண்டு முறை கைனக் வந்து பார்த்துவிட்டு நல்லா இருக்குன்னு சொன்னாங்க." என்றவள் , அவன் முகத்தைத் தொட்டு, "கன்னமெல்லாம் ஒட்டிக் கிடக்கு, சாப்பிடுவிங்களா இல்லையா?" எனக் குறை பட்டாள்.

"அதை விடுடி, உனக்கு வாந்தி குறைஞ்சு இருக்கா. சாப்பிட முடிகிறதா?" என்றான். "இப்ப பரவாயில்லை வீரூஜி. இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் வாந்தி வருது." என்றவள், "நீங்க ப்ரெஷ் பண்ணுங்க. நான் காபி கொண்டு வரேன்." என்றாள்.

"நீ எதுக்கு அலையிற, நான் வந்து எடுத்துக்குவேன்." என்றான்.

"உங்களுக்கு எடுத்துட்டு வரது ஒண்ணும் அலைச்சல் இல்லை." என்றபடி தானே கிட்சனில் சென்று அவனுக்கான காபியைக் கலந்தாள். தெய்வா தான் செய்து தருவதாகச் சொல்லியும் மறுத்துத் தானே கலந்தாள்.

அறைக்கு எடுத்துச் சென்றாள். " நிறைய இருக்குடி!" என்றவனிடம். "எனக்குப் பாதி." என அவன் கை வளைவில் அமர்ந்தே அதே கப்பில் குடித்து முடித்தாள்.

காலை பதினோரு மணிக்குத் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் செக்கப்பிற்குச் சிவகுரு, ராகினியுடன் இவர்கள் இருவரும் சென்றனர். ஸ்கேன் பார்த்து வந்த டாக்டர் நால்வரையும் அமர்த்தி, "கங்கிராட்ஸ் ஜானகி. உன் குழந்தைகள் ஆரோக்கியமா இருக்காங்க." என்றார். ஜானகி கவனமாக, "என்ன டாக்டர் குழந்தைங்கன்னு ப்ளுரலில் சொல்றீங்க?" என்றாள்.

டாக்டர் சிரித்துக் கொண்டே, "ட்வின்ஸ்!!!" என்றார். சிவகுரு ரகுவீர் கைகளைப் பிடித்து மகிழ்ச்சி தெரிவிக்க, ராகினி மகளைக் கட்டிக் கொண்டார். ரகுவீர் ஜானகி தான் நம்ப மாட்டாமல் ஒருவரை ஒருவர் கேள்வியாகப் பார்த்தனர். பின்னர்ச் சேரில் இருந்தபடியே அவளைத் தோளோடு அணைத்து நெற்றியில் முத்தமிட்டான் ரகுவீர்.

"ஆமாம் இங்கே பாருங்கள்." என ஸ்கேன் போட்டோக்களைக் காட்டி விளக்கம் சொன்னார் டாக்டர்.

மும்பை கூட்டிச் செல்வதைப் பற்றிக் கேட்கவும், "கூட்டிட்டுப் போகலாம். ஃப்ளைட் தானே, ஆனால் டெலிவரியும் அங்கேயே வச்சுக்குங்க. திருப்பி அலைய வைக்க வேண்டாம்." என்றார்.டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.

இரட்டை குழந்தைகள் ஜானகியின் கருவில் உள்ளது எனத் தெரி்யவும் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி. "ஜானி சூப்பர்டி!" என மயூரி அமிர்தா கட்டிக் கொண்டனர். "அடியே பெண்டுகளா,உங்கள் நாத்தனார் ரெட்டை பையனை பெற்றாளென்றால், நீங்களும் இரண்டு பொண்ணுங்களைப் பெத்துக்குங்க." என்றார் சிவகாமி.

"வாழ்த்துக்கள் அத்தான் , இது தான் ஜாக்பாட். ஒரே நேரத்தில் டபுள் புரமோஷன்." என அமுதன் வாழ்த்தினான். ஜானகியை மும்பை அழைத்துச் செல்வது குறித்து ரகுவீர் பேசினான்.

தமிழ் மாதக் கணக்குக்கு இது ஐந்தாம் மாதம் எனக் கணக்கிட்டு, மருந்துக் கொடுக்கும் சடங்கை இங்கே நடத்தி அழைத்துச் செல்லச் சொன்னார் அப்பத்தா.

அதன் படி அன்றிலிருந்து மூன்றாம் நாள், உளுந்தங்களி கிண்டி, பாலில் குங்குமப்பூ போட்டு வைத்திருந்தனர். அது இல்லாமல் துளசி, வேப்பிலை, செந்தட்டி, வெற்றிலை முதலிய ஐந்து மூலிகைகளை அரைத்துச் சாறுபிழிந்து சூடு படுத்தி ஆற விட்டு வைத்திருந்தனர்.

ஜானகியை அமரவைத்து மருந்துக் கொடுக்கும் சடங்கைச் செய்தனர். சுந்தரவள்ளி வந்திருந்தார், எனவே அவரைக் கொண்டு முதலில் மருந்து கொடுக்கச் சொன்னார்கள், ஒரு ஸ்பூனில் எடுத்துக் கொடுத்தார்.

"ம்ம், அத்தை கசக்குது." என முகம் சுளித்தாள் ஜானகி. "ஆத்தா மருந்து அப்படித் தான் இருக்கும்." என்ற சுந்தரவள்ளி, வெல்லத்தைக் கடிக்கக் கொடுத்தார். அடுத்து சிவகாமி, ராகினி கொடுத்தனர்.

 

தெய்வா, சுந்தரவள்ளி மருமகள் கவிதா, மயூரி, அமிர்தா ஆகியோர் குங்குமப்பூ கலந்த பாலை தந்தனர். பிறகு ஆலம் சுற்றி எழுப்பி விட்டு உளுந்தங்களியை நல்லெண்ணெய், கருப்பட்டி சீவிப் போட்டுச் சாப்பிடக் கொடுத்தனர். இது இடுப்புக்கு வலு சேர்க்கும் எனச் சாப்பிடச் சொன்னார்கள். அத்தை ஆயிரம் அறிவுரைகள் வழங்கி ஊருக்குக் கிளம்பினார்.

மறுநாள் இரவு ப்ளைட்டில் ரகுவீர், ஜானகியை அழைத்துக் கொண்டு மும்பை செல்கிறான். சிவகுரு, ராகினி அவர்களோடு மும்பை செல்கின்றனர். சிவகாமி அப்பத்தா, தெய்வா இருவரும் மாற்றி, மாற்றிக் கருவுற்ற சமயம் ஏற்படும் தொல்லைகள் அதற்கான மருந்துகள் எனப் பெரிய மருத்துவப் பெட்டகத்தை ஏற்படுத்தி, அமிர்தா அதற்கான விளக்கத்தோடு அதனைப் பேக்கிங் செய்தாள்.

இதோ கிளம்பிவிட்டாள் ஜானகி சிறுமலையிலிருந்து, நாமும் தற்காலிகமாகச் சிறுமலையின் வனப்பும், குளுமையையும் விடுத்து, பிரியாவிடைத் தந்துக் கிளம்புவோம். பிரித்தொரு காலத்தில் இந்த மலைப் பகுதியை வாய்ப்புக் கிடைத்தால் தரிசிப்போம்.

"அப்பத்தா, தெய்வாம்மா என் பிரசவ நேரத்தில் நீங்க இரண்டு பேரும் மும்பை வந்திடனும்." எனப் பிரியாவிடைப் பெற்று அண்ணியாய் போன தோழிகளிடமும் அண்ணன்கள், ஷண்முகப்பா தாத்தாவிடமும் ஆசி வாங்கி அவர்கள் பூசிய திருநீறு குங்குமத்தோடு விடை பெற்றாள் ஜானகி.

அடுத்த நாள் அதிகாலையில் ராத்தோட் மாளிகையில், மருமகளுக்காக ஷப்னம் காத்திருந்தார். அவரோடு பூனம், ஸர்குனும் அலாரம் வைத்து எழுந்து வந்து விட்டனர். ரகுவீர் ஜானகி வீட்டு முகப்பில் காலடி வைக்கும் முன் ஆரத்தி எடுத்தனர். "ஜானிமா வெல்கம் டியர்." என மூன்று மாமியாரும் உபசரணையாக வரவேற்றனர். சிவகுரு ராகினியையும் வரவேற்று உபசரித்தனர்.

தாதாஷா, தாதிஷா பேத்தியைக் காணும் ஆவலில் சீக்கிரம் விழிப்புத் தட்டி விட ஹாலுக்கு வந்தனர். "ஜமாயிஷா, ராகினி வாங்க. ஜானிமா ஆவோ மேரி ஸோனு!" என அணைத்துக் கொண்டார் தாதிஷா.

"சபாஷ் ரகுவி, நம்ம பரம்பரையில் முதல் ட்வின்ஸ் உங்களுக்குத் தான். ஜானி வீரமான ராத்தோட்ஸைப் பெற்றுக் கொடு." என்றார் தாதாஷா.

"நாநாஷா, அப்ப இதுவரை வீரமான ராத்தோட்ஸே இல்லை என்கிறீர்களா?" என்றாள் ஜானகி.

 

"ஏண்டாமா, உன் புருஷன் வீரூஜி வீரம் பத்தலையா? காளை மாடெல்லாம் அடக்கினான்." என்றார் தாதாஷா.

"அதை நானே அடக்கியிருப்பேன். நடுவில் உங்க போத்தா வந்து காயப் பட்டதது தான் மிச்சம்." என ரகுவீரையும் வம்பிலுத்துப் பேசினாள் ஜானகி.

"தாதாஷா, இவள் கிட்ட வாயைக் கொடுக்காதீங்க, உங்களில் இருந்து, இவள் வயிற்றில் இருக்க ராத்தோட் வரை எல்லாரையும் வம்பிலுப்பாள்." என்றான் ரகுவீர். "அது சிவகாமியம்மாள் பள்ளிக்கூடம் மாப்பிள்ளை இரத்தத்தில் வந்தது. அடுத்து உங்கள் மகள் வந்தால், அது ஹிந்தியிலும் வெளுத்து வாங்கும்." என்றார் சிவகுரு.

"ஆமாம் பூஃபாஷா, என் மகள் வந்து தான் உங்கள் மகள் வாயை அடைப்பாள்." என்றான் ரகுவீர். "பீந்தினி காபி கொண்டு வா குடிச்சிட்டு ஓய்வு எடுக்கட்டும்." என்றார் தாதிஷா. அலுத்து வந்தவர்களுக்குக் காபி வழங்கி ஓய்வெடுக்க அனுப்பினர்.

ரகுவீர், ஜானகியை அழைத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்றான். ஜானகி, மஞ்சரி இருவரும் இல்லாத நேரத்தில் இரண்டு சூட்களைச் சேர்த்து மற்றொரு அறை, கப்போர்ட் வசதி செய்து வைத்திருந்தான் ரகுவீர்.

தங்கள் அறைக்குள் வந்து சுற்றிப் பார்த்த ஜானகிக்குத் திருப்தியோடு சிரிப்பும் வந்தது. ரகுவீர் என்னவென்று வினவினான்.

"ஒரு பேபின்னு நினைச்சு ஆல்டர் பண்ணியிருப்பீங்க, இப்ப ட்வின்ஸ் வராங்க என்ன பண்ணுவிங்களாம்?" என்றாள் ஜானகி.

அவளைக் கட்டிலில் அமர்த்திச் சாய்வாகத் தலையணையை அண்டக் கொடுத்தான். "எத்தனை பிள்ளை வந்தாலும் ராத்தோட்ஸ் ஸ்வர்ண மாளிகைத் தாங்கும்." என்றான்.

தானும் அவளருகில் அமர்ந்தவன், அவள் வயிற்றில் கை வைத்து, முத்தமிட்டவாறு, "இரட்டை வாலு வரப் போகுதுங்கன்னு இன்னும் நம்ப முடியலையே?" என்றான். ஜானகி அவன் மார்பில் ஒன்றிக் கொண்டு, "இரட்டை பிள்ளைனா நம்மளை என்ன நினைப்பாங்க?" என வெட்கப்பட்டாள்.

"இதில் என்ன இருக்கு, மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராத்தோட் ரொமான்டிக் கப்பில்னு நினைப்பாங்க." எனக் கேலிப் பேசினான்.

"ஆமாம், ஆமாம் நீங்க ரொம்ப ரொமான்டிக் தான், உங்களைக் கிருஷ்ணனாக வரைஞ்சதுக்கு, நீங்க செட்டே ஆகமாட்டீங்கன்னு அமித்துக் கிண்டல் பண்ணினாள். நான் தான் அதெல்லாம் இல்லை ராத்தோட்ஷா பயங்கரமான ஆளுன்னு சொன்னேன்." என்றாள் ஜானகி.

 "அப்படி என்னடி பயங்கரமாப் பண்ணினேன்." என ரகுவீர், அவள் கழுத்து வளைவில் முகத்தை உரசியவாறு கேட்டான்.

"ஞாபகம் இல்லை, இதே இடத்தில் மப்புல கிடந்தீங்களே, மேலே தவறி விழுந்தவளை, இப்படியா பண்ணுவீங்க. சரியான காளையன்." என அவன் கன்னத்தைக் கிள்ளிக் கொண்டே சொன்னாள் ஜானகி.

"இப்பையும் காளையன் தாண்டி வயிற்றில் ட்வின்ஸ் இருக்குதுங்களேன்னு கண்ட்ரோலா இருக்கேன்." என அவளைத் தன் மேல் கவனமாகப் போட்டுக் கொண்டு சொன்னான் ரகுவீர்.

அவளும், "அத்தான்!" என மார்பில் முகம் புதைத்து காதலாகி இழைந்துக் கொண்டிருந்தாள். ரகுவீர் நிலை இன்னும் மோசம். அலைப்பேசி அழைப்பு விடுத்தது. அவளை மார்போடு இறுக்கமாக அணைத்து, இதழ் ஒற்றலில் சிறிது முரட்டுத்தனத்தைக் காட்டி அவள் லேசாகத் திணறவும் விடுவித்தான்.

ஒரு பெரும் மூச்சுடன், "நீ தூங்குடி ஜான். பாபுஷா தான் கூப்பிடுறாங்க. பார்த்துட்டு வரேன்." எனக் கட்டிலை விட்டு இறங்கப் போனவனை, "ம்ம்ம் இருங்கப் போகலாம், மாமாஷாகிட்ட போனில் பேசுங்கள். என்னை விட்டுட்டுப் போகாதீங்க அத்தான்." என்ற ஜானகியின் சிணுங்கலில் ரகுவீர் டோட்டல் ஃப்ளாட் ஆனான்.

போனில், "வந்தாச்சு பாபுஷா, நல்லா இருக்கா, ஒண்ணும் பிரச்சனை இல்லை." என வைத்தான்.

"உன்னைத்தான் கேட்டாங்க, ட்ராவல் பண்ணினது ஒண்ணும் பிரச்சினை இல்லையேன்னு கேட்கிறார்கள்." என்றான் ரகுவீர்.

மீண்டும் தன்னவளை அணைத்துக் கொண்ட ரகுவீர், அவளின் ஒவ்வொரு ஆணைகளையும் நிறைவேற்றினான். இவர்கள் ஒருவரில் மற்றொருவர் லயித்து இருந்தாலும், வயிற்றில் குடியிருக்கும் ஜூனியர்கள் கேட்பதாக இல்லை. பசி எடுக்க ஆரம்பித்தது ஜானகிக்கு.

"வீரூஜி பசிக்குது." என்றாள். இன்டர்காமில் ஜூஸ் வரவழைத்தான். அவள் அதைக் குடித்த பின்னர், "பாத்ரூம் தாழ் போடாமல் குளிச்சிட்டு வா. பிறகு கீழே போகலாம்." என அவளை அனுப்பினான்.

காலை உணவுக்கு வந்த போது மாமாஷாக்கள் மருமகளைப் பாசத்தில் மிதக்க விட்டனர். ராகினி, சிவகுருவும் உணவு மேஜையில் கூடியிருந்தனர்.

"ஜானிமா இதைச் சாப்பிடுடா." எனக் கஜேன் ஒன்றைத் தந்தார்.

 

"பையா, ஜானிமா வழக்கமா சாப்பிடுற நெய் ரோஸ்ட்." என அமரேன் தந்தார். "அம்மு ஜானிமா வயிற்றில் இருக்கிறது இராஜஸ்தானி, அதனால் பாஞ்சி டேஸ்ட்டும் மாறிடுச்சு. சரிதானே ஜீஜூஷா?" எனக் கஜேன் வம்பிலுத்தார்.

"வெளியே வரட்டும் இட்லி, தோசை, மீன் குழம்பு, நாட்டுக் கோழி குழம்பு தந்து, எங்கள் ருசிக்கு எங்க பேரனோ பேத்தியோ மாத்திக்குறோம்." என்றார் சிவகுரு.

"இப்பவே உங்கள் ருசிக்குச் சாப்பிடும் உங்கள் மகளையும், எங்கள் பஹூவா, பாஞ்சியாய் மாத்திடுச்சு ஜீஜூஷா." என அமரேன் விடாமல் பேசினார்.

"ஜானும்மா என்னடா, உங்கள் மாமாஷா பக்கம் சேர்ந்துட்ட?" எனக் குறை பட்டார் சிவகுரு.

"அப்பா ஜான், நான் எங்கப்பா மாறி இருக்கேன். இதுங்க அவங்க அப்பா மாதிரி இருக்குங்க, விடுங்க உங்கள் ஜானு மாதிரி வருமா." என அவர் கையால் உணவு ஊட்டிக் கொண்டாள்.

"போதும், எல்லாரும், இவளோடு சேர்ந்து டிராமாபாஸ் ஆகிட்டிங்க." என்றார் ராகினி. மஞ்சரி இறங்கி வந்தவள் ஜானகியைக் கட்டிக் கொண்டாள்.

"ஜானி நான் சொன்னதை நிறைவேற்றிட. ட்வின்ஸ் வருவதற்கு முபாரக்." என்றாள் மஞ்சரி.

ராகினி, " இந்த ஸ்வீட், உனக்கு ஸ்பெஷலா அப்பத்தாக் குடுக்கச் சொன்னாங்க. ஜானகி கர்ப்பமா இருக்கிறதுக்கு, உன் வாய் முகூர்த்தம் தான் பலித்ததாம்." என ஊட்டி விட்டார் ராகினி.

ரகுவீர், "புவாஷா, கடினமா உழைச்சது நானு, பாராட்டு இவள் வாய் வார்த்தைக்கா?" என்றான் . ஜானகிக்குத் தான் அவன் சொன்னதின் கற்பனையில் முகம் சூடானது. "சும்மா இருங்க வீரூஜி!" எனக் கையைக் கிள்ளினாள்.

ராஜேன், "போதா, போதி நிறைய வேணும்னு உன் மாமிஷா ஆசையை ஒரே தடவையில் இரட்டையா நிறைவேற்றிட்டே, இனி ஷப்னத்தைக் கையில் பிடிக்க முடியாது." என்றார்.

"பின்னே நம்ம பஹூ மாதிரி வருமா, மஞ்சி அடுத்து உன் டேர்ன்." என்றார் ஷப்னம். "மாமிஷா, ஜானி முதலில் பெற்றுக்கட்டும், அந்தச் சோட்டூ, மோட்டூ ராத்தோட்ஸ்ஸை கொஞ்சினப் பிறகு தான், நாங்க ரிலீஸ் பண்ணுவோம்." என்றாள் மஞ்சரி.

 

பூனம், "மஞ்சி இரண்டு பஹூவும் ஒரே நேரம் ப்ரெக்னட்டா இருந்தாலும், உங்கள் சாசுமா எல்லாம் சமாளிப்போம். அதனால் ஒரு ப்ளானும் வேண்டாம், இயற்கையா இருங்க." என்றார். 

"ஜானியை விடச் சின்னப் பிள்ளையா காட்டிக்கலாம்னா விட மாட்டிங்களே?" என்றாள் மஞ்சரி. ஹேமந்த், பங்குரி நிறையப் பழங்களை அள்ளிக் கொண்டு ஜானகியைப் பார்க்க வந்தனர். ராத்தோட்ஸ் முறையாக வரவேற்றனர்.

"வாங்க மாசூஷா, மாஸிஷா வாங்க!" என ஜானகி அழைக்கவும், அவள் தலை மீது வாஞ்சையாகக் கை வைத்த ஹேமந்த், "ரொம்பச் சந்தோஷம்டா ஜானிமா!" எனக் கண் கலங்கினார்.

பங்குரி, ஜானகியை அணைத்துக் கொண்டார். ராகினியிடம் பங்குரி மற்ற விசாரணைகள் செய்தார்.

சிவகுரு, ஹேமந்த் ஜானகியின் இரு பக்கம் அமர்ந்து அவளைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க, "அப்பாஜான், நீங்களும், மாஸூவும் ஒரே மாதிரி சிவாஜி கணேசன் மாதிரி உருகுறீங்க." எனக் கிண்டலடித்தாள்.

"ஆமாம்டி ஜானி, அதனால் எனக்குச் சிறுமலையில் இருக்கும் போது பாபுவை பிரிஞ்சு இருக்கிற ஃபீலே வரலை." என்றாள் மஞ்சரி.

கஜேன், ஸர்குன் ஒரு கண்ணாடி பௌல் நிறைய மாதுளம் முத்துக்களைக் கொடுத்து, "ஜானிமா, மாமிஷா உனக்காக உரித்தாள். மதியத்துக்குள்ள சாப்பிட்டு முடிக்கனும்." எனத் தந்தார்.

"மாமாஷா, எவ்வளவு இருக்குப் பாருங்கள், நான் மட்டும் எப்படிச் சாப்பிடுறது?" என்றாள் ஜானகி.

அமரேன், "நீ மட்டும் எங்கடா சாப்பிடப் போற உள்ளே இருக்க ராத்தோட்ஸ்ஸும் சாப்பிடுவாங்களே!" என்றார்.

"நான் சாப்பிட்டு, சாப்பிட்டே பங்கின் மாதிரி ஆகப் போறேன். இன்னும் யாராவது உங்கள் ஜானகி மேல உங்கள் அன்பைக் காட்ட பாக்கி இருக்கீங்களா?" எனக் கூவினாள்.

"பாபிஷா இதோ வந்துட்டேன். தாதிஷா வாங்கிட்டு வரச் சொன்ன நட்ஸ்." எனப் பெரிய பேக்கோடு ரன்வீர் வந்தான்.

ராஜ்வீர் ஒரு சிறு மரப்பெட்டியைக் கொண்டு வந்தான். ரகுவீரை அணைத்துக் கொண்டவன், பூஃபாஷாக்களை வரவேற்றான்.

 "ஜானிமா உனக்காகக் கஷ்மீரி கேசர். குங்குமப் பூ. பாலில் கலந்து சாப்பிடனுமாம். மாஷா இந்தாங்க." என ஸர்குனிடம் கொடுத்தான்.

"ரகுவி நைட் ஜானி படுக்கும் முன்பு இதைப் போட்டுக் குடிக்கனும். இந்தக் கப்போர்டில் வைக்கிறேன்.” என இடத்தைக் காட்டினார். சரி எனத் தலை ஆட்டினான்.

ஹேமந்த், "ஜமாயிஷா இரண்டு பேரும் ப்ளானைப் பார்த்தால் சேஞ்சஸ் இருந்தால் செய்துட்டு, கட்டிட வேலை ஆரம்பிக்கலாம். சாலேஷா எல்லாம் பார்த்துட்டாங்க." என்றவர். "சிவா நீயும் பார்த்துச் சொல்லு, அங்க மில் கட்டின அனுபவம் இருக்குமே!" எனக் கேட்டார்.

அந்த ப்ளானை கவனமாகப் பார்த்த மூவரும் அவரவர் யோசனையைச் சொல்ல, சிறு மாற்றங்களுடன், மற்றொரு மில்ஸ் யூனிட் கட்ட ஏற்பாடு ஆனது. அந்தக் கான்ட்ரெக்டை ஹேமந்திடம் கொடுத்தனர்.

சிவகுரு ராகினி நான்கு நாட்கள் தங்கி விட்டு சிறுமலைக் கிளம்பினர். தமிழ் மாதக் கணக்குப்படி ஒன்பதாம் மாதம் ஆரம்பத்தில் வளைகாப்பு வைத்துக் கொள்ளலாம் என நாள் குறித்துச் சென்றனர்.

ரகுவீர் ஜானகியை அழைத்துக் கொண்டு, ஷப்னம் துணைக்கு வரச் சிப்பி ஹாஸ்பிடல் சென்றான். மற்றொரு ஸ்கேன் எடுக்கப்பட்டு அலர்ஜி டெஸ்ட் எல்லாம் எடுக்கப்பட்டது.

"மிஸஸ் ராத்தோட், நல்லா சாப்பிடுங்க, வாக்கிங் போங்க. மருந்து மாத்திரை செக்கப் எல்லாம் சரியா செய்தால் நார்மல் டெலிவரி ஆகும்." என நம்பிக்கை கொடுத்து அனுப்பினார் மருத்துவர்.

திரும்பி காரிடாரில் வரும் போது ஒரு ஆள் வந்து இவர்களுக்கு முன்னால் மண்டியிட்டுக் கை கூப்பியபடி, "கம்மாகனி ராணிஷா. உங்களை இப்படிப் பார்ப்பதில் ரொம்பச் சந்தோஷம்." என்றான். குரல் பரிச்சயமாக இருந்தது. முகம் புதிதாக இருந்தது. ஜானகி குழம்பமாக ரகுவீரை பார்க்கவும், "உங்கள் சாசனத்து அடிமை ருத்ரநாத் பவாரியா." என்றான் ரகுவீர்.

ஜானகிக்குச் சிரிப்பில் கண்கலங்கியது."ருத்ரா நீ தானா, டிப்டாப்பா டிசர்ட் எல்லாம் போட்டு. ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணியாச்சா? ம்ம் வீருஜி இனி நீங்க எல்லாம் அவுட் ஆப் மார்க்கெட். ருத்ராக்கு தான் கேர்ள்ஸ் மத்தியில் டிமாண்ட் வரப் போகுது." என்றாள். ரகுவீர் முறைத்தான். ருத்ராவுக்கு வெட்கம் வந்தது. "ருத்ரா எங்கே இருக்க?" என்றபடி ஒரு நர்ஸ் வந்தாள்.

"ராணிஷா, இது சாம்பவி, என்னை நல்லா பாரத்துக்குச்சு. ராத்தோட்ஷா ஆதரவும், இது அனுசரணையும் தான் நான் மனுசனா இருக்கேன்." என்றான்.

"ரொம்பச் சந்தோஷம் ருத்ரா, சீக்கிரம் தேதி பாரு நானே வந்து முன்னே நின்று ஷாதி செய்து வைக்கிறேன்." என அந்த நர்ஸிடமும் ஓரிரு வார்த்தைப் பேசி ஜானகி கிளம்பினாள்.

 

"வீரூஜி, ருத்ராக்கு நம்ம செக்யூரிட்டி வேலை போட்டுக் கொடுக்கலாம்ல, திருந்திய மனுஷனுக்கு ஆதரவு தரனும்." என்றாள்.

"நீ வரட்டும்னு இருந்தேன். நம்ம வீட்டில் செக்யூரிட்டியா போடலாம். நீ ஆப்டர் டெலிவரி வெளியே எங்கேயாவது போனால், அவன் டிரைவ் பண்ணட்டும்." என்றான் ரகுவீர்.

"இரண்டு பேரும், ஜாடிக்கேத்த மூடிதான். கடத்துனவனையே செக்யூரிட்டி ஆகிட்டிங்க." என்றார் ஷப்னம்.

ஒரு நாள் இரவு உணவு முடிந்து ஹாலில் அமர்ந்து இருந்தனர். ஹரிணியும், அமர்சிங்கும் பிள்ளைகளோடு ஜானகியைப் பார்க்கவென வந்திருந்தனர். ஜானகி நடுவில் அமர்ந்திருந்தாள். ரகுவீர் பக்கத்தில் அமர்ந்து அவளின் இடுப்புக்கு மேல் உள்ள அல்லையைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தான். அடிக்கடி இந்த வலி வந்து அவளைப் பாடாய்ப் படுத்தும், டாக்டரிடம் கேட்கும் போது, "ப்ரக்னென்சியில் இது போல் சிலது வரும்." என்றார்.

 அதிலிருந்து லேசாக ரகுவீர் அமுக்கி விடுவான். இப்போதெல்லாம் ரகுவீர் ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்து விடுகிறான். முதலில் கேலி செய்த மஞ்சரியே ஜானகி படும் அவஸ்தையில் வாயடைத்துப் போனாள்.

ரோஹன், ஹாசினி ஜானகியைச் சுற்றி விளையாடிக் கொண்டு இருக்க, "பக்டோ, பக்டோ." என்ற ரோஹனின் குரலில் ஜானகி வயிற்றில் துள்ளல் தெரிந்தது. ஜானகி அப்பா எனப் பிடித்துக் கொண்டாள். ரகுவீரும் அதிர்வை உணர்ந்தான். ஹரிணியும், அமர்சிங்கும் குழந்தை அசைவைப் பற்றிப் பாடம் எடுத்தனர். அன்றிலிருந்து தினமும் அசைவைக் கவனித்து அனுபவிப்பது இவர்கள் வழக்கமானது. ஜானகி வயிற்றில் குனிந்து குட்மார்னிங் குட்நைட் என மஞ்சரி, ராஜ், ரன்வீர் பேச ஆரம்பித்தனர்.

ரகுவீர் அருகிலிருந்து பேசிக் கொண்டிருக்கும் போது ஆட்டம் ஜாஸ்தியாக இருக்கும். ஜானகி சந்தோஷமாக இருக்க வேண்டும் எனக் காமெடி படங்களாகப் போடுவார்கள். அவளாக இருக்கும் போது , தமிழ்ப் படங்கள், வடிவேல் காமெடிகளை ரசித்துப் பார்ப்பாள், ரகுவீரையும் பழக்கப் படுத்தி இருந்தாள். அவனே அவ்வப்போது, "முடியலை!" என வடிவேல் டயலாக் பேசுவான்.

சில நேரங்களில் மொட்டை மாடியில் அமர்ந்து மாற்றி மாற்றிப் பாட்டுப் பாடுவார்கள். ப்ரகனன்சியை முழுமையாக அனுபவித்தாள் ஜானகி, அவளோடு ரகுவீரும் அனுபவித்தான்.

 ஒரு நாள் பத்து மணிக்கு மேல், "வீரூஜி எனக்குப் பட்டர் ஸ்காட்ச் வேணும். ஒரு ட்ரைவ் போகலாம்." என்றாள் ஜானகி.

அவள் ஆசையைத் தட்ட முடியாத ரகுவீர் காரை எடுத்தான். ஜானகி அவனை முத்தமிட்டு ஓவர் கோர்ட் ஷாலோடு கிளம்பினாள்.

 மும்பையின் வீதிகளில் ரகுவீரின் ஆடிக்கார் வழுக்கிக் கொண்டு சென்றது. அதிகப் போக்குவரத்து இல்லாத ரோடு, தங்கள் ஷாதி முடிந்த வந்த ரோட்டில் மலரும் நினைவுகளாய் ஒருவரை ஒருவர் கலாய்த்தபடி சென்றனர்.

 கடலோரம் இருந்த ரோட்டுக்கடை ஐஸ்கிரீம் ஷாப்பில் இரண்டு கோனை வாங்கியவன், கடலைப் பார்த்த வண்ணம் அவளை அமர்த்தி ஷால் போர்த்தி விட்டு, தானும் அருகில் அமர்ந்தான். ஜானகியின் மகிழ்வில் உள்ளிருந்த ராத்தோட்ஸ் குஷியாகினர். "வீரூஜி இதுங்களுக்கும் ஐஸ்கிரீம் ரொம்பப் பிடிச்சிருக்கு போல, ஆட்டத்தைப் பாருங்கள்." என்றாள்.

"ஆக மொத்தம், இந்த ஷாப்புக்கு ரெகுலர் கஸ்டமர் ஆகிடுவோம்." என்றான் ரகுவீர்.அவளுடைய கோனை முடித்துவிட்டு, ரகுவீர் கையிலிருந்ததை வளைத்துச் சுவைத்தாள். "ஏண்டி நீ தான் சாப்பிட்டையே?" என்றான்.

"ஆமாம் வீரூஜி, இது உங்கள் புள்ளைங்களுக்கு." என்றாள். இனி அவன் எங்கே பேச? நேரமாகிறது எனக் கிளப்பினான்.

கார் மெதுவாக வந்து கொண்டிருக்கும் போத

களஞ்சியம்
78-சதாபிஷேகம் 

 

 நேற்று தான் இரண்டு திருமணம் முடிந்து சிவமாளிகைக்கு இரண்டு மருமகள்கள் வந்து சேர்ந்தனர். அவர்கள் மஞ்சள் கயிற்றின் மணம் மணக்கும் போதே, மூத்த சுமங்கலி சிவகாமி அப்பத்தாவுக்கு மற்றொரு முறை மங்கள நாண் பூட்ட புது மாப்பிள்ளை ஆனார் சிவபரங்கிரி. 

தனது வாழ்வின் விடலை பருவத்தில் கட்டுக்கடங்காத காளையாகத் திரிந்தவரைக் கட்டுக்குள் கொண்டு வர பதினான்கு வயது சிறுமியான சிவகாமியை, அவருக்கு மனைவியாக்கினர். சிறுமலையின் சீறிப் பாயும் காளை அவர், அவருக்கு இளம் வயதில் ஒன்றும் அறியாத பதின்பருவ மங்கையாக வாழ்க்கைப் பட்டவர், தனது கணவனுக்கு ஈடு கொடுத்து, வாழ்க்கை பயின்று இதோ இன்று பழுத்தப் பழமாக மஞ்சள் பூசிய சிவந்த முகம், ஆரஞ்சு வண்ணத்தில் ஜொலிக்க, கெட்டித் தாலிச் சரடும், வைரக் கம்மல், வைர மூக்குத்தி, கழுத்தை ஒட்டிய அட்டிகையும், நெற்றியில் விபூதிப் பட்டை அதன் நடுவே வட்டப் பொட்டு, உயர் ரக நெகமம் காட்டன் சேலை என மிடுக்காக இருப்பார். 

சிவபரங்கிரி நல்ல ஈடு தாடான மேனி, இயற்கை பழங்களால் உரம் ஏறிய உடற்கட்டு. பட்டு வேட்டி முண்டா பனியனோடு வீட்டின் பின் தோட்டத்தில் போட பட்டிருந்த மரச் சேரில் தன் மனையாளோடு அமர்ந்து இருந்தார். பக்கத்தில் அண்டாக்களில் வாசனைத் திரவியம் கலந்த பூக்கள் தூவிய தண்ணீர் நிறைத்து இருந்தனர்.

 இரண்டு சல்லடைகளை இவர்கள் தலைக்கு மேலே மூத்த பேரன் சங்கரப் பாண்டியும், அவன் மனைவியும் பிடித்துக் கொள்ள, சுந்தரவள்ளி சொன்ன வரிசையில் தண்ணீர் ஊற்றினர். முதலில் சிவகுரு, ராகினி சேர்ந்து அவர்கள் தாய் தந்தைக்கு வெள்ளிச் சொம்பில் நீர் நிரப்பிச் சல்லடை வழியாகத் தலை வழியே வடியும் படி தண்ணீர் ஊற்றி ஆசி பெற்றனர்.

 அடுத்துச் சண்முகம், தெய்வா தம்பதியுடன் சிவகணேஷ். அடுத்து அமுதன் மயூரி, பாலன் அமிர்தா எனத் தண்ணீர் ஊற்றி ஆசிர்வாதம் பெற்றனர். முருகானந்தம் சுந்தரவள்ளி ஊற்றி முடியவும், ஜானகி ரகுவீரை அழைத்தனர்.

ஜானகி அப்பத்தாவிற்கு ஆசையாக முகத்தில் மஞ்சள் பூசி விட்டாள். தாத்தாவிற்குச் சந்தனம் பூசினாள்.

பிறகு ரகுவீரோடு சேர்ந்து தண்ணீர் ஊற்றினாள். "என் ஆத்தா, யாருக்காவது இதெல்லாம் தோனிச்சா, என் பேத்திகளுக்குத் தான் தோனும்." ஏன சிவகாமி அவள் முகம் வழித்து நெட்டி முறித்தார். சந்தோஷமா இருடா கண்ணு என வாழ்த்தினார்.

 "மகன் வீட்டுப் பேத்தின்னு சொன்ன உடனே ஒரு ஸ்பெஷல் தான்.” எனச் சுந்தரவள்ளி குறைபட்டார். "அவளுக்கு இருக்க யோசனை உனக்கு இருக்கா, சும்மா பேச வந்திட்டா." என மகளை அடக்கினார் சிவகாமி.

 ரகுவீர், ஜானகி சல்லடையை வாங்கிக் கொண்டு, சங்கரப் பாண்டி தம்பதியை அனுப்பினர். அவன் மகன் மகளோடு ஊற்ற, அடுத்து சந்தனப்பாண்டி. இவர்கள் வரிசை முடியவும் ராத்தோட்கள், தாதாஷா, தாதிஷா ஊற்றினர்.ராஜேன், ஷப்னம் ஊற்றி ஆசி வாங்கினர். கஜேன், ஸர்குனுடன் ரன்வீர் சேர்ந்து ஊற்றி ஆசி பெற்றான். அமரேன், பூனம், ஹேமந்த், பம்மி வரை ஊற்றினர்.

 மஞ்சரி, "அப்பத்தா தொங்கத் தொங்கத் தாலி கட்டி நூறு வருஷம் வாழனும்." எனத் தமிழில் அப்பத்தாவின் சொலவடைச் சொல்லி அவர் கன்னத்தில் முத்தமிட்டாள் . பிறகு ராஜ்வீருடன் சேர்ந்து தண்ணீர் ஊற்றி ஆசி வாங்கினாள்.

 "அடி என் அழகே, அசராமல் இரட்டைப் பிள்ளையாப் பெற்றுப் போடு, உன் மாமியார்கள் வளர்க்கட்டும்." என்றார் சிவகாமி.

 "அப்பத்தா எனக்கு மூத்தவ, உங்கள் பேத்தி இரட்டைப் பிள்ளை பொத்து கொடுக்கட்டும். போட்டிக்கு நானும் பெத்துக்குவேன்." என மஞ்சரி வாய் சொல்லி ஓயவில்லை, ஜானகி பக்கத்தில் நின்ற அமிர்தா கையில் ஜல்லடையைக் கொடுத்து விட்டு செடியை நோக்கி ஓடினாள். ரகுவீர் பாலனிடம் கொடுத்துவிட்டு அவளைப் பின் தொடர்ந்தான்.

சிவகுரு நண்பர்கள் மகன் மகள் மருமகள் என அனைவரும் ஒருவர் பின் மற்றொருவராக நீராட்டினர். அவர்களைத் துணி மாற்ற அழைத்துச் சென்றனர்.

 ஜானகி டைனிங் பக்கம் இருந்த பக்கவாட்டு தாழ்வாரத்தின் படியில் அமர்ந்து, வெளியே மண்ணில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள். ரகுவீர் அவளைத் தாங்கிப் பிடித்திருந்தான். ஹரிணி கையில் தண்ணீர் பாட்டிலைக் கையில் வைத்துக் கொண்டு நின்றாள்.

 தெய்வா வேகமாக வந்தவர், "என்னடாம்மா?" எனவும் அவரை உட்காரவைத்து மடியில் தலை சாய்த்தாள். தெய்வா ரகுவீரிடம் அமிர்தாவை அழைக்கச் சொன்னார். அதற்குள் அமிர்தாவே வந்து விட்டாள், "எலுமிச்சை பழச்சாறு உப்பு ஒரு சிட்டிகை போட்டு சீனி தூக்கலாப் போட்டுக் கொண்டுவா." எனப் பணித்தார்.

 "தம்பி ஶ்ரீநிதியை வரச் சொல்லுங்கள்." என்றார். செய்வது அறியாது நின்ற ரகுவீர், ஜானகியை விட்டு அகல முடியாமல், அமித்துக்குப் போன் போட்டு அவளை அனுப்பச் சொன்னான்.

ஶ்ரீநிதி வருவதற்குள் ஜானகிக்கு முகம் கழுவி விட்டு தன் முந்தியில் அவள் முகத்தைத் துடைத்தார் தெய்வா. அமிர்தா எலுமிச்சை சாற்றை ஜானகிக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பல்லில் படாமல் மெல்ல ஊற்றினாள். அதற்கும் குமட்டல் வந்தது.

 "அமிர்தா, தேன் ஒரு ஸ்பூன் ஊற்றி, எலுமிச்சை சாறு அதில் விட்டுக் கொண்டு வா அழகு கிட்ட கேளு இருக்கும் இடம் சொல்லுவா." என அனுப்பினார்.

 ரகுவீர், அமிர்தா தந்தது போல் ஒவ்வொரு மடக்காகப் புகட்டினான். ஶ்ரீநிதி வந்து விட்டாள். "ஜானும்மா எந்திரி." என்றார் தெய்வா.

 "அம்மா வாந்தி வர்ற மாதிரி இருக்கு நான் இங்கேயே இருந்துக்குறேன்." என்றாள். ரகுவீர் ,"உள்ளே ரூமில் உட்காரலாம் வாடா, வாந்தி வந்தாலும் வாஷ் ரூம் போகலாம்." என்றான்.

 ஶ்ரீநிதி நாடிப் பிடித்துப் பார்த்துச் சிரித்தாள். "ஜானி ரூமுக்கு வா." எனத் தன் பேகில் இருந்த மெடிக்கல் கிட்டை கொண்டு வரச் சென்றாள்.

ரகுவீர் ஜானகியைத் தூக்கியவன், எங்கே போவது என யோசிக்கும் முன், "எங்க ரூமுக்குப் போங்கத் தம்பி." என்றார் தெய்வா.

 

"அத்தான், நானே நடந்து வரேன்." என்றவளின் வார்த்தைக்கு அவனிடம் பதில் இல்லை.

 தெய்வா ரூமில் ஜானகியை உட்காரவைத்து ஃபேனைப் போட்டுவிட்டான். அவள் மயங்கி இருந்தாள், பக்கத்தில் பதட்டமாக நின்றான். தெய்வா தன் மடியில் ஜானகியைத் தாங்கினாள். ஶ்ரீநிதி கிட் பேகுடன் வந்து, மற்ற இருவரையும் வெளியே அனுப்பிக் கதவை அடைத்து ப்ரக்னன்ஸி டெஸ்ட் எடுத்தாள். ரகுவீர் பதட்டமாக வாசல் கதவு அருகில் நின்றான். தெய்வா ஹார்லிக்ஸ் எடுக்கச் சென்றார்.

 ஶ்ரீநிதி வெளியே வந்தவள், "கன்கிராட்ஸ் ப்ரோ, நீங்க அப்பாவாகப் போறீங்க." எனவும், "தாங்க்ஸ் சிஸ்டர், கொஞ்சம் எனக்கு டைம் கொடுங்கள். என் பொண்டாட்டியைக் கொஞ்சிக்கிறேன், அதுக்கப்புறம் எல்லார் கிட்டயும் சொல்லலாம்." எனக் கதவை அடைத்து விட்டு உள்ளே சென்றான்.

 ஹரிணி ஶ்ரீநிதியின் பின்னோடு வந்தவள் பார்க்கும் முன் ரகுவீர் கதவை அடைக்க, ஶ்ரீநிதி, ஹரிணியிடம் குஷ்கப்ரியையும் சொல்லி, ரகுவீர் சொன்னதையும் சொன்னாள்.

"சரி வா, சோட்டே இப்போதைக்குக் கதவைத் திறக்க மாட்டான். ஷாதி மண்டபத்தில் பார்த்துக்கலாம். வேன் கிளம்புது." என அழைத்துச் சென்றாள்.

 ஜானகி மகிழ்ச்சி, வெட்கம், உடல் அசௌகரியம் என எல்லாமாக அமர்ந்திருந்தாள். ரகுவீர் அவள் அருகில் சென்று தூக்கிச் சுற்றி இறக்கிவிட்டு அவள் முகமெங்கும் முத்தமிட்டான். "ஜானும்மா, நிஜம்மாவே ஜானு மாஷாவா ஆகுறடி. நான் பாபுஷா. தாங்க்ஸ்டி மேரிஜான்." என அளவற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். அவனோடு கட்டியணைத்து ஒன்றிக் கொண்டாள் ஜானகி. இருவரும் மோன நிலையில் லயித்து இருந்தனர்.

 பிறகு ரகுவீரைக் கட்டிலில் அமர்த்தித் தான் பக்கத்தில் நின்று, தன் மார்போடு அவனைச் சாத்திக் கொண்டு, அவன் கையைத் தான் கரு சுமக்கும் அடி வயிற்றில் வைத்துக் கொண்டாள். "அத்தான், கடத்தலுக்குப் பின்னாடி மனோ வியாதிக்காரியா இருந்தேன். என்னைத் தனியா விடாமல், அப்படியே ஏத்துக்கிட்டிங்களே. அன்னைக்கு நிலையில் நான் தாம்பத்தியத்துக்குக் கூடத் தயாரா இல்லை. எந்த நம்பிக்கையில் என்னைக் கல்யாணம் பண்ணீங்க. அதுக்கு அப்புறம் எத்தனை பாடு. இன்னைக்கு நான் அம்மாவாகப் போறது, உங்கள் காத்திருப்பு, பொறுமைக்குக் கிடைச்ச பரிசு." எனக் கண்ணீர் விட்டாள்.

 அவளையும் பக்கத்தில் அமர்த்திய ரகுவீர், அவள் கண்களின் நீரை தன் இதழ்களால் துடைத்து, "மேரிஜான் என்பது வெறும் வார்த்தை இல்லைடி , நிஜமாகவே நீதான் என் உயிர். இப்போ வயிற்றுக்குள் இன்னொரு ஜான் வேற. சந்தோஷமா இருடி. கண்ணீரெல்லாம் போதும்." என அவள் வயிற்றில் முத்தமிட்டவன், "ஓ மை டார்லிங், பாபுஷா பேசுறேன். நீங்க பாபு சொன்னதைக் கேட்டு வந்ததுக்குத் தாங்க்ஸ்." என்றான்.

 அவனின் குனிந்திருந்த தலையைத் தடவியவள், "வீரூஜி, ஐ லவ்யூ!" என அவன் சிகையில் முத்தமிட்டாள். அவன் நிமிர்ந்து பக்கத்தில் அமர்ந்து, "அங்க இல்லடி இங்க கொடு" எனக் கன்னத்தைக் காட்டவும். கற்பனைத் தோழனாக இருந்த தன் வீரூஜி, காதலனாகி, கசிந்துருகி அவளுக்காகத் தவித்து, காயம் பட்டு, அவளை மோகமாகவும் ஆக்கிரமித்து  கணவனாகத் தாம்பத்தியத்தில் சுகிக்க வைத்து, இன்று தாய்மையில் மிளிர வைத்துள்ளான். அதை நினைத்து உருகியவள், அவன் முகம் முழுவதும், இதழ்களால் அளந்து, "அத்தான்!!!" என உணர்வு மிகுதியில் அழைத்தாள்

 "ஜானும்மா, தாத்தா, அப்பத்தா ஷாதி இருக்குதே போகலாமா. நம்மை எதிர்பார்ப்பாங்க." என்றான் ரகுவீர்.

 "உங்கள் ஜூனியருக்கு மட்டும் குடுத்தீங்க, எனக்கு…" என ஜானகி முகத்தைத் தூக்கவும், "மேரிஜான் உனக்குத் தாண்டி முதலில் கொடுத்தேன். அதனால் கரும்புத் திண்ணக் கூலியா என்ன?" என்றவன் அவள் கன்னங்களில் இதழ் ஒற்றினான், அவள் இன்னும் சமாதானம் ஆகாமல் இருக்கவும் நெற்றிக் கண் எனப் பயணித்து இதழில் முடித்தான். பிறகு திருப்தியுற்றவளாக ஜானகி சமாதானம் அடைந்தாள்.

 "ஜானகி, வீரூ, ரகுவி, ஜானிமா!!!" என இரு அம்மாக்களின் குரலும் கேட்டது

."மாதாஜி இரண்டும் வந்திடுச்சு, இனி என் பொண்டாட்டி எனக்கு இல்லை." எனப் புலம்பியபடி போனான். ஜானகி சிரித்துக் கொண்டாள்.

கதவைத் திறக்கவும், இருவரும் ரகுவீரைக் கட்டியணைத்துக் கொஞ்சி விட்டு, ஜானகியை நோக்கிச் சென்றனர்.

 ராகினி முகத்தில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. ஷப்னம் "ஜானிமா, என்னைத் தாதிஷா ஆக்கிட்ட." எனக் கட்டிக் கொண்டார். "கடைசியா எப்ப ஆன, என்கிட்ட சொல்லவே இல்லையே?" எனக் குறைப் பட்டார்.

"மாஷா, எனக்கு இந்த ஷாதி அலைச்சலில் ஞாபகமே இல்லை." என்றாள்.

 தெய்வா ஹார்லிக்சோடு வந்தார். "அக்கா மண்டபத்துக்குக் கிளம்பனும்." என்றார். ராகினி மகளைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்தவர், "ஜானும்மா, உன்னை இப்படிப் பார்க்கனும்னு தாண்டா அவ்வளவு ஆசை. யாராவது என் வளர்ப்பைத் தப்பா பேசிடுவாங்களோன்னு பயமா இருக்கும், அதனால் தான் உன்னைக் கண்டிச்சுக்கிட்டே இருப்பேன். வீரூவை கல்யாணம் பண்ணப் பிறகு, எனது டென்ஷனும் அதிகமானது, இப்ப ரொம்பச் சந்தோஷம்." என்றார் .ஷப்னம், "ராகினி நீ என் பஹூவை நினைச்சுத் தேவையில்லாமல் பயபடுற. ஜானிமா பத்னியா கிடைக்க ரகுவி கொடுத்து வச்சிருக்கனும். இவனுக்கு ஷாதி இவ்வளவு நாள் தள்ளிப் போனதே, இந்தத் தேவதை வருவதற்குத் தான் என்னடா நான் சொல்வது சரிதானே!" என ரகுவீரைப் பார்த்துக் கேட்டார் ஷப்னம்.

"நூறு சதவீதம் கரெக்ட். உங்கள் பஹூ தான் எனக்குச் சரியான ஜோடி." என மாஷாவைக் கட்டிக் கொண்டு முத்தமிட்டான்.

 "பாபி உங்கள் பஹூவை இனி நான் ஒரு வார்த்தை சொல்லலை போதுமா, வீரூ நாங்க முன்னாடிப் போறோம், நீ ஜானுவை தனியாகக் காரில் கூட்டிட்டு வா." எனச் சென்றார். பின்னோடு ஷப்னம், தெய்வாவும் சென்றனர்.

 சிவகுரு தம்பி அறைக்குள் வராமல் தயங்கி நின்றார். தெய்வா, "அத்தான் உள்ளே போங்க, ஜானகியும், மாப்பிள்ளையும் தான் இருக்காங்க." என அனுப்பி வைத்தார்.

 சிவகுரு உள்ளே வந்தவர், அங்கே நின்ற ரகுவீரை கட்டியணைத்து வாழ்த்துக்கள் சொன்னார். மகளிடம் சென்றவர், அவள் தலையைத் தடவவும், "அப்பாஜான்!" என அமர்ந்தபடி அவரைக் கட்டிக் கொண்டாள். "தங்கப் பிள்ளை, நீயே எனக்குக் குழந்தை தான், உனக்கு ஒரு குழந்தையாடா?" என அவர் உணர்ச்சிவயத்தின் உச்சத்திலிருந்தார் கண்களில் தாரையாகக் கண்ணீர். மருமகனைத் தலையசைத்துக் கூப்பிட்டவர், அவனையும் சேர்த்து அணைத்துக் கொண்டார். வார்த்தை தேவையில்லாத உணர்ச்சிப் பூர்வமான காட்சியானது.

 பின் சுதாரித்து, தன் கார் சாவியை ரகுவீரிடம் கொடுத்து விட்டு, "நீங்க, நான் போன் போடும் போது மெதுவா வாங்க." எனக் கிளம்பினார். ரகுவீர்

ஜானகிக்கு ஹார்லிக்ஸ் கொடுத்து, அவள் உடையைச் சீராக்கி ஹாலுக்கு அழைத்து வந்தான். மற்ற அனைவரும் மண்டபத்துக்குக் கிளம்பி இருக்க, ராஜேன், ஷப்னம் காத்திருந்தனர். சிவகுரு தான் இவர்களை நிறுத்திவிட்டு சென்றார்.

ரகுவீரைக் கண்ட ராஜேன், கட்டிக் கொண்டு சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். மருமகளைப் பார்த்து, "ஜானிமா என்னைத் தாதாஷாவாக்கிட்ட, என்ன வேணுமோ கேளு மாமாஷா தரேன். " என்றார்.

 "மாமாஷா வேறென்ன குடும்பம் பெரிசாகுது, ட்ரெஸ் வைக்கக் கப்போர்ட் வேண்டும்." என்றாள் ஜானகி. அவர் ஹாஹா வெனச் சிரித்தார். "நல்ல பொண்ணுமா நீ, ராத்தோட் மேன்சனையே கேட்பியா அதை விட்டுட்டுக் கப்போர்ட் கேட்கிற." என்றார்.

 ஷப்னம், "உங்கள் பாப்-பேட்டேக்கு என் பஹூதான் சரி." என்றார். ரகுவீர் காரை செலுத்தினான். ராஜேன் முன் சீட்டில் அமர்ந்து கொண்டார். ஷப்னம் தோளில் தலை சாய்த்துக் கொண்டு வந்தாள் ஜானகி.

"மாஷா, வாந்தி வர மாதிரி இருக்கு." என்றாள் ஜானகி.

"ஒண்ணும் இல்லைடா, இதை நாக்கில் வை சரியாப் போகும்." என ஒரு குட்டி கண்ணாடி சீசாவில் தேன், எலுமிச்சை சாறு கலந்த கலவை இருந்ததை, தொட்டு நாக்கில் வைக்கச் சொன்னார். தெய்வா, கிளம்பும் போது ஷப்னத்திடம், இந்தக் கலவை, உப்பில் பதப்படுத்தப்பட்ட எலுமிச்சை, மாங்காய் எனச் சிறிய டப்பாக்களில் போட்டு தெய்வா கொடுத்துச் சென்றார்.

அதைத் தான் ஷப்னம், ஜானகிக்குத் தந்தார். கண்ணாடி வழியே பார்த்த ரகுவீர், "மாஷா, காரை ஓரமாக நிறுத்தவா?" எனக் கேட்டான்.

"நீ காரை ஓட்டு, நான் வேணும்னா நிறுத்த சொல்றேன். ஐந்து நிமிடம் இடம் வந்திடும்." என்றார் ஷப்னம்.

 சிவப்பரங்கிரி ஐயா, சிவகாமி அம்மாவின் திருமணம், நேற்று இளையவர்களுக்கு நடத்த அதே பந்தலில் நடந்தது. கணபதி பூஜை, ஆயுஷ் ஹோமம் மட்டும் செய்து முடித்து விட்டு பேத்தி வருகைக்காகக் காத்திருந்தனர்.

 பெரிய மேடையில், நடுவில் போட பட்டிருந்த மேடையில் தன் வாரிசுகள் சூழ என்பது வயது தந்த வாழ்க்கை அனுபவத்தின் ஆளுமையில் கனிவும், மிடுக்கும் ஒன்றிணைந்து மரபெஞ்சில் அமர்ந்திருந்தனர்.

ரகுவீர், ஜானகி, ஷப்னம், ராஜேனுடன் மணப்பந்தல் நோக்கி வந்தனர். விசயம் பரவி இருக்க, ஜானகியை உற்றார் ஆவலாகப் பார்த்தனர். ஜானகி அப்பத்தா பக்கத்தில் வரவும், அவளை உச்சி முகர்ந்த அப்பத்தா, "இதை விடச் சிறந்த பரிசு இல்லையடி இராசாத்தி." எனக் கொஞ்சினர். அமிர்தா பின்னால் இருந்து ஜானகியைக் கட்டிக் கொண்டாள். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி.

 ஐயர், தமிழில் தாலிக் கட்டும் மந்திரங்கள் சொல்ல, தாதிஷாவை நாத்தனார் முறைக்கு முடிச்சிட பின்னால் நிறுத்தி இருந்தனர். தாதாஷா தாத்தா பக்கத்திலிருந்தார். மஞ்சள் கயிற்றில் மீனாட்சி சொக்கர், தங்கத் தாலியும், இரண்டு குண்டு மட்டும் கோர்த்திருக்க, அதனை அட்சதை மலர்கள் தூரல் மழையாகப் பொழிய, ஆரஞ்சு வண்ண பழுத்த முகத்தில் இன்றும் வெட்கம் மிளிர பதின்வருட சிறுமியாய் கைப்பிடித்த சிவகாமியை, கிழம் பழமாக அறுபது கல்யாணம் முடித்து, என்பதாம் கல்யாணம் மூன்றாவது முறையாகத் தாலி கட்டினார் சிவபரங்கிரி.

 ரகுவீர், ஜானகிக்கு முதல் ஆசி வழங்கினர். "எங்களை மாதிரி என்பதாங் கல்யாணம் கண்டு பெரிய குடும்பியா நூறு வருஷம் வாழனும்." எனத் தாத்தா சிவபரங்கிரி ஆசி வழங்கினார்.

தாதாஷா, தாதிஷா தாத்தா அப்பத்தாவிற்குத் தங்கத்தில் சங்கிலிப் போட்டு ஷாலைவைப் போர்த்தி மரியாதை செய்தனர். அடுத்து மகன், மகள், மருமகள் பேரன் பேத்தி என வரிசையாக ஆசி வாங்கினர். விபூதி, குங்குமம் பூசினர். சிவகாமி அப்பத்தா ஆசி வாங்கிய சுமங்கலிகளுக்கு, மஞ்சள், குங்குமம், தாலிக் கயிறு, ஒரே மாதிரியான வெள்ளி குங்குமச் சிமிழைப் பரிசாகத் தந்தார்.

 தாதாஷா, தாதிஷாவிடம் ஜானகியோடு வந்த ரகுவீர் தான் மட்டும் குனிந்து இருவருமாக ஆசி வாங்கி, குஷ்கபரியைச் சொன்னான். தாதிஷாவின் மகிழ்ச்சி எல்லைத் தாண்டியது, ஆனந்தக் கண்ணீர் துளிர்க்க, "குஷ் ரஹோ மேரி லாட்லி!" எனத் தலையில் கை வைத்து அணைத்துக் கொண்டார். தாதாஷா ரகுவீரிடம் அன்பை வெளிப்படுத்தி, "ஜானிமா, அடுத்தத் தலைமுறை ராத்தோட் ரெடியா, சந்தோஷம்டா மேரி ஸோனு" என அணைத்தவர்,"இந்தப் புடியாவை, பர் தாதிஷாவாக்கி படிபுடியா(பெரிய கிழவி) ஆக்கிட்ட ரொம்பச் சந்தோஷம்." என்றார். வீரேந்தர் சிங் ராத்தோட்.

 "நான் பர் தாதின்னா, நீங்களும் பர்தாதா தான். இந்தப் புட்டேக்கு மட்டும் வயசு திரும்புமாக்கும்." என வம்பிலுத்து இருவரும் தங்கள் அடுத்தத் தலைமுறை வாரிசின் வருகைக்குக் கட்டியங் கூறும் இச்செய்தியைக் கொண்டாடினர்.

 ஜானகியின் மற்ற இரு மாமான்களும், மாமிகளும் விசயம் கேட்டு மகிழ்ந்தனர். ஆசிர்வாத நிகழ்வு முடிந்து அமர்ந்திருந்த இளையவர்கள் ரகுவீர் ஜானகிக்கு வாழ்த்துக்கள், சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

 அமுதன் ஜானகி அருகில் வந்து, அவளை அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டான், "ஜானும்மா, செல்லக்குட்டி, உனக்கு ஒரு பேபியாடி, ஜானுவை அம்மாவா நினைக்கும் போதே சந்தோஷமா இருக்கே. நான் மாமா ஆகப்போறேன். அத்தான் கங்கிராட்ஸ். ரொம்பச் சந்தோஷம்." எனக் கண்களில் நீர் தளும்பத் தனது மகிழ்ச்சி யை வெளிப்படுத்தினான்.

 "ஜானும்மா தாயை விடத் தாய் மாமனுக்குத் தான் உரிமை ஜாஸ்தி. நான் தான் உன் பிள்ளையை முதலில் தூக்குவேன்." எனப் பாலன் சொன்னான்.

"அதெல்லாம் இல்லை, அத்தை தான் முதலில், ஜானி மகனை நான் தான் தூக்குவேன்." என அமிர்தா அவளைக் கன்னத்தில் கிள்ளி கொஞ்சினாள்.

 "பையா, ஜானி கங்கிராட்ஸ். படே பையா குழந்தை வந்து என்னைப் புவாஷான்னு சொல்லும்." எனக் கண்களில் ஆர்வத்துடன் இருவரையும் கட்டிக் கொண்டாள் மயூரி.

 

"ஹனி, பொண்ணு பிறந்தால், பால்ய விவாஹ், இல்லை சிசு விவாஹ் செய்து நம்ம வீட்டுக்கு கடத்திடுவோம்." என்றான் அமர்சிங்.

"லட்கா பிறந்தால் என்ன செய்யறது?" என்றால் ஹரிணி.

"சின்னவனா இருந்தாலும் பரவாயில்லை என ஹாஷினிக்கு பண்ணிடுவோம். எனக்குச் சாலேசா சம்பந்தீ ஆகனும்." என்றான் அமர்சிங்.

 "பாய்ஷா, எங்கள் லட்காவை விடப் பெரிய பொண்ணு எல்லாம் கட்ட மாட்டோம், வேணும்னா, ஸ்வரூ, அம்ரூவோட போட்டிக்கு ஹரிணி தீதியையும் இறக்கிவிடுங்க." என மயூரி சொன்னாள். முதலில் புரியாது என்ன போட்டி என யோசித்த பின்னே, ஆண்கள் தங்களவர்களைப் பார்த்தப் பார்வையில் பெண்கள் முகம் சிவந்தனர். அதற்கும் மஞ்சரி கமெண்ட் தந்தாள். "என்ன ப்ரோஸ் ரெடியா?" என்றாள்.

 "மஞ்சி, ஜானி பொண்ணு பெற்று குடுக்கலைனா நீ பெற்று கொடு." என்றார் ஹரிணி.

"இவ்வளவு தானே ஹரிணி தீதி, பார்த்துக்கிட்டே இருங்க, நீங்க போதும் போதும்னு சொல்ற அளவு ராத்தோட் பஹூஸ் பெற்றுத் தள்ளுவோம், என்னடி ஜானி, இதற்கெல்லாம் நாம் பயந்தவங்களா என்ன." என்றாள் மஞ்சரி. ஜானகிக்குத் தான் வெட்கம் வந்தது.

ரகுவீர் சிரித்துக் கொண்டே, ராஜ்வீரிடம், "உன் லுகாயியை அடக்குடா, இஷ்டத்துக்குச் சவால் விடுறா, உன் பாடு கஷ்டம்." என்றான்.

 "பையா, அவளை அடக்கவெல்லாம் முடியாது. உங்களையும் சேர்த்துத் தான் இதில் இழுக்குறா. என்னால் முடியலைனாலும், நீங்க சமாளிப்பீங்க." என்றான் ராஜ்வீர்.

"பிஸ்னஸ் ஓகே ராஜ்வி, இதிலையுமா?" என்றான் ரகுவீர். இதையெல்லாம் ரகசியமாகப் பேசியபடி, "ஜானி என்னால் சமாளிக்க முடியாத பிரச்சினையைப் பையா ஈஸியா முடிப்பார் தானே?" எனச் சத்தமாக ராஜ்வீர் ஜானகியிடம் கேட்டான்.

அவள் ஆம் எனத் தலையாட்ட ராஜ்வீர் சத்தமாகச் சிரித்து, "மஞ்சி சொன்னதை எங்கள் பையா, பாபி சேலஞ்ச் ஒத்துக்கிறாங்க. சம்பந்தி எல்லாம் ராத்தோட்ஸ் கூடத் தைரியமா டீல் போடலாம்." எனச் சகோதரிகளைப் பார்த்துச் சொன்னான் ராஜ்வீர்.

 "ஜானும்மா, ராஜ்வி, வரிசையா பிள்ளைகள் பெற்றுக்கிறதை பத்தி சொல்றான்டி, உனக்கு ஓகேவா. எனக்கும் ஒண்ணும் பிரச்சினை இல்லையா?" என்றான் ரகுவீர்.

 

வெட்கத்தில் சிவந்த ஜானகி, "போங்க வீரூஜி!" என அவ்விடம் விட்டு சிவகுரு இருந்த இடம் நோக்கிச் சென்றாள்.

பல்லாஜி, பாண்டே, ரெட்டி, ஹேமந்த் ஜோடிகள் அவருடன் அமர்ந்து இருந்தனர்."ஜானிமா, வாடாம்மா, வாடாக் கண்ணு இப்ப தான் எங்கள் எல்லாருக்கும் சந்தோஷம்." என்றார் பல்லாஜி. "ஏன் மாமாஜி?" என்றாள் ஜானகி.

 "பின்ன என்னம்மா, உங்க அப்பன், இன்னும் ராகினியை சைட் அடிச்சுக்கிட்டு ஜவான் லட்கா மாதிரி சுத்தித் திரியிறான். இனி தப்பிக்க முடியாது சிவா தாத்தா ஆகிட்டானே." என்றார் ரெட்டி. ஜானகிக்கு வசதியாகச் சேரை இழுத்துப் போட்டு தன்னருகே அமர்த்திக் கொண்டார் சிவகுரு.

 "நீங்கள் எல்லாரும் தான் இன்னைக்கு இருக்கும் சந்தோஷத்தின் அடித்தளம் அமைச்சுக் கொடுத்தது. நன்றி மாமாஜி'ஸ்." என்றாள் ஜானகி.

 “ஜானிமா, நீ நன்றி சொல்ற அளவு பெரியமனுசி கிடையாது. நீ இன்னும் மாமாஜிகளின் செல்ல மருமகள் தான்." என வாஞ்சையாகப் பேசினார் ரெட்டி.

 "புத்தரு, எதையும் சமாளிச்சு முன்னேறுவது தான் உன் பலம். என்னைக்கும் இது தொடர்ந்து இருக்கனும்." என்றார் ப்ரீத்தோ.

"சரி மாமிஜி, ஜெய் பாயி, ஆரவ் பாயி வீட்டிலும் விசேசம் எனவும் சந்தோஷம்." என்றாள் ஜானகி.

 "ஆமாம்டா, அதனால் தான் அமித் மட்டும் வந்தான். கவனமா உங்கள் அம்மாக்கள் தருவதை வாங்கிச் சாப்பிட்டு உடம்பில் பலத்தைச் சேர்த்துக்கோ." என்றார் பர்க்கா. பம்மி, "அதெல்லாம் ஜானிமா சமத்து சொன்னதைக் கேட்டுக்குவா." என்றார்.

 "உன் மகள் கேட்கலைனா, ஜமாயிஷா விட்டுருவாறாக்கும், ஜானிமா வந்து அரை மணி நேரம் ஆச்சு. இன்னும் ஜமாயிஷா வரலையே?" என ஹேமந்த் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே, ரகுவீர் ஜானகியைத் தேடி வரவும், மாமனார் கூட்டம் சிரித்தது.

 "என்ன பூஃபாஷா" என ரகுவீர் கேட்கவும், "உங்களைக் காணோமேன்னு ஜானுமாவிடம் கேட்டுக் கொண்டிருந்தோம்." என்றார் சிவகுரு. ஒரு தலையசைப்புடன் ஜானகியை அழைத்துச் சென்றான் ரகுவீர்.

 

மதிய உணவை ஒரு தட்டில் அவளுக்காக எடுத்து வைத்திருந்தான். "ஜானுமா காலையில் சாப்பிட்டதையும் வாந்தி எடுத்திட்டியே. எதை ஊட்டி விட?" என ரகுவீர் கேட்டான்.

 அமிர்தா அங்கு வந்தாள். "இருங்கண்ணா நான் அவளுக்குப் பிடித்ததா எடுத்துத் தருகிறேன்." என, சாதம் போட்டு சாம்பார் ஊற்றி காய்கள் ஊறுகாய் அப்பளம் வைத்து நீட்டினாள், நான்கு வாய், ஆர்வமாகச் சாப்பிட்ட ஜானகிக்கு மீதி இறங்க மறுத்தது. வேண்டாம் என வைத்து விட்டாள். ரகுவீருக்கு கவலை பிடித்தது.

 அடுத்த ஒரு மணி நேரத்தில் பந்தி பரிமாறப் பட்டு உறவினர், மூத்தவர்கள் கிளம்பி இருந்தனர். கடைசிப் பந்தி வீட்டினர் மட்டும் இருந்தனர்.

ஜானகி, "வீரூஜி, நீங்க சாப்பிட்டு வாங்க நாம வீட்டுக்குப் போகலாம்." என்றாள்.

 "நீ சரியாகவே சாப்பிடலைடி, எனக்குச் சாப்பிட மனசே வரலை." என்றான் ரகுவீர். ஜானகி அவனை டேபில்ல் அமர்த்தித் தானும் அமர்ந்து கொண்டு பரிமாறுபவரிடம் அவனுக்குப் பிடித்ததைச் சொல்லிப் பரிமாறச் சொன்னாள்.

 அவனுக்குப் பரிமாறும் இரஜஸ்தானி உணவு, ஜானகிக்கு என்றும் பிடித்தம் இல்லை. அதனால் ரகுவீர் கட்டாயப் படுத்தவும் இல்லை. ஆனால் ஆச்சரியத் தக்க வகையில் அதைச் சாப்பிட வேண்டும் என ஜானகிக்கு ஆசை வந்தது. அவன் அருகில் உட்கார்ந்து, "வீரூஜி, உங்கள் டேஸ்டில் எனக்கு ஊட்டி விடுங்கள்." என வாயைத் திறந்தாள். ரகுவீர் பரம சந்தோஷத்துடன் உணவை அவளுக்கு ஊட்டி விட்டு தானும் சாப்பிட்டான்.

 தாத்தா, அப்பத்தாவின் என்பதாம் திருமணம் மனநிறைவோடு, இனிதே முடிந்தது. ராத்தோட்ஸ் அடுத்த நாள் காலையில் கிளம்ப இருந்தனர்.

 மாலையில் குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் போது ராகினி ஷப்னத்திடம், "பாபிஷா, ஜானகி இந்த நிலையில் ட்ராவல் செய்ய வேண்டாம். இரண்டு மாதம் இங்கே இருக்கட்டும், நூறு நாள் தாண்டிய பிறகு, மும்பைக்குக் கூட்டிட்டு வரேன்" என்றார்.

 "நானும் இதே யோசனையில் தான் இருந்தேன்." எனும் போதே, ரகுவீர் எதிர்ப்புத் தெரிவித்தான். "புவாஷா, என் லுகாயியை விட்டுட்டு எல்லம் போகமுடியாது. ஃப்ளைட் தானே போயிடலாம், இல்லனா ட்ரைனில் புக் பண்றேன்." என்றான் ரகுவீர். 

" ரகுவி இதில் எல்லாம் அடம் பிடிக்காதே. மூன்று மாசத்துக்கு ரெஸ்ட் எடுக்கனும், அலைச்சல் கூடாது. மசக்கை அவளால் பயணம் செய்யவும் முடியாது." எனத் தாதிஷா கட் அண்ட் ரைட்டாகச் சொன்னார். அவர் சொல்லவும் பேசாமல் இருந்தான். முகம் தான் சோகத்தை அப்பி இறுகி இருந்தது. யாருடனும் பேசாமல் எழுந்து சென்றான்.

 ஜானகி தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தாள். சத்தமில்லாமல் சென்றவன், அவளருகில் அணைத்தவாறு அமர்ந்து இருந்தான். ஜானகி மெல்லத் தூக்கம் கலைந்தாள். ரகுவீர் அருகில் அமர்ந்து இருக்கவும், அவன் மார்பில் தலை வைத்து, சாய்ந்துப் படுத்துக் கொண்டாள். இன்னும் அரை மயக்கம் தான். ரகுவீர் அவள் தலையில் முத்தமிட்டுக் கட்டிக் கொண்டான். சற்றே தெளிந்து ஜானகி, ஏதோ சரியில்லை என உணர்ந்தாள். நிமிர்ந்து உட்கார்ந்து, அவன் தோள் வளைவில் அமர்ந்து, "வீரூஜி என்ன விசயம், கோபமா இருக்கீங்களா?" என்றாள்.

 "ம்ப்ச், யார் மேல் கோபப்படு

களஞ்சியம்
77. திருமணங்கள் 

 

 ராத்தோட்களின் ஸ்வர்ண மஹல் அன்று வண்ண விளக்குகள், தோரணங்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

"ஜானிமா பாராத் கிளபம்பனும் எல்லாம் ரெடியா?" என ஷப்னம் அவசரமாகக் கேட்டார். "எல்லாம் ரெடி மாஷா, நீங்க டென்ஷன் ஆகாதீங்க. ஷாதி மும்பையில் தானே நடக்குது, ரிலாக்ஸ். நான் எவ்வளவு சொல்லியும், உதய்பூரில் வேண்டாம்னுட்டீங்க. எனக்கு அதில் வருத்தம் தான்." என்றாள் ஜானகி.

 "ஹேமந்த் பாயிஷாவே அங்க வேண்டாம்னு சொல்லிட்டார், நாம என்ன பண்றது. ராஜ்வீர் ரெடியா பார்." எனக் கேட்டார் ஷப்னம்.

"உங்கள் பேட்டா, தன் சோட்டே பாயியை ரெடி பண்ணிக்கிட்டு இருக்கார். பார்த்துட்டு வரேன்." என லிப்டில் ஏறினாள் ஜானகி.

 ராஜ்வீர் அறைக் கதவைத் தட்டப் போன அவள் கைகளைப் பிடித்து நிறுத்தி, தன் அறைக்கு இழுத்துச் சென்றான் ரகுவீர்.

"அத்தான், இது என்ன இப்படிப் பண்றீங்க. பாராத் கிளம்பும் நேரமாச்சு." எனச் சிணுங்கினாள் ஜானகி.

ஜானகியின் முக்காட்டுக்குள் சென்று, அவளின் அழகைப் பருகிய ரகுவீர், "இன்னைக்கு என் லுகாயி, முழு இராஜஸ்தானியாகக் கலக்குறாளே!" என அவளோடு உரசி நின்றான்.

"ஆமாம், முழுசா ஒரு மாசம் யூரோப் ட்ரிப்பில் ரசிச்சது எல்லாம் பத்தாதாக்கும்?" என அவனோடு ஒத்துழைத்துக் கொண்டே, கேட்டாள் ஜானகி. "ஏண்டி, நீயும் தான் இழையிற, சும்மா வாய் தான் ஆட்சேபனை சொல்லும். மற்றதெல்லாம் வாடா மச்சான்னு அழைப்பு விடுக்கும்." எனக் கொஞ்சினான் ரகுவீர்.

 "தமிழில் உங்களுக்குத் தேவையானதை மட்டும் கத்துக்குங்க. கொஞ்சம் நல்லா புரிஞ்சு உங்கள் கூடத் தமிழில் பேசமாட்டமான்னு ஆசையா இருக்கு." என்றாள் ஜானகி.

"ஒரு நாள் நிச்சயம் தமிழ் கத்துக்குறேன்டி. நீயே அதை நான் ஈசியா கத்துக்கிற மாதிரி கத்துக் கொடு." இது என்ன என அவள் அங்கங்களின் பெயர் பட்டியலை அறிந்து கொண்டிருந்தான். 

"ஜானிமா, துல்ஹா ரெடியான்னு பாரு.” என ஸர்குன் குரல் கொடுத்தார்.

"வீரூஜி, மாமிஷா கூப்பிடுறாங்க, வாங்கப் போகலாம், நாளைக்கு வச்சுக்கலாம் தமிழ்ப் பாடத்தை." என அவனை விலக்கி வெளியே வந்தாள்.

 ரகுவீர் பின்னோடு உரசிக் கொண்டே வந்தான். ஹரிணி அமர்சிங் ராஜ்வீர் அறைக்கு வந்தவர்கள், இவர்களைப் பார்த்து, "சாலேஷா, முகத்தில் ஒட்டியிருக்கிறதை துடைச்சிட்டு வா, என்ன தான் நாம ரொமான்டிக் மூடில் இருந்தாலும், உலகம் நம்மைப் புரிஞ்சுக்காது." எனக் கேலி செய்தான்.

 ரகுவீர், முகம் முழுவதும் தொட்டுப் பார்க்க, ஜானகி கணவனை எக்ஸ்ரே கண்களோடு பார்த்து எதுவும் இல்லையே எனக் குழப்பமானாள்.

 ஹரிணி கலகலவெனச் சிரித்தவள், "அமர்ஷா சும்மா இருங்க, அங்க பாருங்க என் சோட்டே எல்லா இடத்தையும் தொட்டுப் பார்த்து, ஜானி மானத்தை வாங்குறான்." என்றாள்.

 

அப்போது தான் அமர்சிங் கேலி புரிந்து, "ஜீஜூஷா, ஒரு நிமிஷம் பயந்தே போய்ட்டேன்." எனவும் ஜானகி தலையைக் குனிந்து, கூங்கட்டுக்குள் மறைந்தாள்.

 ரன்வீர், ராஜ்வீரை அழைத்து வரவும் எல்லாரும் ஹாலுக்கு இறங்கினர். ஸ்வர்ண  மயூரி அம்சமாகக் கிளம்பி பெரியவர்களுடன் நின்றாள். மயூரியை தாதிஷா கட்டியணைத்து, உச்சி முகர்ந்து, அடுத்து உன் ஷாதி தான். யார் கண்ணும் படக்கூடாது எனக் காலா டீக்கா வைத்துக் கொண்டிருந்தார்.

 ராஜ்வீர் தங்க நிற செர்வானியில் கம்பீரமாக நிற்க, ஸர்குன் தலைப்பாகை, பகடி அணிவித்தார். தாதிஷா திலக் வைத்தார், தாதாஷா வீரவாளை அணிவித்தார். ஹரிணி, மயூரி இணைந்து முத்துப் பாசிகளால் ஆனச் செஹ்ரா கட்டினர். மூத்த ராத்தோட் சகோதரர்கள் மிடுக்காக நின்றனர். மற்ற சம்பந்திகளும், பங்காளிகளும் வந்து இணைந்தனர். சைலேந்தர் குடும்ப உறுப்பினராக வந்து சேர்ந்தான். "கம்மாகனி பாபிஷா!" என ஸ்பெஷல் வணக்கம் ஜானகிக்குச் சொன்னான்.

 "கனி கம்மா, தேவர்ஷா, இன்னைக்காவது போலீஸ் டூட்டிக்கு ஓய்வு கொடுத்தீங்களே." என்றாள்.

 "வேலை அப்படி,என்ன செய்யறது. ஹாங் சொல்ல மறந்துட்டேன், ராணிஷா எப்ப வருவாங்க, குஷ் கபரி இருக்கான்னு, உங்கள் சாசனத்து அடிமை ஒருத்தன் கேட்டுகிட்டே இருக்கிறான்." என்றான் சைலேன். அவள் கேள்வியாக நோக்கவும், "ருத்ரநாத் பவாரியா!" என்றான். அவள் அவன் உடல் நிலை முகக் காயம் பற்றிக் கேட்டு அறிந்துக் கொண்டாள்.

 ராஜ்வீர் பாராத் மஞ்சரியை சட்டப்பூர்வமாக மணம் முடிக்க அழைத்துச் செல்கிறான். பால்ய விவாகம் செய்த குழந்தைகள் வளர்ந்து, இன்று முறைப்படி திருமணம் நடக்க இருக்கிறது. வழக்கமாகச் சொந்த ஊரில் சொந்த வீட்டில் ஷாதி செய்யும் முறையைப் புறக்கணித்து மும்பையில் ஷாதி நடத்துகிறார்கள்.

 ஹேமந்தின் இந்த முடிவு செகாவத் குடும்பத்தை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பைரவ் சிங் செகாவத் தன்னுடைய எதிர்ப்பை தெரிவிக்க, ஜானகி, ராகினிக்கு இழைத்த துரோகத்தின் பரிகாரம் என முடித்து விட்டார்.

 பைரவ் தவிர மற்ற ஹேமந்தின் பங்காளிகள், அவருடைய தயவு தேவை என்பதால் ஹேமந்துக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். கிழட்டு நரியான பைரவை புறக்கணிக்க ஆரம்பித்தனர். முதலில் இருமாப்பாகவும், பின்னர்க் கோபமாகவும் இருந்த பைரவ், நாள் செல்லச் செல்ல தனிமை படுத்தப்பட்டார். அவருடைய சகோதரர்கள், மனைவி யாரும் உயிரோடு இல்லாத நிலையில், பாஞ்சா, பாஞ்சிக்களும் கை விட்டனர். பைரவ் கிறுக்குப் பிடித்தது போல் ஆனது.

 ரகுவீர், யூரோப்பில் இருந்து வந்த பின்னர், உதய்பூருக்கு ஒரு விசயமாகக் கட்டாயம் போக வேண்டியது இருந்தது. ஜானகி தானும் வருவதாகப் பிடிவாதம் செய்து, அவனோடு சென்றாள். பின்கட்டு ஏரி, அவள் தங்கியிருந்த அறை என நினைவு கூர்ந்து, தங்கள் சங்கமத்துக்கான அடித்தளங்களைப் பார்த்திருந்தாள்.

 அங்கிருந்த சரஸ்வதி பெண், செகாவத்தின் நிலைக் குறித்துச் சொல்லவும், ரகுவீரை அழைத்துக் கொண்டு சென்றாள். முதலில் பார்க்க மறுத்த பைரவ், அவர்கள் பிடிவாதமாகக் காத்திருக்கவும், வேறு வழி இல்லாமல் வந்தார். இன்று தான் ரகுவீர், ஜானகியை ஊன்றி கவனித்தார். ஜானகியின் சாயலில் அவருக்கு ஓர் அச்சம் ஏற்ப்பட்டது. தன் சாசுமாவின் சாயலும், அதிகாரம் குணமும் , தோரணையும் பார்த்தவர் ஜானகி பேச்சுக்குக் காது கொடுக்க ஆரம்பித்தார்.

 ஜானகி மெல்ல அவரிடம், தாதாஷா, என அழைத்துப் பேசினாள். ரகுவீருக்குக் கோபம் இருந்தது, ஆனால் ஜானகிக்காக மௌனத்தைக் கடைப்பிடித்து இருந்தான். ஜானகிப் பேசப் பேச பைரவ் மனம் உடைந்தது. எல்லாருடைய வெறுப்பையும் பெற்றிருந்தவரின் வாழ்க்கை தனிமையில் உழன்று கிடந்தது.

 அதில் விடி விளக்கென, ஜானகி அவருக்கு ஒளிக் காட்டினாள். மற்றவரோடு அன்பாக இருக்கத் தூண்டி விட்டாள். மஞ்சரி போல் தானும் ஒரு பேத்தி என்பதை அவர் மனதில் விதைத்து வந்தாள். மஞ்சரி ஷாதிக்கு வரமுடியாது என ஹேமந்திடம் மறுத்தவர், ஷாதி தினத்தன்று வந்து சேர்ந்தார். ராகினி, சிவகுருவிடம் மன்னிப்பும் கேட்டார்.

 சிவகுரு நண்பர்கள் வழக்கம் போல், லட்கிவாலே வாகி, ராத்தோட்களை வரவேற்கத் தயாராக வாசலில் நின்றனர். சிவமாளிகை தாத்தா, அப்பத்தா முதற் கொண்டு தெய்வா, சண்முகம், அமிர்தா, பாலன் அனைவரும் மஞ்சரிக்காக வந்து சேர்ந்தனர்.

 அந்த நாளும் வந்திடாதோ, என மஞ்சரி காத்திருந்த ஷாதி நாள் வந்தே விட்டது. ரகுவீர் ஜானகி யூரோப் ட்ரிப் முடித்து வந்த பதினைந்தாம் நாள் இதோ ஷாதி நடக்கிறது. இருவரும் எல்லாப் பொறுப்புகளையும் தங்களது ஆக்கிக் கொண்டு, பம்பரமாகச் சுழன்றனர்.

 பஞ்சாராக்களின் பாரம்பரிய நடனம், பேண்ட் வாத்தியம் சேர்ந்து, படு கிராண்டாக ராத்தோட்ஸ் வந்து இறங்கினர். குறுகிய காலத்தில் உறவினர்கள், பிஸ்னஸ் சரகில், நண்பர்கள் என அனைவரையும் அழைத்து இருந்தனர். மண்டபம் கூட்டத்தால் நிறைந்தது.

 

மஞ்சரி, ஜெயமாலை அணிவித்து, தான் பால்ய காலம் முதல் கணவனாகக் கொண்ட ராஜ் பேபி கழுத்தில் சுலபமாக மாலையைப் போட்டாள்.

ராஜ் வீரைத் தூக்க ரகுவீர், ரன்வீர் தயாராக இருந்த போது, அன்ன நடை பயின்று வந்த மஞ்சரி, ராஜ் அருகில் வேண்டும் என்றே கையில் மாலையோடு தடுமாற, ராஜ்வீர் மஞ்சு பேபி என முன்னால் வந்தான். அவன் குனிந்து இவள் காலை ஆராயும் போது மாலையைப் போட்டுவிட்டாள் மஞ்சரி. ராஜ்வீர் ஏமாந்து போனான். ராஜ்வீர் மாலையைப் போட வந்த போது முதலில் ஆட்டங் காட்டிய மஞ்சரி, ராஜ் பேபியின் வாடிய முகம் கண்டு பொறுக்க மாட்டாமல் மனமிறங்கி தன் மாலையைப் பெற்றுக் கொண்டாள்.

 ராஜ்வீர் காதில், "சாலேஷா, இதே டேக்டிஸை காலம் முழுவதும் பிடித்துக் கொள்." என அமர்சிங் ராஜின் காதில் ரகசிய அட்வைஸ் தந்தார். ராஜ் பலமாகத் தலையை ஆட்டிக் கொண்டான்.

 அதைத் தொடர்ந்து, முகூர்த்தம் இனிதே நிறைவேறியது. விதாயி முடிந்து சற்றே மூத்த தம்பதியாக, ரகுவீர் கார் ஓட்ட ஜானகி முன்னால் அமர்ந்து, மணமக்களைத் தங்கள் வீட்டுக்குக் கிரகப்ரவேசம் செய்ய அழைத்துச் சென்றனர்.

 மஞ்சரி, அரிசிக் கலசம் தள்ளி விட்டு, சிவப்புச் சாந்துக் கால் தடத்தை வீட்டில் பதித்து, கேன்வாஸில் கைத் தடத்தைப் பதித்தாள். மற்ற சடங்குகளும் முடித்துப் பள்ளியறையில் அவளை அமர்த்தி முக்காடு இட்டு மூடிவிட்டு, அவளிடம் ரகசியம் பேசி கலாய்த்து விட்டு வந்தாள். ராஜ்வீருக்காக் காத்திருந்தாள் மஞ்சரி.

 ஐந்து நாட்களாக வேலை, வேலை என ஓடிய ஜானகி, தன் அறைக்கு வந்து அக்கடா என விழுந்தாள் ஜானகி. ரகுவீர் விருந்தினர்களை அவரவர் இடத்தில் அமர்த்தி ஏற்பாடு செய்து விட்டு வந்து பார்க்கும் போது, ஜானகி கை கால்களைக் குறுக்கி குழந்தையெனப் படுத்திருந்தாள்.

 ரகுவீருக்கு அவளைக் காணக் காண மனம் பூரித்துப் போனது. 'என்னோடு சரிசமமாக எல்லாக் கடமைப் பொறுப்புகளிலும் பங்கெடுத்துக் கொள்கிறாயே என் தேவதையே, ஜென்ம ஜென்மமாகத் தொடர்கிறதோ நம் பந்தம்.' என அவன் உணர்ச்சி ததும்பப் பார்த்திருந்த நேரம், கண் விழித்த ஜானகி, ஷோபாவில் அமர்ந்திருந்த தன்னவனைக் கை நீட்டி அழைத்தாள். ரகுவீர் அவளை அள்ளி அணைத்ததிலிருந்த வேகத்தில், அவன் எமோஷனலாக இருப்பதை அறிந்தவள்,

 "இப்ப என்னவாம் ராத்தோஷாவுக்கு இவ்வளவு ஃபீலிங். இன்னைக்கு ஜானும்மா எதுவுமே ஸ்பெஷலா செய்யலையே?" என்றாள்.

 

"நீயே ஸ்பெஷல் தாண்டி. என்றவன், அவளைப் படுக்க வைத்து, அவள் கால்களைத் தன் மடியில் வைத்து மெல்லப் பிடித்து விட்டான். "வீரூஜி இது எதுக்கு, எனக்கு ஒண்ணும் கால் வலிக்கலை." என்றாள்.

 "எனக்குத் தெரியும் நீ தூங்கு.” எனப் பாதத்தைப் பிடித்து விட்டான். அவள் அலுப்பில் சுகமாக இருக்கவும் அப்படியே தூங்கிவிட்டாள்.

 அடுத்த நாள் பஹ்பிரேவுக்கு ராஜ் மஞ்சரி ஹேமந்த் வீட்டுக்குச் சென்றனர். சிவ மாளிகை குடும்பத்தினர் அமுதன், மயூரி திருமணம் குறித்துப் பேச ஹாலில் கூடியிருந்தனர். இன்றிலிருந்து பத்தாம் நாள் சிறுமலை வந்து ரிசார்டில் தங்கிக் கொள்வதாக ராத்தோட்கள் முடிவு செய்தனர். அங்கு உள்ள ஹாலில் மற்ற சடங்குகள் செய்து கொள்ளலாம் என முடிவானது. 

இன்றிலிருந்து பதினைந்தாம் நாள், அமுதன் மயூரிக்கு அதிகாலையில் முகூர்த்தமும், பாலன் அமிர்தாவுக்குப் பத்தரை பன்னிரண்டு முகூர்த்தமும் ஏற்கனவே முடிவு செய்யப் பட்டு இருந்தது.

 தாலிக்கு பொன் தரும் சடங்கு, கணபதி ஸ்தாபனாவை நாளையே ஆரம்பிக்கலாம் எனப் பேசினர். ஜானகி தான், தன் அண்ணன்கள் இருவருக்கும் இங்கேயே தாலி செய்து விடுவதாகப் பிறந்த வீட்டில் சொன்னாள். நாளை அதைச் செய்யலாம் என்றனர்.

 ஷப்னம், ஸர்குன், பூனம் தங்கள் பஹூ ஜானகியை அவள் பிறந்த வீட்டினரிடம் வாய் ஓயாமல் புகழ்ந்தனர். சிவகாமி அப்பத்தாவே, ஜானகி இதெல்லாம் செய்தாளா என வியந்தார். குமாரி ஜானகிக்கும், திருமதி ஜானகிக்கும் அவ்வளவு வித்தியாசம் இருந்தது. சிவகுரு தனது மகளின் பொறுப்பான மாற்றத்தில் மனம் மகிழ்ந்திருந்தார். ராகினி தன் பிறந்த வீட்டுக்கு, தன் மகள் நிறைவான மருமகளாக இருக்கிறாள் என்பதில் திருப்தியாக இருந்தார்.

 அமரேன், பூனம் தங்கள் மகளுக்கு ஷாதி என்பதில் மகிழ்ந்திருந்தாலும், விதாயியை நினைத்து கலங்கி இருந்தனர். "மாம்ஸ் அந்த மகள், சசூரால் போனால் என்ன? இந்த மகள் உங்களைப் பார்த்துக்குவேன்." என மயூரிக்கு முன்பாகவே ஜானகி அவர்களைத் தேற்றியதைக் கண்ட மயூரி அவளை முறைத்தாள். "ஏய் பாபிஷா, இன்னைக்குத் தான் இதுக இரண்டும் கொஞ்சம் ஃபீல் பண்ணுச்சுங்க, அதுகூடப் பீல் பண்ணக் கூடாதா, ஆறுதல் சொல்ல வந்துட்ட!" என்றாள் மயூரி.

 "நீ சிவமாளிகை ஆட்களை ஃபீல் பண்ணாமல் பார்த்துக்க." என்றாள் ஜானகி.

 அடுத்த நாள் காலை  அமுதன் மயூரியை அமர வைத்து கணபதி ஸ்தாபனா பூஜை செய்தனர். பின்னர்த் தங்கள் நகைக்கடையில் இருந்து ஆசாரியை வரவழைத்து இருந்தனர், ஜானகி தான் போட்டிருந்த தங்கத் தாலியை மெழுகில் அச்செடுத்துக் கொடுத்தாள். அதற்கான பணத்தையும் தட்டில் வைத்துக் கொடுக்க, கடை முதலாளியாக ராஜேன் பெற்றுக் கொண்டார். அன்று மதியம் ஜானகியின் பிறந்த வீட்டினர் கிளம்பினர்.

 ஜானகி, மஞ்சரி என இரு பஹூராணிகளுமாக இப்போது ராத்தோட் மேன்சனில் வளைய வந்தனர். இரண்டுமே படாகா (வெடி) தான் ஆனால் ஒவ்வொரு ரகம். சிறு வயதிலிருந்து இவர்களோடு பழகியவள் மஞ்சரி, அதனால் ராத்தோட்களோடு நல்ல பழக்கம். ஜானகி குறுகியகாலத்தில், அந்த வீட்டின் மகள் வழிப் பேத்தியாக , அதற்கும் முன்பே தனது தனித்தன்மையால் அவர்களை வசீகரித்து வைத்திருந்தாள்.

 சில நேரங்களில் ரகுவீர், ஜானகி இணைந்து மஞ்சரியை ஓட்டுவார்கள், அதற்கெல்லாம் சலைத்தவளா நம் மஞ்சி, "உங்களிடமிருந்து கற்றப் பாடம் தான் தீதிஷா!" என ஜானகியிடம் ஆரம்பித்து, ரகுவீரிடம் வம்பை முடிப்பாள். ராஜ்வீர் பார்வையாளன் மட்டுமே. ரன்வீருக்குத் தான் பொழுது நன்றாகப் போனது. பாபிஷாக்களின் ஸ்வரஸ்யமான பேச்சுக்களில் மாறி மாறி அணி மாற்றி இருவரையும் கலாய்ப்பான். ஏற்கனவே தோழிகள் ஆதலால் ஓர்படி சண்டை இல்லை. ஏதாவது உரசல் வந்தாலும், ஒருவர் மற்றவரிடம் தானகவே வந்து தீர்த்துக் கொள்வர்.

 ஒரு நாள் தாதாஷா, தாதிஷாவும் ஹாலில் அமர்ந்து இருக்கும் போது, ராஜேனிடம் வந்து நின்ற ஜானகி, "மாமாஷா, எனக்கு இந்த வீட்டில் வேறொரு ரூம் தாங்க." என்றாள். 

ஏதேனும் சண்டையோ என மற்றவர் பதறி என்னவெனக் கேட்டனர். "ஏம்மா ரகுவி எதுவும் சண்டை போட்டானா?" என்றார் , ரகுவீர் அங்க வந்து சேர்ந்தான். அவன் ஜானகியை முறைத்துக் கொண்டு நின்றான்.

"மாமாஷா, உங்கள் பேட்டேக்கு என் மேல் ரொம்பக் குறை. இவர் ரூமில் இருக்கும் கப்போர்ட் பூரா நான் ஆக்கிரமிச்சுக்கிறேனாம். இவர் ட்ரெஸ் வைக்க இடமே இல்லையாம். நீங்களே இதுக்கு ஒரு வழி சொல்லுங்க." அவர் என்ன சொல்லுவார் பாவம், ரகுவீராவது தைரியமாகச் சண்டை போட்டான், அவருக்கு அந்த உரிமையும் இல்லை. 

ஷப்னம், "ஜானிமா, நல்ல ஆள் பார்த்த உனக்குப் பஞ்சாயத்து செய்கிறதுக்கு, இவரும் இதே குறை தான் என்கிட்ட சொல்லுவார்." என்றார். ரகுவீர் பாதிக்கப்பட்டோர் சங்கத்தில் பாபுஷாவும் இருக்கிறார் என ஆறுதல் அடைந்தான்.

 அமரேன், கஜேனும் வந்து சேர்ந்தனர். பிரச்சினையைக் கேட்டு, "ஜானிமா, ரகுவி சொல்றதும் நியாயம் தானே, ஷாதிக்கு அப்புறம் எங்கள் கப்போர்ட் சுருங்கிப் போகிறது." என்றார் அமரேன்.

"ஆமாம், ஆமாம் ஸரூவின் சாரிஸ் தான் கப்போர்ட் முழுதும் நிறைஞ்சு இருக்கு, எனக்குப் போனால் போகுதுன்னு ஒரே ஒரு செல்ப். " என்றார் கஜேன்.

"ஸுன்யேஜி, அப்போ இனிமேல் புதுத் துணி எடுத்துக் கொடுக்காதீங்க." என்றார் ஸர்குன்.

"ஆமாம், உங்களோடு பார்ட்டிக்கு வரும் போது பழசையே மாற்றி மாற்றிப் போட்டுக்குறோம்." என்றார் பூனம்.

"ராஜ் பேபி, நீயும் உன் பையா, பாபுஷா மாதிரி கம்ப்ளைண்ட் பண்ணுவியா?" என்றாள் மஞ்சரி.

"ம்கூம், நான் எதற்குச் சொல்லப் போறேன், நீ இடம் கொடுத்தா நான் கப்போர்ட்டில் வச்சிருக்கேன். இல்லைனா பெட்டியில் வச்சுக்கிறேன்." என்றான் ராஜ். மற்றவர்கள் சிரித்து விட்டனர்.

"இரஜஸ்தானி ஷேர், என்னடா இப்படி விழுந்துட்ட?” என்றான் ரகுவீர்.

"ஜானிமா, அவன் பாட்டுக்குச் சொல்லட்டும். நீ வச்சுக்கடா. திருப்பிச் சண்டை போட்டால், கெஸ்ட் ரூமில் சிப்ட்டு ஆகிடு. நைட்டும் அங்க தான், இவனை உள்ளே விடாதே." என்றார் ஷப்னம்.

"மாஷா, பாபுஷா ஏன் வாயே திறக்கலைனு இப்ப தானே தெரியுது. பஹூவுக்கு நல்ல அட்வைஸ் தரீங்க. நான் ஒரு வார்த்தை சொல்லி இரண்டு நாள் ஆகிறது, அவள் சும்மாவே திரும்பிப் படுத்து வெறுப்பேத்துறா, இதில் நீங்க வேற, சிப்ட் ஆகனுமாம். இங்க பாருடி மிர்ச்சி கப்போர்ட் பூரா நீயே வச்சுக்க. நான் பெட்டியில் வச்சுக்கிறேன்." என ரகுவீர் கோபமாகச் சொன்னான்.

 "மாமிஷா சொன்ன மாதிரி, இனிமேல் புதுசா எடுத்தே குடுக்காதீங்க. ஜானும்மா இது உனக்கு நல்லா இருக்கும்னு எதையும் எடுத்துட்டு வராதீங்க. மயூ மேரேஜ்க்கு பழசே போட்டுக்குறேன். மாதாஜி எடுத்துக் கொடுத்தாலும், அங்கேயே வச்சுட்டு வந்துடுவேன்." என ஜானகியும் கோபமாகப் பேசினாள்.

 தாதாஷா, "அரே பேட்டே, இது எல்லாக் குடும்பத்திலும் உள்ளப் பிரச்சனை. சிங்கிள் மேன், டபுள் ஆகிறதும், இன்னும் பெரிசா வளருவதும் இயல்பானது. ரகுவீர் ரூமை ஆல்டர் பண்ணு. உன்னுடைய  ராஜ்வீர் ரூமை டபுள் பெட்ரூம் உள்ளே இருக்கிற மாதிரி மாற்றிக் கட்டு. உங்களுக்கும் ஷாதி ஆகிடுச்சு. அடுத்துப் பிள்ளைகள் வரும். அந்தத் தேவையை யோசித்துக் கட்டு." என்றார்.

 "சரிங்க தாதாஷா, மயூ மேரேஜ் முடித்து இதை ஆரம்பிப்போம்." என்றான் ரகுவீர். ஜானகி ஏதோ யோசனையில் நின்றாள்.

"என்னம்மா, பாபுஷா சொன்னது சரிதானே?" என்றார் ராஜேன்.

"டீக் ஹை மாமாஷா. நான் வரேன், ஒரு வேலை இருக்கு." என மாடிக்கு லிப்டில் ஏறினாள். கோபமோ என ரகுவீர் அவளைப் பின் தொடர்ந்தான். நாளை இரவு சிறுமலை செல்ல ஃப்ளைட் ஏறுகிறார்கள்.

 

ஜானகி யோசனையாக வந்து, மாத காலேண்டரைப் பார்த்துக் குழம்பிக் கொண்டிருந்தாள். பின்னால் இருந்து ஜானகியைக் கட்டிக் கொண்ட ரகுவீர் "என்னடி ஜானும்மா யோசனை, கெஸ்ட் ரூம் போக நாள் பார்க்குறியா, அதெல்லாம் வேண்டாம். இரண்டு நாள் நீ முகத்தைத் திருப்பினதே எனக்குக் கஷ்டமா இருந்தது. நானும் ராஜ்வி மாதிரி ஃபுல் சரண்டர்." எனக் காதோரம் ரகசியம் பேசி, அவள் பின்னங்கழுத்தில் இதழ் ஊர்வலம் நடத்திக் கொண்டு இருந்தான். கைகள் இடையின் இடைவெளி தாண்டி அவளை மேலே இம்சித்துக் கொண்டிருந்து.

 "வீரூஜி, நான் கடைசியா எப்ப ஆனேன்னே ஞாபகம் இல்லை." என்றாள் ஜானகி. ரகுவீருக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. "அப்படின்னா என்ன அர்த்தம்?" என்றான். அவள் தலையில் கை வைத்து, "முருகா, கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரி மாதிரியே இருக்கே?" எனத் தமிழில் புலம்பினாள். ப்ரம்மச்சாரி மட்டும் புரிந்தது. என்ன எனக் கேட்கவும், அவன் காதில் ரகசியமாகச் சில விசயங்களைச் சொன்னாள்.

 "ஆனால் நான் உன்னை அப்படி வித்தியாசமா பார்த்ததே இல்லையே!" என்றான் . நீங்க அப்ப இங்கே இருந்தீங்க, அடுத்து…" என யோசித்தவள், யூரோப் ட்ரிப்பின் நடுவே ஆனது ஞாபகம் வந்தது. நாற்பது நாட்கள் ஆனது. ரகுவீரிடம் தனது ஐயத்தைச் சொன்னாள். ரகுவீர் வாயடைத்து நின்றான். "ஜானும்மா நிஜமா?" எனக் கேட்டான்.

"வீருஜி, இருக்கலாம் தான். இன்னும் கன்பார்ம் ஆகல. இப்போ யார்க்கிட்டயும் எதுவும் சொல்லாதீங்க. ரொம்ப எதிர் பார்ப்பாங்க. இன்னும் ஒரு பத்து நாள் ஆகனும், நெகட்டிவ் வரவும் சான்ஸ் இருக்கு." என்றாள் ஜானகி.

 அவளை ஷோபாவில் அமர்த்தித் தானும் அமர்ந்தவன், அவளை அணைத்து முத்தமிட்டான். "இருந்தால் ரொம்பச் சந்தோஷம், இல்லைனா விடா முயற்சி எடுப்போம் ஓகேயா?" என ஜானகியைப் பார்த்துக் கண்ணடித்தான்.

 வெட்கத்தில் அவன் மார்பில் சாய்ந்தவள், "இப்ப என்னமோ சும்மா இருக்க மாதிரி. ஆனால் கன்பார்ம் ஆச்சுனா, எனக்கு உங்களை மாதிரி 'குட்டி வீரூ' வேணும்." என்றாள்.

 "ம்கூம், அடுத்து அவன் வரட்டும், முதலில் குட்டி ஜானு தான், இதே கண்ணு, மூக்குச் சேட்டை எல்லாம் சேர்ந்த ஃபுல் பேக். நானும் அப்பாஜான் ஆகனும்." என்றான் ரகுவீர்.

 ஜானகி சிரித்துவிட்டு, "அப்பாஜானா இருக்கிறது ரொம்பக் கஷ்டம் வீரூஜி, பாபுவாகவே இருங்கள்." என்றாள் ஜானகி.

 

"இதை நீ, உதய்பூரில் ஏரியில் குதிச்சப்ப நானும், பூஃபாஷா வும் பேசினோம். அவங்க பேசும் போது அப்பா மகள் உறவின் அருமை புரிந்தது." என்றவன் ஜானகி வயிற்றில் கை வைத்துத் தடவி, முத்தமிட்டு, "குட்டி பேபி, பாப்பா (அப்பா) வெயிட்டிங், ஏமாத்தாம வந்திடுங்கடா." என டீல் போட்டான். அவன் தலை முடியைக் கோதியவள், அவன் தலை மீது தன் தலையை வைத்துக் கொண்டாள். ஞாபகம் வந்தவளாக, "நான் கெஸ்ட் ரூம் மாறிக்கவா, மாஷா சொன்னாங்க." என்றாள்.

 அவன் மடி விட்டு எழுந்து அவளை முறைத்தவன், "இப்ப தானடி சரண்டர் ஆகி நீயே வச்சுக்கன்னு சொன்னேன். திரும்பத் திரும்பப் புருஷனை ஒத்துக்க வைகிறதில் லுகாயிகளுக்கு ஒரு சந்தோஷம். அடிமை எல்லை மீறுதா, புரட்சி பண்ணுதான்னு டெஸ்ட் பண்ணி பார்த்துக்குவீங்க." எனக் கேட்ட விதத்தில் அவளுக்குச் சிரிப்பு வந்தது.அவனை அணைத்தபடி, "ஆமாம்." என்றாள். 

சிறுமலை எஸ்,எஸ் ரிசார்ட்டுக்கு ராத்தோட் குடும்பம் மொத்தமும் வந்து சேர்ந்தது. சிவகுரு, ராகினி, சண்முகம், அமுதன், பாலன் என அவர்களை எதிர் கொண்டு அழைக்க ரிசார்டில் காத்திருந்தனர். கம்மாகனி, வணக்கம் சொல்லி பாசத்தைப் பகிர்ந்தனர்.  ஜானகி, அப்பாஜான், மாதாஜியை அணைத்துக் கொண்டாள்.

சம்பந்திகளுக்கு வணக்கம் சொல்லி, "பஹூராணி வந்தாச்சு. வெல்கம் மருமகளே!" என மயூரியை வரவேற்று, மஞ்சரியிடம் "புதுப் பொண்ணு எப்படி இருக்கீங்க?" எனக் குசலம் விசாரித்து, ரிசார்ட் சிப்பந்திகளுடன் அமுதன், பாலன் ஒவ்வொருவரை அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு அழைத்துச் சென்றனர்.

அமுதன், மயூரியிடம், "ஃபைனலி என் பொண்டாட்டி , என் கண்ணை நிறைக்க வந்தாச்சு." என அவள் பெட்டியை வாங்கி உருட்டிக் கொண்டு, கையோடு கை கோர்த்துக் கேட்டான். முன்னால் அமரேன், பூனம் கண்டும் காணாதது போல் சென்று கொண்டிருந்தனர்.

 பாலன், கஜேந்தர் ஃபேமலி, மஞ்சரியோடு வாயாடிக் கொண்டே கூட்டிச் சென்றான். சண்முகம் ராஜேன் பேமலியோடு ரகுவீரை அழைத்துச் சென்றார். ராகினி மாஷா, பாபுஷாவை பக்கத்திலிருந்த அறைக்குக் கூட்டிச் சென்றார்.

 தந்தையும் மகளும் மட்டும், தனித்திருந்தனர். அவளைத் தலை முதல் பார்த்த சிவகுரு, "ஜானும்மா, எதுவும் விசேசமாடா?" என ரகசியமாகக் கேட்டார்.

 "அப்பாஜான், கன்பார்ம் ஆனால் உங்களுக்குத் தான் முதல் குஷ் கபரி சொல்லுவேன். மாதாஜியே கவனிக்கலை நீங்க எப்படிக் கவனிச்சீங்க?" என அதிசயமாகக் கேட்கவும்.

"உங்கள் அம்மா, அவள் அப்பாவைத் தான் முதலில் பார்ப்பாள், நான் என் மகளைப் பார்ப்பேன்." என உச்சி முகர்ந்தவர், "நல்ல செய்தியாக வரட்டும்." என்றார்.

ராகினி, "பாபுஷா, நம்ம வீட்டிலேயே தங்கலாமே எதுக்கு ரிசார்டில் தங்கனும்?" என்றார். "லட்கிவாலே, இங்கே வசதியா இருந்துக்கிறோம். இதுவும் உன் இடம் தானே!" என்றார் தாதாஷா.

 ரகுவீர், ஜானகி இருக்குமிடம் வந்து சேரவும், சிவகுரு மருமகனைக் கட்டியணைத்துக் கொண்டார். "சந்தோஷம் மாப்பிள்ளை, எல்லாம் நல்லபடியா இருக்கட்டும்." என்றார்.ரகுவீர் அதிர்ச்சியாகி அவருக்கு முதுகில் ஜானகியிடம் சொல்லிட்டியா என விழியால் கேட்டான். "அவங்களே கேட்டாங்க!" என்றாள் ஜானகி.

 "பூஃபாஷா, இன்னும் கன்பார்ம் ஆகலை, செக்கப்பும் முடிஞ்சு ஷாதிக்கு அப்புறம் சொல்லுவோம். கவனம் அமுதன், மயூரி கிட்ட இருக்கட்டும், எங்கள் பக்கம் திரும்ப வேண்டாம்." என்றவன். "வாங்க வீட்டுக்குப் போகலாம். நானும், ஜானுவும் நைட் ஸ்டே அங்க. மற்ற நேரம் இங்க இருந்துக்குறோம்." என அழைத்துச் சென்றான்.

 சிவகாமி, தெய்வா ஜானகியின் முகம் பார்த்தே அறிந்தனர். கட்டியணைத்து உச்சி முகர்ந்து சந்தோஷத்தை வெளிப் படுத்தினர். "அதெல்லாம் ஒண்ணும் இல்லை, நீங்க இரண்டு பேரும் இதைப் பற்றியே பேசக்கூடாது." எனத் தடைப் போட்டாள் ஜானகி.

 மெஹந்தி, ஹல்தி, சங்கீத் என எல்லாச் சடங்கும் நடந்தது. அமிர்தாவையும் ஒரே இடத்தில் கூட்டி வந்து, ரிசார்ட் ஹாலில் விழாக்களை நடத்தினர்.

ரகுவீர், ஜானகியை மற்றவர் கவனம் கவராத வண்ணம் பார்த்துக் கொண்டான். மஞ்சரி எல்லா விசேசத்திலும் முன்னே நின்று வேலைகளைச் செய்தாள். சிவகணேஷ், ரன்வீர் இங்கும் அங்குமாக அலைந்தனர். அமர்சிங் ஹரிணி , சௌஹான் குடும்பம், பைரவ் செகாவத் முதற் கொண்டு செகாவத் குடும்பமும் மெஹந்தி அன்று வந்தது.

 சிவகுரு நண்பர்கள் சங்கீத்துக்கு வந்தனர். சிறுமலையில், இரண்டு ஏக்கர் நிலப்பரப்பை, சுத்தப்படுத்தி மேடை அமைத்து, கல்யாண மண்டபம் போல் அமைத்திருந்தனர். சுற்று வட்டார ஊரே பேசும் திருமணமாக, இரண்டு திருமணச் சடங்குகளும் நடந்தது. ஒரு லோக்கல் டிவி இவர்கள் நிகழ்ச்சிகளைக் கவர் செய்தனர்.

 அமிர்தாவை மணப் பெண்ணாகப் பார்த்த ஜானகி மனம் நெகிழ்ந்து போனாள். கட்டியணைத்து மகிழ்ச்சி யை வெளிப் படுத்தி, "பாலன் கொடுத்து வச்சவன்டி, உன்னை மாதிரி கேரிங் மனைவி கிடைக்கிறதுக்கு. என்னையே அப்படிப் பார்த்துக்கிட்ட." என ஜானகி உணர்ச்சி வயப்பட்டாள்.

 திருமணத்தை வயது வாரியாக உட்கார்ந்து அனுபவித்தனர். சிவபரங்கிரி ஐயா, வீரேந்தர் ராத்தோட், பைரவ் செகாவத்தைச் சேர்த்துப் பேசிக் கொண்டிருந்தனர். வீரேந்தர், தன் ஜீஜூஷாவின் இளமைக்கால வீரப் பிரதாபங்களைச் சொன்னார். "சாலேசா நீ மட்டும் என்ன, பஹன்ஷா வரும் முன்ன ரெனாவத் வீட்டுப் பெண்ணைச் சுத்திகிட்டு இருந்தியே." எனப் பைரவ் ரகசியத்தை போட்டு உடைத்தார். மயூரா தேவி முறைத்துக் கொண்டிருந்தார்.

 "ஜீஜூஷா, சம்பந்த்ஷா மாதிரி அடுத்த வருஷம் நான் என்பதாம் ஷாதி பண்ணலாம்னு பார்த்தால், ரகசியத்தை வெளிய

களஞ்சியம்
76- விதாயி 

 

ஜானகி ஆசைப்படி கட்டிய மஞ்சள் கயிற்றுப் பொன் தாலியைக் காலையில் முகூர்த்த நேரம் பார்த்து அப்பத்தா, தங்கத் தாலிக் கொடியில் மாற்றி விட்டார். அவள் மஞ்சள் கயிறே இருக்கட்டும் என அடம்பிடித்த போதும், நாலு பக்கம் போக வர இருப்பவள் எனச் சொல்லி, தங்க செயினில், மஞ்சள் கயிறு கோர்த்து, தாலியை அதில் கோர்த்தார்.

 ஜானகி தனக்குத் தேவையான பொருட்களை எடுத்து வைத்தாள். தாத்தா, அப்பா, அம்மா அண்ணன்கள் என மாற்றி அவளை அழைத்து வைத்துப் பேசினர். ஆளாளுக்கு அவளுக்குப் பிடித்ததைப் பரிசளித்தனர். அமிர்தா காலையிலிருந்து அவளையே ஒட்டித் திரிகிறாள். ஜானகிக்கான பேக்கிங், தேவையானதை எடுத்து வைப்பது எனச் சகலமும் அவள் வேலையானது.

 “ஜானி, உன்னை விட்டுட்டு எப்படி இருக்கிறது. நீ அண்ணா கூட இருந்தால், என்னை நினைக்கக் கூட மாட்ட!” என உரிமைச் சண்டையும் போட்டாள்.

 அவளைத் தோளோடு அணைத்துக் கொண்ட ஜானகி, "அமித்து டார்லிங், எனக்கு மட்டும் உன்னை விட்டுட்டுப் போறது அவ்வளவு ஈஸியா என்ன. எத்தனை வருஷமா நாம ஒன்னா இருக்கோம். நீ சொல்லு வீரூஜியை பேக் பண்ணிட்டு நான் இங்கேயே இருக்கேன்." என்றாள் ஜானகி.

 "ஆமாம் ரொம்ப இருப்ப, பதினைந்து நாள் விட்டுட்டுப் போனதுக்கே அந்தப் பாடு. இப்ப இன்னும்... நான் தான் நேற்று தோட்டத்து வீட்டுக்கு போய்ட்டு வந்ததிலிருந்து பார்க்கிறேனே." எனச் சொல்லும் முன் அமிர்தா சிவந்தாள்.

 "ஏண்டி, தோட்டத்து வீட்டுக்கு போய்ட்டு வந்தது நானு, நீ என்னமோ சிவக்கிற?" என்றாள் ஜானகி. அதே சமயம் ரகுவீர் உள்ளே வரவும், தோழிகள் பேசா மடந்தைகள் ஆனார்கள். ரகுவீர் என்ன என விழியால் கேட்டான். அவனுக்கும் சிவந்த கன்னங்களோடு வெளியே போங்க எனச் சைகையில் உத்தரவிட்டாள் ஜானகி. ரகுவீர் அறையை விட்டு ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் சென்றவன், "ஜானு, என்னுடைய ஜீன்ஸ் எங்கடி வச்ச?" என்றான்.

"எந்த ஜீன்ஸ்ஸை கேக்குறீங்க?" என்றாள் ஜானகி இங்கிருந்தபடி.

 "இங்க வைத்திருந்ததைக் காணோம்." எனக் கத்தினான் ரகுவீர்.

"ஜானு, அண்ணன் கேக்குறாங்க, போய்ப் பாருடி, நான் இதெல்லாம் பேக் பண்றேன்." என்றாள் அமிர்தா.

"இருடி பார்த்துட்டு வரேன்" என உள்ளே வந்த ஜானகியை, கதவைச் சாத்திவிட்டு கட்டிக் கொண்டான் ரகுவீர். அவள் மேல் மோகமாக, வேகமாக ஆரத்தழுவி, முகத்தைக் கழுத்து வளைவில் புதைத்து, கைகள் இடையில் விளையாடியது. அவன் தாக்குதலை எதிர்பார்த்தே வந்த ஜானகியும் அதற்கு இசைந்து நின்று, அவனுக்குத் தேவையானதையும் கொடுத்தாள்.

 "எந்த ஜீன்ஸ்ஸை காணோமாம்?" என அவன் காதில் முணுமுணுத்துக் கேட்டாள். கார் ஓட்டுவதற்கு வசதி என ஜீன்ஸ் குர்தியில் இருந்தாள் ஜானகி.

"இந்த ஜீன்ஸ் தான்." என அவள் இடையைப் பிடித்து நின்றதை இழுத்துக் காட்ட, "ம்ம், தருவாங்க, ராத்தோட்ஷாவுக்கு, என்கிட்ட இருக்கிறதில் தான் கண்ணு." எனத் தோளில் கடித்தாள்.

 "ஏய் வலிக்குதுடி, ட்ராகுலாவாடி நீ, குட்டி பிசாசு. நேற்று என்ன சொன்ன , ஒண்ணும் தெரியாத குட் கேர்ள். அதுக்கே இப்படியா?" எனப் பேசி அவளைச் சிவக்க வைத்தான்.

 அவனை நெஞ்சில் கை வைத்துத் தள்ளியவள், "போடா, மருதுக்காளை, காளையன், காய்ஞ்சு கிடந்து எகிறுது. இதில் டெஸ்ட் வைப்பாராம், பாஸ் பண்ணனுமாம். ஒரு பீடாக்கே தாங்கலை." என வம்பிலுத்தாள். தள்ளிய அவளைக் கையைப் பிடித்து முரட்டுத்தனமாக அணைத்தவன், "எகிறுனா எப்படி இருக்கும்னு காட்டவாடி?" எனச் செயலில் இறங்கினான். அவன் வேகம் எடுக்கும் போது, ஸ்பீடு ப்ரேக்கராக அமிர்தாவின் குரல் வந்தது. ரகுவீர் பொங்கிய பாலில் தண்ணீர் தெளித்தது போல் அடங்கினான். சத்தம் இல்லாமல் குலுங்கிச் சிரித்தாள் ஜானகி.

 அமிர்தாவுக்குக் குரல் கொடுத்து விட்டு, அவனை இறுக்கி அணைச்சு ஒரு உம்மா கொடுத்துவிட்டு, "காளையா." என அழைத்துக் கண்ணடித்துச் சென்றாள். ரகுவீர் கண்ணை மூடி அனுபவித்தவன், வழக்கம் போல் டிஸ்யூ எடுத்து லிப்ஸ்டிக் கரையைத் துடைத்துக் கொண்டான். இப்போது எல்லாம் மிகக் கவனமாக இந்த வேலையைச் செய்த பின்னே தான் அறையை விட்டு வெளியேறுகிறான். 'இல்லைனா இமேஜ், ரொம்ப டேமேஜ் ஆகுதப்பா.'.

 மதிய உணவுக்கு, வீட்டில் அனைவரும் ஆஜராகி இருந்தனர். ஜானகிக்குப் பிடித்த பதார்த்தங்கள் உணவு மேஜையை நிறைத்தன. இருவரும் அளவாக உண்டனர். மயூரி, மஞ்சரி, அமிர்தா மூவரும் அமைதியாக இருந்தனர். இன்று ஜானகி பிறந்த வீட்டை விட்டுக் கிளம்புவது போல், அவர்களும் ஒரு நாள் கிளம்புவார்கள். திருமணத்திற்குப் பின் அடிக்கடி வந்தாலும், போனாலும், பார்த்தாலும் அது என்னவோ, இந்த 'விதாயி' என்பது மனதைப் பொறுத்தவரை ஒரு பிரிவு உபசாரமாகிறது.

 இன்று காலையில் சிவகணேஷ் அக்காவை வழியனுப்ப வந்துவிட்டான். ஒரு மிட் செமஸ்டர் லீவ் என வந்தான். "அத்தான், காளை மாடெல்லாம் அடக்கி கலக்கிட்டீங்க. ஆனால் எங்க அக்கா கிட்ட அடக்கிட்டீங்களே!" எனக் கலாய்த்தான்.

 

"அதெல்லாம் உனக்குப் புரியாது சாலா, நீயும் காதலித்துப் பார், ஷாதி பண்ணிப் பார் அப்பத் தெரியும்." என்றான் ரகுவீர்.

"உங்கள் சொல்லைத் தட்டுவேனா, நீங்க சொன்னதைச் செய்யறேன் அத்தான்." என்றான் கணேஷ்.

"கணேஷா, நீ சொன்னதை அம்மாகிட்ட மொழி பெயர்க்கவா?" என்றான் பாலன். "அண்ணா, இப்ப வேண்டாம், நாலு வருஷம் ஆகட்டும், நீங்க எல்லாரும் செட்டில் ஆனப் பிறகு சொல்லிக்கலாம்." என்றான் கணேஷ்.

"டேய் தம்பி, எங்கேயோ ரூட் போடுற, பார்த்துடா!" என்றான் அமுதன்.

"அதெல்லாம் அத்தான், ப்ராமிஸ் பண்ணியிருக்கார், என்னத்தான்???" என்றான்.

"அவ்வளவு தானே பார்த்துக்குவோம், நீ தான் புவாஷா பற்றி முதன் முதலில் எனக்குச் சொன்ன, நீதான் ஜானு யாரென்று சொன்ன. நீதான் அவள் தீவிலிருந்ததையும் சொன்ன, உனக்காக நீ கேக்குற விசயத்தில் சப்போர்ட் பண்ணுவேன்." என்றான் ரகுவீர்.

"தாங்க்ஸ் அத்தான்!!!" என்றவனை அணைத்துக் கொண்டான் ரகுவீர்.

 ரகுவீர், ஜானகியை சாமி அறைக்கு அழைத்துச் சென்ற அப்பத்தா, தாத்தாவை சூடம் ஏற்றச் சொல்லிக் காண்பித்தார். ஒரு தட்டில் வைத்திருந்த சேலை துணிமணியைச் சிவகுரு, ராகினி இளைய ஜோடிக்குத் தந்தனர். ரகுவீர், ஜானகி ஜோடி, தாத்தா, அப்பத்தா, சிவகுரு, ராகினி, தெய்வா, சண்முகத்திடம் காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் வாங்கினர்.

 தாத்தா, ரகுவீரிடம், "பேராண்டி, நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்துட்டு போங்க. ஜானகியை , அப்ப அப்ப இந்தக் கண்ணுல பார்த்தால் தான் மனசு நிறையும்." என்றார்.

"ஜானகி கண்ணு, உங்கள் நாநாஷா மேல் வைக்கிற பாசத்தில், இந்தக் கிழவனை மறந்துறாத." என்றார் தாத்தா. அவரைக் கட்டிக் கொண்டு, அவர் கன்னத்தில் முத்தமிட்ட ஜானகி, "உங்களை எப்படி மறப்பேன். மை டார்லிங் தாத்தா." என்றாள்.

 "எவடி எம் புருஷனை டார்லிங்குனு கொஞ்சறது." என்ற சிவகாமியிடம்.

"அது தானே, சிவகாமி பேத்தியாளைத் தவிர யாருக்கு அம்புட்டுத் தைரியம் வரும்." என அப்பத்தா கன்னத்தைக் கிள்ளினாள் ஜானகி.

 "ஏண்டி, உன் ஆசைக்கு என் கன்னம் தான் கிடைச்சதா, அதெல்லாம் பேராண்டி கிட்ட வச்சுக்க. கவனமா கேட்டுக்க, எங்கள் என்பதாங் கல்யாணத்தப்ப கொள்ளுப்பேரன் வந்திடனும்." என்றார் அப்பத்தா.

"ஏன், அப்பத்தா, இப்ப கணக்கு வச்சாலும் பத்து மாசம் ஆகாது. தாத்தாக்கு இரண்டு மாசத்தில் என்பது வயசாகிடுமே?" என ஒன்றும் அறியாதது போல் வினவினாள். ரகுவீர் சிரித்துக் கொண்டான்.

 "குஷ் கப்ரி( நல்ல செய்தி) சொல்லச் சொல்றாங்க. ஓவர்டைம் செய்யனும்டி லுகாயி!" என ஜானகிக்கு மட்டும் கேட்கும் படி, அவள் நெற்றியில் விபூதி குங்குமத்தைச் சரி செய்வது போன்ற பாவனையில் சொன்னான் .

 "அப்பத்தா சொன்னதுக்காகத் தான் வருவீங்க, இல்லைனா, உங்களுக்கு ஒன்றுமே இல்லை காளையா?" என அவன் கையைக் கிள்ளினாள்.

"புவாஷா, கிள்றா பாருங்க. கட்டாயம் இவளைத் தவுட்டுக்குத் தான் வாங்கி இருப்பீங்க." என்றான் ரகுவீர்.

 ராகினி கண் கலங்கியவாறு இவர்கள் அருகில் வந்தவர், "பிறந்தபோது ரோஜாப்பூ குவியல் மாதிரி கை நிறைய இருந்தாள், இப்ப தான் பிறந்த மாதிரி இருக்கு, அதுக்குள்ள பெரிய மனுசியா விதாயிக்கு வந்து நிற்கிறாள்." என்றார் ராகினி.

 "ஆமாம், ஜானகி கிளம்புறாள், இனிமேல் இவள் தொல்லை இல்லாமல் நிம்மதியா இருங்க. நான் சசூரால் போய், அவங்களைப் படுத்த ஆரம்பிப்பேன்." எனக் கண்ணீர் வந்ததை மாற்ற உற்சாகமாகப் பேசினாள்.

 தெய்வா, "ஜானகிம்மா, விளையாட்டெல்லாம் போதும், இனி அந்தக் குடும்பத்து மருமகளாய் நீதான் எல்லாம் பார்க்கனும். இன்னும் சின்னப் பிள்ளை இல்லை சரியா?" எனக் கன்னத்தில் முத்தமிட்டவர் , ரகுவீரிடம், "பார்த்துக்குங்க மாப்பிள்ளை, ஒரே பொண்ணுன்னு ரொம்பச் செல்லமா வளர்த்திட்டோம்." என முந்தானையை வாயில் வைத்து அழுதார். 

ஜானகி கஷ்டப்பட்டுக் கண்ணீரை அடக்கி இருக்க, தெய்வா ஆரம்பித்து வைத்து விட்டார். "அம்மா!!!" எனக் கட்டிக் கொண்டாள் ஜானகி. இருவரும் அழுகை படலத்தை ஆரம்பித்து வைக்க, மற்றவரும் கலங்கி அழுதுக் கொண்டிருந்தனர்.

 சண்முகம், "ஏய் தெய்வா, புள்ளைக் கிளம்பும் போது அழ வைக்காதே . பாரத்துக்கங்க மாப்பிள்ளை." என ரகுவீர் கையைப் பிடித்தவர், அவனை ஆரத்தழுவி கொண்டார்.

 ராகினி, சிவகுரு விடம் வந்த ஜானகி, "அப்பா ஜான் போயிட்டு வரேன்." என்ற சொன்ன நொடி உடைந்து அழுதார் சிவகுரு. ஜானகி அவரைக் கட்டிக் கொண்டவள், "அப்பா ஜான், நீங்க எப்பவுமே அப்பா- ஜான் தான், நான் புகுந்த வீடு போய்ட்டேன்னு, அப்பா-அமுதன் எல்லாம் ஆகக்கூடாது." எனக் கண்ணீரின் ஊடே சொன்னாள்.

 

"எப்பவுமே, அப்பா ஜான் தாண்ட என் கண்ணம்மா, எப்பவுமே அப்பா ஜான் தான். தினமும் போன் பண்ணு , ஜானும்மா தேவையில்லாத விசயத்தில் தலையிடாதே. புதுசா எந்த வம்பும் வேண்டாம். உன் சேப்டி எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியம். மாப்பிள்ளை சொல்ற மாதிரி கேட்டு நடத்துக்கடா. சரியா? உனக்கு ஒன்னுனா, இனிமே தாங்குற சக்தி இல்லை, அப்பாஜான் உயிரே போயிடும்." எனக் கண் கலங்கினார். ஜானகி, "அப்பாஜான், அப்படி எல்லாம் சொல்லாதீங்க." என அழுதாள்.

 சிவகாமி தான், "குரு, ஊருக்கு போறப் பிள்ளைக்கிட்ட இப்படி எல்லாம் பேசாதே!" எனக் கண்டித்தார்.

ஜானகியை, ஒரு கையில் அணைத்தவாறு, ரகுவீரிடம் வந்தவர், "மாப்பிள்ளை ஜானும்மா எங்கள் உயிர். உங்களுக்குச் சொல்ல வேண்டியது இல்லை, இருந்தாலும் அவள் அப்பாஜான், அதனால் சொல்றேன்." என ரகுவீர் கைகளைப் பற்றித் தலையை அதில் வைத்தார்,

 ரகுவீர் பதறிவிட்டான், "பூஃபாஷா, என் உயிரும் அவள் தான், கவலை படாதீங்க. என்னை மீறி எதுவும் அவளைத் தொடாது. இது என்னுடைய ப்ராமிஸ்." என்றான் ரகுவீர்.

 ராகினியிடம் வந்த ஜானகி, "மாதாஜி போய்ட்டு வரேன், எப்பவுமே உங்க கண்ணில் சந்தோஷம் தான் இருக்கனும். உங்களுடைய சோகமான முகத்தை, தவிப்பைப் பார்க்க முடியாமல் தான், உங்கள் பிறந்த வீட்டோடு சேர்த்து வைக்க ஆசைப் பட்டோம். நீங்களும், அப்பாஜானும் அடிக்கடி மும்பைக்கு உங்கள் பிறந்த வீட்டுக்கு வரனும். இப்போ அது உங்கள் மகள் வீடும் கூட, என்ன வீருஜி" என்றவுடன் ரகுவீர்,  "ஆமாம் புவாஷா, மும்பைக்கு அடிக்கடி வரனும். நான் மிஸ் பண்ணிய புவாஷா-வீரூ டைம் எல்லாம், வாபஸ் வேணும்." என அவர் கையைப் பிடித்தான். 

"நான் உங்களை எங்கள் வீட்டுக்கு ஜானகி ரகுவீர்சிங் ராத்தோடாக, இன்வைட் பண்றேன் மாதாஜி. நீங்க எப்பவெல்லாம், பிறந்த வீட்டில் சீராடனும்னு ஆசை படுறீங்களோ, பறந்து வந்துடுங்க. மூன்று தலைமுறை உங்களுக்காக வெயிட்டிங்." எனக் கண்ணீரைத் துடைத்து, ஜானகி ராகினிக்கு அழைப்பு விடுத்தாள்.

"ஜானும்மா, நான் உனக்கு அம்மாவா என்ன செஞ்சேன்னு தெரியலை, ஏன்னா உனக்குத் தேவையானது எல்லாம் தெய்வா செய்திடும். ஆனால் என் முகத்தில் சந்தோஷம் வரனும்னு நீ எனக்கு அம்மா மாதிரி, பார்த்திருக்கியேடி. போன ஜென்மத்துப் புண்ணியம் தான், எனக்குக் கிடைத்த வரம் என் பிள்ளைகள்." என ஜானகி ரகுவீரை வாரி அணைத்துக் கொண்டு, அமுதன், பாலன் கணேஷை பார்த்துக் கண்ணால் அழைத்தார், அவர்கள் அனைவரும் வந்து ராக்கினியைக் கட்டிக் கொண்டனர். அங்கு ஒரு அழகிய தாய் சேய்கள் சங்கமம் நடந்தது.அமுதன், பாலன், கணேஷிடம் டெயரிமில்க் சாக்லேட் பாரை ஒரு கடி கடித்துவிட்டு அவர்களுக்கும் ஊட்டினாள் ஜானகி.

 அமிர்தா, ஜானகியைக் கட்டிக் கொண்டு விம்மி அழுதாள், ஜானகியும் அழுதாள், சமாளித்து, "இப்ப அழுகையை நிறுத்த போறியா இல்லையாடி. எப்பப் பார் ஓவர் சீன். டெய்லி ஃபுல் பேக்கப்போட, நிமிஷத்துக்கு நிமிஷம் நீ செய்யறது எல்லாம் இனி எனக்குத் தெரியனும்." என மிரட்டினாள்.

 "ஜானும்மா, அம்மு என் கூட இருக்கும் போது மட்டும் கொஞ்சம் சென்சார் ஆகும்." என்றான் பாலன். அமிர்தா அவன் கையில் அடித்தாள். இளையவர்கள் சிரித்தனர்.

மயூரி, மஞ்சரியிடம் வந்தவள், "இரண்டு பேரும் ப்ராஜெக்ட் சமிட் பண்ணிட்டு, அடுத்த வாரம் மும்பையில் இருக்கனும்." என்றாள் ஜானகி.

"சரிங்க பாபிஷா!" என இருவரும் கோரஸ் பாடினர். அமுதன் ரகுவீரை கட்டியணைத்தவன், "அத்தான் பார்த்துக்குங்க." எனக் கண்கலங்கினான்.

"சாலேஷா உன் சோட்டிக்கிட்ட சொல்லு, என்னைப் பார்த்துக்கச் சொல்லி. மும்பையிலும், எல்லாம் இவள் டீம் தான்." என்றான் ரகுவீர்.

 மயூரியின் தலையை வருடியவன், "ஜானு சொன்ன மாதிரி அடுத்த வாரம் மும்பை வந்திடனும் சாசாஷா வெயிட்டிங்." என நெற்றியில் முத்தமிட்டான்.

"ஓகே பையா!" என அமுதனைப் பார்த்தவாறு பதில் சொன்னாள் மயூரி.

"ஜீஜூஷா, ஜானி ஹேப்பி ஜர்னி, ஹேப்பி ஹனிமூன். என்ஜாய் பண்ணிட்டு வாங்க." என்றாள் மஞ்சரி.

ரகுவீர், "மஞ்சி யூரோப்  போய்ட்டு வந்து முதலில் உன் ஷாதி தான், ரெடியாகிக்கோ. சீக்கிரம் மும்பை வந்து ஷாப்பிங் ஆரம்பிச்சிடு. டிசைனர் அட்ரஸ் ராஜ்விகிட்ட கொடுத்துட்டுப் போகிறேன். போய்ப் பாரு." என்றான்.

 "தாங்க்யூ ஜீஜூ, தாங்க்யூ வெரிமச்." என ரகுவீரை, தழுவி வழியனுப்பினாள் மஞ்சரி.

ஜானகி, ரகுவீர் புறப்படுவதற்கு அவர்களது கார், முதல் சர்வீஸ் போய் வந்து தயாராக நின்றது. இருவரும் ஜீன்ஸ் டிசர்ட், குர்தி கூலர்ஸ் என மேட் ஃபார் ஈச் அதர் எனச் சரியான ஜோடியாக இருந்தனர்.

 

மூன்று மணிக்கு முன் கிளம்ப வேண்டும் என அப்பத்தா பரபரத்தார். எல்லாரையும் கட்டியணைத்து, தாக்கப் படி பேசி ஜானகி பிரியாவிடைப் பெற்றாள்.

ரகுவீர், கைக்கூப்பி ராகினி, சிவகுருவிடம் நின்றான். அவர் ரகுவீரை கட்டியணைத்து, "பார்த்து மெதுவாகவே போங்க மாப்பிள்ளை." என விடை கொடுத்தார். ராகினி, ரகுவீர் கட்டியணைத்து, "புஜ்ஜி, உங்க லாட்லியைப் பற்றிய கவலையே வேண்டாம். டென்ஷன் ஃப்ரியா, பஹூ ராணியை வரவேற்க சாசும்மாவாக ரெடியாகுங்க." என அவரை முத்தமிட்டான். அவரும் ரகுவீர் கன்னத்தில் முத்தமிட்டவர், "எனக்கு என் வீரூவே, என் ஜமாயிஷாவா ஆனது சொல்லமுடியாத அளவு பெரிய சந்தோஷம்." என்றார் ராகினி.

 ஜானகி அப்பாவை அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டு, "போயிட்டு வர்றேன்  அப்பாஜான். மாதாஜி அப்பாஜானை பார்த்துக்குங்க." எனக் கண்கலங்கி, அவர் அழும் முன் தன் கூலர்ஸை மாட்டி, "அமித்து வரேன்டி!" என அவளிடமும் விடை பெற்று, எல்லாருக்கும் ஒரு' பை' யோடு, "வீரூஜி வண்டியை எடுங்க!” எனக் காரில் ஏறி அமர்ந்தாள்.

 அவள் சட்டென ஏறி அமரவும் எல்லாருக்கும் ஒரு மாதிரி ஆனது. அமுதன் மட்டும் அவளோடு வந்து, கார் கண்ணாடியை இறக்கச் சொல்லி, குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு. “டேக்  கேர் மை டியர்." என்றவன். வழிந்தக் கண்ணீரைத் துடைத்து. "போய்ட்டு வாடி என் செல்லக்குட்டி." என அவள் கன்னத்தைப் பிடித்தும் கொஞ்சினார்.

 "போயிட்டு வாங்க அத்தான்." என ரகுவீரையும் வழியனுப்பி வைத்தான்.

எல்லாரும் பார்த்திருக்க,அந்தக் கருப்பு நிற ஆடிக் கார் , மலைகளின் ஊடே பறந்தது. சிவமாளிகையின் செல்வமகள் தன் கணவனோடு காதலாகிக் கசிந்துருகி பிறந்த வீட்டின் பிரிவில் கண்ணீர் மல்கக் கிளம்பி விட்டாள் ஜானகி தேவி ரகுவீர் சிங் ராத்தோட்.

 மலையை விட்டு இறங்கி ஓர் ஓரமாகக் காரை நிறுத்திய ரகுவீர், ஓட்டுனர் சீட்டிலிருந்தபடியே, ஜானகியைக் கட்டியணைத்தான், கிளம்பும் போது அழக்கூடாது என ஜானகி அடக்கி வைத்திருந்த கண்ணீர் அவன் தோள்களை நனைத்தது. மெல்ல முதுகை வருடி, "ஓகே டி மேரிஜான், நீ நினைச்ச உடனே எப்போ வேணும்னாலும் இங்குப் பறந்து வரலாம். இப்ப அத்தானையும் கொஞ்சம் கவனி, இரண்டு மணி நேரம் ஆச்சு." எனக் கழுத்து வளைவில் அவன் திருவிளையாட்டை ஆரம்பித்தான்.

 அழுகை அடங்கி, குறும்பு மேலிட அவன் தோள்களைப் பற்களால் கவ்வினாள். "ஆ வலிக்குதுடி குட்டிப் பிசாசு, எலும்பு வாங்கித் தரேன், என்னை விட்டுடு மேரிமா." என அவள் வாய்க்குத் தண்டனை அளித்து, தண்ணீரை நீட்டினான். அழுது சிவந்த முகம், வெட்கச் சிரிப்பைப் பூசிக் கொண்டது.

 

அவனும் மனைவி முகத்தின் புன்னகையில் மகிழ்ந்து வண்டியை எடுத்தான். கூகுள் மேப் உதவியுடன், கரூர் ரோட்டைப் பிடித்தனர். மேலும் அரை மணி நேரப் பயணத்துக்குப் பின், ஒரு காபி குடித்து விட்டு, ஜானகியிடம் ட்ரைவிங்க் பொறுப்பைக் கொடுத்து விட்டு ரகுவீர் கொஞ்சம் டென்ஷனாகக் கவனித்து வந்தான். ஜானகிக்கு முகத்தில் புன்னகை அரும்பியது.

 "வீரூஜி, கூல் நான் நல்லா ஓட்டுவேன், எனச் சரியான வேகத்தில் லாவகமாக, காரை ஓட்டினாள். தொப்பூர் வனப்பகுதி, மலைப்பகுதியில் ஓட்டச் சிரமம் என ரகுவீர், தான் ஓட்டுவதாகச் சொல்லும் போதும் ஜானகி மறுத்தாள்.

 "வீரூஜி, எல்லாப் பொறுப்பும் நீங்களே தான் பார்க்கனுமா? கொஞ்சம் நேரம் ரிலாக்ஸாக, ஜெர்னியை என்ஜாய் பண்ணுங்க. நான் உங்கள் எல்லாப் பொறுப்பிலும் பங்கெடுத்துக்கொள்ள விரும்புறேன். கொடுத்துத் தான் பாருங்களேன்." எனச் சாலையில் கண் வைத்தவாறே, அவனிடம் பேசினாள்.

"டீக் ஹை, ராணிஷா, உங்கள் ஹீக்கும்.” என்றான் ரகுவீர்.

 "அது" என அவளும் சிரித்தாள்.பயணத்தின் போது, நீண்ட நேரம், ஒருவரோடு ஒருவர் ரசித்துப் பேசிக் கொண்டே வந்தனர். ரகுவீர் பள்ளி, கல்லூரி, வெளிநாட்டுப் படிப்புப் பயணம் என வாய் ஓயாமல் பேசிக் கொண்டே வந்தான். ராஜ்வீர் சொன்னது போல், ஜானகியோடு சேர்ந்து நன்றாகப் பேசக் கற்றிருந்தான். ஜனகியும் சுவாரஸ்யமாகக் கேள்விகளை அடுக்கிக் கொண்டு வந்தாள். அவனும் ஈடு கொடுத்து, யாரிடமும் பகிராத, அல்லது தேவையில்லாத எனத் தோன்றும் ஒவ்வொன்றையும் கூட அவளோடு பகிர்ந்தான். நேரமும் காரும் வேகமாக ஓடியது. 

ஓசூர் வந்த பின் தான் அவனிடம் காரைத் தந்தாள் ஜானகி. ரகுவீர் கையில் வண்டி சீறிப் பாய்ந்தது. ட்ராபிக் குறைவாக இருந்த வழியைத் தேர்ந்தெடுத்து ஒன்பது மணிக்குப் பெங்களூர் சென்றடைந்தனர். இரவு உணவைச் சாப்பிட்டு முடித்து, தனியாகப் பேக் செய்திருந்த, பேகுடன், ஏற்கனவே புக் செய்திருந்த ஹோட்டல் அறைக்கு வந்து சேர்ந்தனர். 

நாளை பன்னிரண்டு மணிக்குத் தான் ப்ளைட். தங்கள் கம்பெனி ட்ரைவர் வந்தவுடன் காரை அவனிடம் கொடுத்து விட்டுக் கிளம்புவதாகத் திட்டம். ஜானகிக்குப் பெங்களூரு என்றவுடன் ஊரின் மேல் ஒரு பாசம் வந்தது. அவள் ஏதோ நினைவில் லயித்திருந்தாள். ரகுவீர், குளித்து உடை மாற்றி வந்தவன், அவளைப் பார்த்து, "ராணிஷா என்ன பலமான யோசனையில் இருக்காங்க?" என்றான்.

 

"பெங்களூர் வந்தவுடனே, பழைய ஞாபகம். மயூரியும், நானும் ஏற்கனவே பழக்கமாகி ஹவுஸ்மேட்ஸா இருந்த போதும், கடைசிச் செமஸ்டரில் தான் மாமா மகளென்று தெரியும். மயூரி தன் படே பையாவை பற்றிச் சொல்லும் போது வரும் கற்பனை வேறு. என் வீரூஜி வேறு. எனக்குச் சேர்த்துப் பார்க்கத் தோன்றவே இல்லை. ஆச்சரியமா இருக்கு." என்றாள் ஜானகி.

"உனக்குத் தான் பால் கோபால் ஆச்சே, அப்புறம் எப்படித் தோணும்." என்றான் ரகுவீர், அவளைக் கை வளைவில் இருத்தி இருந்தான்.

"ஆனால் உங்கள் குரல் போனில் கேட்கும் போது ரொம்ப அதிகாரமாகத் தோனிச்சு. அவளும் படே பையா, பிஸ்னஸ் மேன் என ஏகப் பில்டப் கொடுத்து வச்சிருந்தாள்." என்றாள் ஜானகி, அவன் தோளில் தலை சாய்த்து, கால் நீட்டி பெட்டில் அமர்ந்திருந்தனர்.

"ஆனால், நீ பேசும் போது , உன்னுடைய குரல் ரொம்பப் பரிச்சயமான, நெருக்கமான குரலாக இருந்தது. புவாஷா குரலும், உன்னுடைய குரலும் ஒரே மாதிரி இருக்கும். அதனால் தான், ஸ்வரூவை அனுப்பவும் சம்மதிச்சேன்." என்றான் ரகுவீர்.

"ஆமாம், ஆமாம் சம்மதிச்சிங்க, விசாரணை கைதி மாதிரி ஏகப்பட்ட கேள்வி!" என்றாள் ஜானகி.

"அதுக்கு என்னடி பண்றது, உங்க அண்ணன் தெரிஞ்சு அனுப்பினான். நான் தெரியாமல் தானே அனுப்பினேன்." என அவளைத் தலையணையில் படுக்க வைத்து தானும் சரியாகப் படுத்தான். 

"ஆமாம், அன்னைக்கே ஒரு டிடெக்டிவ் வைத்திருந்தால், உங்கள் புவாஷாவை கண்டு பிடிச்சு இருப்பீங்க." என்றாள்.

"எல்லோரும் சேர்ந்து என் கிட்ட மறைச்சீங்களே. ஆனால் நீ புவாஷா கி லாட்லின்னு தெரியும் முன்னாடியே, ஐ லவ்டு யூ." என்று அவளை முத்தமிட்டான். அவனோடே ஒன்றிக் கொண்டாள் ஜானகி.

 காலையில் கண் விழிக்க முடியாமல் அசத்தியது இருவருக்கும். ரகுவீர் போன் இசைத்ததில், தன் மேல் கொடியெனப் படர்ந்திருந்தவளை விலக்கி போனை எடுத்தவன். ஓட்டுநரைக் காத்திருக்கச் சொன்னான். முதல் முன்னிரவில் கார்ப் பயணமும், பின்னிரவில் காதல் பயணமும் அவளைச் சோர்ந்திருக்கச் செய்தது. அவளைக் கொஞ்சி, கெஞ்சி மும்பை செல்ல ஏர்போர்ட்டுக்கு கிளப்பினான் ரகுவீர் சிங் ராத்தோட்.

 மும்பையில் இறங்கிய படே பையா, பாபிஷாவை வரவேற்க ரன்வீர் ஏர்போர்ட்டுக்கே சென்று விட்டான்.

"பாபிஷா வெல்லம் டூ மும்பை. பாய் வெல்கம். வீ மிஸ் யூ போத்!" எனக் கட்டிக் கொண்டான். ரன்வீரை இத்தனை நாள், ஒரு சிறு வயது நண்பன் என்ற எண்ணம் மட்டுமே இருந்த ஜானகிக்கு, அண்ணி, கொழுந்தன் உறவு முறையின் பாசம் வந்தது.

"சரி விடு ரன்வி , நான் தான் வந்துட்டேன் இல்லை, இனி ஒரு கைப் பார்ப்போம்." என அவனுக்கு ஹை ஃபை கொடுத்தாள்.

 "ஏய் மிர்ச்சி, அவன் சும்மாவே ஆடுவேன் , நீ வேறு சேர்ந்தால், ஸ்வர்ண மஹல் உருப்பட்ட மாதிரி தான்." என்றான் ரகுவீர் .

 மதியம் இரண்டு மணி அளவில் ராத்தோட் மேன்ஷன் வந்து சேர்ந்தனர் தம்பதியினர். ரகுவீர், ஜானகிக்கு உணர்ச்சிப் பூர்வமான, வரவேற்பு கிடைத்தது. சாப்பிட்டு உட்கார்ந்து இருந்த பெரியவர்கள், இவர்களைப் பார்க்கவும், "ஆவோ, ஆவோ!" எனக் காலில் விழுந்த, தம்பதியைக் கட்டியணைத்துக் கொண்டனர் தாதாஷா, தாதிஷா.

 ரகுவீரைப் பார்த்துத் தாதிஷா, "காயம் ஆறிடிச்சா?" எனக் கேட்டார்.

"எல்லாம் காயமும் ஆறிடிச்சு. உங்கள் நாத்தி(மகள் வழிப் பேத்தி) எல்லாக் காயத்தையும் ஆறவச்சுட்டாள்." என அவளைப் பார்த்தவாறு இரு பொருள் படச் சொன்னான்.

 தாதாஷா, "இப்ப தான் வீட்டுக்கு ஒளி வந்த மாதிரி இருக்கு." என நாத்தியைக் கொஞ்சினார்.

"நாநாஷா, சிறுமலையிலிருந்து பேக் பண்ணி, ராத்தோட் பஹூவா வந்துட்டேன்." என்றாள் ஜானகி.

"பிறகு, நம்ம வீட்டில் தானே நாம இருக்கனும், இரண்டு பெண்ணைக் கொடுத்து ஒரு பெண்ணைத் தானே கூட்டிட்டு வந்திருக்கோம்." என்றார் தாதாஷா.

“இந்த ஒரு பொண்ணு அந்த ரெண்டு பொண்ணுக்கு சமம். " என்றான் ரகுவீர். ஜானகி அழகு காட்டினாள். "ராகினி நல்லா இருக்கிறாளா, ஜமாயிஷா, சம்பந்த்ஷா எல்லாம் நலமா?" என்றார் தாதிஷா.

"எல்லாரும் நல்லா இருக்காங்க, எல்லாருக்கும் ஜானகி கிளம்புகிறாளேன்னு ஒரே பீலிங்." என ஜானகியின் முகம் வாடியது.

 தாதாஷா, தாதிஷாவுக்கு அவள் முகம் வாடியது கண்டு பொறுக்கவில்லை, "மேரி ஸோனு லட்கி, உனக்கு இங்கே என்ன வேணும் சொல்லு நாங்கள் செய்கிறோம்." என்றார் தாதிஷா.

"ஆமாம் நாநிஷா உனக்காக டான்ஸ் கூட ஆடுவாள்." என வம்பிழுத்தார் தாதாஷா. "ஆமாம் இந்தப் புட்டே ராத்தோட்ஷாவும் கூட ஆடுவார்." என்றார் தாதிஷா. ராத்தோட்ஷா எனத் தாதிஷா சொன்னதில் ரகுவீரைப் பார்த்துச் சிரித்தாள் ஜானகி.

ஷப்னம், மகன், மருமகளைப் பார்த்து விட்டு, பரிமாறிக் கொண்டிருந்தவர் விரைந்து வந்தார். இருவரும் அவர் கால்களைத் தொட, "குஷ் ரஹோ!" எனப் பாதியில் தூக்கிக் கட்டியணைத்துக் கொண்டார்.

பஹூராணியின் முகத்தில் இருந்த புதுக் கலையையும், மகனின் முழுச் சந்தோஷமான முகத்தையும், நொடியில் ஆராய்ந்து அறிந்தவர் மனம் நிறைந்து போனார்.

 "மாஷா நான் வந்துட்டேன், இனிமே உங்களுக்கு ரெஸ்ட் தான்." என்றாள் ஜானகி. "ஜானிமா, எனக்கு ரெஸ்ட் எல்லாம் வேண்டாம். இன்னும் நிறைய வேலை வாங்கு. என் போதா, போதி பின்னாடித் திரியனும்." என்றார் ஷப்னம். ஜானகி வெட்கத்தில் முகம் சிவந்து டைனிங்கில் மாமன்களைக் காணச் சென்றாள்.

 "மாஷா, இப்ப தான் அவள் ஒத்துக்கிட்டு வாழ்க்கையை ஆரம்பச்சிருக்கோம். உங்கள் பேட்டா கொஞ்சமாவது என்ஜாய்ப் பண்ணிக்கிறேன், அதுக்குள்ள போதா, போதின்னு ஆரம்பிக்காதீங்க." என ரகுவீர் அம்மாவின் தோளில் கைப் போட்டுச் செல்லம் கொஞ்சினான். ஷப்னம் வெட்கத்துடன் அவனை ஒரு அடிப் போட்டு, "மாஷாகிட்ட பேசுறப் பேச்சா இது. பேஷரம் கைக்கா (வெட்கம் இல்லாதவன்)." என்றார்.

 ராஜேன் அங்கு வந்தவர், "என்ன என் மகன், அப்படிப் பேஷரமா செஞ்சிட்டான." என்றார். ஷப்னம் தலையில் கை வைத்து, "பேட்டாக்கு மேல் நீங்க தான் பேஷரம். நான் என் பஹூ கிட்டப் போறேன்." எனப் புன்னகையோடு சென்றார் ஷப்னம்.

 மகனைக் கட்டியணைத்த ராஜேன், "ரகுவி தும் டீக் ஹோ, மாடு முட்டிய காயம் சரியானதா?" என்றார். "ஸப் டீக்ஹை பாபுஷா." என்றவுடன், சாப்பிடு போ என அனுப்பி வைத்தார். டைனிங்கில் வந்து பார்த்தால், ஜானகி இரண்ட

களஞ்சியம்
75- சங்கமம் 

 

மயனின் கலையும், மன்மதனின் பார்வையும் ஒருங்கே பெற்ற இடமாக, அந்தத் தோட்டத்து வீட்டு மாடி காட்சி அளித்தது. எஸ்.எஸ். கார்டனுக்குத் தாத்தா அப்பத்தாவோடு, புதுமணத் தம்பதியான ரகுவீர், ஜானகி தங்கள் வாழ்க்கையின் தடைகளைத் தாண்டி புது வாழ்வை ஆரம்பிக்க வந்தனர்.

சிறுமலையின் இந்தக் காட்டுப் பகுதி மூலிகை வனம். அதில் அவர்களின் சங்கமம் நடந்தால் நலம் என நினைத்த சிவகாமி அப்பத்தா , ஷண்முகத்தை அனுப்பி ஏற்பாடுகளைச் செய்தார். இரண்டு மணி நேர கேப்பில் எல்லா ஏற்பாடும் செய்து வந்தார். அவர்கள் தோட்டத்து மலர்களைக் கொண்டே அலங்காரம் செய்திருந்தனர்.

தோட்டத்து வீட்டுக்குள் இருந்து, மாடிக்குப் படி இருந்தது. அதிலிருந்து ஹால், ரூம் பெரிய பால்கனி . பால்கனியில் ரூபிங் போட்டிருந்தனர். சுற்றி இடுப்பளவு மட்டுமே உள்ள சுற்றுச் சுவர். அதில் ஒரு மரக்கட்டில் மெத்தை, சுற்றி திரைச்சீலை, கொசுவலை, பூ அலங்காரம் என இடமே ரம்யமாக இருந்தது.

ரகுவீர், ஜானகி தாத்தா, அப்பத்தாவின் சண்டையைக் கேட்டவாறே மேலே வந்து சிரித்தனர். ரகுவீர் தாத்தாவைக் கேலி செய்ய ஜானகிக்குக் கோபம் வந்தது. அவளும் வம்பிலுத்தாள்.

"எங்க தாத்தாவை பார்த்தீங்கல்ல, எல்லாத் தப்பும் செஞ்சேன்னு, எவ்வளவு கெத்தா சொல்றார்." என்றாள் ஜானகி.

"ஆமாண்டி, ஒரு பெக்கை நீட்டுறார். நான் ஆடிப் போயிட்டேன். ஒரு வேளை என்னை டெஸ்ட் பண்றாரோ?" என்றான்.

"இருக்கும் வீரூஜி, இவங்க இரண்டு பேரும் ஜாடிக் கேத்த மூடி தான்." என்றாள் ஜானகி. ஹால் தாண்டி ரூமிற்குள் வந்து பார்த்தாள் கட்டில் இல்லை, "கீழே படுத்துகிறதா, பெட் எதையும் காணோமே?" என்றான் ரகுவீர்.

 "கிழவி வேற ஏதாவது செய்து இருக்கும் இருங்க பார்க்கிறேன்." என்றவள், பால்கனி கதவைத் திறந்தாள். கட்டில் மெத்தையும், திரைச்சீலைகளும், பூச் சரங்களும் ஒரு செட்டப்பாக இருந்தது. அங்கங்கே மெழுகுவர்த்திக் கண்ணாடிக் குடுவையோடு இருந்தது.

"ரொமான்டிக் அப்பத்தா தான். எவ்வளவு ஏற்பாடு செய்திருக்காங்க!" என ரகுவீர் சுற்றிப் பார்த்தான். "தண்ணீர் விழும் சத்தம் கேட்குதே?" என்றான் ரகுவீர்.

"ஆமாம் ஒரு சுனை இருக்கு, மலையிலிருந்து வரும் தண்ணீர் அதில் விழும், தொட்டி மாதிரி கட்டி அதில் விழும் படி செய்து இருப்பாங்க." என்றாள் ஜானகி. "ஓ சூப்பர் காலையில் பார்ப்போம்." என்றான் ரகுவீர்.

அங்கிருந்த ஷோபா ஊஞ்சலில் அமர்ந்தனர், "வீருஜி, உங்களைக் காதலிக்க என்னை விட்டால் எவளும் வரமாட்டாள்னு தெரியும். இருந்தாலும்  ஃபாரின்ல படிச்சீங்களே, டேட்டிங் கூட யாரும் கூப்பிட்டது இல்லையா?" என்றாள்.

"ஏன் கூப்பிடாமல் என்ன, அது தினம் எவளாவது கூப்பிடுவாள், ஒருத்தி லவ் பண்றேன், லிவ்விங் டு கெதராக இருக்கலாம். பிடிக்காமல் போனால் விலகிடலாம்னு கூடக் கூப்பிட்டாள்." என நிறுத்தினான்.

"அப்புறம் என்ன சொன்னீங்க?" என்றாள். "இதில் சொல்றதுக்கு என்ன இருக்கு, நாட் இன்ட்ரஸ்டட்னு சொல்லிட்டேன்." என்றான்.

"அப்ப உங்களுக்கும் எக்ஸ்பீரியன்ஸ் கிடையாது. எனக்கும் ஒரு இழவும் தெரியாதே!" என வருந்தினாள் ஜானகி.

"உனக்கா  ஒண்ணும் தெரியாது. ஏன் க்யூரியாசிட்டியில் என்ன ஏதுன்னு ஆராயாமலா விட்ட???" என நமட்டுச்சிரிப்புச் சிரித்தான் ரகுவீர்.

"ஹலோ நான் குட் கேர்ள் தெரியுமா, புருஷனா வர்றவன் சொல்லிக் கொடுப்பான்னு இருந்துட்டேன்." என்றாள் ஜானகி. அவள் சொன்ன விதத்தில் ரகுவீருக்குச் சிரிப்பு வந்தது.

அவள் கன்னம் பிடித்துக் கொஞ்சியவன், "சோ ஸ்வீட் லுகாயிடி. நிஜமாவே தெரியாதா, அப்ப என்னடி பண்றது?" என்றான் அப்பாவியாக.

"இந்தச் சொசைட்டி, கல்யாணத்துக்கு முன்னாடி, இதைப் பத்தி பேசாதே, பார்க்காதே, படிக்காதே அது குற்றம்னு  சொல்லுது. அதே கல்யாணத்துக்கு அப்புறம் புருஷனைச் சந்தோஷமா வச்சிக்கோ, அனுசரிச்சுக்கோன்னா எப்படி?" என தீவிரமாக யோசித்தாள் ஜானகி.

"ஜானும்மா சொசைட்டி பற்றிப் பேசுற நேரமாடி இது. இருந்தாலும் என் லுகாயி சொன்னான்னு கவர்மெண்ட்டுக்கு மனு போடுறேன்." என்றான் ரகுவீர் கண்களில் கேலி அப்பட்டமாகத் தெரிந்தது.

"என்னைய வச்சு காமெடி பண்றீங்களா? போங்க உங்க கூடப் பேசமாட்டேன்." முறுக்கினாள்  ஜானகி.

"ஜானும்மா நிஜமாவே உன்னுடைய இந்த விசயம் சர்ப்ரைசிங்டி. புவாஷாவை சேர்த்து வைக்கனும்னு வந்த. பெரிய பிஸ்னஸ் க்ராக் பண்ற, கடத்தும் போது தைரியமா இருந்த. ரெனாவத்தை வாளெடுத்து வீசின. இதில் என்னடி பூஜ்யம். சினிமா எல்லாம் பார்ப்ப தானே. இப்ப மொபைல்ல எல்லாம் வந்துடுச்சே!" என்றான்.

"வீரூஜி, ரொமான்ஸ் எல்லாம் ஓகே. அது ஃபீல் தன்னால் வருதே. நான் தான் குட் கேர்ள்னு சொன்னேனே. மற்றது எல்லாம் ஒமட்டும் அதனால் பார்க்க மாட்டேன்." என்றாள் ஜானகி.

"நம்ப முடியலையே, உதய்பூரில் பத்தாம் மாசம் புள்ளை பெத்துக்கனும்னு சொன்ன." என்றான்.

"வீரூஜி, அதுவும் வாய் வார்த்தை தான். அப்பத்தா சொல்றதை அப்படியே சொல்லுவேன்." எனப் போட்டு உடைத்தாள் ஜானகி.

"இப்ப என்கிட்ட விளையாடுறியா. அன்னைக்கு வந்து ஹக் பண்ண?" என்றான்.

"போங்க நான் சொன்னா நம்ப மாட்டிக்கிறீங்க." என நொந்துக் கொண்டாள்.

"இப்படி ட்ரெஸ் பண்ணிட்டு வந்திருக்க?" என்றான். "அப்பத்தா சொன்னதால் செஞ்சேன்." என்றாள்.

"ஜானும்மா எனக்குத் தலையே சுத்துதுடி. இரு நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன். எது உண்மை , எது ஃப்ராங்குனு பார்ப்போம்." என்றான். ஜானகி ஒரு சிரிப்பு சிரித்தாள்.

"வீரூஜி, உங்க டிரஸ்." என நீட்டினாள். "அந்த வேட்டி கொடு அதே பழகிடுச்சு." என வாங்கிக் கொண்டான். அவன் மாற்றச் சென்றான். இருள் எங்கும் சூழ்ந்திருந்தது. பால்கனியில் லைட்டும் ஃபேனும் இருந்தது. விடி விளக்கைப் போட்டு விட்டு ட்யுப் லைட்டை அணைத்தாள் ஜானகி.

கண்ணாடிக் குடுவைக்குள் இருந்த வாசனை மெழுகுதிரிகளை ஒவ்வொன்றாக ஏற்றினாள். ரகுவீர் பார்க்கும் போது, கையில் ஒரு மெழுகு திரியோடு, வரிசையாக ஒளி ஏற்றி வந்த ஜானகியின் முகத்தில் ஒளிச் சுடர் பட்டு மிளிர்ந்தாள். முகத்தில் மென்னகை இருந்தது. கை விளக்கு ஏந்திய காரிகையாய், சிறந்த ஒரு ஓவியன் தூரிகை கொண்டு வரைந்த நிழல் ஓவியமாக ரகுவீரின் மனதை மயக்கினாள் .

 ரகுவீர் காந்தம் இழுத்த இரும்பு போல் அவளருகே சென்றான், மெழுகு ஏற்றுவதில் முனைப்பாக இருந்த ஜானகி, அவன் வந்ததைக் கவனிக்காமல் அடுத்த மெழுகு ஏற்ற செல்லும் போது, முந்தி அவன் காலில் மிதிப் பட்டு, சேப்டி பின் எடுத்துக் கொண்டது. முந்தானை சரிய அவளும்

பின்னே சாய்ந்தாள், அவளைப் பின்னிருந்து அணைத்துத் தாங்கினான் ரகுவீர். அவன் கை வளைவில் அவன் தோளில் அவள் சாய்ந்திருக்க, கை இடையைச் சுற்றி இருந்தது. முதலில் விழுந்து விடுவோமோ என நினைத்தவள், அவன் கைகளில் பாதுகாப்பாய் இருக்க, அவன் முகம் குனிந்து இவள் கழுத்து வளைவில் மயங்கி நின்றான்.

 அவளும் அவன் ஸ்பரிசத்தில் மயங்கியவள், "அத்தான், மீதி இரண்டு மெழுகையும் ஏற்றிட்டு வந்துடுறேன்." என அவன் காதில் கிசுகிசுத்தாள்.

"ம்ம்." என்றவன் அவளை விடுவித்த பாடு இல்லை. மஞ்சள் மணமும் அவள் மணமும் அவளைக் கிறங்கடிக்க, அவனின் ஃபெர்வ்யூம் அவளை மயக்கியது.

 "அத்தான்!" என்றவளை, அப்படியே நடத்தி ஊஞ்சலில் அமர்த்திக் கொண்டான். அவள் சேலை ஒற்றைத் தலைப்பாகச் சரிந்திருக்க, தூக்கிப் போட்ட கொண்டையின் கிளிப்பை ரகுவீர் உருவி எடுத்து விடவும், தலை முடி முதுகில் புரண்டது. அவனோடு இயைந்து முகத்தால் முகத்தைத் தேய்த்தாள் ஜானகி.

 ரகுவீர் நிலை மாறாமல் மயக்கத்தில் அமர்ந்திருக்க. "தூங்கிட்டிங்களா?" என்றாள். பதிலை அவள் இடையில் தன் கைகளில் பதிலாகக் காண்பித்தான் அவள் கணவன். சலங்கை குலுக்கி விட்ட சிரிப்பு சிரித்த ஜானகி, "இதென்ன மௌன விரதமா, இல்லை என் வீரூஜிக்கு பேச்சு வராமல் போச்சா?" என்றாள் ஜானகி.

 "கைக்கும், வாய்க்கும் வேறு வேலை இருக்கும் போது பேச்சு எதுக்குடி மேரிஜான்." என்றான். "இவ்வளவு ஆசையை வச்சுக்கிட்டு தான் பார்ப்போம்னு பிகு பண்ணீங்களா?" எனத் திரும்பி அவன் முகத்தைப் பார்த்தவாறு உட்கார்ந்து கேட்டாள்.

"ஏண்டி கொஞ்சம் முன்னாடி பேசினது ப்ராங்கா?" என்றான். இல்லை, ஆமாம் என மாற்றி, மாற்றித் தலை அசைத்தவள்"ஆனால் நான் குட் கேர்ள்." என்றாள்.

"ஓகோ குட் கேர்ள் மேரிஜான், பழைய ஜானுவாக நீ முழுதா கிடைத்தை எப்படி நம்புறது, மயக்கம் போட்டேனா? நான் ரிஸ்க் எடுக்க மாட்டேன்." என்றான்.

"என்ன ரிஸ்க், மயக்கம் போட்டால் தண்ணீர் தெளிச்சு எழுப்பி விடுங்க. பழைய ஜானுன்னு எப்படி உங்களுக்கு ஃப்ரூவ் பண்றது" எனக் கேட்டாள் ஜானகி.

"அதுக்குன்னு சில டெஸ்ட் வச்சிருக்கேன், நீ பாஸ் பண்ணிட்டேன்னா ஓகே!" எனச் சிரித்தபடி சொன்னான்.

"போய்யா, நீயும் உன் டெஸ்ட்டும்." எனக் கையை உதறிவிட்டு வேறு பக்கம் போய் நின்றாள் ஜானகி. ரகுவீர் பலமாகச் சிரித்தான். "மிர்ச்சி டெஸ்ட்ன்னா பயமாடி?" என்றான்.

 "பயமெல்லாம் ஒண்ணும் கிடையாது, எதுவா இருந்தாலும் நான் தான் ஜெயிப்பேன். சும்மா ரீல் சுத்தாதீங்க. உங்களுக்கு என் கூட உறவு வச்சுக்கப் பயமா இருந்தால் என்னை விட்டுட்டு மும்பைக்குப் போங்க. நான் மனநல காப்பகத்துக்குப் போறேன்." எனக் கோபப் பட்டாள் ஜானகி.

அவளை இழுத்து அணைத்த ரகுவீர், அவள் தலையில் முத்தமிட்டு, "இந்த வார்த்தையைச் சொல்லாதடி. நீ என்னைக் காயப் படுத்தினால் என்ன, உயிர் எடுத்தாலும் சந்தோஷமாத் தருவேன். ஆனால் உனக்கு ஒண்ணும் ஆகக் கூடாது." என்றவன், "காரில் இருந்த திங்க்ஸ் எல்லாம் வந்திடுச்சா?" எனக் கேட்டான்.

 "உங்க திங்க்ஸ் ரூமில் இருக்கு." எனத் திரும்பி நின்றாள். அவளருகில் வந்தவன், அவள் கை பிடித்து அழைத்து வந்து ஷோபாவில் அமர்த்தி ஒரு கவரில் இருந்து, தாதிஷா வளையல், RV எனப் பதிக்கப்பட்ட ப்ளாட்டினம் செயின் இரண்டையும் எடுத்துக் காட்டினான்.

"இது, அன்னைக்கு நான் போட்டிருந்தது, நீங்க போட்ட செயின், தாதிஷா தந்த வளையல்." எனச் சமாதானம் ஆகி நினைவுக் கூர்ந்தாள் ஜானகி

"இந்த வளையல் அகமதாபாத் டெலிபோன் பூத்காரனிடம் நீ கொடுத்தது. இது நீ வந்த ரயில் பெட்டியில் மறைத்து வைத்தது. இந்தச் செயின் நம்ம ரிஸ்தா உறுதி பண்ணும் போது மாஷா கொடுத்து நான் உனக்குப் போட்டது.

 அந்தத் தீவில் உன்னை மீட்ட போது ருத்ரநாத் இதைக் கொடுத்துட்டு , 'நீ இதைத் திருப்பி என் கையால் போட்டுக்குவியா, இல்லையான்னு தெரியாதுன்னு சொன்னான். அவன் சொன்ன அர்த்தம் அடுத்த நாள் புரிஞ்சது." என அந்த நாள் நினைவில் கலங்கியவன். ஜானகி நெற்றியில் முத்தமிட்டு, இதைப் போட்டுக்குவியா மேரிஜான்?" எனக் கைகளில் வைத்து நீட்டினான்.

"வீரூஜி, இதுக்குத் தான் இவ்வளவு பில்டப்பா, நான் என்னவோ, ஏதோன்னு பயந்திட்டேன்." என்றவள் , அவன் கன்னத்தில் முத்தமிட்டுத் திரும்பி, முடியை ஒதுக்கி, "போட்டு விடுங்க!" என்றாள். இது அவர்களின் உறவுக்கான மூன்றாவது தாலி. அவன் கழுத்தில் அணிவித்து, "தாங்க்ஸ்டி லுகாயி!!!" என்றபடி வளையலையும் போட்டுவிட்டான்.

"எதுக்குடி அப்படிக் கோபப்பட்ட. உன்னோடு சேருவதை விடப் பெரிய சந்தோஷம் எனக்கு என்ன இருக்கப் போகுது. நீ சொன்ன மாதிரி தலைமுடி நரைக்கிற வரைக்கும் உனக்காகத் தானே காத்திருந்தேன். இனிமே இப்படிப் பேசக் கூடாது." என மார்பில் தன் மனைவியைச் சாய்த்துக் கொண்டான் ரகுவீர். அவள் சரி எனத் தலையை ஆட்டியவள், ஒரு சந்தேகம் என, ரகுவீரிடம் கேட்டாள்.

"வீரூஜி, இந்தச் சினிமால எல்லாம், இந்தச் சீனில் போட்டிருக்கிற நகை எல்லாம் ஒன்னு ஒன்னா கழட்டுற மாதிரி காட்டுவாங்க. நீங்க வரிசையா போடுறீங்க. டிஸ்டபன்ஸ்ஸா இருக்காதா?" எனக் கண் சிமிட்டிக் கேட்டாள் ஜானகி.

  ரகுவீர் ஹா,ஹா வெனச் சிரித்தவன், "அதுக்கு என்னடி பண்றது . இதெல்லாம் செண்டிமெண்ட். இது எதுவுமே இல்லாமலும் தான் லிவ்விங் டுகெதர்னு குடும்பம் நடத்துறாங்க. ஆனால் நீ மஞ்சள் தாலி கேட்ட. நான் முதன் முதலில் என் லுகாயிக்குப் போட்டதேன்னு நினைச்சேன்." என்றான்.

 "ஏதோ டெஸ்ட்ன்னு சொன்னீங்க. என்னவாம்?" எனக் கேட்டாள். “இது ப்ரிலிமினரி, ஃபைனல் அப்புறம் சொல்றேன். இப்ப சேலஞ்ச். யார் ஜெயிக்கிறாங்களோ, அவங்க சொல்வதை அடுத்த ஆள் கேட்கனும்." என்றபடி, ஐஸ் பாக்சில் இருந்து, ஒரு பெரிய பட்டர்ஸ்காட் கோனை எடுத்தான்.

 ஜானகிக்கு, பட்டர்ஸ்காட்ச் வாசனையோடு, அவர்கள் முதல் மோதல் சந்திப்பும் நினைவில் வந்தது. "வீரூஜி, இந்தத் தடவை உங்கள் முகத்தில் வலிந்தால், ட்ஸ்யூ பேப்பர் எல்லாம் தேட வேண்டாம். நானே துடைச்சிடுவேன்." என நாக்கை நீட்டி, கண் சிமிட்டினாள்.

"நீ கொட்டவும் வேண்டாம் துடைக்கவும் வேண்டாம். டாஸ்க் இதுதான், ஒரே கோன், இதிலிருந்த பெரும் பகுதி யார் சாப்பிடுறாங்களோ, அவுங்க சொல்ற மாதிரி அடுத்த ஆள் கேட்டுக்கனும்." என்றான்.

 "ஓகே டன்." என்றவள், கவரைப் பிரித்து, ஒரு வாய் நக்கி எடுக்க, ரகுவீர் அடுத்ததைச் சுவைத்தான், மாற்றி மாற்றி ஏய்க்காமல் கவனமாகச் சமமாக ஐஸ்கிரீமை, ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம், ரசனையோடு ருசித்துச் சாப்பிட்டனர். குளுகுளுவென உள்ளே இறங்கிய ஐஸ்கிரீமும், ஜில்ஜிலு வென வீசிய தென்றல் காற்றையும் அனுபவித்தனர்.

 

சுவாரஸ்யமாகப் போன கேமின் கடைசிப் பைட் ஜானகி வாயில் சென்றது, அவள் ஆனந்தமாக டாஸ்க் ஜெயித்த குஷியில் இருக்கும் போதே, அவள் வாயை முற்றுகையிட்டு, அந்த ஐஸ்கிரீமை தனதாக்கிக் கொண்டான் ரகுவீர். ஜானகிக்கு மூச்சு முட்டியது. அதே இடத்தில் வைத்துச் சுவைத்த பின்னே அவளை விடுவித்தான்.

"நான் தான் ஜெயிச்சேன். நான் சொல்றபடிதான், இந்தக் குட்டி பிசாசு கேட்கனும்." என்றான்.

 "அதெல்லாம் கிடையாது இது சீட்டிங்." என்றவள். சரி நான் அடுத்த டாஸக் சொல்றேன், எனப் பீடாவைக் கொண்டு வந்தவள், "இதைக் கையில் தொடாமல் போடனும். இதுவும் ஒன்னு தான் இருக்குப் பார்ப்போம்." எனச் சவால் விட்டாள்.

"வேணாம்டி, முரட்டுத்தனமாக ஏதாவது ஆனால், அப்புறம் எதுவும் சொல்லக் கூடாது." என்றான் ரகுவீர்.

"உங்களுக்கு இந்த வாய்க்கு மட்டும் குறைச்சல் கிடையாது . செயலில் காட்டுங்க." என இருவருக்கும் பொதுவாகத் தட்டில் வைத்தாள்.

 ஜானகி வாயால் எடுக்கட்டும் என ரகுவீர் பொறுமையாக இருந்தான், அவன் முந்தைய செயலை தொடருவான் என எதிர் பார்த்த ஜானகி, வாயில் எடுத்த வேகத்தில் தவற விட்டது போல், தனது சேலைக்குள் விழ வைத்தாள். " இப்ப இரண்டு பேரும் எடுக்க முடியாது." என்றவள் கண்கள் ரகுவீரை சவால் விட்டு அழைத்தன.

 அவளை அள்ளித் தூக்கியவன், திரைச்சீலை கொசுவலையைக் கடந்து பஞ்சு மெத்தையில் போட்டான். துடுக்காகப் பேசும் வாய்க்குத் தண்டனைக் கொடுத்து அடக்கிவிட்டு, டாஸ்க்கையும் நிறைவேற்றினான்.

பீடா ரகுவீர் வாயிலிருந்தது. அவனின், ஐஸ்கிரீம் விளையாட்டைத் தனதாக்கிய ஜானகி ஸ்பெஷல் பீடாவின் பாதியைத் தான் சுவைத்தாள். பீடாவெனச் சுவைத்தவர்களுக்கு, சுரப்பிகளும் விழித்து எழுந்தன.தாத்தா அப்பத்தாவின் மூலிகை கைங்கரியம் நன்றாகவே வேலை செய்தது.

 பைனல் டெஸ்ட் என ஜானகியின் காதில் ரகுவீர் காற்றுக்கும் கேட்கக் கூடாது என ரகசியமாய் முணுமுணுக்க, செம்பாவையாய் குழைந்த ஜானகி, "ச்சீ!!!" என முகத்தை மூடி அவன் மார்பில் குத்தினாள். "உனக்கு விவஸ்தையே கிடையாது. போடா அத்தான்." என்றவள், மஞ்சத்தை நிறைத்து, தானும் விவஸ்தை கெட்டவளாகி செயலில் காட்டி, மன்னவன் மனதை ஜெயித்தாள். (இதன் விளக்கம் யாரும் கேட்கக் கூடாது. திரைச்சீலை, கொசுவலைத் தாண்டி எனக்கும் கேட்கவில்லை. அது ரகுவீர், ஜானகியின் ப்ரைவசி. ஆசிரியருக்கும் தடா போட்டு விட்டார் ராத்தோட்ஷா).

 

ஜானகியின் குழந்தைப் பருவத்திலிருந்து பால கோபாலனாகக் கூடவே வளர்ந்த ரகுவீர், ராதையின் காதலனாக மாறி, சீதையின் ராமனாக ஜானகியின் ரகுவீராக முழுதாக ஆட்கொண்டான்.

 ஜானகி எந்தக் காதலுக்காகப் பிச்சியாக ஏங்கினாளோ அது முழுமை பெற்றது. ஜானகியின் மனநிலை எதனால் பாதித்ததோ அதை ரகுவீர் தனது காதலால் சரி செய்தான். ரகுவீரின் அன்பு அவளை மென்மையாகக் கையாண்டு, சம்சாரச் சாகரத்தில் திளைக்க வைத்தது. இருவரும், ஒருவர் மேல் மற்றொருவர் கொண்ட காதலால் தங்களை மற்றவருக்கு ஒப்புக் கொடுத்து பூரணமாகினர்.

 உடலின் வக்கிரமான இணைப்பை பாலியல் வன்முறையை, திடமான மனம் படைத்த ஜானகி போன்றவரின் மேலும், வக்கிரம் பிடித்த மனிதக் கூட்டம் கட்டவிழ்த்து விடுகிறது. ஜானகிக்கு ஒரு ரகுவீரும், அவள் குடும்பமும் துணை நிற்க, அவள் அதனைக் கடந்து பக்குவம் அடைந்தாள். இவளின் இந்த மாற்றம் பல பெண்களுக்குக் கலங்கரை விளக்காக நின்று வழி நடத்தும் என்பதில் ஐயமில்லை. 

காலையில் பட்சிகளின் கொஞ்சு மொழி, பூபாளம் இசைக்க. ஆதவன், அவன் பணியைத் துவக்க ரதம் ஏறி வந்துவிட்டான். உயர்ந்து வளர்ந்த மரங்கள் அவனை ரகுவீர், ஜானகி வரை அண்டவிடாமல் தடுத்து நிற்க, சுற்றுச்சூழலைப் பகலாக மாற்றி மேற்கு திசை நோக்கிப் பயணித்தான்.

இரவின் இனிமையில் குளிர் தெரியவில்லை, இவர்கள் உள்ளிருந்த தகிக்கும் வெப்பம், கனப்பு இல்லாமல் கை கொடுத்தது. கூடல் முடிந்து, பயம் தெளிந்து, மறுபடியும் பழகி என இரவின் மடியில் தங்கள் தேடலை முடித்துக் கொண்ட தம்பதியினர். இன்னும் துயில் களைந்தபாடு இல்லை. மார்புவரை குளிருக்குப் போர்த்திய க்வில்ட் பெட்சீட் மூடியிருக்க, கண் விழித்த ரகுவீர், வெளிச்சம் பரவியதைக் கண்டு எழ முயன்றான். அவன் வெற்று மார்பில், ஜானகி கன்னம் பதித்தபடி, அவனை அணைத்த வண்ணம், சுகமான நித்திரையில் க்வில்ட்டுக்குள் முழுவதும் மறைந்திருந்தாள்.

 அவன் கைவளைவில் அவளிருக்க, முந்தைய இரவின் சுகத்தில் ரகுவீர் இதழ்களில் புன்னகை மலர்ந்தது. அவள் நெற்றியில் முத்தமிட்டவன், "ஜானும்மா, ஓய் மேரிஜான், எந்திரிடி குட் மார்னிங்!!!" என்றான். 

அவள் இன்னும் வசதியாகப் படுத்துக் கொண்டு, "அத்தான், இன்றைக்குக் கோட்டா ஓவர். தூங்க விடுங்க." என்றாள். ரகுவீர் அவசரமாக அவள் வாயை அடைத்தவன். காதில் "எந்திரிடி, ரெஸ்ட் ரூம் போகனும்." என்றான். சிரமப்பட்டுக் கண் விழித்தவள், "குட் மார்னிங்" என அவன் கழுத்தில், மார்பில் முத்தமிட்டு எழ முயன்ற போது தன் நிலை உணர்ந்தவளாக, விலகி பெட்சீட்டால் முகத்தையும் சேர்த்து மூடிக் கொண்டாள்.

 

ரகுவீர் உரக்கச் சிரித்தவன், "இப்ப யாரிடம் இருந்து என் லுகாயி மறையிறாங்க?" என அவள் போர்வைக்குள் சென்று சில்மிஷம் செய்து வம்பிலுத்து சிரித்து. "இருடி வரேன்." எனக் கட்டிலிலிருந்து இறங்கிப் போனான்.

 ஒரு நைட்டியை கொண்டு வந்து அவளருகே போட்டவன். "இதைப் போடு நான் குளிக்கப் போறேன்." எனத் திரைச் சீலைகளை நன்றாக இழுத்து விட்டுப் போனான்.

 ரகுவீர், ஜானகி குளித்து முடித்துக் கீழே வந்த போது, தாத்தா, அப்பத்தா சிவமாளிகைக்குக் கிளம்பிக் கொண்டு இருந்தனர். பேத்தியின் முகத்தில் மாற்றம் கண்டவர். சொல்லாமல் தேவையானதை அறிந்தார், சந்தோஷமாகத் திருஷ்டி கழித்தார்.

 காலை உணவை ஷண்முகம் கொண்டு வந்திருந்தார். தோட்டத்தைப் பார்த்து விட்டு அவரும் வந்து சேர காலை உணவு உண்டப் பின்னர், "ஆத்தா ஜானகி நாங்க முன்னே போறோம். நீயும் பேராண்டியும் இருந்துட்டு மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வாங்க." என்றார்.

 "ஏன் அப்பத்தா இன்னும் ஒரு நாள் இருந்துட்டு போகலாமே?" என்றாள் ஜானகி. "உங்க அப்பா வரச் சொல்லிட்டான். மதியம் வந்திடுங்க." என்றார்.

"ஷண்முகப்பா இருந்துட்டு வரவா?" என்றாள். "இல்லடாம்மா, அப்பாவும், அம்மாவும் பயப்படறாங்க. நீங்க வந்திடுங்க!" என்றார் ஷண்முகம்.

 ரகுவீர் தான் சமாதானம் செய்தான், "ஜானும்மா, நம்ம மும்பை வேற கிளம்பனுமே போகலாம்." என்றான் .

"சரி அப்பத்தா, மதியம் வரோம்." என்றாள். பெரியவர்கள் கிளம்பிவிட, ஜானகி ரகுவீரோடு ஒட்டித் திரிந்தாள். சுனையில் நீராடி, ஊஞ்சல் ஆடி, ஓடியாடி, கண்ணாமூச்சியாட்டம் காட்டி மகிழ்ந்தாள். ஒவ்வொரு சந்தோஷத்தையும் தன் கணவனோடு பகிர்ந்து, பிறந்தகத்தைத் தன்னுள் நிறைத்துக் கொண்டாள் ஜானகி.

ரகுவீர், ஜானகியின் ஆசைகளுக்கு இணங்கி, அவனும் அவளும் தங்கள் மும்பை வாழ்க்கையின் முற்றிலும் மாறுபட்ட வாழ்வின் இனிமையை அனுபவித்தனர். மதியம் இரண்டு மணியளவில் சிவ மாளிகை வந்து சேர்ந்தனர் தம்பதியர்.

 

சிவகுரு, ராகினி, தெய்வாவிற்கு ஜானகியின் குங்குமமெனச் சிவந்த முகம் விசயத்தைச் சொல்லியது. இருவரும் இணைந்து ருசியான விருந்து செய்து வைத்திருந்தனர்.

 ஜானகி, ரகுவீர் நாளை மதியம் மும்பை கிளம்புகின்றனர். காரில் மும்பை வரை பயணம் என்பதை மாற்றி, பெங்களூரு வரை கார் வழிப் பயணமும் மீதி வான்வழிப் பயணம். காரை அவர்கள் கம்பெனி டிரைவர் மும்பை எடுத்துச் செல்வதாக ஏற்பாடு செய்தனர். ஜானகிக்கு மறுவீடு பலகாரம் எனச் சிவகாமி, தெய்வா, சுந்தரவள்ளி தங்கள் கைப்படச் செய்தனர்.

 அன்றைய மாலையில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இவர்கள் எம்பிஏ ப்ராஜெக்ட் மூன்று மாதம் நிறைவடைந்தது. ப்ராஜெக்ட் ரிப்போர்ட், சர்டிவிகேட் எல்லாம் ரெடி.

 அமிர்தா, இரண்டு ஃபைல்களைக் கொண்டு வந்து ரகுவீரிடம் நீட்டினாள். அது ராத்தோட் க்ரூப்பில் ஜானகி, அமிர்தா ட்ரைனியாக வேலைப் பார்த்ததற்கான சர்டிவிகேட். ரகுவீர், திருப்பிப் பார்த்துவிட்டு, கையெழுத்துப் போட்டான்.

 "இதைச் சம்மிட் பண்ண ஜானு வரனுமா?" எனக் கேட்டான் ரகுவீர்.

"இல்லை அண்ணா, நான் பார்த்துக்கிறேன். ஒரு நாள் மட்டும் வர மாதிரி இருக்கும். நீங்க யூரோ போய்ட்டு வந்த பிறகு பார்த்துக்கலாம்." என்றாள் அமிர்தா.

"ஸ்வரூ, உன் பிளான் என்னடா, நாளைக்குக் கிளம்பலாமா?" என்றான் ரகுவீர். "பையா! இன்னும் ரிப்போர்ட் வேலை இருக்கு." என்றாள் மயூரி.

 "சரிடா ஒன் வீக்கில் முடிச்சு கிளம்புங்க. மஞ்சரிக்கும், உனக்கும் அடுத்தடுத்து ஷாதி வைக்கனும். அவரவர் பிறந்த வீட்டில் சீராடுங்க. அதுக்கப்புறம் எப்பவும் சசூரால் தானே. சாசா, சாசிக்கு உன்னை வச்சுப் பார்க்க ஆசை இருக்குமே." என்றான்.

 "மாப்பிள்ளை சொல்றது சரிதான், அமுதன் இரண்டு பேருக்கும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிடு." என்றார் சிவகுரு.

 "சோ ஸ்வீட் மாஷூ, ஒரு வழியாக என் படிப்பு முடியுது." என்றாள் மஞ்சரி.

"வேலையே பார்க்காமல் சர்டிவிகேட் வாங்குறது நீ ஒருத்தி தான்." என மஞ்சரியை பார்த்துச் சொன்னான் பாலன். "அதுக்கு என்ன பண்றது. என் புண்ணியத்தில் ஒரு பாபி கிடைச்சதேன்னு சந்தோஷப் படு"-என்றாள் மஞ்சரி.

 

ராகினி, சிவகுரு ஒரு பெரிய ஷோபாவில் அமர்ந்திருக்க, ஜானகி தன் அம்மாவின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தாள்.  "மாதாஜி, ஷாதி முடிஞ்சிடுச்சு, வீரூ பார்த்துக்குவான், அப்படின்னு என்னைக் கழட்டி விட்டுறாதீங்க." என்றாள் ஜானகி.

 ராகினி கண்கலங்கியபடி, "அடிப்போடி, நீ படிக்கப் போகும் போது, ஷாதி முடிஞ்சு விதாயி நடந்த போது கூடப் பெரிசா எதுவும் தோணலை. நாளைக்கு, பிறந்த வீட்டிலிருந்து போறேன்னு நினைக்கும் போதே, மனசு பாரமா இருக்கு. நூற்றுக் கிழவி மாதிரி, மாதாஜி யை சேர்த்து வைக்கிறேன்னு, என்னைக் கழட்டி விட்டுட்டு நீதான் அங்க போய் ஒட்டிக்கிட்ட." என்றார் ராகினி.

 "அதுவும் உங்களால் தான், நீங்க தான் வீரூஜி, வீரூஜி ன்னு என் மனதில் உரு ஏத்தினது. அவரும் ஷாதி பண்ணாமல் காத்திருந்தால் நான் என்ன செய்கிறதாம்." என்றாள் ஜானகி, ரகுவீர் புன்னகையோடு பார்த்திருந்தான்.

 "ஏண்டி நீ கல்யாணம் கட்டிக்கிட்டு என் மருமகளைக் குற்றம் சொல்ற." என வந்தார் சிவகாமி."போ அப்பத்தா, என்னை மும்பைக்கு அனுப்பிட்டு விட்டது தொல்லைனு சந்தோஷமா இருப்பீங்க." என்றாள் ஜானகி.

 "ஜானும்மா, நீ எங்க இருந்தாலும் நினைப்பு பூரா உன் மேல் தான். நீ தான் எங்களை நினைக்கக் கூட நேரமில்லாமல் பிஸி வுமன் ஆகிடுவ." என்றார் சிவகுரு. "ஜானும்மா, அங்க பொறுப்பான மருமகளா இருக்கனும்." என்றார் தெய்வா. ஜானகிக்கு கண்ணிலிருந்து நீர் வழிந்தது. அமிர்தா அதற்கு மேல் அழுதாள்.

 அமுதன், பாலனுக்கும் சோகமாக இருந்தது. ஜானகி இருந்தால் தான் வீடு கலகலப்பாக இருக்கும். மாலையில் மாற்றி, மாற்றி ஒவ்வொருவர் மடியாகத் தாவி அழுதாள் ஜானகி. இரவு பத்தைத் தாண்டவும், அவரவர் அறைக்கு உறங்கச் சென்றனர். 

ஜானகி, ரகுவீரைக் கட்டிக் கொண்டு அழுதாள். அவன் சமாதானம் செய்து தட்டிக் கொடுக்கவும், சிவ மாளிகை மகளின் அழுகை நின்றது. ரகுவீரின் பத்தினியாக, அவனிடம் நேற்று கற்ற மன்மதக்கலையை, அவனோடு பயிற்சி செய்தாள் ஜானகி.

 இன்னும் ஐந்து நாட்களில் ரகுவீர் ஜானகி ஹனிமூன் யூரோப் ட்ரிப் உள்ளது. அதை முடித்து வந்து கம்பெனி , குடும்பம் ஷாதிகள் என ரகுவீருக்கு வேலை வரிசை கட்டிக் காத்திருக்கிறது. காதல் மனைவியாக, நல்ல தோழியாக, மதியூக மந்திரியாக ஜானகி எல்லாவற்றிலும் கணவனுக்குக் கைக் கொடுக்கக் காத்திருக்கிறாள்.

 

களஞ்சியம்
 74- மஞ்சள் கயிறு மாயம் 

 

 சிவகுரு, ராகினி தம்பதியினர் மகள் மருமகனை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனச் சொன்னவுடன், வீட்டில் அனைவரும் தாத்தா, அப்பத்தா முதற்கொண்டு இளையவர் வரை எல்லாருமாகக் கிளம்பினர்.

 பச்சை பட்டு உடுத்தி, ஜடையைத் தளரப் பின்னல் போட்டு, மல்லிகையைச் சரமாகத் தொங்கவிட்டு, பெரிய வட்டப் பொட்டு, குடை ஜிமிக்கி மாட்டல், நெக்லெஸ் ஆரம், தங்கவளையல் பார்டர் கட்டி கண்ணாடி வளையல், கெட்டிக் கொலுசு ஜல், ஜல் என ஜதிபாட, கருகமணி, வைரத்தாலி மைத்தீட்டிய கருவிழிகள், அளவான ஒப்பனை, நெற்றி வகிட்டில் ரகுவீர் பெயர் தாங்கிய குங்குமம், கண்களில் வழியும் காதல், இதழில் இனிய புன்னகை எனத் தயாராகி நின்றாள் ஜானகி.

 ரகுவீருக்கு பட்டு வேட்டியும் சட்டையும் எடுத்து வைத்திருந்தாள். "ஜானு, இது ரொம்ப வலுக்குதுடி, எப்படிக் கட்டுறது?" என்றபடி ட்ராக்கோடு வந்தான். கண்களில் போட்டிருந்த மையைச் சரி செய்து கொண்டிருந்தாள்.

 பேசிக் கொண்டே வந்தவனின் பேச்சு அப்படியே நின்றது. ஜானகியின் அழகில் மயங்கி நின்றான்.அவள் பின்னோடு வந்து, மல்லிகையோடு அவள் வாசம் பிடித்து, தோள்களில் முகம் புதைத்து நின்றான். கண்ணாடியில் சொக்கிக் கிடந்த கணவன் முகம் கண்டவள்,  "வீரூஜி இன்னும் கிளம்பலையா நீங்க?" என அவன் புறம் திரும்பி கைகளை இடுப்பில் வைத்துக் கேட்டாள்.

 "செமையா இருக்கடி!" என இடுப்பில் கை வைக்க வந்தவனிடம், கையைத் தட்டிவிட்டு தயக்கத்துடன், "இராத்திரி வச்சுக்கலாம், இப்ப கிளம்புங்க." என்றாள். 

ரகுவீர் காதை தேய்த்து விடவும், வெட்கப் புன்னகையுடன் அவன் விழிகளை நோக்கி, கையைக் கோர்த்து அவன் கழுத்தில் மாலையாக்கி அவனிடம் நெருங்கியவள் முகம் பார்த்து, "சீக்கிரம் கிளம்புங்க வீரூஜி கோயிலுக்குப் போய்ட்டு வந்திடலாம்., நைட் ஃபார்ம் ஹவுஸ் போகலாம். அப்பத்தா ஏற்பாடு செய்றாங்க. இப்ப யார்கிட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம். சரியா?" எனக் கேட்டாள்.

அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தவன், " ஜானும்மா, இதுக்கு உன்னைக் கட்டாயப் படுத்துனாங்களா?" என்றான் . "இல்லை வீரூஜி, நான் தான் ஏற்பாடு பண்ணச் சொன்னேன். ஏன் உங்களுக்கு விருப்பம் இல்லையா?" என்றாள் ஏக்கமாக. அவளையே பார்த்திருந்த ரகுவீர், ஓர் உல்லாசச் சிரிப்புடன் இடையில் கைகொடுத்து அவளைத் தன் உயரத்துக்குத் தூக்கியவன், "சரி பார்ப்போம், உன் முகம் கொஞ்சம் மாறினாலும் தொட மாட்டேன் சரியா?" என்றபடி நெற்றியில் முட்டியபடி இறக்கி விட்டான்.

"சரி பார்ப்போம், இப்ப கிளம்புங்க." என்றாள். அவன் வேட்டியைக் காட்டினான். "அமுதனை அனுப்புறேன், அவன் கட்டி விடுவான், என்றவள், "இல்லை, இல்லை ஷண்முகப்பாவை வரச் சொல்றேன்." என்றாள்.

"ஏண்டி விவஸ்தை கெட்டவளே என்னை என்ன நினைச்ச?" என்ற ரகுவீரிடம்,

"அவன் தான் என் சௌத்தன் ஆச்சே, அவன் வேற அத்தான்னு சொல்லுவான்." என்றாள் ஜானகி. "ஏய் மிர்ச்சி எல்லாத்துக்கும் சேர்த்து இராத்திரி தருவேன்." என மிரட்டினான்.

 கண்களில் சவால் விட்டு ஒரு சிரிப்போடு, "பார்ப்போம், இப்ப அப்பாவை வரச் சொல்றேன்." எனச் சென்றாள் ஜானகி.

 டெம்போ ட்ராவலரில் சிவமாளிகை குடும்பம், மதுரைக்குக் கிளம்பியது. இளையவர்கள் பின் சீட்டுக்குச் சென்றனர். அமிர்தாவும் வந்தாள். தம்பதிகள் சேர்ந்தே அமர்ந்து இருந்தனர். ஏசி வேன் நான்கு வழிச்சாலை பயணம், கேலி கிண்டலோடு பயணம் தொடர்ந்தது.

 தோழிகள் நால்வரையும் ஆண்கள் கேலி செய்தனர். "இவங்க காலேஜ், எம்பிஏ டிபார்ட்மெண்டைப் பாராட்டியே ஆகனும். வாட் ஏ மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், கோர்ஸ் முடியும் முன்னே ஷாதி முடியுது." என்றான் ரகுவீர்.

 "அத்தான் அது வீட்டுடைய ராசி. 'டிகிரி முடிக்கும் முன் ஷாதி முடியும் யோகம் உள்ள வீடு' அப்டின்னு!!! ஹவுஸ் ஓனர் போர்டே வைக்கப் போறாராம்”  என்றான் அமுதன்.

"ஏன் அண்ணா, இந்தக் கேம்பஸ்ஸில் செலக்ட் ஆனவங்க போட்டோவை ப்ளக்ஸ் அடிச்சு ஒட்டுவாங்களே, அது மாதிரி இவங்க முகத்தையும் விளம்பரத்துக்குப் போட போறாரு இவங்க ஹவுஸ் ஓனர்." என்றான் பாலன்.

 "ஆமாம் அப்படி வச்சா, உங்கள் நாலுபேர் மூஞ்சியையும் சேர்த்துப் போட சொல்றேன்." என்றாள் ஜானகி. "அந்த வீட்டில் நாங்க தங்கினதால் தானே, உங்கள் இரண்டு பேருக்கும் ஜோடி கிடைச்சது." என்றாள் மஞ்சரி.

"முதலில் ட்ரைனி தான் கிடைச்சாங்க. அதுவும் என் ட்ரைனி வேற லெவல், டிரைனியா வந்தவளே டிரைனிங் கொடுக்க ஆரம்பிச்சுட்டா!" ரகுவீர் ஜானகியை வம்பிழுத்தபடி சொல்ல, 

 "பாஸ் கொஞ்சம் அசமந்தமா இருந்தால் என்ன பண்றது. எல்லாம் நானே செய்ய வேண்டியது இருக்குது." என்றாள் ஜானகி.

"ஏண்டி ஷாதிக்கு அப்புறம் ஒரு ட்ரைனியா என்ன பண்ண, எல்லாத்தையும் அம்ரூ பார்க்குது." என்றான் ரகுவீர்.

"ஹலோ, ஷாதிக்கு முன்னாடி தான் நான் ட்ரைனி, ஷாதிக்கு அப்புறம் நான் ஓனர். மிஸஸ் ரகுவீர் சிங் ராத்தோட். ஞாபகம் வச்சுக்கிட்டு பேசுங்க. நான் எம்டி ஆகனும்னா எந்த எம்பிஏ சர்டிவிகேட்டும் தேவையில்லை. எங்க ரெக்கார்ட் அப்படி." எனவும்,ரகுவீர் வாயடைத்துப் போனான்.

"புவாஷா! நிஜமாகவே இவள் நீங்க பெற்ற பொண்ணு தானா? ஹாஸ்பிடலில் மாற்றி எடுத்துட்டு வந்தீங்களா???" என ராகினியிடம் கேட்டான்.

"எனக்கும் அதே சந்தேகம் தான் வீரூ, அவங்க அப்பாவையும், அப்பத்தாவையும் தான் கேட்கனும்." என்றார் ராகினி.

"மாப்பிள்ளை அந்தச் சந்தேகமே வேண்டாம், அது எங்கள் வம்சம், சிவகாமி பேத்தி." என்றார் சிவகுரு.

"ஆமாம் என் வம்சத்துப் பேரைச் சொல்ல ஆள் வேண்டாம். உன் மகள், இவளுக்கு இரண்டு பங்கு வருவாள் அப்ப." என்றார் அப்பத்தா.

"ஆமாம், தமிழ், ஹிந்தி, இராஜஸ்தானின்னு மூன்று மொழியிலும் பொலந்து கட்டும்." என்றார் ஷண்முகம்.

ரகுவீர் ஜானகியை நோக்கி, அப்படியா எனப் பார்வை பார்த்தவன், சகஜமாக அவள் தோள் மேல் கைப் போட்டான். இன்று அவன் தொடுகையும் அவளுக்குப் புதிதாகத் தோன்றியது. நெளிந்தாள் ஜானகி. ரகுவீருக்கு அதைக் கண்டவுடன் உற்சாகம் கரை புரண்டது.

 கோவில் அருகில் வந்திருந்தனர். இறங்கிக் கொண்டனர். வழக்கம் போல், பூமாலை, தேங்காய் பழம் தட்டு, வஸ்திரம் என ஆளுக்கு ஒன்றாகத் தூக்கிக் கொண்டனர். தாத்தா அப்பத்தாவை ஜானகி, மயூரி கை பிடித்து அழைத்துச் சென்றனர்.

இந்த முறை கிழக்கு வாயிலில் அம்மன் சன்னதி வழியாக உள்ளே வந்தனர். பொற்றாமரை குளம் அருகே வரும் போது, சிவகாமி அப்பத்தாவைப் பார்த்து வணக்கம் சொன்னார் நகைக் கடைச் செட்டியார் நாற்பதின் பிந்திய வயதிலிருந்த அரசன் ஜுவல்லர்ஸ் சங்கர லிங்கம். "அம்மா வணக்கம், சௌக்கியங்களா?" என்றார்.

"வாப்பா சங்கரு, உன்னைத் தான் நினைச்சுக்கிட்டு தேடிக்கிட்டே வந்தேன்." என்றார் சிவகாமி அப்பத்தா.

"நீங்க நேற்று, போன் போட்ட உடனே தயார் பண்ணிட்டேன். பாருங்க!" என நகை டப்பாவை நீட்டினார்.

ஜானகியைப் பார்த்து, " கல்யாணம் அங்கேயே முடிச்சிட்டீங்களா நல்லது." என்றார். அவளும் ஆமோதிப்பாகத் தலை அசைத்தாள்.

 ஜானகி சிவகாமி அப்பத்தாவுடன் நிற்கவும் ரகுவீர் மாலையைக் கையில் ஏந்தி நின்றான். ரகுவீரை அவருக்கு அறிமுகப் படுத்தினார் அப்பத்தா.

"பேத்தி புருஷன், அவுகளுக்கும் மும்பையில் பெரிய நகைக்கடை இருக்கு." என்றார். "வணக்கம் சார் வாங்க!" என்றார்.

மஞ்சள் கயிற்றில் சொக்கர் மீனாட்சி தாலி, நான்கு காசு குண்டு, மாம்பிஞ்சு, வாழை சீப்புப் பவளம் எனக் கொத்தாக இருந்தது. மற்றொன்றில் தாலிக் கொடி.

"யாருக்கு ஜானும்மா, அப்பத்தாக்கா. எவ்வளவு கொடுக்கனும்னு கேளு, நாம கொடுத்துடுவோம்." என்றான் ரகுவீர்.

"அது அப்பத்தா வாங்குறாங்க." எனத் தயங்கியபடி சொன்னாள்  ஜானகி.

 "அம்மா, நான் கிளம்புறேன்." என்றார் சங்கர். "இருங்க தம்பி பணத்தை வாங்கிட்டுப் போங்க." என ஷண்முகத்தை அழைத்தார். இரண்டு லட்சம் அவரிடமிருந்து வாங்கிக் கொடுத்து அனுப்பினார் அப்பத்தா. மற்றவர் முன்னால் சென்றிருக்க இவர்களும் இணைந்தனர்.

 சிறப்புத் தரிசனத்திற்குச் சிவகுரு ஏற்பாடு செய்திருந்தார். மீனாட்சி அம்மனும் பச்சைப் பட்டில் மூக்குத்தி மின்ன, மந்தகாசப் புன்னகையுடன் அருள் பாலித்துக் கொண்டிருந்தாள். ஜானகி மனமுருகி, தன் மணாளனோடு சேர்ந்து வாழ வேண்டும் என வேண்டினாள். அம்மையும் ஆசி அருளினாள். 

அம்மையைத் தரிசித்து அப்பனை வணங்கினர். சுந்தரேஸ்வரர் பெருமானாக அப்பன் கம்பீரமாக இருந்தார். தென்னகத்துக் கோவில்களின் சானித்தியத்தை ரகுவீர் உணர்ந்தான். கோவில் சிற்பங்களை அதன் கதைகளை ஜானகி, சிவகுரு ரகுவீருக்குச் சொன்னார்கள்.

 மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண மண்டபத்துக்கு அனைவரையும் அழைத்து வந்த அப்பத்தா, ராகினியிடம், " ஆத்தா ராகினி, இந்த மஞ்சள் தாலியை உன் மருமகன் கையில் கொடுத்து மகள் கழுத்தில் கட்டச் சொல்லு, அவள் ஆசை படுறா!" என்றார் அப்பத்தா.

 "ஏன் அத்தை அது தான் தாலி போட்டு இருக்காளே, இது எதுக்கு?" என்றார். ஜானகியின் கண்கள் இவர்கள் பேச்சில் அலை பாய்ந்ததை ரகுவீர் பார்த்தான்.

"அக்கா சொல்றது சரி தானே அத்தை. அத்தனை சடங்கு சம்பிரதாயத்தோட தானே கல்யாணம் நடந்தது." என்றார் தெய்வா.

ஜானகி முகம் வாடியதைப் பார்த்தவன், "என்னடா?" என விழியால் வினவினான். அதற்குள் அமுதன் இவர்கள் உரையாடலை மொழிப் பெயர்த்திருந்தான். தாலியைக் காட்டி என்னவென்று கேட்டான். அமுதன் தமிழ்நாட்டுச் சென்டிமென்ட் மஞ்சள் தாலிக்குப் பெண்களிடம் இருக்கும் மகத்துவத்தைச் சொன்னான்.

ஜானகியின் முக மாற்றத்தைக் கவனித்தவன், அவளருகில் சென்று முகத்தை நிமிர்த்தி, "ஜானும்மா அதை உன் கழுத்தில் நான் கட்டனுமா?" என்றான். அவள் ஆம் எனத் தலையை ஆட்டினாள். "என்கிட்ட உரிமையா இதைக் கூடக் கேட்க மாட்டியா?" என்றான்.

"இல்லை வீரூஜி, ஏற்கனவே மங்கள் சூத்திரம் கட்டிட்டேன்னு சொல்லிடுவீங்களோன்னு யோசனையா இருந்தது." என்றாள்.

 "அப்பத்தா கொடுங்க." என்றான் ரகுவீர். தாலியை அங்கு வந்த ஐயர், சுவாமி பாதத்தில் வைத்து, இவர்கள் கொண்டு வந்த மாலையை அம்மையப்பனுக்குச் சாற்றினார். பூஜை செய்து தீபம் காட்டினார். சிவகுரு, மூன்று முடிச்சுப் போடும் முறையை சொல்லி மூன்றாவது முடிச்சை மயூரியைப் போட சொன்னார்கள்.

 ஐயர் மாலையைத் தம்பதிகள் கையில் கொடுத்தார். மாலை மாற்றச் சொன்னார். ஜானகி ரகுவீருக்கு, முழு மனதோடு, தன் கணவனாக ஏற்று அவன் கண்களைப் பார்த்தவாறு காதலோடு அவன் கழுத்தில் போடும் போது அவன் காது அருகில் சென்று, "ஐ லவ்யூ வீரூ அத்தான்." என்றாள். சொன்னதும் வெட்கம் சூழ மண் பார்த்து, ஓர் புன்னகை சிந்தினாள். வயிற்றிலிருந்த பந்து மேலே ஏறியது. அவளின் மனதிலிருந்த வார்த்தைகள் எதிர்பாராத நேரத்தில் வெளி வரவும், ரகுவீர் திக்குமுக்காடி போனான்.

 "மாப்பிள்ளை மாலையைப் போடுங்க." என்ற ஷண்முகத்தின் குரலில், மனம் நெகிழ்ந்து, "ஐ லவ்யூடி மேரிஜான்!" என மாலையிட்டான்.

தாலியை ஐயர், அப்பத்தாவிடம் கொடுத்தார். தாத்தா அப்பத்தா சேர்ந்து, இறைவனை வேண்டி, ரகுவீரிடம் தாலியை நீட்டினர். ராகினி, தெய்வா, அமிர்தா, மஞ்சரி சுற்றி கையில் பூவோடு நின்றனர். மயூரி, ஜானகி பின்னால் நின்றாள்.

 ரகுவீர் மஞ்சள் பூசிய அந்தத் தாலிச் சரட்டைக் கையில் வாங்கி, வணங்கி, ஜானகி கழுத்தில் உணர்வு பூர்வமாகக் கட்டினான். பூமழை பொழிந்தது. ராகினி, சிவகுருவும் கண்கலங்கி இருந்தனர்.

 ஜானகியின் கனவில் மஞ்சள் தாலி கட்டும் ரகுவீர், இன்று நிஜத்தில் தாலி கட்டியிருந்தான். இரண்டு முடிச்சை அவன் போட மூன்றாம் முடிச்சை மயூரிப் போட்டாள்.

 ஜானகிக்குக் கனவு நினைவானதில் கண்களில் ஆனந்த வெள்ளம் பெருகியது. அவள் நெற்றி வகிட்டிலும், பொன் தாலியிலும் குங்குமம் வைத்தவன், அவள் கண்ணீரைத் துடைத்து, நெற்றியில் முத்தமிட்டான்.

 தாத்தா அப்பத்தாவிடம் ஆசீர்வாதம் வாங்கினர். அட்சதை தூவி ஆசி வழங்கிய அப்பத்தா, ஜானகியைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்து, "தொங்கத் தொங்கத் தாலி கட்டி, தீர்க்க சுமங்கலியா வாழனும் என் ராசாத்தி." என்றார்.

"பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழனும்." என வாழ்த்தினார் சிவபரங்கிரி ஐயா."பதினாறு பிள்ளைகளா?" எனப் பாலன் அதிர்ந்தான்.

"ஜானகி எப்பப் பார்த்தாலும் வயிற்றைத் தள்ளிக் கிட்டு நிற்பாள்." என்றாள் அமிர்தா."பிஸ்னஸ் ராஜ் பேபி தலையில் தான் நான் பாவம்." என்றாள் மஞ்சரி.

"அது அதுக்கு அது அது கவலை." என்றான் அமுதன். மயூரி சிரித்தாள். "பையா நிலைமையை நினைச்சுப் பார்த்தேன், இப்பவே ஜானியை விட மாட்டேங்கிறாங்க. அப்புறம் அவ்வளவு தான்." என்றாள்.

"அப்பா, இப்படி எல்லாம் தாக்கக் கூடாது, எழுத்துக் கூட்டியாவது தமிழ் வாசிச்சிடுவோம்." என்றான் பாலன்.

"உங்க மதர்டங் உங்களுக்குத் தெரியாதா?" என்றான் ரகுவீர்.

 "அதுவும் உங்க புவாஷா செய்த வேலை, இவளுக்குத் தெரியாதுன்னு தமிழ் மூன்றாவது மொழியாக இருந்தது. ஜானகி செட்டில் தான் தமிழுக்கு மாறிச்சு." என்றார் சிவகுரு.

 கொடி மரத்திடம் வந்து தம்பதி சமேதராய் விழுந்துக் கும்பிட்டு. தியானம் மண்டபப் படிக் கட்டுகளில் போய் அமர்ந்தனர்.

ராகினி, சுற்றும் பார்த்துக் கொண்டே இருந்தார். அவர் எதிர் பார்ப்பை வீணாக்காமல் கம்பளத்துக்காரப் பெண்மணி வந்தது. ராகினியைத் தாண்டி ஜானகி, ரகுவீரிடம் வந்து நின்றது. சிவகுரு பார்த்து விட்டார். ஏதாவது அபசகுனமாகச் சொல்லக் கூடாதே எனப் பதறி அருகில் வந்தார்.

"அம்மா எதுவாக இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க!" என அழைத்தார்.

 "பயப்படாதீங்க. உங்கள் மகளை வாழ்த்தச் சொல்லி உத்தரவு, வாழ்த்தத் தான் வந்தேன்." என்றவர் , ஜானகி ரகுவீரை இரு கைகளிலும் வலித்து எடுப்பது போல் செய்து, நெட்டி முறித்தார். அவர்கள் அதிசயமாகப் பார்த்தனர்.

 

"ராசாவாட்டாம் மனம் நிறைந்த மணவாளன்.

ராணியாய் தாங்குவார் உன்னை.

வாழையடி வாழையாய் வாழ்வாய் தாயீ.

சம்சாரம் ஆகிறதே சாதனையா நினைக்காதே.

சம்ஹாரம் பண்ண வந்த சண்டி நீ.

பரிதவிக்கும் பாவைகளைக் காத்திடுவாய்.

பாவிகளைச் சமுத்திரத்தில் சாய்த்திடுவாய்.

பக்க பலமாய்ப் புருஷன் உண்டு.

பாதுகாப்பாய் ருத்திர சேனை உண்டு.

கலங்கிய காலம் கரைந்து போனது.

புள்ளைக் குட்டி பெற்று நீ நீடுடி வாழு."

 எனச் சொலவடையாக வாழ்த்திய அந்தப் பெண்மணியைப் புன்னகையோடு பார்த்திருந்தாள். ரகுவீர் இரண்டாயிரம் ரூபாய்த் தாளை ஜானகியிடம் கொடுத்துக் கொடுக்கச் சொன்னான். ஜானகி நீட்டினாள். "இதுக்காகச் சொல்லல தாயி!" என மறுத்தாள் அந்தப் பெண்மணி.

 "என் புருஷன் கையில் மஞ்சள் கயிறு தாலிக் கட்டிக்கிட்டேன். அந்தச் சந்தோஷம். உங்கள் பிள்ளைகளுக்கு இனிப்பு வாங்கிக் கொடுங்கள்." எனக் கொடுத்தாள். மகிழ்ச்சியாக வாங்கிச் சென்றார் அந்தப் பெண்மணி.

சிவகுரு தான் அதிர்ந்து நின்றார். இப்ப தான் சரியாகி வருகிற மாதிரி இருக்கு, மகள் வேறு ஏதாவது இழுத்து விட்டுக் கொள்வாளோ என்று பயம் வந்தது.

 ஜானகியை பார்த்தார். "எதுக்குடி பணம் கொடுத்த?" என்றாள் அமிர்தா.

"வீரூஜி கொடுக்கச் சொன்னாங்க, அதனால் தான். ஆனால் புள்ளைக் குட்டி பெத்துக்குவேன்னு சொல்லுச்சே. எனக்கு வீரூஜி மாதிரி ஜாடையோடு மகன் வேணும்." என அமிர்தாவிடம் ரகசியம் சொன்னாள்.

 "அங்க என்ன ரகசியம் ஓடுது?" என்ற ரகுவீரிடம், அமிர்தா வாயைத் திறக்கப் போக, கையிலிருந்து பிரசாத அப்பத்தை அவள் வாயில் அடைத்தாள் ஜானகி.

"ஒண்ணும் இல்லை நீங்க பிரசாதம் சாப்பிடுங்க." என்றாள் ஜானகி. அவன் பார்வையால் சிரித்து விட்டுத் திரும்பிக் கொண்டான்.

கோவில் கடைகளில் பெண்கள் பர்சேஸ் செய்தனர். பல்லாங்குழி, தாயக்கட்டை அதன் பலகை, மரப்பாச்சி பொம்மை, தாழம்பூ குங்குமம். பூசுமஞ்சள் மற்ற சில பெண்களின் அலங்காரப் பொருட்களை அள்ளிக் கொண்டாள்.

அங்கிருந்த புத்தகக் கடையில் தாத்தா, தேவாரப் பதிகங்களையும், சிவகுரு சுந்தரக் காண்டம் புத்தகத்தையும், தெய்வா தெய்வீக துதி பாடல்கள், அர்ச்சனை எனத் தமிழ் நூல்களை ஜானகிக்குப் பரிசாகத் தந்தனர். ஒரு வீட்டில் இருக்க வேண்டிய நூல்கள் என எல்லாவற்றையும் அவளே ஆசைப் பட்டு வாங்கிக் கொண்டாள்.

பட்டுச் சேலைக் கடைக்குக் கூட்டிச் சென்ற ரகுவீர், அப்பத்தா முதல், மஞ்சரி வரை அனைவருக்கும் சேலை எடுத்துக் கொடுத்தான். "ஜானு தாதி, மாஷா, தீதி, சாசிஷா எல்லாருக்கும் சேலை எடு என்றான். ஜானகி குட்டிப் பாவாடை சட்டையை எடுத்து வந்து, "வீரூஜி ஹாசினிக்கு எதை எடுக்க. இது நாலுமே எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு." என்றாள்.

"நாலையுமே எடு. நம்ம வீட்டுக்கு வரும் போது போட்டு அழகு பார்க்கலாம்." என்றான். ஜானகி மகிழ்ச்சியோடு சரி என்றாள். தேனு, மானுவுக்கும் சேர்த்து எடுத்து அமிர்தாவிடம் கொடுத்தாள்.

மதிய உணவு முடித்து மாலை நான்கு மணிக்குச் சிறுமலை வந்து சேர்ந்தனர். அவரவர் அறையில் ஓய்வெடுக்கச் சென்றனர்.

ஜானகி, உடை மாற்ற ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு வந்தவள், தனது மஞ்சள் கயிற்றை ஆசையாக வருடிக் கொண்டாள். பொன் தாலியைத் தூக்கிப் பார்த்துக் கொண்டாள். ரகுவீர் சர்ட்டை கழட்டிக் கொண்டே வந்தவன், பனியனுடன் அவள் பின்னே வந்து நின்றான். "என்னடி மேரிஜான், இதை இப்படிப் பார்த்துக்கிட்டு இருக்க, அவ்வளவு ஸ்பெஷலா?" என்றான்.

திரும்பி அவனை இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள் ஜானகி. "தாங்க்ஸ் அத்தான், ஐ லவ்யூ அத்தான்." என அவனுள் புதைந்து, அவள் கைகள் முதுகில் படர மனைவியாகத் தனது அன்பை வெளிப்படுத்தினாள். இத்தனை நாள் இல்லாத தன் லுகாயியின் இந்தச் செயலில் , செயல் மறந்து நின்றான் ரகுவீர். பிறகு மெல்ல அவளை ஒரு கையால் அணைத்து மறு கையால் அவள் முகத்தை நிமிர்த்தி, "நமக்கு ஷாதி முடிஞ்சு இரண்டு மாசம் ஆச்சுடி. இன்றைக்குத் தான் ஆனமாதிரி இருக்கியே?" என்றான்.

"அது, தப்பா எடுத்துக்காதீங்க. ஏதோ பாசி போட்டிருந்த மாதிரி இருந்தது. இது தான் என் அத்தான் கட்டிய தாலி!!!” என மஞ்சள் கயிற்றை வாசம் பிடித்து, தாலிக்கு முத்தம் கொடுத்தாள். "இது தான் நீங்க. இந்த நெஞ்சுக்குழியில் எப்பவும் இருப்பீங்க. குங்குமம் எடுத்தாள், வகிட்டில் வைக்கிற மாதிரி இதிலும் வைப்போம்." என்றாள் ஜானகி.

 

"அடிப் பாவி, பத்து லட்ச ரூபாய் வைரத் தாலி, ஒரு லட்ச ரூபாய் பொன் தாலியை விட ஒரு ரூபாய் மஞ்சள் கயிற்றுக்குத் தான் ஏங்குனியா நீ?" என்றான்.

"இங்கே மஞ்சள் கயிற்றில் மஞ்சளை வச்சுக் கட்டினாலும் அதுவும் தாலி தான்." என்றாள் ஜானகி.

"சரி மாத்திட்டு ரெஸ்ட் எடுடி, பார்ப்போம் என்ன பண்ண காத்திருக்கியோ?" எனக் கவலைப் பட்டான் ரகுவீர்.

ஒரு மணி நேர ஓய்வுக்குப் பின்னர்க் குளித்து அடர் நீலவண்ண பிரின்டட் ஸ்லீவ் லெஸ் ப்ளவுஸ், வெண்ணிற சேலையில் நீல வண்ணப் பூக்கள் சிதறலாய் இருந்தது. கண்ணாடி போன்ற ஜார்ஜெட் சாரி கவனமாக மடிப்பு வைத்துக் கட்டியிருந்தாள். கழுத்தில் இரண்டு தாலியும் இருந்தது. காதில் நீல வண்ண கல் பதித்த பூத் தோடு. கைகளில் நீலக் கண்ணாடி வளையல், தூக்கிப் போடப்பட்ட கொண்டை என அளவான ஒப்பனையோடு வந்தாள். கூடவே ரகுவீர் ஜீன்ஸ் டிஷர்ட்டில் வந்தான். கீழே தாத்தா அப்பத்தா தயாராக உட்கார்ந்து இருந்தனர். மணி ஆறேகால் ஆனது.

தெய்வாவிடம் போய்க் கொஞ்சிப் பேசி வந்தாள் ஜானகி. அவளை இழுத்து அறைக்குள் சென்று நெற்றியில் முத்தமிட்டவர், "தம்பியை அனுசரிச்சு பக்குவமா நடந்துக்க." என அனுப்பி வைத்தார். ராகினி ரூமில் போய், "அப்பா ஜான், தாத்தா, அப்பத்தாவோட ஃபார்ம் ஹவுஸ் போகிறோம்." என்றாள்.

"சரிடாம்மா போய்ட்டு வாங்க!" என்றார் சிவகுரு. ராகினி அவளைக் கட்டிக் கொண்டு, "பார்த்து நடந்துக்கடி. வீரூ பாவம்." என்றார்.

"மாதாஜி, அது அது அம்மாக்கள் பெண்ணை நினைத்து கவலைபடுங்க. நீங்க தான் வித்தியாசமா, மருமகனை நினைப்பீங்க." என்றாள்.

இளையவர்கள் வித்தியாசமாகப் பார்த்தனர். "இரண்டு நாளில் ஊருக்குப் போறாளே அதனால் தாத்தா அப்பத்தா ட்ரீட்." என்றார் தெய்வா. 

ரகுவீர் ஓட்டுநர் சீட்டில் அமர்ந்து இருந்தான். தாத்தா அப்பத்தா பின் சீட்டில் ஏறிக் கொண்டனர். ஜானகி வந்து முன் சீட்டில் ஏறிக் கொண்டாள்.

அந்த ஆடிக்கார் மலையில் வளைந்து மற்றொரு புறம் சென்றது.

அந்தி சாய்ந்த நேரம் சில கிலோமீட்டர் கடந்து எஸ்.எஸ். கார்டன்ஸ் எனப் பெயர் பொறித்த போர்ட்டைத் தாண்டி காவலாளி திறந்த கேட்டின் வழியே சென்றது.

 

இரு பக்கமும் ரோஜா, முல்லை பயிரிட்டு இருந்தனர். சற்று தள்ளி செவ்வந்தி, சம்பங்கி. தனியாக ஓரிடத்தில் ஆர்க்கிட் பூக்கள். இதன் நடுவே தனிக் சுற்றுச்சுவருக்குள் ஒரு வீடு இருந்தது. அதனுள் கார் நுழைந்தது. பூக்களின் மணம் மயக்கியது. நால்வரும் இறங்கினர். வேலை ஆட்கள் சாமான்களை உள்ளே கொண்டு வைத்தனர்.

 "பேராண்டி, இது தான் என் சாம்ராஜ்யம். எங்கள் அப்பா ஆரம்பிச்சதை எங்கள் காலத்தில் பெருக்கினோம். இதைத் தாண்டி பழத் தோட்டம். அதுக்க அப்புறம் மூலிகைத் தோட்டம்." என்றார் சிவபரங்கிரி.

"அருமையான இடமா இருக்கிறது தாத்தா!" என்றான் ரகுவீர்.

 "இங்கே உங்களைத் தனியா அனுப்ப சிவகுரு ஒத்துக்க மாட்டான். அதுதான் நாங்களும் கூட வந்தோம். சாப்பிட்ட பிறகு. உங்கள் தனிமையில் நாங்கள் குறுக்க வரமாட்டோம். எங்கள் தனிமையில் நீங்க குறுக்க வராதீங்க. என் பொண்டாட்டி ரொம்பக் கோபக்காரி. சரியாம்மா நான் சொல்றது." என்றார் சிவபரங்கிரி.

 "ஆமாம் பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி குதிச்சானாம். உங்களுக்குப் பேரன் பேத்தி இருக்கு. இன்னும் பத்தே மாசத்தில் கொள்ளுப்பேரன் வந்துடுவான். ஞாபகம் இருக்கட்டும்." என்றார் அப்பத்தா.

"என்னடி ஆத்தா சரிதானே?" என்றார் ஜானகியைப் பார்த்து.

"வெளியவே நிறுத்தி வச்சுகிட்டு கேள்வியைக் கேளு, நான் என்ன மந்திரம் சொல்லியா புள்ளையைப் பெத்துக்குவேன்." என நொடித்தாள் ஜானகி. ரகுவீர் சுற்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதுவும் போக இவர்கள் தமிழில் பேசியதால் அவனுக்கு விளங்கவில்லை.

 தாத்தா பலமாகச் சிரித்தார், "நீதாண்டா கண்ணு இந்தக் கிழவிக்குச் சரியான ஜோடி. இந்தப் பேச்சுக்குத் தான் ஏங்கிக் கிடக்கப் போறோம்." என்றவாறு வீட்டுக்குள் சென்றார்.

"ஏன் தாத்தா அப்படிச் சொல்றீங்க. நான் போன்ல பேசுவேனே, அப்புறம் என்ன?" என்றாள். "எத்தனை நேரம் பேச முடியும், சரி விடு உங்க அம்மாவை பெற்றவருக்காவது , அதென்ன சொல்லுவாறு நாத்தியைக் கொஞ்சும் பாக்கியம் கிடைக்கட்டும்." என்றார்.

"என்னை மாதிரி, இவுக ஆச்சி பேசுமாக்கும், குந்தானி, குந்தானிங்கும்." என்றார் சிவகாமி. தாத்தாவும் பேத்தியும் இணைந்து நகைத்தனர்.

 ரகுவீர் உள்ளே வந்தான். "ஜானும்மா சூப்பரா இருக்குடி, இங்கே முதவே வந்திருந்தால் ஓன் வீக்காவது ஸ்டே பண்ணியிருக்கலாம். பார் மும்பை போகனும், யூரோப் போகனும்னு அவசரமாப் போக வேண்டியது இருக்கு." என்றான் ரகுவீர்.

 "அதெல்லாம் உங்கள் பூபி, பூஃபாஷா விட மாட்டாங்க. இங்கே ஏதாவது அனிமல் அட்டாக் ஆகும்னு பயம். நைட் ஸ்டேக்கே, தாத்தா அப்பத்தா இருக்கிறதால் ஓகே சொன்னாங்க." என்றாள்.

 "ஏன் தாத்தா ஃபைட் பண்ணுவாரா? என்றான். ஜானகி சிரித்தாள்.

"என்ன பேராண்டி இப்படிக் கேட்டுட்ட, பெண் சிங்கத்தோடையே ஃபைட் பண்றேன், மத்தது எல்லாம் ஜூஜுபி." என அப்பத்தாவைப் பார்த்த வண்ணம் ரஜினி பட டயலாக் அடித்தார்.

அப்பத்தா தீப் பார்வையில் அடங்கினார். இளசுகள் இரண்டுக்கும் சிரித்து மாளவில்லை.

 மணி எட்டை நெருங்கவும், டிபன் எடுத்து வைத்தாள் ஜானகி. எளிய உணவாக இட்லி சப்பாத்தி மட்டுமே இருந்தது. சாப்பிட்டு முடிக்கவும் தாத்தா தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை ரகுவீர் ஜானகிக்கு, ஹிந்தியில் சொன்னார்.

 காற்றாட வெளித் திண்ணையில் அமர்ந்தவர், "நான் சிறுவயதில் செய்யாத சேட்டையே கிடையாது. என் பசங்க என்ன மாதிரி கிடையாது, ஒரு தலைமுறை தாண்டி ஜானகி கிட்ட என் குறும்பு இருந்தது. அதனால் அவளை ஒண்ணும் சொல்ல விட மாட்டேன். மருமகள் மட்டும் தான் கண்டிக்கும். இப்படியே பயமில்லாமல் வளர்ந்ததின் விளைவு. அம்மாவைச் சேர்த்து வைக்கக் கிளம்பியது, உங்கள் கல்யாணத்தில் முடிஞ்சிருக்கு." என்றார். ஜானகி தாத்தாவைக் கட்டிக் கொண்டாள்.

"அடுத்துச் சொல்ல வரதை கேட்டாள் அடிப்பாள்." எனச் சிரித்தவர், தொடர்ந்தார், "வாலிப பருவத்தில் நான் ஆடாத ஆட்டமே இல்லை, நல்ல ஆட்டம். கூட்டாளிகள் சாவகாசம், சீட்டு தண்ணி, பொம்பளைக கூடப் பழக்கம் எல்லாம் உண்டு.

 எங்கப்பா எத்தனை சொல்லியும் திருந்தலை. உங்க அப்பத்தா என்னை விட

களஞ்சியம்
 73- மனதில் மாற்றம் 

 

"வீரூஜி, சின்னப் பிள்ளை மாதிரி அடம் பண்ணதீங்க. வாயைத் திறங்க. இல்லைனா மூக்கைப் பிடிச்சு தான் ஊத்துவேன்." என்றாள் ஜானகி.

"ஐயோ வேணாம்டி, வாடையே நல்லா இல்லை." மறுத்தான்  ரகுவீர்.

"பையா, கண்ணை மூடிக்கிட்டு கப்புனு அடிங்க." என்றாள் மயூரி.

 

"ஜீஜூ பெரிய பெரிய பிஸ்னஸ் எல்லாம் ஹேண்டில் பண்றீங்க இது ஒரு பெரிய விசயமா. சீக்கிரம் குடிங்க இல்லைனா வீடியோ ரெக்கார்ட் பண்ணி சோசியல் மீடியால போடுவேன்." என மிரட்டினாள் மஞ்சரி.

"அடிப்பாவிங்களா, எல்லாரும் சேர்ந்து என்னை டார்சர் பண்றீங்க. அந்தக் காளை மாடே பரவாயில்லை." கதறினான்  ரகுவீர்.

"ஜானும்மா! அத்தானுக்குப் பிடிக்கலைனா விட்டுடேன், எதுக்குக் கம்பல் பண்ற?" வக்காலத்து வாங்கினான் அமுதன்.

"நீ சும்மா இரு, எதுக்குத் தான் சப்போர்ட் பண்றதுன்னு இலாலாமல் எல்லாத்துக்கும் உங்கள் அத்தானுக்குக் குடை பிடி." என்றாள் ஜானகி.

"எனக்குத் தான் அத்தானா, உனக்கு அத்தான் இல்லையா?" என்றான் அமுதன். "இப்ப அதுதான் முக்கியமா, அப்பத்தா எவ்வளவு கஷ்டப்பட்டு மூலிகை மருந்து இடிச்சுக் கசாயம் போட்டு இருக்காங்க. சீக்கிரம் குணமாக வேண்டாமா?" என்றாள் ஜானகி.

"மயூ, மஞ்சி இரண்டு கையையும் பிடிங்கடி, எப்படிக் குடிக்காமல் போறாருன்னு நானும் பார்க்கிறேன்." ஜானகி பிடிவாதம் பிடிக்க,  

"வேணாம்டி! மஞ்சரி வாழ்க்கை பூரா இதைச் சொல்லியே, என்னை வதைப்பா. கொடு நானே குடிக்கிறேன்." என வாங்கி முகத்தை அஷ்ட கோணலாக மாற்றி ஒரே மடக்கில் குடித்தான் ரகுவீர்.

 இத்தனை அட்டகாசமும் அடுத்த நாள் காலை நடந்தேறியது. மதுரையில் மருத்துவமனையில் பெரிய பிரச்சனை எதுவும் இல்லை என்றதும், உள்ளே கொடுக்கும் மாத்திரையோடு ஒரு நேரம் கசாயம், இரு வேளை மூலிகைப்பத்து எனச் சிவகாமி அப்பத்தா தன் பாட்டி வைத்தியத்தை ஆரம்பித்தார்.

இரவில் பச்சை காப்பு பூசிய பசும் மனிதனாக இருந்த ரகுவீரை காலையில் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைத்தாள் ஜானகி. ஒருமுறை, நீ என்ன முதுகா தேய்க்கப் போகிறாய் என ரகுவீர் சலிப்பாகக் கேட்டது, இன்று நிஜமாகிறது. குளியலறையில் ஜானகி ரகுவீரை பாடாய்ப் படுத்தி விட்டாள். ஒரு வழியாகக் குளித்து வந்தவனை, வெள்ளை மெல்லிய துண்டைக் கொண்டு ஈரத்தை ஒத்தி எடுத்தாள். மீண்டும் பச்சைக் காப்பைப் பூசி விட்டுக் கசாயம் குடிக்க ஹாலில் அமர்த்தி இருந்தாள்.

ஒருவழியாகக் கசாயம் குடித்து முடித்து உட்கார்ந்து இருந்தான் ரகுவீர். அமுதனோடு மயூரி, மஞ்சரி இன்று சீக்கிரமாக ஆபீஸ் கிளம்பி இருந்தனர்.

"அத்தான், வேற ஏதாவது தேவைனா கூப்பிடுங்க. ஜானு வரேன்டா!" எனக் கிளம்பினான்.

"அண்ணா ஒரு நிமிஷம் இரு." என,மேலும் சில பொருட்கள் வாங்கி வர வேண்டியதை எழுதி லிஸ்ட் போட்டுக் கொடுத்தாள்.

"உடனே வேணுமா, மதியம் வந்தால் போதுமா?" எனக் கேட்டான் அமுதன்.

"வைப்ஸ், காட்டன் இது மாதிரி தான் , நீ வரும் போது வாங்கிட்டு வா போதும்." என அனுப்பி வைத்தாள்.

 "ஏண்டி மெடிக்கல் ஷாப் திறக்கப் போறியா, இவ்வளவு பெரிய லிஸ்ட்?" என்றான் ரகுவீர். "ஆமாம் இருக்கிற பிஸ்னஸில் வருகிற வருமானம் பத்தலை. நாமளாவது கடைகண்ணி வைச்சுப் புருஷனைக் காப்பாத்தலாம்னு பார்க்கிறேன்." என அவள் வாயாட " நீ செஞ்சாலும் செய்வ!" எனப் பேசிக் கொண்டிருக்கும் போதே ராஜ்வீரிடமிருந்து போன் வந்தது. இது இவன் காயம் பட்டதிலிருந்து பதினைந்தாவது போன் கால். இருவரும் ரூமிற்குள் வந்திருந்தனர் ஒருமணி நேரம் கழித்தே காலை உணவு ரகுவீருக்கு கொடுக்க வேண்டும். சற்றே சாய்ந்த நாற்காலியில் அமர்ந்தான் ரகுவீர்.

ஜானகி மோடாவை இழுத்துப் போட்டுப் பக்கத்தில் அமர்ந்தாள். போன் காலை அட்டென்ட் செய்தான் ரகுவீர்.

"ராஜ்வி குட் மார்னிங் ஆபீஸ் கிளம்பிட்டியா?" என்றான் ரகுவீர்.

"குட்மார்னிங்,பையா, கிளம்பிகிட்டே இருக்கேன்.இங்கே மலபார் ஹில்லில் ஒரு ஹோட்டலில் க்ளைண்ட் மீட்டிங். நீங்க சொன்னதுக்கு ஓகே பண்ணனும், அப்புறம் வீடியோ கால் பண்ணவா?" என்றான்.

"க்ளைண்ட் மீட்டிங் முன்னால் சொல்லிடு. சட்டைப் போட்டுக்குறேன்." என்றான் ரகுவீர்.

"பையா காடா(கசாயம்) எல்லாம் குடிச்சிங்கலாம் . இங்க தாதிஷாவும், படிமாவும் பின்னாடியே அலைஞ்சாலும் குடிக்க மாட்டிங்க. எல்லாம் ஜானி மேஜிக்கா?" என்றான். போன் ஸ்பீக்கரில் இருந்தது, "ராஜ் இன்னைக்கு அந்த மேஜிக் இல்லை, மஞ்சியையும், மயூவையும் கையைப் பிடிக்கச் சொன்னேன், மஞ்சிக்குப் பயந்தே குடிச்சிட்டாங்க." என்றாள் ஜானகி. ராஜ்வீர் பலமாகச் சிரித்தான்.

"ஏண்டா ராஜ்வி, இது இரண்டும் மும்பையில் நம்ம வீட்டுப் பஹூவா சேர்ந்து இருந்தால் எப்படிச் சமாளிக்கிறது?"  ரகுவீர், கேள்வி எழுப்ப,

"பையா, இதில் சமாளிக்க என்ன இருக்கு?" என்றான் ராஜ்வீர்.

"அவ்வளவு தைரியமா, ஷாதிக்கு அப்புறம் இன்னும் டெரரா ஆகுறாங்க." என்றான் ரகுவீர். "பையா பேசவிடுங்கள், ஜானியே தேவலை, அவ கூடப் பேசி பேசி சான்ஸ் கிடைச்சா பேசிட்டே இருக்கீங்க." எனச் சொல்லவும் ஜானகி சிரித்தாள்.

 

"ராஜ்வி!" என ரகுவீர் எதிர்ப்பை தெரிவிக்க, "முழுசா கேளுங்க, இவங்க இரண்டு பேரையும் சமாளிக்க முடியாது சரண்டர் தான்." என்றான்.

 "அது தான் ஏற்கனவே ஆயிட்டனே, என்னை அடிமையா வச்சிருக்கா உன் ஜானி, ராணிஷா பார்த்து ஏதாவது தந்தாங்கன்னா சாப்பிட்டுக்கிறேன்." எனவும்,

ஜானகி, "ராஜ் நம்பாத, உன் பையாக்கு, குளிக்க ஊத்தி, வேட்டி கட்டி விட்டு, மருந்துப் போட்டு, சாப்பாடு ஊட்டி ,இத்தனையும் செய்யறேன், பேச்சைப் பாரு, நான் அடிமையா வச்சிருக்கேனாம். அது மட்டுமில்ல நான் பத்தாதாம் நர்ஸ் வேணுமாம்." எனக் குறை பட்டாள் ஜானகி.

ரகுவீர் சிரித்தான், "அதெல்லாம் சும்மா சொல்றாங்க, நீ இருந்தால் தான் அடுத்தப் பக்கம் பார்வையே திரும்பாதே!" என்றான் ராஜ்வீர், அவனுக்கும் இவர்கள் பொய்யாய் குறை பட்டுக் கொண்டதில், ஜானகியின் மனநிலை மாறியிருப்பது புரிந்தது. ரன்வீர் ராஜைப் பார்க்க வந்தவன், "பையா எப்படி இருக்கீங்க. கடைசியில் மாட்டை அடக்கி பாபிஷா சர்த்(கண்டிசன்) முடிச்சிட்டீங்க." என்றான்.

"ஆமாம்டா சோட்டே, ஆனால் உன் பாபிஷா சந்தோஷமாவே இல்லை, எப்பப் பார் மருந்தும் கையுமா அலையறா." என்றான்.

"ரன்வீர், உன் பையாவுக்கு என்ன? எதுவேன்னா சொல்லுவாங்க. மாடு முன்னால் இவங்க நிற்கும் போது எனக்கு உயிரே இல்லை தெரியுமா?" என்றாள் ஜானகி.

"பாபிஷா, உங்களுக்காகப் பையா மாடு என்ன ஷேரையே அடக்குவாங்க." எனவும், ரகுவீர் சிரித்தான்.

"போதும், போதும் இந்த இந்த மாடு முட்டினதுக்கு நான் படும் அவஸ்தையே போதும்." என்றாள் ஜானகி.

"என்ன பாபிஷா, இது நீங்க இல்லை, மிஸஸ் ராத்தோடா பேசுறீங்க.பேக் டூ ஃபார்ம், ஜானி தீதியா வாங்க. எனக்கு அவங்க தான் வேணும். ராத்தோட் மேன்ஷன் உங்களுக்காக வெயிட்டிங். நீங்களும் மஞ்சரி பாபியும் சேர்ந்தீங்க, நல்லா கலகலன்னு இருக்கும். சீக்கிரம் வாங்க. ஒரே போரிங்கா இருக்கு."  ரன்வீர், அழைப்பு விடுக்க ,

 "வந்திடுவோம் ரன்வீர், இவங்க காயம் ஆறட்டும், அடுத்த நாளே கிளம்பிடுவேன். எத்தனை நாளைக்கு அம்மா வீட்டில் உட்கார முடியும். உங்க பையாவுக்குக் கட்டிப் போட்ட மாதிரி இருக்கு. சீக்கிரம் வந்திடுவோம் டோன்ட் வொரி!" என்றாள்.

"பாபிஷா, பழைய ஜானியா வாங்க, அதுதான் எங்களுக்கு வேணும்." என் ரன்வீர், மீண்டும் வலியுறுத்தவும், "வந்துட்டாப் போச்சு, என்ன வீரூஜி?" என அவனையும் கேட்டுக் கொண்டாள்.

"நீயும் ரெடியா இருந்துக்க, உங்க பாபிஷா தொல்லையைத் தாங்குறதுக்குப் பை. ராஜ்வி தயங்காமல் கட்டாயம் கூப்பிடு, ராணிஷாகிட்ட முறையிட்டா செய்து தருவாங்க." எனரகுவீர், வம்பு பேச, 

 "ஆமாம் ராஜ், ராத்தோட்ஷா ஹுக்கும்(கட்டளை) ராணிஷா தலை வணங்கி செய்வாங்க." எனச் சிரித்தாள். நால்வரும் பை சொல்லி போனை வைத்தனர்.

"என்னடா ஜானும்மா வர்றேன்னு சொல்லிட்ட. வேற எங்கயும் போக வேண்டாமா." என்றான் ரகுவீர்.

அவன் மடியில் கவனமாகத் தலை வைத்த ஜானகி, "உங்கள் காயம் ஆறவும் கிளம்புவோம் வீரூஜி. போதும் சிறுமலை வாசம். என்னைக்கு இருந்தாலும் நீங்க இருக்க இடத்தில் தானே எனக்கு எல்லாம். அப்பா ஜானுக்கு அப்புறம் நீங்க தான் என்னை அப்படியே ஏத்துக்கிறீங்க. உங்களையாவது நான் ஹேர்ட் பண்ணாமல் இருக்கனும்." என்றவளின் கண்ணீர் அவன் வேட்டியை நனைத்தது.

"ஏண்டா இப்படிப் பேசுறா, புவாஷா திட்டினதுக்கா, அவங்க என் மேல் இருக்க அக்கறை, அதைவிட உன் மேல் உள்ள பாசம், உன்னை மாஷா எதுவும் சொல்லிடுவாங்களோன்னு இவங்க முந்திக்கிறாங்க." என்றான் ரகுவீர்.

"அதுக்காக இல்லை வீரூஜி, நீங்க கஷ்டப்படுறதை பார்க்க முடியலை. சங்கடமா இருக்கு. எனக்கு இதிலிருந்து உங்கள் காயம் சீக்கிரம் ஆறி, வேற சூழ்நிலைக்குப் போகனும்னு தோணுது." என்றாள்.

"ஃபாரின் போவோமா, எந்த ஊரைப் பார்க்க ஆசைனு சொல்லு கூட்டிட்டுப் போறேன். கம்ப்ளீட் சேஞ்சா இருக்கும். ஹனிமூனுன்னு அதுக்குப் பேர் சொல்லிடுவோம்." என அவள் தலையை வருடிவாறு சொன்னான். கன்னம் சிவந்தது ஜானகிக்கு ரகுவீர் அதைக் கவனிக்கவில்லை.

"யூரோப் ட்ரிப் போடுங்க வீரூஜி . நிறைய நாடு சுற்றிட்டு வரலாம்." எனத் தலை நிமிர்ந்து சொன்னாள். கண்களில் ஆர்வமும் இதழில் மென்னகையும் இருந்தது. அதைப் பாரக்கவும் ரகுவீருக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. அவளை நெற்றியில் முத்தமிட்டவன் ,

"சரிடி மேரிஜான், பத்து பதினைந்து நாள் கழிச்சு மும்பையில் இருந்து போட சொல்றேன். என் லுகாயி கேட்டு இல்லைனு சொல்லிடுவேனா. ஆனால் அதுக்குள்ள, எவ்வளவு கசாயம் வேணும்னாலும் கொடு குடிக்கிறேன். சீக்கிரம் சரியான சரிதான்!" என்றான்.

 முளையூரிலிருந்து, அமிர்தா, அவள் அம்மா, அப்பாவோடு வந்து விட்டாள். பாலன் வந்து அழைக்கவும் ரகுவீர், ஜானகி ஹாலுக்கு வந்தனர். உண்மையை மறைத்து வந்ததற்காக ஜானகி ரகுவீரை சண்டை பிடித்தாள் அமிர்தா. ரகுவீர் தான் விளக்கினான்.

 "அம்ரூ, உண்மையில் நிறையச் சுவாரஸ்யமான விசயங்கள், அனுபவங்கள் உங்கள் வீட்டில் தான் எனக்குக் கிடைச்சது. அம்மா, அப்பா எங்களைச் சந்தோஷமா வழி அனுப்பனும்னு யோசிச்சேன் அவ்வளவு தான். மற்றபடி உங்ககிட்ட மறைக்கிறது என் நோக்கம் இல்லை." என்றவன், "மருது என்ன பண்றான்?" என விசாரித்தான்.

"இணையோடு சேர தாமதமானதனால் எகிறிடுச்சு. பசுவைக் கொண்டி விட்டுட்டோம். இப்ப சாதுவா இருக்கு." என்றார் முருகானந்தம்.

ரகுவீர் ரகசியமாக ஜானகியைப் பார்க்க, கன்னங்கள் சிவந்த செம்பாவையாக, அதை மறைத்து அறைக்குள் சென்றாள் .

முருகானந்தம் சிவகுருவிடம், "மாமா, அத்தையின் சஷ்டியப்த பூர்த்தி வருதே, அதை எங்க வைக்கலாம்?" எனக் கேட்டார். சண்முகமும் வந்துவிட்டார்.

"ஏதாவது கோவிலில் வச்சுக்கலாமா?" எனக் கேட்டார் சண்முகம். "அப்பா, அம்மாகிட்ட ஒரு வார்த்தை கலந்துக்குவோம்." என்றார் சிவகுரு.

 சிவபரங்கிரி ஐயா, அப்பத்தா இருவரும் அங்கே வந்து மகள் மருமகனை வரவேற்றனர். ஏற்கெனவே ராகினி, தெய்வா அங்கே இருந்தனர்.

 சிவகாமி தான் பேசினார், "எம்பது ஆரம்பிக்குது அவுகளுக்கு, அதே மாசம் தான் வைக்கனும்னு இல்லை, இந்த வருஷத்துக்குள்ள எப்போ வேணும்னாலும் வைக்கலாம். பேத்தி கல்யாணம் முடிஞ்சிடுச்சு, பேரனுங்க இரண்டு கல்யாணமும் முடிஞ்சா இன்னும் சந்தோஷமா நிறைவா இருக்கும்." என்றார் .

"அமுதன், பாலன் கல்யாணத்தைச் சேர்த்தே நடத்தலாம்." என்றார் ராகினி.

"மயூரி, அமரேனுக்கு ஒரே பொண்ணு, அவருக்கு ஆசை இருக்குமே, எங்க வச்சு செய்யனும்னு அவரைக் கேட்போம்." என்றார் சிவகுரு. "நம்ம ஜானகி கல்யாணமும் இங்கே செய்யலை, அதுக்கே நிறையப் பேர் குறை பட்டாங்க!" என்றார் ராகினி.

 "ஆனால் பெண்ணை, அவங்க வீட்டிலிருந்து கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வர்றது தானே முறை." என்றார் சிவகுரு.

ரகுவீர் நடுவில், "பூஃபாஷா, சாசுஷாகிட்ட பேசலாம், சகாயீ அங்கே வைத்தோம், ஷாதி இங்கு வைப்போம்." என்றான்.

"சரி மாப்பிள்ளை, உங்கள் வீட்டிலும் கலந்துக்கிட்டு முடிவெடுப்போம்." என்றார் சிவகுரு.

 "சரிங்க அண்ணன் போட்டது, போட்டபடி வந்துட்டேன். எப்ப சொன்னாலும், அமிர்தாவுக்குக் கல்யாணம் செய்யத் தயார் தான். ஜானகி மகனைக் கவனமாகப் பார்த்துக்கோ. நம்ம வீட்டுக்கு வந்து மகனுக்கு இப்படி ஆயிடுச்சேன்னு தான் கவலை." என்றார் சுந்தரவள்ளி.

 "அத்தை அதுக்கெல்லாம் கவலை படாதீங்க. இது ஒன்றைத் தவிர அவுங்களுக்கு நம்ம ஊரு ரொம்பப் பிடித்தது." என்றாள் ஜானகி.

"சரி ஆத்தா பார்த்துக்க, அமிர்தா நீ வர்றியா?" எனக் கேட்டார்.

 "இல்லை அம்மா, நீங்க போங்க, ராம் அண்ணா, ரகுவீர் அண்ணாவைப் பார்க்க வர்றேன்னு சொல்லியிருக்கார் ஆபீ்ஸ் விசயம் பேச வேண்டியது இருக்கு, நான் பார்த்துக்குறேன்." என்றாள் அமிர்தா.

"அத்தை, நான் பத்து நாளில் கிளம்பிடுவேன், அதுக்கப்புறம் வந்தாலும் இரண்டு ஒருநாள் தானே தங்குற மாதிரி இருக்கும். அமித்து என் கூட இரண்டு நாள் இருக்கட்டும்." என்றாள் ஜானகி. ராகினி இதைக் கேட்டுக் கொண்டே வந்தார். மகளுக்குத் தன் மேல் கோபம், இனி அவள் இங்கே தங்க மாட்டாள் என்பது தெரியும்.

"ஜானகி சொல்றதும் சரியான தானே அண்ணி, ஊரிலிருந்து வந்தாலாவது இரண்டு ஒரு நாள் தங்கலாம். பக்கத்தில் இருக்கீங்கன்னு பேரு வந்துட்டு ஓடுறீங்க. பெண்கள் வாழ்க்கையே இப்படித்தான். வாங்க அண்ணி காலை டிபன் சாப்பிட்டுப் போகலாம். அண்ணா இன்னும் சாப்பிட்டு இருக்க மாட்டாங்களே லேட்டாத் தானே சாப்பிடுவாங்க. வாங்க!" என ராகினி அழைத்தார், தெய்வா தட்டை வைத்திருந்தார்.

"நேற்றே வரலாம்னு பார்த்தோம், நீங்க மதுரைக்குப் போய்ட்டிங்கன்னு, தெய்வா சொல்லுச்சு." என்றார்  முருகானந்தம் .

"ஆமாம் அத்தான், நம்ம மனசு திருப்திக்காக மாப்பிள்ளையை மதுரை ஹாஸ்பிடலில் காட்டிட்டு வந்தோம்." என்றார் சிவகுரு.

ரகுவீருக்கு ஜானகி, தட்டில் எடுத்துச் சென்றாள். ஹாலில் வைத்து ஊட்டி விட்டாள். "மாப்பிள்ளைக்குக் கையைத் தூக்க முடியலை. அது தான் பாப்பா ஊட்டுது." என்றார் சண்முகம்.

 "ஆமாம் எந்த வயசா இருந்தாலும், அதுக்குத் தானே மனைவி வேணும்கிறது. என்ன மாமா சரிதானே. எங்கள் அத்தை ஒரு வாரம் மும்பையிலிருந்ததுக்கு இளைச்சுப் போயிட்டீங்களே!" என்றார் முருகானந்தம்.

"ஆமாம் மாப்பிள்ளை, முதல் பிரசவத்துக்கு அப்புறம் உங்கள் அத்தை உங்க வீட்டில் தங்கிப் பார்த்து இருக்கீங்களா?" என வினவினார்  சிவபரங்கிரி.

 "நீங்க எங்க விட்டீங்க, மாட்டு வண்டி கட்டிக்கிட்டு வந்தாவது கூட்டிட்டு வந்திட மாட்டீங்க." எனக் கேலி பேசினார் மருமகன்.

"நீங்க என்னை விட்டீங்களாக்கும், எங்க அப்பாவைச் சொல்ல வந்துட்டீங்க." என்றார் சுந்தரவள்ளி.

"எல்லாப் பொம்பளைகளும் அப்படித்தான், சொல் பேச்சுக் கேக்குற அடிமை புருஷன் கிடைச்சா விட்டுட்டு போவீங்களாக்கும்." என முருகானந்தம் சொல்லவும், ஜானகி கலகலவென சிரித்தாள். ரகுவீர் பார்க்கவும் மொழி பெயர்த்தாள்.

"நான் இனிமேல் தான் எக்ஸ்பீரியன்ஸ் செய்து பார்க்கனும்." என்றான் ரகுவீர். "மொத்தமா சரண்டர் ஆகிடுங்க மகனே, அப்பத்தான் மருமகள் பக்கா இராஜஸ்தானியா மாறும்." என்றார்.

 ராஜ்வீரிடமிருந்து போன் கால் வந்தது, "ஜானும்மா எனக்கு வீடியோ சாட் ஆன் பண்ணி விட்டுட்டு நீ போய்ச் சாப்பிடு." என்றான். அவரிடம் விடைப் பெற்ற ரகுவீர், ஆபீஸ் ரூமிற்குச் சென்றான். வெள்ளை கதர் சட்டையை அவனுக்கு அணிவித்து, உட்கார வைத்தவள், சாப்பிட்டு வந்த அமிர்தாவை அருகில் நோட் பேடோடு அமர்த்தினாள். அவர்கள் வேலையைத் தொடர்ந்தனர்.

ஜானகி, டைனிங்கிற்கு வந்தாள், அத்தை மாமா கிளம்பி இருந்தனர், ராகினியும் பள்ளிக்குக் கிளம்பி இருந்தார். சிவகுரு மகளுக்காக உட்கார்ந்து இருந்தார். தெய்வாவும், ஜானகியுமாகச் சாப்பிட்டனர். சிவகுரு பரிமாறினார். அவள் சாப்பிட்டு முடிக்கவும் நிழலாக இருந்த மரத்தடிக்கு ஜானகியை அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தார்.

"நிஜமாவே ஊருக்குப் போனுமாடா செல்லம்?" என வாஞ்சையாகத் தலையைத் தடவியவாறுக் கேட்டார்.

"ஆமாம்பா, என்னைக்கா இருந்தாலும் போய்த்தானே ஆகனும். அவங்களும் பிஸ்னஸ் விட்டுட்டு இங்க உட்கார முடியாதே. யூரோப் போயிட்டு வரலாம்னு பார்க்கிறோம். அப்புறம் நேரமே கிடைக்காது. வீரூஜியும் ஓடிக்கிட்டே இருக்காங்களே. ஒரு சேஞ்ச் வேண்டும்." என்றாள் ஜானகி.

"நீ மாப்பிள்ளையோட போகனும், அதில் சந்தேகம் இல்லை, அப்பாஜான் மேல் கோவிச்சுக்கிட்டுப் போயிடாதே. அம்மா உனக்கு நல்லதுன்னு நினைச்சு எதாவது சொல்லுவாள். அதுக்கப்புறம் என்கிட்ட வந்து அழுவாள். நீ சந்தோஷமா வாழனும்டாம்மா." எனக் கண்கலங்கினார்.

"அப்பாஜான், உங்கள் மேலேயோ, மாதாஜி மேலயோ கோவம் இல்லை. எனக்கே ஒரு சேஞ்ச் தேவைபடுது. வீரூஜி என்னைப் பாரத்துப்பாங்க கவலைப் படாதீங்க!" என்றாள் ஜானகி.

 இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ராம் வந்து சேர்ந்தான். "வாங்க மாப்பிள்ளை!" என வரவேற்றார் சிவகுரு. ஜானகி தலை அசைத்தாள்.

"வணக்கம் மாமா! என்றவன், உங்கள் வீட்டுக்காரரைப் பார்க்கனும், அனுமதி உண்டா?" என ஜானகியிடம் கேட்டான்  ராம்.

 "கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க மிஸ்டர் ராம். என் அத்தான் ஃப்ரீயா இருக்காரான்னு பார்த்துட்டு வர்றேன்." எனச் சிரித்தாள்.

"வாலு, உள்ளே வாங்க மாப்பிள்ளை, ஆபீஸ் ரூமில் அமிர்தா கூட இருக்காங்க. வீடியோ கால் மீட்டிங்கில் இருக்காங்க." என்றார் சிவகுரு.

"ஜானகி, ரகுவீருக்குக் காயம் பலமா, உனக்காகக் காளை மாட்டை அடக்குனாறாமே. அமிர்தா சொல்லுச்சு. உனக்கு உலகத்திலேயே உங்கள் ரகுவீர் அத்தான் தான் மேட்ச்." என்றான். அலுவலக அறையில் மீட்டிங் முடிந்திருந்தது.

"யாரது அத்தான்?" எனக் கேட்டுக் கொண்டே ரகுவீர் வரவும், "எப்படி இருக்கீங்க ப்ரோ?" எனக் கையைப் பிடித்தான் ராம். ஹால் பக்கம் கையைக் காட்டி அவனோடு நடந்தான் ரகுவீர். அமிர்தா ராமைப் பார்த்து தலை அசைத்தாள்.

ஷோபாவில் அமர்ந்தனர், "உங்களைப் பார்க்க அனுமதி உண்டான்னு ஜானகிக் கிட்டக் கேட்டான். அவங்க ரகுவீர் அத்தானைக் கேட்டுட்டு வந்து சொல்கிறேன் மிஸ்டர் ராம்னு சொல்லுது. காலம் எப்படி மாறுது பாருங்க . முதலில் நான் அத்தான், நீங்க மிஸ்டர் ராத்தோட்டா இருந்தீங்க. இப்ப நான் மிஸ்டர் ராம், நீங்க அத்தானாம். பொண்ணுங்க கல்யாணத்துக்கு அப்புறம் அந்தர் பல்டி அடிப்பாங்க போல!" என்றான் ராம்.

ரகுவீரின் பார்வை ஜானகியில் நிலைத்தது, அவளுக்கு வெட்கம் வேறு, 'ஐயோ இவன் கிட்ட வாயை விடுவேனா, கட்வா வேற ஒரு மாதிரி பார்க்குது. ஜானகி மாட்டனடி.’ என மனதில் யோசித்தவள், மாத்திரை எடுக்க ஓடினாள்.

மாத்திரையைக் கொண்டு வந்து ரகுவீர் வாயில் போட்டு தண்ணீரை ஊற்றிச் சென்றாள். ராம், 'இவருக்கே இந்த நிலைமையா என யோசித்தான்.'

மதியம் வரை இவர்களது மில் துணி டிஸ்கஸன் ஓடியது. நடுவில் டீ ஸ்னேக்ஸ் கொடுத்தாள் ஜானகி. மதியம் நெருங்கும் போது மூவரையும் சாப்பிட அழைத்தாள். கொஞ்ச நேரம் ஜானி, என அமிர்தா சொல்லும் போது ஒரு முறைப்பு. அடுத்து ராமிற்கு ஓர் முறைப்பு. அடுத்து அவள் வரும் முன் ராம் வேகமாக மூட்டைக் கட்டினான், கேள்வியாகப் பார்த்த ரகுவீரிடம், "மீதியை நான் பார்த்துக்கிறேன், நீங்க சாப்பிடப் போங்க. உங்கள் மனைவியின் கோபம் உங்களுக்குத் தெரியுமான்னுத் தெரியாது. ஆனால் என் ஸ்கூல்மெட்டை எனக்குத் தெரியும்." என்றான்.

ரகுவீர் ஒரு சிரிப்போடு, "அவளே வேலைனு வந்தால் இப்படித் தானே பார்ப்பாள்." என்றான்.

 "இப்ப காயத்தோட இருக்கீங்க அதனால் முறைக்கிறா. நான் பார்த்துக்கிறேன் அண்ணா!" என்றாள் அமிர்தா.

தெய்வா, ராம், அமிர்தா இருவரையும் சாப்பிட அழைத்தார். "அத்தை அம்மா தேடுவாங்க, நான் வீட்டுக்குப் போய்ச் சாப்பிடுறேன்." என்றான்.

"அதெல்லாம் இந்நேரம் சித்திக்கு போன் போயிருக்கும். கேட்டுப் பாருங்க!" என்றாள் அமிர்தா.

 ரகுவீர் அறைக்குச் செல்ல ஜானகி, உணவு தட்டோடு பின்னே சென்றாள். அமுதன், மஞ்சரி, மயூரி வந்து சேர்ந்தனர். "எங்க சின்ன மச்சானைக் காணோம்?" எனப் பாலனைக் கேட்டான் ஶ்ரீராம்.

"ஆடிட்டிங் போயிருக்காங்க, சாய்ந்திரம் ஆகிடும்." என்றாள் அமிர்தா.

 "வாடா மச்சான்!!!" என்றபடி வந்தான் அமுதன். அறையில் சேரில் அமர்த்தி ரகுவீருக்குச் சாப்பாட்டைக் கொடுத்தாள் ஜானகி. "ஏண்டி எங்கிட்ட சொல்ல மாட்டே. ஊரில் இருக்கவங்கக்கிட்ட எல்லாம் சொல்லுவியா?" என்றான் ரகுவீர்.

 “என்ன?” என ஜானகி கேட்டாள். "நடிக்காதடி மிர்ச்சி, நீ எப்ப என்ன ரியாக்ஷன் கொடுப்பன்னு எனக்குத் தெரியும்." என்றான் ரகுவீர். ஜானகி அடக்கிய சிரிப்பை உதிர்த்தாள்.

"பேசாமல் சாப்பிடுங்க வீருஜி!" என நீட்டினாள் ஜானகி, பேச்சிலும் கையிலும்.

நீட்டிய உணவோடு அவள் கையையும் கடித்தான் ரகுவீர். "ஆ…" என அலறிய ஜானகி, "இது என்ன சின்னப் பிள்ளைத்தனம்?" என கடிந்தாள். "அப்படித்தான் பண்ணுவேன் போடி!" என முறைத்தான் ரகுவீர்.

"கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு பிஸ்னஸ் மேக்னட் ஹால்ல உட்கார்ந்து இருந்தார், நீங்க அவரைப் பார்த்தீங்க?" என்றாள் ஜானகி.

 ரகுவீர் திரும்பிக் கொண்டான். சாக்லேட் கேட்டு அடம் செய்யும் சிறுவனாக மாறியிருந்தான் ரகுவீர். ஜானகிக்கு அவன் முகத்தைப் பார்க்கவும் சிரிப்புத் தாங்கவில்லை. சாப்பிட்டு முடித்திருந்த அவன் முன்னால் சென்று, முகத்தைக் கையில் பிடித்து, சேலை முந்தானையால் வாயைத் துடைத்து விட்டாள்.

"வீரூஜி, வீரூஜி!!!" என அழைத்துச் சிரித்து விட்டு நெற்றியில் முட்டினாள். "உங்க கிட்ட சொல்றதுக்கு நேரம் வராமலா போய்விடும், அப்பக் கேட்டுகுங்க." எனக் கண்களில் காதலைத் தேக்கி மோகப் புன்னகை புரிந்தாள், ரகுவீர் அதில் தூண்டப்பட்டவன், கதவு பூட்டப் படாததை மறந்து, இதழ் கவிதையில் இறங்கி இருந்தான். 

அமுதனும், மயூரியும் சாப்பிட்டு முடித்து ரகுவீரை பார்க்க வந்தனர். மயூரி முதலில் அவர்கள் ஏகாந்த நிலைக் கண்டு அதிர்ந்து அவசரமாகத் திரும்பினாள். பின்னால் வந்த அமுதன் மேல் மோதி விழப் போனாள், அவளை லாவகமாக இடையோடு பிடித்து இறுக்கினான் அமுதன்.

 "அமன் விடுங்க, பையா இருக்காங்க." என்றாள் மயூரி. அவளை இழுத்துக் கொண்டு கதவைச் சத்தம் வராமல் சாத்திச் சென்றவன், அவளை மற்றொரு மறைவில் அணைத்து முத்தமிட்டான். சிவகுரு வரும் சத்தம் கேட்கவும் அவசரமாக விலகினர். 

நாட்கள் கடந்தன. ப்ரீத்தோ பல்லா ஆண்டி ஒருமுறை தனக்குப் போட்ட மருந்தை நினைவு கூர்ந்து அவருக்குப் போன் செய்தாள் ஜானகி. பல்லாஜி தான் எடுத்தார், ஜானகி சொன்னதைக் கேட்ட பல்லாஜி, "புத்தரு, பேட்டாஜியை மாட்டையும் அடக்க வச்சிட்டியா சங்கா ஹை, சங்கா." எனப் பாராட்டியவர், ப்ரீத்தோவிடம் கொடுக்க அவர் பக்குவம் சொன்னார். ஜெய், ஹர்லின், சிம்மி பிங்கியை விசாரித்து விட்டுப் போனை வைத்தாள்.

 அவர்கள் பக்குவத்தையும் சேர்த்துக் காயத்தில் போட சீக்கிரம் ஆறியது. ஜானகி ரகுவீரிடம் இழைந்தாள். நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக அவர்கள் காதல் வளர்ந்தது. காயம் தோல் மேவியது. தழும்பு இல்லாமல் இருக்கவும் வைத்தியம் செய்தாள். அப்பத்தாவும், பேத்தியும், மருந்து, கசாயம், நல்லது கெட்டது என யோசனையிலும் நெருங்கி இருந்தனர்.

ரகுவீர், ஜானகி மாடி அறைக்கு மாறி இருந்தனர். மீண்டும் அவன் கை வளைவில் தூக்கம் என்று இருந்தாலும், அவர்கள் அன்யோன்யத்தில் ஏதோ குறை இருப்பதாக முழுமை பெறாதது தவிப்பாக இருந்தது ஜானகிக்கு.

 ஜானகிக்காக, மாத்திரைகளை நிறுத்தி இருந்தான் ரகுவீர். ஆழமான காயத்தின் தழும்பைத் தவிர மற்றவை ஆறி இருந்தன. ஜானகியின் கைப் பக்குவத்தில் கொஞ்சம் வெயிட் ஏறியது போல் இருக்கவும், உடற்பயிற்சியை ஆரம்பித்து விட்டான் ரகுவீர். மாலையில் இருவருமாக ஷட்டில் விளையாடினர். அவர்கள் வீடே பார்க் மாதிரி இருக்க, வீடு ரிசார்ட் எனச் சுற்றி வலம் வந்து பொழுது போனது.

 

ஜானகி ஊருக்குக் கிளம்பப் பேக்கிங் ஆரம்பித்து விட்டாள். இந்த முறை செல்வதே சரியான முறையில் அவளது விதாயி. சிவகுரு மகளின் பிரிவை நினைத்துக் கலங்க ஆரம்பித்தார். ரகுவீரோடு ராகினி அமர்ந்து பேசும் நேரமெல்லாம், மகளோடு ஆசை தீரப் பேசிக் கொள்வார்.

 ராகினி, சிவகுருவிடம், "சிவா, வீரூவையும், ஜானியையும் ஒருமுறை மீனாட்சி அம்மன் கோவிலுக்குக் கூட்டிட்டுப் போவோம். இவங்க எல்லாரும் போன போதும் போகலையே , நான் வேண்டிக்கிட்டேன் ஊருக்கு அனுப்பும் முன்னே கூட்டிட்டு போவோம்." என்றார்.

"சரிம்மா, நீயும் ஜானுக்கிட்ட சகஜமா இருவேன், இந்தா ஊருக்குப் போயிடுவாள், ராத்தோட் பஹூவாகத்தான் இனிமேல் வருவாள். நீ ஏன் அவகிட்ட அப்படி நடந்துக்கிற?" என்றார் சிவகுரு.

"நானும் அவளைத் தாங்குனா, இப்ப கிளம்ப மாட்டாள் சிவு. ஷாதி முடிந்தால் புருஷன் வீட்டில் எல்லாம் பார்க்கனுமே, என்ன தான் என் பிறந்த வீடா இருந்தாலும், பாபிஷாவுக்கு அவங்க பஹூவை வச்சுக்கனும்னு ஆசை இருக்குமே. வீரூ தான் மூத்த வாரிசு, அவன் வம்சம் வளரனும், இவள் இப்படியே இருந்தால் எ

களஞ்சியம்
72-வைத்தியம்  

 

காளையை அடக்கிய வீரனாக  ஜானகியின் ரகுவீரன், தன் மனைவியைத் தாக்க வந்த காளையைத் தானே முன் சென்று எதிர் கொண்டான். இரண்டு காளைக்கும் பிரச்சினை ஒன்று தான். நிஜக் காளை எகிறியது. ஆறாம் அறிவு இருப்பதனால் ரகுவீர், காதலோடு பொறுமையாகக் கையாள்கிறான்.

 இவ்வளவு போராட்டமும் ஜானகியின் மனநிலையைக் கொண்டே செய்து வரும் ரகுவீருக்கு அவளது, ஒரு சொல் மனதைத் தைத்தது. அவள் மேல் கொண்ட வானளாவிய காதலால் அடி மட்டம் வரை இறங்கி அவளுக்கானதை செய்வான். ஏதேனும், செயலோ வார்த்தையோ தவறாகிப் போனால் அதை அவளுக்கு உணர்த்தாமலும் ஓய மாட்டான். இன்றும் அப்படித்தான் அவள் சொன்ன யூஸ்லெஸ் வார்த்தைக்காக  கையை நீட்டி தன்னோடு வருவதைத் தடுத்தான். அமுதன், மயூரி கெஸ்ட் ரூம் அழைத்துச் சென்று படுக்க வைத்தனர்.

 

"அமுதன், ஜானு மேலே போனா போய்ப் பார், எனக்கு இப்படி ஆச்சுன்னு, தன்னையே ஏதாவது ஹேர்ட் பண்ணிக்குவா. கோ ஃபாஸ்ட்." என்றான். மயூரியை அங்கு நிறுத்தி விட்டு அமுதன் ஜானகி ரூமுக்கு விரைந்தான். 

கதவை அடைக்கவில்லை அவள், 'என்னால் தான் வீரூஜிக்கு எப்பவுமே பிரச்சினை. என்னால் தான்' எனப் புலம்பிக் கொட்டிருந்தவள், ஏதாவது கையில் கிடைக்குமா எனத் தேடிக் கொண்டிருந்த நேரம் அமுதன் வந்து விட்டான்.

"ஜானும்மா என்னடா தேடுற?" என்றான் அமுதன். "அண்ணா, நான் எங்கையாவது கண் காணாமல் போயிடுறேன். நீ வீரூஜி கிட்ட சொல்லாத. நான் இருந்தால், என்னைக் காப்பாற்ற ஏதாவது இழுத்து விட்டுக்கிறாங்க. நான் மும்பை போயிருக்கவே கூடாது. மாதாஜியை சேர்க்கும் வேலையை மட்டும் பார்த்து இருக்கலாம். வீரூஜி மனசையும் கலைச்சுட்டேன். அண்ணா யாருக்கும் தெரியாமல் எங்கையாவது கொண்டி விடு. என் கூட இருந்தால் அவங்களுக்குப் பிரச்சினை தான். நான் யூஸ்லெஸ் தான்." எனக் கண்ணீர் விட்டாள் ஜானகி.

அமுதன் பொறுமையாக அவளைப் பேசவிட்டுக் கேட்டான். அவளை அணைத்து ஆறுதல் செய்தவன், "ஜானு நீ இல்லைனா தான், அவங்களுக்குப் பிரச்சனை. எவ்வளவு பெரிய ஆர்டர் பிடித்துக் கொடுத்த, கம்பெனி ஹேக் பண்ணாமல் காப்பாற்றின. அதன் விளைவு தானே ரெனாவத் முதலில் உன்னை அட்டாக் பண்ணான். பிறகு கிட்னாப் பண்ணான். 

வேலைக்கு வந்தவள் நம்மாள இப்படிக் காயம்பட்டாளேன்னு முதலில் இருந்திருக்குமே, நீ கிட்னாப் ஆன போது என்ன செய்தாங்க யோசி, இது மாதிரி நம்மை ஹேர்ட் பண்ணிக்காம, காயம் பட்ட அத்தானைக் கவனிக்கலாம் . அவங்களுக்கு நீ தான் வேண்டும். மயூ என்ன தான் கூட இருந்தாலும் உன்னைத் தான் தேடுறாங்க." என்றான் அமுதன்.

"நீதான் சொல்ற, நான் கூடப் போனதுக்கு, கை நீட்டி தடுத்துட்டுப் போறாங்கப் பார்." என்றாள் அழுகையோடு.

"நீ பேசினதுக்கு அப்படிப் போறாங்க. இப்ப எல்லாம் கோபப் படக் கூடாது. இதே மாதிரி நீ இருந்தப்ப, நீ கல்யாணம் வேண்டாம்னு சொன்னப்பவும், அவங்க கேட்டாங்களா? இல்லையே, அத்தான் கிட்ட உனக்குத் தான் முழு உரிமை. நான் தான் செய்வேன்னு பிடிவாதம் செய். உனக்குத் தெரியாதா என்ன?" என்றான் அமுதன்.

"ஆமாம், சாப்பிட்டு மாத்திரை போடனும். இரு நான் போய்ப் பார்க்கிறேன்." எனக் கீழே சென்றாள். அமுதன், 'கடவுளே இவளைச் சீக்கிரம் நல்லபடியா மாற்று.' என வேண்டினான் அமுதன்.

 

ஜானகி கீழே இறங்கி வந்து அவன் அறையை அடைந்த போது, கட்டிலில் ஒருக்களித்துப் படுத்திருந்தான். வேறு யாரும் இல்லை. உள்ளே நுழைந்தவள், கட்டிலில் போய் உட்கார்ந்தாள். உடம்பில் முன்னும், பின்னும் கீறல்களும், மூன்று பெரும் காயங்களும் இருந்தது. அவனோடு ஒட்டி அமர்ந்தவள், கண்களில் நீர் திரையிட தன் கையால் மெல்ல வருடினாள். நல்ல திடகாத்திரமான மேனியில் விழுப் புண்களாக, போருக்குச் சென்று வந்த வீரனாக, ரகுவீர் படுத்திருந்தான். 

ஜானகி, நேற்று அவன் மேனியில் பரவிய தன் கைகள் எவ்வளவு இன்பத்தைத் தந்தது. இப்போது அதே உடலும் வருடலும் இவ்வளவு துன்பத்தைத் தருகிறதே என நினைத்து அழுதாள். அவள் ஸ்பரிசம் உணர்ந்த ரகுவீர், காணாதது போல் படுத்திருந்தான். நகர்ந்து இன்னும் முன்னால் அமர்ந்தவள், அவன் காயங்களைக் கணக்கெடுத்து ஆராய்ந்தாள். ஒவ்வொன்றாகப் பூவைத் தொடுவது போல் வருடித் தொட்டாள். அவன் முகத்தைப் பார்த்தவள், கலைந்து கிடந்த அவனது சிகையைக் கைகளால் வாரினாள். நெற்றியில் இதழ் பதிக்கையில் இவள் கண்ணீர் அவன் கன்னத்தில் வழிந்தது. அப்போது தான் விழிப்பது போல் விழித்த ரகுவீர், அவளைப் பார்த்து, மீண்டும் கண்ணை மூடிப் படுத்துக் கொண்டான். அவளுக்குச் சங்கடமாக இருந்தது.

முகத்தைத் தடவியவள், "வீரூஜி  டிபன் எடுத்துட்டு வர்றேன். சாப்பிட்டு மாத்திரை போடுங்க." என்றாள். அவன் பதிலேதும் சொல்லவில்லை.

ஐந்து நிமிடத்தில் தட்டை நிரப்பிக் கொண்டு வந்தாள். டீப் பாய் மீது வைத்தவள், "வீரூஜி எந்திரிங்க." என எழுப்பி விட்டாள். "தூங்க விடுடி." என்றான் சலிப்பாக.

"இதை மட்டும் சாப்பிடுங்கள், மாத்திரை போட்டுத் தூங்கலாம்." என அவன் தட்டுக்காகக் கையை நீட்ட, "இருங்க நான் தரேன்." எனச் சப்பாத்தியைப் பிய்த்து ஊட்டினாள்.

ராகினி உள்ளே வந்தார், "வீரூ பாபிஷா கிட்ட சொல்லிட்டேன். உன்னைப் பார்க்கனுமாம், வீடியோ கால் பண்ணச் சொன்னார்கள். நீ சாப்பிட்ட பிறகு போடுறேன்." என்றார்.

"புவாஷா, மாஷாகிட்ட எதுக்குச் சொன்னீங்க. டென்ஷன் ஆவாங்க." என்றான்."அதுக்காகச் சொல்லாமல் இருக்க முடியுமா?" என்றார். ஜானகி அமைதியாக ஊட்டிக் கொண்டிருந்தாள்.

 "ஜானகி தோப்பு வீட்டுக்கு வீரூவை எதுக்குக் கூட்டிட்டுப் போன, அங்க என்ன வசதி இருக்கு. உன் அதிகபிரங்கித்தனம் தான். சின்னதிலிருந்து இன்னும் மாறலை. உங்கள் அப்பாக்கு மகளை ஒன்னு சொல்லிடக் கூடாது." எனக் கடிந்தார் ராகினி. ஜானகி அழுகையைக் கட்டுப்படுத்தி, மௌனமாக அவனுக்கு ஊட்டினாள்.

 

"புவாஷா, போதும் எனக்கு முன்னால் என் லுகாயியைத் திட்டாதீங்க. இந்த மாடு முட்டினது ஒன்றைத் தவிர அருமையான அனுபவம். என்னை நல்லா பார்த்துக்கிட்டாள் என் லுகாயி!" என அவளைப் பார்த்துக் கொண்டே சொன்னான் . ஒரு வார்த்தையும் பேசாமல், தட்டை எடுத்துக்கொண்டு கிளம்பினாள் ஜானகி.

"புவாஷா, நிஜமாகவே அவள் மேல் எந்தத் தப்பும் இல்லை. அந்த மாடுஅவளை முட்ட வந்தது . நான் முன்னால் போனேன், நான் சாமாளிக்கிறதுகுள்ளயே இவ்வளவு காயம், அவளைனா குடலை உருவி போட்டிருக்கும்." எனச் சொல்லும் போதே அதன் கற்பனையில் அவனுக்குப் பதறியது. தொடர்ந்து "சும்மாவே அவள் படுற கஷ்டம் பத்தாதா, அவளே குற்ற உணர்ச்சியில் இருக்கா நீங்க எதுவும் சொல்லாதீங்க ப்ளீஸ்." என்றான் ரகுவீர்.

 "வீரூ, நீயும் உங்கள் பூபாஷாவோட சேர்ந்து அவளைத் தூக்கி வைத்துக் கொண்டாடு. இப்ப பாபிஷாவுக்கு என்ன பதில் சொல்லுவேன். உன்னையும் அவளை மாதிரி மாத்திடுவாள்." எனச் சலித்துக் கொண்டார் ராகினி.

அவன் சட்டையை அணிந்து கொண்டு வீடியோ கால் போட்டான். "ரகுவி என்ன ஆச்சு, காயம் பலமா?" எனப் பதறினார் ஷப்னம்.

"மாஷா, மைம் டீக் ஹூங்" பதறாதீங்க. என்றான். "ஜானிக்கு ஒண்ணும் காயமில்லையே?" என்றார் ஷப்னம்.

"நான் முன்னே போகலைனா உங்கள் பஹூராணி குடலை உருவியிருக்கும் அந்த மாடு!" என்றான் ரகுவீர்.

"உனக்குச் சோட் (காயம்)அதிகமா காட்டு." என்றார், கை சரட்டைத் தூக்கி, சில கீறல்களை மட்டும் காட்டினான். "கவனமா இரு ரகுவி, ஜானி எங்க?" என்றார்.

 "இப்ப தான் எனக்குச் சாப்பாடு ஊட்டி விட்டுட்டுப் போறா, மாஷாக்கு நான் என்ன பதில் சொல்லுவேனென்று ஒரே ஃபீலிங். உங்ககிட்ட எதுவும் ஆகாமல் பார்த்துக்குவேன்னு சொன்னாலாம். ஒரே புலம்பல்." என்றான் ரகுவீர்.

 "நீயாவது ஜவான் லட்கா, தாங்கிக்குவ, பெண்கள் உடம்பு ரொம்ப நாசூக்கு ரகுவி. சரி நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்னு சொல்லு, இப்ப பார்த்தால் அழுவாள். என்னால் என் பஹூவை அழவைத்துப் பார்க்க முடியாது." என்றார் ஷப்னம்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ராகினி, "பாபிஷா, நீங்களும் அவளுக்குச் சப்போர்ட்டா. போச்சு போங்க." என்றார்.

 

"ராகினி நீ எதுக்குச் சலிச்சுக்கிற, எங்கள் சாஸ், பஹூ ரிஸ்தாக்குள்ள நீ தலையிடாத. என் பஹூவை எதுவும் சொல்லக் கூடாது. ரகுவியை அவளை விட யாரும் இவ்வளவு நல்லா பார்த்துக்க முடியாது. அவன் முகத்தைப் பார்த்தே அவனுக்குத் தேவையானதை செய்திடுவாள்." எனச் சில்லாகித்தார்.

தாதிஷா, தாதாஷா, ராஜேன் மூவரும் ரகுவீரை விசாரித்தனர். ராகினி, "அப்பா மொத்தக் குடும்பமும் அவளை ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டேங்கிறீங்க. நான் அவளையே அனுப்பி வைக்கிறேன்." என வாய் வார்த்தையாகத் திட்டினாலும் மகளின் வாழ்வு குறித்த அக்கறை  அவரை அப்படிப் பேச வைத்தது.

ஜானகி அரை மணி நேரம் சென்றே வந்தாள். அவள் முகத்தைக் கூர்ந்து கவனித்த ரகுவீருக்கு, அவள் அழுது இருப்பது தெரிந்தது. மாத்திரை எடுத்து வந்து தண்ணீரை நீட்டினாள். பேசாமல் வாங்கிப் போட்டுக் கொண்டான். கதவை அடைத்து விட்டு வந்தாள் ஜானகி. "சட்டையைக் கழட்டுங்க, திரும்புங்க வீரூஜி, ஆயின்மெண்ட் போட்டு விடுறேன்." என்றாள்.

 "உனக்கு எதுக்குச் சிரமம். நானே போட்டுக்கிறேன்." என்றான் ரகுவீர்.

"முன்னாடி நீங்க போடுவீங்க, பின்னால் முதுகில் எப்படிப் போடுவீங்கலாம், நான் போட்டு விடுறேன்." என்றாள்.

"அப்ப நீ யூஸ்ஃபுல் தானே, எதுக்கு இப்படிப் பேசுற. காளை மாடு என்னைக் குத்தினது உனக்கு வேதனை இல்லையா, உனக்கு ஏதாவதுன்னா எனக்கு வேதனை இல்லையா. நாம இரண்டு பேரும் ஒன்னு தான். இனிமே இப்படிப் பேசாத." என்றான் ரகுவீர்.

மௌனமாக நின்ற ஜானகி, அவனுக்குச் சட்டையைக் கழட்ட முடியாமல் கஷ்டப் படவும் அவளே கழட்டி விட்டவள்,  "இப்ப எதற்குச் சட்டையைப் போட்டிங்க?" எனக் குறை பட்டாள் .

"மாஷாவோட வீடியோ சாட்டிங்!" என்றான். அவள் முகத்தில் பதட்டம் தெரிந்தது. அவள் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு, "அவங்க பஹூவை எதுவும் சொல்லக்கூடாதாம். புவாஷாவை சத்தம் போட்டாங்க. அவங்க லட்கா இரஜஸ்தானி ஷேர்ராம், இந்தக் காயம் எல்லாம் ஒரு விசயமே இல்லையாம். பஹூராணியைத் தான் பக்குவமா பார்த்துக்கனுமாம்." என்றான்.

 ஜானகி ஒரு சலனமும் இன்றி, ஆயின்மெண்டை எடுத்தாள். திடீரென நினைவு வந்தவனாக, "நீ சாப்பிட்டியா? சாப்பிட்டு வந்து மருந்து போடு, கையில் வாடை அடிக்கும்." என்றான் ரகுவீர். 

"நான் சாப்டேன், நீங்கத் திரும்புங்க." என்றாள். அதே நேரம் கதவைத் தட்டிய தெய்வா, "ஜானு சாப்பிட வா." என்றார். அவள் கதவைத் திறந்து, மெல்லமாக ஏதோ சொல்லி அனுப்பி விட்டு வந்தாள். ரகுவீருக்குத் தமிழ் புரியாததால், தெய்வா எதற்கு அழைத்தார் என்பது புரியவில்லை. "பால் கொண்டு வரவான்னு கேட்டாங்க." என சமாளித்தாள் .

அவனைச் சேரில் உட்காரவைத்து, சுற்றிச் சுற்றி வந்து ஆயின்மெண்ட் போட்டு விட்டாள். "வீரூஜி காலில் எங்கேயாவது இருக்கா?" எனக் கேட்டாள், இல்லை என முழங்காலுக்குக் கீழே மட்டும் காட்டினான். 

இருவருக்குமிடையே ஒரு இறுக்கம் இருந்தது. "கொஞ்சம் நேரம் கழிச்சு படுங்க, ஆயின்மெண்ட் காய்ந்திடும்." எனச் சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறப் போனாள், அவள் கையைப் பிடித்து நிறுத்திய ரகுவீர் அவளைக் கட்டிலில் அமர்த்தி, சேரில் இருந்தபடி அவள் இடையைக் கட்டிக் கொண்டு மடியில் தலை வைத்துக் கொண்டான்.

அவளும் மௌனமாகவே தலையைக் கோதிவிட்டாள். ரகுவீருக்கு வலியை மறந்த நிம்மதி வந்தது. அவன் குனிந்திருக்க, காயம் இன்னும் அருகில் தெரிந்தது. ஜானகிக்குத் தான் வேதனை அதிகமானது. அவன் தலை மேல், தன் தலையைச் சாய்த்துக் கொண்ட ஜானகி, "ரொம்ப வலிக்குதா வீரூஜி?" என்றாள். "உன் மடியில் இருக்கும் போது எதுவுமே தெரியலை." என்றான்.

"ம்ப்ச், சும்மா ஃபில்மியா பேசாதீங்க. வலிக்குதுன்னா, நாளைக்கு மதுரையில் வேற ஹாஸ்பிடலுக்குப் போகலாம்." என்றாள்.

மீண்டும் கதவு தட்டப்பட்டது, "ஜானி சாப்பிட வாடி!" என இந்த முறை மஞ்சரி ஹிந்தியில் அழைத்தாள். ரகுவீர் அவள் மடியிலிருந்து விருட்டென்று எழுந்தான். அவள் வயிற்றை அமுக்கிப் பார்த்தான். அது ஒட்டிக் கிடந்தது. மதியமும் சரியாகச் சாப்பிடவில்லை.

"எதுக்குச் சாப்பிட்டேன்னு பொய் சொன்ன, அப்ப அத்தையும் அதுக்குத் தான் கூப்பிட்டாங்களா?" எனகடிந்தான். "எனக்குப் பசிக்கலை, என்னால் சாப்பிடவும் முடியலை!" என்றாள் ஜானகி.

"நீ முதலில் எந்திரி, நீ சாப்பிட்டு தெம்பா இருந்தா தானே என்னைப் பார்க்க முடியும். மயக்கம் போட்டு விழுந்தா என்னால தூக்கிறதுக்குக் கூட முடியாது." என்றான்.

"எனக்குக் கண் முன்னாடி, அந்தக் காளை உங்களைத் தாக்கினது தான் திரும்பத் திரும்பப் படமா ஓடுது." என அழுதாள். அவளைத் தோளோடு கை போட்டு அணைக்க முயன்றான், கையைத் தூக்க முடியாமல் வலித்தது. அவன் வலியும் பொறுக்க மாட்டாமல் ஜானகி அழுதாள்.

 

"கதவைத் திற நானும் வர்றேன்." என்றபடி அவளோடு நடந்தான். டைனிங்கில் வந்து அமர்ந்தான். ஹாலில் உட்காரச் சொல்லியும் கேட்டான் இல்லை. "நீ சாப்பிடு." என்றவன். தெய்வாவை அழைத்து அவளுக்கு ஊட்டிவிடச் சொன்னான்.

மருமகன், மகள் மேல் வைத்திருக்கும் பாசத்தில் நெகிழ்ந்தவர். அவளுக்குப் பிடித்த உணவைத் தட்டில் நிரப்பி ஊட்டிவிட்டார். இளையவர்கள் கூடிவிட்டனர்.

"ஜீஜூஷா, இருந்தாலும், உங்கள் லுகாயி பேச்சுக்கு இப்படி ஆடக்கூடாது. அவள் காளை மாட்டை அடக்க விளையாட்டா சொன்னாள். அதுக்காக இப்படியா?" என வாரினாள் மஞ்சரி.

"அந்த மருதை யாராலையும் அடக்க முடியாது, எந்த ஜல்லிக்கட்டுக்குப் போனாலும் அது தான் ஜெயிக்கும், அதையே அடக்கிட்டீங்களே!" என்றான் பாலன்.

"போட்டிக்குன்னு போயிருந்தால், நானும் பேக் அடிச்சிருப்பேன், ஆனால் அது ஜானுவை முட்ட வந்தது. அது வந்த ஸ்பீடுக்கு, இவளை அட்டாக் பண்ணியிருந்தால், குடலை உருவியிருக்கும்." என்றான் ரகுவீர். அவன் சொல்லவும் வீட்டினர் தீவிரம் உணர்ந்தனர்.

"நான் சமாளிசிக்கிட்டு தான் இருந்தேன், பண்ணைக்காரன் கயிற்றைப் போட்டான், அதுக்குள்ள ப்ரோ வந்துட்டார். அதனால் தப்பிச்சோம்." என்றான்.

"ஜானகி பார்த்துட்டு சும்மா இருந்திருக்க மாட்டாளே?" என்றாள் மஞ்சரி.

"பண்ணை வேலை செய்யும் லேடி இறுக்கமா இவளை பிடிச்சுக்கிச்சு. அந்தப் பெண்ணுக்கு நன்றி சொல்லனும், இல்லைனா இவளும் காயத்தோட கிடந்திருப்பாள். பாலன் அவங்க இரண்டு பேருக்கும், துணி மணி, பணம் எல்லாம் வைத்து எங்க சார்பில் கொடுக்கனும்." என்றான் ரகுவீர்.

"கட்டாயம் செய்வோம் அத்தான், நானே போய்க் கொடுத்துட்டு வந்திடுறேன்." என்றான் பாலன்.

சிவகுரு, இவர்கள் இருந்த இடத்திற்கு வந்தவர், "மாப்பிள்ளை நாளைக்கு மதுரையில் ஹாஸ்பிடலில் அப்பாயின்மெண்ட் வாங்கிட்டேன். காலையில் போகலாம்." என்றார்.

"சரி பூஃபாஷா, ஐ யம் ஆல்ரைட், உங்கள் திருப்திக்காக வர்றேன்." என்றான். மகளிடம் வந்தவர், "இவ்வளவு நேரம் சாப்பிடாமல் என்ன செய்தே, நீ தெம்பா இருந்தால் தானே மாப்பிள்ளையைப் பார்க்கலாம்." எனத் தலையைத் தடவினார்.

"பய்யா மாட்டு வண்டி ஓட்டுனீங்களாம், அமுதன் சொன்னார்." என்றாள் மயூரி. "ஆமாம்டா. ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கா இருந்தது, ரேக்ளா வண்டி ஓட்டுனுது. கிணற்றில் நீச்சல் அடிச்சு குளிச்சோம்." என்றான் ரகுவீர்.

 "ஹா!!!" என வாயைப் பிளந்தனர் மயூரியும், மஞ்சரியும். "ஜானிக்குக் கிணற்றில் குளிக்கத் தெரியுமா, அதே கிணறா?" எனக் கேட்டனர்.

"அதே கிணறு தான், மீன் மாதிரி நீந்துறா என் லுகாயி." என்றான் ரகுவீர்.

"நைட் அங்கேயே தான் படுத்தீங்களா? " என்றான் அமுதன்.

"ஆமாம், கட்டில் வெளியே போட்டு, கொசுவலை கட்டி. கிட்ஸ் கேம் மாதிரி இருந்தது. அமுதன், உங்கள் மேரேஜ் முடியவும், நோட் த பாயிண்ட் ஷாதி முடியவும், நீயும், மயூவும் அது மாதிரி தங்குங்கள். நல்லா இருக்கும்." என ஆலோசனை வழங்கினான் ரகுவீர்.

"உங்கள் கட்டளை எங்கள் பாக்கியம்" என்றான் அமுதன். மயூரிக்கு வெட்கம் வந்தது. "காலையில் சாப்பிட்டீங்களா இல்லையா?" என்றார் தெய்வா.

"அதெல்லாம், உங்கள் மகள் அருமையா, மண் சட்டியில், கறி கிரேவி, சப்பாத்தி வச்சு குடுத்திருக்கா." என்றான் பாலன்.

"சமத்தில்ல என் மகள், கறி சீக்கிரம் வெந்துடுச்சா?" எனக் கேட்டார் தெய்வா.

"பெரிய அத்தான், பார்த்து வாங்கி அனுப்புனாங்க அம்மா நல்லா இருந்துச்சு. சாப்பிட கை காயும் முன்னே காளை வந்திடுச்சு." என்றாள் ஜானகி. கடைசி வாய் சாப்பாட்டையும், கஷ்டப் பட்டு அப்போது தான் முடித்திருந்தாள் ஜானகி.

 "நைட் பால் வேண்டாம் அம்மா, அதைக் குடிச்சா, அடிச்சுப் போட்ட மாதிரி தூக்கம் வருது, அப்புறம் வீரூஜியை பார்க்க முடியாது." என்றாள் ஜானகி.

"நோ வே, அவள் இன்றைக்குக் கட்டாயம் பால் குடிக்கனும்." எனப் பிடிவாதம் பிடித்தான் ரகுவீர்.

 சண்முகம் அப்போது தான் வந்தார். சிவகாமி அப்பத்தா தண்ணீர் எடுக்க வந்தவரிடம், "ஏம்மா, முந்தி நான் ஜல்லிக்கட்டுக்கு போய்ட்டு வந்தப்ப ஏதோ மருந்து அரைச்சுப் போட்டீங்களே, அதைப் போடலாமே?" என்றார்.

 "குரு நாளைக்கு மதுரைக்குக் கூட்டிட்டுப் போறானாம், போய்க் காட்டிட்டு வரட்டும், நான் சொல்ற மூலிகை நம்ம தோட்டத்திலிருந்து எடுத்துட்டு வா, நாளைக்கு இராத்திரி போடலாம். ஆத்தா ஜானகி, என் கூட வா." என அழைத்துச் சென்றார். ரகுவீர் அவளிடம் ஏதாவது கூடக் குறைச் சொல்லிவிடுவாரோ எனக் கவலையாகப் பார்த்தான் ரகுவீர். சண்முகம் ரகுவீர் தோளைத் தொட்டவர், "ஒண்ணும் சொல்ல மாட்டாங்க மாப்பிள்ளை, கவலை படாதீங்க." என்றார்.

 ஜானகி அப்பத்தாவிடம், பேசிவிட்டு வரவும், தெய்வா அங்கிருந்த அனைவருக்கும் பால் கலந்து கொடுத்தார். ரகுவீர் ஜானகியும் பாலைக் குடித்து விட்டுப் படுக்கச் சென்றனர். கையில் நான்கு முழம் வேட்டியோடு வந்தாள் ஜானகி.

 கதவைத் தாழ் போட்டு வந்தவள், "வீரூஜி, அந்த ட்ரேக்கை கழட்டிட்டு இதைக் கட்டுங்கள்." என்றாள். 

"இதிலேயே நான் கம்ஃபர்டபிள், அது வேண்டாம்." என்றான்.

"உங்களுக்கு யோசனை சொல்லலை, இது ராணிஷா ஆர்டர். ராத்தோட்ஷா கேட்டுத்தான் ஆகனும்." என்றாள் ஜானகி. அவனருகே வந்தவள் ட்ரேக்கு மேலேயே வேஷ்டியை மேலே ஏற்றிக் கட்டினாள். அவளையே பார்த்திருந்த ரகுவீர், "இது எப்படிக் கத்துக்கிட்ட?" என்றான்.

"எங்கள் தாத்தா, அப்பாவுக்கெல்லாம், நான் தான் கட்டிவிடுவேன் உங்களுக்குத் தெரியாதா?" என்றாள் ஜானகி.

ரகுவீர் சிரித்துவிட்டான், "நீ செஞ்சாலும் செய்வ. யாரு ராணிஷா இல்ல!" என்றான்.

"மாதாஜி ஸ்கூல் ட்ராமாக்கு குட்டி பசங்களுக்குக் கட்டிவிடுவேன், ஷண்முகப்பா சொல்லித் தந்தாங்க." எனப் பேசியபடியே, வேட்டியைக் கட்டி விட்டு, ட்ரேக்கை மண்டியிட்டுக் கழட்டினாள்.

"ஏய் கூசுதுடி." எனக் கத்தினான். "சும்மா சீன் போடாதீங்க. பெட்டில் ஏறிப் படுங்க." எனப் படுக்கச் சொன்னாள்.  வேட்டியை விலக்கி காயம் இருக்கிறதா எனப் பார்க்க முயன்றாள்."ஹேய் 

ராணிஷா, உங்கள் ராத்தோட்ஷா இப்ப எதற்குமே தயாரில்லை, போனாபோகுது சின்னப் பிள்ளை மாதிரி அழுமூஞ்சியா இருக்கியேன்னு வேட்டிக் கட்ட ஓகே சொன்னேன்." என நேற்றைய ஜானகியின் வசனத்தை நகலெடுத்துப் ஜானகி கலகலவெனச் சிரித்தாள்.

"ஐயே, ஆசையைப் பார், உடம்பெல்லாம் ரணகளமா இருக்கு, இதுலையும் ஒரு கிளுகிளுப்பு." என வடிவேல் மாதிரி டயலாக் அடித்தாள்.

அவன் மறுத்தும் வேட்டியை விலக்கிப் பார்த்தவள், அதிர்ந்தாள். இடுப்புக்குக் கீழே தொடைப் பகுதிகளில் காயம் இருந்தது.

"கிழவி சரியாகத்தான் சொல்லியிருக்கு." எனத் தனக்கு தானே பேசியவள்.

பஞ்ஞை வைத்து டெட்டால் வைத்துத் துடைத்தவள், ஆயின்மெண்ட் போட வந்தாள். கொஞ்சம் கூச்சமும் நிறைய வலி வேதனையுமாக ரகுவீர் அவள் கைகளைப் பிடித்தான்.

 "வேண்டாம்டி!" என்றவனை ஜானகியின் ஒரு பார்வை ஒத்துக் கொள்ள வைத்தது. அந்தப் பார்வையில், இந்தக் காயத்தை ஏன் மறைத்தாய் என்ற கோபமும், எனக்காகத் தானே மறைத்தாய் என்ற பச்சாதாபமும், செய்தே ஆவேன் என்ற பிடிவாதம் எல்லாம் இருந்தது. மெல்ல ஆயின்மெண்ட்டைப் போட்டவள், "கொஞ்ச நேரம் ஆகட்டும், அதுக்குள்ள துணியை இழுத்து விடாதீங்க!" என்ற என்ற கட்டளை இட்டுக் கை கழுவப் போனாள். 

ரகுவீருக்கு ஜானகியை நினைத்து ஆச்சரியமாக இருந்தது, அவன் சட்டை மாற்றும் போது கூட அவ்விடத்தில் இல்லாமல் அகன்று விடுவாள். ஆனால் இன்று அவனை அரை நிர்வாணமாக நிறுத்தியே அவனது தேவைகளைக் கவனிக்கிறாள். பழைய ஜானகி திரும்புகிறாள் எனவும் நினைக்க இயலாமல் இருந்தான். 

இவனது யோசனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்தவள், அவனுக்கு அடுத்து சிறிது இடைவெளி விட்டு இவனை நோக்கி ஒருக்களித்துப் படுத்தாள். மற்றொரு மெல்லிய அவளுடைய வாயில் சேலையை அவனுக்குப் போர்த்தி விட்டாள். மாத்திரை வேகத்தில் நித்திரைக்குள் பிரவேசித்தனர் இருவரும்.

காலையில் எழுந்த பின்னர், அவனைத் தொட்டுப் பார்த்துக் காய்ச்சல் எதுவும் இல்லை என்ற பின்னர், டவல்பாத் எடுத்து விட்டாள். ரகுவீருக்கு தான் மயக்கம் போடாத குறை. தன் லுகாயி தானா என அவ்வப்போது கிள்ளிக் கொண்டான்.

"ஜானும்மா, என்னடி இவ்வளவு சேஞ்ச், சட்டை மாத்திரதைக் கூடப் பார்க்க மாட்ட!" என வம்பிழுத்தான். "ஏன் உங்களுக்குப் பிடிக்கலைனா சொல்லுங்க, வேற ஆளை ஏற்பாடு பண்றேன்." என்றாள்.

"ஆமாம் டி ஒரு யங் நர்ஸா பார்த்துப் போடு." என்றான். நெற்றிக் கண் திறக்கும் ஒரு பார்வை பார்த்தவள், அருகே வந்து அவன் கன்னத்தைக் கிள்ளினாள்.

"ராத்தோட்ஷாவுக்கு ராணிஷா நர்ஸ் வேலை பார்த்தால் பத்தாதோ, வேற ஆள் வேணுமாக்கும். யாரையாவது என் புருஷனை தொடவிட்டுட்டு நான் வேடிக்கை பார்ப்பேனா, கொன்னுடுவேன்." என்றாள்.

"வலிக்குது விடுடி மிர்ச்சி!" எனக் கத்தினான். வேறு ஒரு காட்டன் வேட்டியும், கதர் சட்டையும் போட்டு விட்டாள்.

"ஏய் வேஷ்டி அவிழ்ந்திடாதே, மானப்பிரச்சனைடி." என்றான்.

"ஷண்முகப்பாவை வரச் சொல்கிறேன், எனும் போதே கதவைத் தட்டி உள்ளே வந்தவர். "என்னடா, மாப்பிள்ளையைத் தமிழனா மாத்திட்டியா?" என்றார். ரகுவீர் வேஷ்டி கட்டை சரி செய்தார். "திரும்ப வரும் வரை ஒரு பிரச்சனையும் இல்லை போய்ட்டு வாங்க." என்றார்.

 ரகுவீரை முன்சீட்டில் உட்கார வைத்து சிவகுருவே ஓட்டினார். ஜானகி ராகினி பின்னால் ஏறிக் கொண்டனர். பயணம் முழுவதும் மாமனார் மருமகன் பேசிக் கொண்டே வந்தனர். ராகினியிடம் ஜானகி அதிகம் பேசாமல் அமைதியாக வந்தாள்.

ஒரு தனியார் மருத்துவமனையில் அவனை முழுப் பரிசோதனை செய்தனர். வெள்ளை வேட்டி சட்டையும், அவனுடைய கூலர்ஸ்ம், பணக்காரச் செழுமையும் அவனுக்கு அடிப்பட்டதையும் தாண்டி, எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ஜானகிக்குத் தான் பொசுபொசுவென இருந்தது. 'இவனுக்கு வெள்ளை வேட்டி சட்டை போட்டே விட்டிருக்கக் கூடாது.' என மனதில் நினைத்தாள்.

அவளின் கைபிடியில் தான் ரகுவீர் நடந்தான், "கூல் பேபி, அவங்க பார்த்தால் என்ன என் மனதில் நீதான் இருக்க." என்றான். அனைத்து செக்கப்பும் முடித்து, டாக்டர் ஒன்றுமில்லை என்று சொன்ன பின்பு தான் ஜானகி நிம்மதி பெரும் மூச்சு விட்டாள்.

 சிவகுரு அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கே அவர் அறையில் அமரவைத்து, வாங்கி வந்த சாப்பாட்டை ஜானகி, ரகுவீருக்கு பிடித்த மாதிரி வைத்து ஊட்டினாள். கிளம்பும் போது, "அப்பா வீரூஜிக்கு வேஷ்டி சட்டை எடுக்கனும் ஏதாவது கடையில் நிறுத்துங்க." என்றாள். வழியிலிருந்த ப்ராண்டட் புகழ்பெற்ற கடையில் ஜானகி மட்டும் சென்று நான்கு செட் வெள்ளை வேட்டி சட்டை எடுத்து வந்தாள்.

 ரகுவீர் பின்னால் ஏறிக்கொண்டான். ராகினியை முன்னால் ஏற்றி விட்டு விட்டு, மனைவி தோளில் சாய்ந்து கொண்டான் ரகுவீர். சிறுமலை நோக்கிப் பயணித்தனர். இனி அடுத்தக் கட்டத்தை நோக்கிய அவர்களது பயணம் இனிமையாகச் செல்லட்டும்.

 

களஞ்சியம்
71-தோப்பு வீடு

 

அமுதன் தனது கட்டிட வேலை நடக்கும் இடத்தில் வேலை விசயமாக வந்தவன் தங்கையின் மனமாற்றத்தில் திருப்தி அடைந்தான். ரகுவீர் மனைவியின் கவனிப்பில் பூத்துப் போயிருந்தான். அமுதனைப் பார்க்கவும் உற்சாகம் கரை புரண்டது. "அத்தான் உங்கள் முகத்தில் சந்தோஷத்தைப் பார்க்கச் சந்தோஷமா இருக்கு." என்றான்.

 காலை உணவுக்குப் பின் அவனையும் அழைத்துக் கொண்டு ரகுவீருக்கு, மாட்டு வண்டி ஓட்டச் சொல்லிக் கொடுக்கக் கூட்டிச் சென்றனர். ரகுவீர் வண்டி மாடுடன் முதலில் பழகினான். மற்றவர் அதிசயமாகப் பார்த்தனர்.

 "ஹார்ஸ் ரைடிங் போவேன்." என்றான். ரேக்ளா வண்டி நீளம் குறைவாக இருவர் மட்டுமே அமரும் வண்ணம் இருந்தது. கயிற்றைப் பிடிக்கும் லாவகத்தைக் கற்றுக் கொடுத்தனர்.

 ஜானகி, அமுதனுக்குப் போன் செய்தாள். "வீரூஜி இப்ப தான் ஆயில் மசாஜ் எடுத்துருக்காங்க வெயிலில் அலையாமல் கூட்டிட்டவா சாய்ந்திரம் பார்த்துக்கலாம்." என்றாள்.

 ஒருமணி நேரத்தில் வந்தனர், ஜானகி அத்தான்மாரை முறைத்து நின்றாள். ரகுவீரை அழைத்து உள்ளே சென்றாள். சுந்தரவள்ளி மட்டன் சூப் கொடுத்தார். "வெயிலில் அலையாதீங்கத் தம்பி." என்றவர் மகன்களைத் திட்டினார்.

 "அத்தை நான் கிளம்புறேன்." என விடை பெற்றான் அமுதன். ரகுவீருக்குத் தூக்கம் அசத்தியது. ரூமிற்கு வந்தவன் படுத்துவிட்டான்.

 "ஜானகி நீ சொன்னது எல்லாம் ரெடி." என்றான் சங்கரப் பாண்டி. அத்தை என்னவென்று வினவினார், "அத்தை இன்னைக்கு நைட் தோப்பு வீட்டில் படுத்துக்குறோம். நீங்க தான் என்னை விடவே மாட்டிங்களே, இப்ப தான் வீரூஜி இருக்காங்களே." என்றாள் ஜானகி.

 "கொசுக் கடிக்கும் குளிரும்." என்றார். "அதுக்கு ஏற்பாடு பண்ணியாச்சு." என்றாள் ஜானகி. மதியம் உணவுக்கு வந்த ரகுவீரிடம், "வீரூஜி நீங்க பைக் ஓட்டி நான் பார்த்ததே இல்லையே?" என்றாள்.

"காலேஜ் டேசில் ஓட்டினது. ஹாஸ்டலில் வச்சிருந்தேன். மும்பையில் கார் தான். பாண்டியா  ப்ரோவோட பைக்கில் இன்னைக்குப் போவோம்." என்றான்.

 மாலையில் தோப்பு வீட்டிற்கு அமிர்தா, தேனு மானு பாண்டி ப்ரதர்ஸ் என இவர்கள் காரை சங்கரப்  பாண்டியிடம் கொடுத்து விட்டு, அவன் பைக்கில் ஜானகியை உட்கார வைத்து ஓட்டி வந்தான், அவனோடு இரண்டு புறமும் கால் போட்டு உட்கார்ந்து, கட்டிக்கொண்டாள் ஜானகி.

 "ஜானும்மா கீப் த டிஸ்டன்ஸ், ரொம்ப நாள் கழிச்சு டூவீலர் ஓட்டுறேன். டிஸ்டர்ப் பண்ணாதே." என்றான்.

 தோப்பு வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். தென்னந்தோப்பு, மாந்தோப்பு, ஒரு புறம் நெல் வயல் என இருந்தது. நடுவே, ஒரு ஓட்டு வீடு முன்னால், நெல் அடிக்கும் சிமெண்ட் கலம், வைக்கோல் படைப்பு, சற்றுத் தூரத்தில் மற்றொரு பண்ணையாள் தங்கும் வீடு, மாட்டுக் கொட்டமும் இருந்தது.

 அங்கு வரவும் அமிர்தா, ஜானகிக்கு மலரும் நினைவுகளாய் சிறு வயது ஞாபகம் வந்தது. ரகுவீரிடம் இடத்தைக் காட்டி, அந்தக் காட்சியை விளக்கினர். தேனு, "சித்தி நீ இவ்வளவு குறும்பு பண்ணுவியா?" என்றது.

"உங்கள் அத்தையும் சேர்ந்து தான் சேட்டை செய்தாள்." என்றாள் ஜானகி. அந்த நேரம் பாலன் வந்து சேர்ந்தான். "வீட்டுக்குப் போனேன் அத்தை தோப்பு வீட்டில் இருக்கிறதா சொன்னாங்க." என்ற படி வந்தான். பாண்டி பிரதர்களும் வந்து சேர்ந்தான்.

"மாப்பிள்ளை, உன் தங்கச்சியும், அத்தானும் வரவும் தான் எங்க வீடு கண்ணுக்குத் தெரியுது." என்றான் சந்தன பாண்டி.

"அத்தான், அது அவர் தங்கச்சி வரவும் இல்லை, உங்கள் தங்கச்சி வரவும் தான் எங்கள் அண்ணன் சண்டிங் அடிக்குது." என்றாள் ஜானகி.

 அமிர்தா, "நான் வந்து ஒன்றரை மாசம் ஆச்சு, எத்தனை தடவை வந்தது உன் உடன் பிறப்பு?" என்றாள் அமிர்தா.

"அதெல்லாம், ஆபீஸ்ல வந்து அட்டனெஸ் போட்டுருவாரு சாலேஷா!" என அவன் பங்குக்கு வாரினான் ரகுவீர்.

"அத்தான், நீங்க தானே மும்பையில் இருக்கும் போது பார்த்துக்கச் சொன்னீங்க." என்றான் பாலன்.

 "மைதானத்துக்குப் போகலாம், தம்பி ரேக்ளா வண்டி ஓட்டட்டும்." எனக் கொஞ்ச தூரம் நடந்தனர்.

 பாண்டி ரேக்களா வண்டியில் கூட உட்கார ரகுவீர் ஜானகிக்கு ரேக்ளா மாட்டு வண்டியை ஓட்டிக் காட்டினான். ஜானகிக்குப் பெருமை பிடிபடவில்லை. வீடியோ எடுத்து ராத்தோட்ஸ் வாட்ஸ் அப் க்ரூப்பில் அப்டேட் செய்தாள்.

 

பாண்டி இறங்கிக் கொள்ள, ஜானகியை கை நீட்டி அழைத்துத் தூக்கிக் கொண்டான். மைதானத்தில் அவளோடு சேர்ந்து ஓட்டிக் காட்டினான். அங்கங்கே வயல் வேலைகளை முடித்து வந்தவர்கள் அதிசயமாகப் பார்த்தனர். தேனு, மானு கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஹேண்ட்சம் சித்தா, இப்போது அவர்களின் ரியல் ஹீரோ ஆனார்.

 இது தான் இளவட்டக்கல் எனப் பெரிய கல்லைக் காட்டினாள் ஜானகி. பாண்டி பிரதர்ஸ் நாங்களே முந்தி தூக்கினது, இப்பல்லாம் முடியலை என்றனர்.

 ரகுவீர் அசைத்துப் பார்த்தான். கை வழுக்கியது. "விடுங்க வீரூஜி, ரேக்ளா வண்டி ஓட்டியதே போதும்." என்றாள். இரவு உணவைச் சந்தன பாண்டி போய்க் கொண்டு வந்தான். எல்லாருமாக இரண்டு கயிறு கட்டில், ஸ்டூல் சேர் என இருந்ததில் உட்கார்ந்து சாப்பிட்டனர்.

 சாப்பிட்டு எட்டு மணி அளவில் அண்ணன் தம்பி இருவரும் தேனு, மானுவைக் கூப்பிட்டுக் கிளம்பினர். அமிர்தாவைப் பாலன் கொண்டு விடுவதாகச் சொன்னான். "சீக்கிரம் கொண்டு வந்து விடு மாப்பிள்ளை, அம்மா தேடுவாங்க." என அண்ணனாகச் சொல்லிக் கிளம்பினான் சந்தனப் பாண்டி.

 ஹரிணி, மற்றும் ராத்தோட்ஸ் க்ரூப் வீடியோ சாட்டில் வந்தனர். ஹாய் சொல்லி, "ரகுவி, முதல் சேலஞ்ச் முடிச்சிட்ட சூப்பர்." என்றாள் ஹரிணி. ரகுவீர் சிரித்துக் கொண்டான்.

 "சாலேஷா, அடுத்து மாட்டை அடக்கனுமா?" எனக் கேட்டான் அமர்சிங். "அந்த டாஸ்க் ஜானு தான் சொல்லனும். காலையில் ஸ்டோனைத் தூக்கிடுவேன்." என ஜானகியைப் பார்த்தவாறு சொன்னான்.

 "சபாஷ் பேட்டா, இதுல்ல ராஜஸ்தானி ஷேர்." என்றார் அமரேன்.

ஷப்னம், "ஏதாவது செய்து காயம் பட்டுக்கொள்ளாத ரகுவி." என்றார்.

"மாஷா கவலையே படாதீங்க மற்ற இரண்டும் நான் செய்ய விட மாட்டேன்." என்றாள் ஜானகி. தாதாஷா, தாதிஷா என வீட்டினருடன் பேசினர்.

 "நீங்க எங்க இருக்கீங்க, புது இடமாகத் தெரியுது?" எனக் கேட்டார் பூனம், "அமிர்தாவோட ஊரில், இது அவங்க ஃபார்ம் ஹவுஸ்." என்றாள் ஜானகி. அமிர்தா, பாலனும் ஓரிரு வார்த்தை பேசினர். வீடியோ சேட்டிங் முடிந்து, அமிர்தா, பாலன் கிளம்பினர்.

 

"அத்தானை காலையில் கறி மட்டும் எடுத்துக் கொடுத்து விடச் சொல்லு அமித்து, நான் இங்கே சமைச்சுக்கிறேன்." என்றாள் ஜானகி.

 

ஓட்டு வீடு, தாழ்வாரமாகத் தென்னங் கீற்றில் கொட்டகைப் போட்டிருந்தனர். ஜானகியின் நெடுநாளைய ஆசை இன்று நிறைவேறியது.

 "ஜானும்மா, எங்க படுத்துத் தூங்கிறது?" எனக் கேட்டான் ரகுவீர். கொட்டகையைக் காண்பித்து, "இங்க தூங்கலாம் வீரூஜி, நல்லா இருக்கும், எனக்கு ரொம்ப நாள் ஆசை இங்க காற்றாடப் படுக்கனும்னு. அத்தை விடவே  மாட்டாங்க." என்றாள். அவள் ஆசை என்ற பின் ரகுவீரிடம் மறுப்பு ஏது. சரியெனத் தலை ஆட்டினான். "ஆனால் எதில் படுக்கிறது?" என்றான்.

 உள்ளே இருந்த சற்றே அகலமான நாடா கட்டிலை, இருவருமாகத் தூக்கி வந்தனர். அதில் நான்கு புறமும் கம்பி கட்டப்பட்டிருந்தது.

 "இது எதுக்கு?" என்றான் ரகுவீர். "பொறுங்கள்." என்ற ஜானகி, கட்டில் மேல் சேலைகளை விரித்து அதன் மேல் க்வில்ட் பெட்டை விரித்தாள், இரண்டு தலையணை மற்றொரு க்வில்ட், கார் டிக்கியில் இருந்து எடுத்து வந்தாள்.

 கட்டிலைச் சுற்றி நான்கு புறமும், கொசுவலையை மாட்டி விட்டாள். அழகிய குடில் போன்று இருந்தது. வேடிக்கை பார்க்கவும், காற்று வரவும் ஏதுவாக இருந்தது. ஒரு டேபில் பேனையும் கட்டிலை நோக்கிச் சுழல விட்டாள். வீட்டுக் கதவை அடைத்து விட்டு, இந்தக் குடிலுக்குள் வந்து அமர்ந்து கொண்டனர்.

 ரகுவீருக்கு வீடுகட்டி விளையாடும் சிறுபிள்ளை போல் தெரிந்தாள் ஜானகி, தானும் அந்தப் பொம்மை விளையாட்டு நாயகன் ஆனது போல் சிரிப்பு வந்தது. அவனும் சிறுவயதில் இதுபோல் எதுவும் விளையாடியது இல்லை, அந்தக் கட்டில் வீட்டைப் போட்டோ, வீடியோ எடுத்துக் கொண்டான். அதுவும் ராத்தோட் க்ரூப்பில் பதிவேறியது. ஆளாளுக்கு என்ஜாய் என விமர்சனம், ஸ்டிக்கர்களைப் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.

 சிவமாளிகையிலும் வீட்டினர் பார்த்தனர். "ஜானு தன்னை மாதிரியே வீருவையும் மாத்திடுவா. பாருங்க சின்னப்ப பிள்ளையாட்டம் வீடு கட்டி விளையாடுறதை. வீரு அரண்மனையே கட்ட வசதி உள்ளவன்." என்றார் ராகினி.

 "ஸ்வர்ணி, எல்லாம் இருக்குறவங்க, எளிமையான விஷயத்தில் மகிழ்வது தான் சிறப்பு. மாப்பிள்ளையைப் பாரு எவ்வளவு சந்தோசமா இருக்கார்." என்றார் சிவகுரு.

ஜானகி, ரகுவீரை தனது கற்பனை உலகின் சஞ்சாரத்திற்குள், தான் கற்பனையாய் வைத்திருந்த  கனவுகளை அவனோடு சேர்ந்து நினைவாக்கிக் கொண்டு இருந்தாள் .

 

சிறுபிராயம், விடலைப் பருவம் எனப் பேச்சு வளர்ந்தது. இயற்கை காற்று, நிலவு ஒளி, இரவின் நிசப்தம், மாட்டின் ம்மா சப்தம், சிறு சில்வண்டுகளிற் ரீங்காரம் என ரம்யமானப் பொழுதாக இருந்தது.

 இரவு மணி பத்தை நெருங்கியது. தூரத்தில் பண்ணையாலும், அவன் மனைவியும் சரசமாடியது, ஊமை படமாகத் தெரிந்தது. இவ்வளவு தூரத்தில் பேச்சுச் சத்தம் கேட்கவில்லை, ஆனால் அந்த ஆள் ஒரு முழம் மல்லிகைப் பூவை அவளுக்குச் சூட முயல்வதும், அவள் தள்ளி நிற்பதுமாக மௌனப்படம் ஓடியது.

 ரகுவீர் ஜானகியிடம் காட்டினான். இவர்கள் கொசுவலைக்குள், விளக்கு அணைத்து இருந்ததால், இவர்கள் பார்த்தது, அவர்களுக்குத் தெரியவில்லை. கை வளைவில் ஜானகியை வைத்துக் கொண்டு , ரகுவீர் அவர்களைக் காட்டினான். மங்கிய ஒளியில் ஓவியம் போல் தெரிந்தனர்.

 பண்ணைக்காரன் மிகுந்த பிரயத்தனம் செய்தான், அவள் அவன் தொட்டால் கையைத் தள்ளி விட, முகத்தைத் திருப்ப என நாடகமாடினாள், பொறுத்துப் பார்த்தவன் அவளைத் துண்டைத் தூக்கி தோளில் போடுவது போல் போட்டுக் கொண்டு அறைக்குள் சென்று கதவை அடைத்தான்.

 ரகுவீர் இப்போது சத்தமாகச் சிரித்தான். ஜானகிக்கு வெட்கம் வந்தது. அதை மறைத்து, "இப்ப எதற்கு இப்படிச் சிரிக்கிறிங்கலாம்?" என்றாள்.

 "ஒண்ணு இல்லைடி மேரிஜான், இதே மாதிரி உன்னைக் கற்பனை பண்ணிப் பார்த்தேனா, அது தான் சிரிப்பு வந்திருச்சு." என்றான்.

 "உங்கள் லுகாயி இன்னும் எதற்கும் தயாரா இல்லை, சின்னப் பையன் மாதிரி பாவமா இருந்தீங்களேன்னு கொஞ்சம் இறங்கி வந்தேன். ஞாபகம் வச்சுக்குங்க." என்றாள் ஜானகி.

 "எனக்கும் வேற எண்ணமே இல்லடி ஜானும்மா. நிஜம்மா!" எனப் படுத்துக் கொண்டு அவளையும் இழுத்தான். அவன் மேலேயே விழுந்த ஜானகி, "சரியான டுபாக்கூர்." என நெஞ்சில் குத்தினாள்.

 "ஓ மேரி மா, சரியான ரௌடிக்கிட்ட மாட்டிக்கிட்டேனே!" எனக் கத்தினான். அந்த இருளில் அவன் குரல் பெரும் சப்தமாகக் கேட்டவுடன், அவன் வாயை கைகளால் பொத்தினாள். "இப்படி இல்லை, இப்படி..." என அவளை இழுத்து இதழைச் சிறைபிடித்தான்.

 அவளது மறுப்பும் மெல்ல அடங்கி இயைந்த இதழ் காவியம் ஆனது. அவள் கைகளை, தனது மேனியில் படர விட்டுக் கொண்டான். அதற்கு மேல் செல்லாமல் அதோடு போர்வையைப் போர்த்தி அவளை அணைத்துக் கொண்டான். அவள் தன்னைத் தொடுவதையும் இன்று பழக்கப் படுத்தினான்.

 

நேரம் செல்லச் செல்ல குளிர் அதிகமானது. அவனே அவளுக்குப் போர்வைக்குள் போர்வையானான். அந்தக் கதகதப்பில், இன்று மாத்திரை இன்றி ஜானகி சுகமான நித்திரை கொண்டாள். ரகுவீர் இந்தச் சூழலையும் ஆழ்ந்து அனுபவித்தான். தோப்பு வீடு வித்தியாசமான அனுபவங்களை உள்ளடக்கி இருந்தது.

 காலையில் பட்சிகளின் சப்தம் பூபாளம் பாடியது. அருணன் கிளம்பி விட்டான். பொழுது புலர்ந்தது. போர்வைக்குள், தம்பதியினர் சுகமான நித்திரையிலிருந்தனர். மெல்ல விழிப்பு வந்து, எங்கிருக்கிறோம் என ரகுவீர் யோசித்தான். ஒட்டிக் கிடந்த மனைவியும் பறவை சத்தமும், கொசுவலையை நீக்கிப் பார்த்தான்.

 "ஜானும்மா குட்மார்னிங்!" என நெற்றியில் முத்தமிட்டு எழுப்பினான். சோம்பலாக விழித்த ஜானகி, "குட்மார்னிங் வீரூஜி, அதுக்குள்ள எதுக்கு எழுப்புறீங்க?" என்றாள். "எங்க இருக்கிறோம் பார், விடிஞ்சிருச்சு." என்றான்.

அவளும் எழுந்து, கொசுவலையை நீக்கினர். காலை இளந் தென்றல் குளுமையாக முகத்தில் மோதியது. அனுபவித்து நின்றனர். பக்கத்திலிருந்த பாத்ரூமிற்குள் தண்ணீர் தூக்கி ஊற்ற வேண்டியது இருந்தது.

 பண்ணைக்காரனின் மனைவி, தலைக் குளித்துத் துண்டு கட்டியபடி, குடத்தில் நீரைக் கொண்டு வந்து ஊற்றினாள். அவன் இரண்டு குடத்தைத் தூக்கி வந்தான்.

 "நல்லா தூங்குனீங்களா அம்மா?" என விசாரித்தாள். ரகுவீர் ப்ரெஸ் பண்ணியபடி வரவும் நாணிக் கோணி ஓடிவிட்டாள். ரகுவீர் வித்தியாசமாகப் பார்த்தான். 'என் லுகாயியைத் தவிர மற்ற எல்லாரும் என்னைப் பார்த்து வெட்கப்படுதுங்க.' என மனதில் நினைத்தான்.

 அந்தப் பெண் அடுப்பை மூட்டிக் கொடுத்தாள், ஜானகி பால் காயவைத்து டீ போட்டு அவர்களுக்கும் கொடுத்து, தங்களுக்கும் எடுத்துக் கொண்டு வந்தாள். ரகுவீரோடு ஒரு மர நிழலில் அமர்ந்து ருசித்துப் பருகினர். பண்ணையாள், சந்தனப்பாண்டி கொடுத்ததாகக் கறிக் கொண்டு வந்து தந்தான். அதை அரை மணி நேரத்தில் கிரேவியாக வைத்து, சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைத்தாள். இராஜஸ்தானிகளின் பூண்டு இனிப்புச் சட்டி வதக்கி, அவளிடம் கொடுத்து அரைத்து வைக்கச் சொன்னாள்.

 "வீரூஜி, வாங்கக் கிணற்றில் குளிச்சிட்டு வருவோம். பம்ப் செட்டும் இருக்கு." என்றாள். இருவரும் கிளம்பினர். கமலக் கிணறு இருந்தது, தண்ணீர் ஒரு ஆள் ஆழத்திலிருந்தது. "இதில் குதித்துக் குளிக்கலாமா?" என வினவினாள்.

 

"அமுதன் சொன்ன கிணறா?" என்றான். "ஆமாம், ஆனால் இதில் குதிக்கச் சொன்னது நீங்க தான்." என்றாள் ஜானகி.

'நைட் மாத்திரை போடாததில் மரை கழன்றதோ?' என மனதில் நினைத்து அவளையே பார்த்திருந்தான்.

அவளும் சிரித்துவிட்டு, "இப்படிப் பார்க்காதீங்க, என்னோடவே கற்பனையில் வீரூஜியும் இருப்பார். அந்த வீரூஜி தான் ஜானு குதி என்றார்." என்றாள்.

 "இதற்கும் நான் தான் பலியா?" என்றவன், டீ சரட்டைக் கழட்டினான். அவள் சுடிதாரிலிருந்தாள். அங்கிருந்த கல்லில் வைத்து விட்டு "சரி வா, உதய்பூரில் செய்த மாதிரி எதுவும் செய்யக் கூடாது." என்றான்.

 ரகுவீர் முதலில் டைவ் அடித்து உள்ளே சென்றான், "ஜானு வா." எனச் சைகை செய்ய அவனருகில் குதித்தாள். இருவருமாக நீந்தினர். ஜானகி நீந்தி வந்து படியில் அமர்வாள், ரகுவீர் அவளை நோக்கி வந்து சேரவும் குதித்து எதிர்புறம் நீந்துவாள். அவளைத் துரத்தி அவன் நீந்துவான். அவளைப் பிடித்து விட்டால், சேர்ந்து மூழ்கி எழுவது என உற்சாகமாக நீர் விளையாட்டை விளையாடினர். ஜானகியுடனான அவன் பொழுது சுவாரஸ்யத்துக்கு குறைவு இல்லாமல் இருந்தது.

 ரகுவீர் தான் நேரம் சென்றதைக் கவனித்து அவளை மேலே ஏற்றினான். இந்த ஜலக்கீரிடையில் அவனது வெற்று  மேனியும் அவளை உறுத்தாமல் போனது.

மேலே வந்து, பம்ப் செட்டில் சிறிது நேரம் ஆடி விட்டு, ரகுவீர் வெளியே காவலுக்கு நிற்க உடை மாற்றி வந்தாள். நீந்திக் குளித்ததில் பசி அகோரமாக இருந்தது.

 வேகமாகத் தோப்பு வீட்டுக்கு வந்த ஜானகி, பண்ணைக்கார பெண்மணி, இட்லி சுட்டு வைத்திருக்க, சப்பாத்தியைத் தேய்த்து வேகமாகப் போட்டாள். தலையில் ஈரத்துணியோடு கர்ம சிரத்தையாகப் போட்டு மண் தட்டில் இலை விரித்து அவனுக்குப் பரிமாறினாள்.

 பசி ருசி அறியாது என்பார்கள், ஆனால் பசித்த அவனுக்கு அவள் கைப்படச் செய்த மட்டன் கிரேவி சப்பாத்தியோடு சேர்த்து உண்ணும் போது மிகவும் ருசித்தது. அவளுக்கும் ஊட்ட மறந்தான் இல்லை. கயிற்றுக் கட்டிலில் இயற்கையோடு உட்கார்ந்து சாப்பிட்ட அந்த ருசி நாவோடு மனதிலும் பதிந்தது. இருவருமாகச் சாப்பிட்டு முடிந்து அமர்ந்தனர்.

 குளித்த அலுப்பில் ரகுவீர் கையை மடித்து தலைக்குப் பின்னால் வைத்தவாறுக் காற்றாடப் படுத்தான், அவள் கால் மாட்டில் அமர்ந்து தலை முடியை விரித்துத் துவட்டினாள் ஜானகி. மனைவியின் அழகில் கொள்ளைப் போனது அவன் மனம். பண்ணைக்காரப் பெண் அடுப்புக் கங்கில் சாம்பிராணி போட்டு எடுத்து வந்தாள். ஜானகி எழுந்து மற்றொரு கட்டிலில் அமர்ந்தாள், மயில் தோகையென விரிந்த அவள் கேசத்திற்குச் சாம்பிராணி புகைக் காட்டினாள் அந்தப் பெண். ரகுவீர் எழுந்து சைகையில் அதை வாங்கி, அவள் சிகைக்கு வாசம் காட்டினான். உதய்பூரில் ட்ரையர் போட்டது இருவருக்கும் நினைவு வந்தது.

 பண்ணைக்காரி சிரித்த முகமாக வெட்கத்தோடு விலகினாள். "இவள் ஏண்டி எப்பப் பார்த்தாலும் என்னைப் பார்த்து வெட்கப் படுறா?" என்றான் ரகுவீர்.

"நீங்க தான் ஆணழகன் ஆச்சே அது தான்." எனக் கோபமாக ஜானகி சொல்லவும். "இது காம்ப்ளிமெண்டா, கடுப்பு ஏறினதா?" என்றான்.

"இரண்டும் தான், எவளைப் பார்த்தாலும் ,எம் புருஷனைப் பார்த்துச் சைட் அடிக்கிறாளுங்க." என்றாள். ரகுவீர், "இது உனக்குப் பெருமை தானே!" என்றான்.

"எனக்கு ஒரு பெருமையும் வேண்டாம், நான் மட்டும் என் புருஷனைப் பார்த்தால் போதும்." என வாய்விட்டாள்.

 அவள் முகத்தைத் திருப்பி, "இவ்வளவு நேரம் அதைத்தானே செய்த, கன்டினியூ மேரிஜான்." என ஹஸ்கி வாய்சில் காதோரம் ரகசியம் சொன்னான்.

 கன்னத்தோடு, கன்னம் தேய்த்தவன் கழுத்து வளைவில் முத்தம் கொடுத்தான். ஜானகிக்கு வயிற்றிலிருந்த பந்து எம்பி நெஞ்சுக் கூட்டை அடைத்தது, மூச்சு திணறியவள், "வீரூஜி ஓப்பன் ப்ளேஸ்." என்றாள்.

 "வீட்டுக்குள்ள போவோமாடி மிர்ச்சி, நேற்று அந்தப் பண்ணக்காரன், பொண்டாட்டியைத் தூக்கிட்டுப் போனானே அது மாதிரி தூக்கிட்டுப் போகவா?" என இழையவும். "போங்க வீரூஜி." என முகத்தை மறைத்தபடி ஓடினாள்.

 நேற்று சந்தன பாண்டி, தன் அப்பாவிடம், "மருது எகிறுது, சேர விடனும் போல!" எனச் சொன்னான். அது அவர்களின் வளர்ப்புக் காளையைத் தான். மாந்தோப்புக்கு அருகே தனிக் கொட்டகையில் உயர்சாதி காளையான அதனை வளர்த்தனர். அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டில் கட்டாயம் கலந்து கொள்ளும், எல்லா முறையும் எல்லாரையும் அடக்கி விட்டே திரும்பும்.

 பண்ணைக்காரன் காலை சாப்பிட்டு விட்டு, அதற்குத் தண்ணீர் காட்டப் போனபோது அதைக் காணவில்லை, கயிறு தேய்ந்து, அறுந்துப் போய் இருந்தது. தன் முதலாளிக்குத் தகவல் கொடுத்தவன், அதைத் தோப்பில் தேடித் திரிந்தான்.

 

ஜானகி வெட்கப்பட்டு வயல் பக்கம் ஓடவும் வரப்பைத் தாண்டி ஆக்ரோஷமாக காளை  வரவும் சரியாக இருந்தது. ஒரு நொடியில் அனுமானித்த ரகுவீர், ஒரே தாவில் ஜானகியைத் தாண்டி காளைக்கு முன் சென்று நின்றான். ஜானகியை திரும்பிப் போகச் சொல்லிக் கட்டளையிட்டான்.

 காளை நிதானித்துப் பின் ஆக்ரோஷமாகத் தலையைக் கீழே தேய்த்து ரகுவீரை நோக்கிப் பாய்ந்தது. ரகுவீர் லாவகமாக அதன் காலில் மிதிபடாமல் தப்பித்தான். பண்ணைக்காரி ஜானகியை இழுத்துச் செல்லும் போதே தன் கணவனைப் பெருங் குரலெடுத்து அழைத்தாள். ஜானகி, "வீரூஜி" எனக் கத்தியபடி அவளிடமிருந்து கையை உருவ முயன்றாள். பண்ணைக்காரி விடவில்லை.

 காளை ரிவர்ஸ் எடுத்து ரகுவீரை தாக்க வந்தது, உருண்டு எழுந்தவன், அதன் மதிலைப் பிடிக்க முயன்றான். அது எகிறி குதித்தது, முயன்று அதன் திமிலைப்  பிடித்தும் விட வெறிக் கொண்ட காளை அவனைக் கீழே தள்ளியது, அவனை நேராகக் குத்த போன நேரம், ஜானகியின் வீரூஜி என்ற கதறல் கேட்டது. பண்ணைக்காரன் நடுவில் புகுந்தான். கயிற்றைக் கொண்டு அதனை அடக்கப் பார்க்க, ரகுவீரை குறி வைத்த காளை தன் கொம்பால் அவனைக் கீறியது.

 சந்தனப்பாண்டி, வந்து விட்டான். சங்கரப் பாண்டியும் பின்னோடு வந்து சேர்ந்தான்.இரண்டு முறை தலையை ஆட்டி கீறிய காளையின் கொம்பை ரகுவீர் இறுக்கமாகப் பிடித்தான். அப்படியே எழுந்து அதனைப் பின்னோக்கி நடத்த, பண்ணையாள் கயிற்றைப் போட்டுப் பிடித்திருந்தான். சந்தனப்பாண்டி வந்து அதனை இழுத்துப் பிடித்துத் தூரத்தில் கொண்டு போய்க் கட்டிப் போட்டான்.

 ஜானகி, "வீரூஜி!" எனப் பாய்ந்து அவனருகில் சென்றாள். அவன் மேனி முழுவதும் , கீறல் இருந்தது. முதுகில் இரண்டு இடத்தில் கொஞ்சம் ஆழமான காயம். எழுந்து நின்றான். ஜானகி, "வீரூஜி வீரூஜி!!!" எனக் கதறி விட்டாள். "அத்தான் காரை எடுங்க." என அலறினாள். சங்கரப் பாண்டி சாவி எடுக்க ஓடினான். அவர்கள் சாமான்களைப் பண்ணைக்காரி டிக்கியில் எடுத்து வைத்தாள்.

 ரகுவீர், "ஜானும்மா போன் எடுத்துட்டு வா. பர்ஸ்." என அந்த வலியிலும் நினைவு படுத்தினான். ஜானகி ஓடிச் சென்று எடுத்து வந்தாள். இவர்கள் பின்னாடி உட்கார அண்ணன், தம்பி பாண்டி பிரதர்ஸ் முன்னால் அமர்ந்தனர்.

 "ப்ரோ அவசரப்பட்டு யார் கிட்டையும் எதுவும் சொல்ல வேண்டாம்." என்றான் ரகுவீர். ஹாஸ்பிடலுக்கு வண்டியை விட்டனர். அங்கு இவனது காயங்கள் ட்ரெஸ்ஸிங் செய்யப் பட்டது. முதுகிலும், மார்பிலும் கொஞ்சம் ஆழமான காயம் இருந்தது. இன்ஜக்ஸன் போட்டு ட்ரிப்ஸ் ஏற்றினர்.

 ஜானகி அழுத கண்களோடு தன்னை நொந்துக் கொண்டிருந்தாள். ரகுவீர் அவள் கையைப் பிடித்து, "ஒண்ணும் இல்லைடி." என்றான். இரண்டு மணி நேரத்துக்குப் பின்பு சட்டைப் போட்டு மறைத்தவன், "ப்ரோ, இங்கே யாருக்கும் எதுவும் தெரியக் கூடாது. நான் வந்துட்டு அவசரமா கிளம்பனும்னு சொல்லுங்கள். அம்மா அப்பாவைச் சங்கடப்படுத்தக் கூடாது. ஜானு முகத்தைத் துடை." என்றான். அவனின் அந்தக் குரலில் அவள் பணிந்தாள். மாத்திரை, ஆயின்மெண்ட் தந்தனர்.

 அத்தை வீட்டுக்கு வந்த ஜானகி, முகத்தை அழுந்த துடைத்திருந்தாள். மதிய உணவைப் பெயருக்குச் சாப்பிட்டு விட்டு, அத்தை தாம்பாளத்தில் சேலை துணிமணி வைத்துத் தந்தார். விடை பெற்றனர்.

 சங்கரப் பாண்டி, ரகுவீர் காரை செலுத்த சந்தன பாண்டி தங்கள் காரில் போனான். ஒரு வழியாகச் சிறுமலை வந்து சேர்ந்தனர்.பெரியவர்கள் சாப்பிட்டுப் படுத்திருந்தனர். ரகுவீர் மறுத்தும் கேட்காமல், சிவகுரு, ராகினியிடம் உண்மையைச் சொல்லி விட்டான் சந்தன பாண்டி.

 இருவரும் பதறி வந்தனர். ஹாலில் உட்கார்ந்து இருந்த ரகுவீர் சட்டையைத் தூக்கி ராகினி பார்த்துப்பி பதறினார். "வீரூ, சட்டையைக் கழட்டு உறுத்தும்." என அவிழ்த்து விட்டு ஒரு டவளை மேலே போர்த்தினார்.

 "அப்பாஜான், வீரூஜி!" என அழுகையோடு அவரைக் கட்டிக் கொண்டு அழுதாள்.தெய்வா, சண்முகத்திடம் சங்கரப் பாண்டி விசயத்தைச் சொன்னான். அவர்களும் பதறி வந்தனர்.

 "என்னால் தான்." எனத் தலையில் அவள் அடித்துக் கொள்ள ரகுவீர் தாங்க முடியாதவனாக, ஒரு பெருங் குரலில் "ஜான்வி ஷெட் அப், என்ன உன்னால் தான்? உன்னைக் குத்தியிருந்தால் காளை உன் குடலை உருவியிருக்கும். தாங் காட் நான் முன்னாடிப் போனேன்." என அவன் சத்தம் போடவும் ஜானகி கதறி அழுதாள்.

 "எனக்கு எதுவும் ஆனால் தான் என்னவாம், நானே ஒரு யூஸ்லெஸ். நீங்க அப்படியா, மாஷா நேற்றே பயந்தாங்க. நான் அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுன்னு சொன்னேன். நான் எப்படி அவங்களுக்குப் பதில் சொல்லுவேன்." எனக் கதறினாள்.

 ரகுவீர் அவளின் ஒரு வார்த்தையில் விரைப்பாக அமர்ந்திருந்தான். சத்தம் கேட்டு அமுதன், பாலன், மஞ்சரி, மயூரி வந்து விட்டனர்.

 "பையா, ஜானி ஏன் அழறா?" என்று வந்த மயூரி, அவன் காயத்தைப் பார்த்து, "ஆக்சிடெண்டா நீங்க நல்லா ஓட்டுவிங்களே?" எனக் கலவரமாகப் பார்த்தாள். கண்ணீர் கொட்டியது.

"ஏய் ஒண்ணும் இல்லைடா சோட்டி ஐயம் ஆல்ரைட்." என்றான் ரகுவீர். அமுதனிடம் சந்தன பாண்டி நடந்ததை விவரித்தான். சிவகுரு கைப்பிடியிலிருந்தாள் ஜானகி. ரகுவீரின் உடலில் அந்தக் காயங்கள் பளிச்செனத் தெரியவும், அமுதன்,  "அப்பா அத்தானை ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணுவோம்." என்றான் . பக்கத்தில் சென்று முழுக் காயத்தையும் உற்று நோக்கியபடி மயூரியும் கண்ணீர் வடித்தாள்.

 தாத்தா அப்பத்தாவும் வந்து சேர்ந்தனர். ரகுவீர் காயத்தைப் பார்த்துக் கலங்கி நின்றனர்.

"ஏண்டி, மாட்டு கிட்டப் போய் ஏதாவது செய்தியா?" என அப்பத்தா திட்டவும், ரகுவீர், "அவள் என்னை நல்லா பார்த்துக் கிட்டா. இது ஒரு விபத்து தான். ட்ரிப்ஸ் ஏத்தி ஊசி போட்டுருக்கு. நான் தூங்குறேன், முடியலைனா நானே சொல்றேன்." என்றான் ரகுவீர்.

 "சோட்டி, மஞ்சரி வீட்டில் சொல்லக் கூடாது, நானே சமயம் பார்த்து சொல்லிக்குவேன்." என மேலே ஏறப் போனவனை, "மாப்பிள்ளை, இந்த ரூமில் ரெஸ்ட் எடுங்க, நாங்களும் உங்களைப் பார்த்துக்குவோம். எங்களுக்கும் திருப்தி. ஜானகி கூட்டிட்டுப் போமா!" என்றார் சிவகுரு.

 ஜானகி கையைப் பிடிக்கப் போனவளைத் தடுத்துத் தானே சென்றான் ரகுவீர். ஜானகிக்கு ஏன் எனப் புரியவில்லை, ஆனால் அழுகை அருவி போல் கொட்ட தன் அறைக்கு மாடிக்கு ஓடினாள். அமுதன், மயூரி அவனை அறைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தனர். ரகுவீர் கோபம் எதற்காக, ஜானகி என்ன செய்வாள், பார்ப்போம். 

 

களஞ்சியம்
 70- அத்தை வீட்டு விருந்து 

 

 நத்தம் அருகில் உள்ள முளையூர் கிராமத்தின் பெரிய வீட்டில் அன்று பரபரப்புக்குக் குறைவு இல்லாமல் இருந்தது. வாசலை அடைத்து பெரிய கோலமிட்டு இருந்தனர், சுந்தரவள்ளியின் மருமகள்கள் சித்ராவும், கவிதாவும். தேனு, மானு  வாசலுக்கும் கூடத்துக்கும் அலைந்து கொண்டிருந்தன, இன்று ஹேண்ட்சம் சித்தா வருகிறார். அமிர்தா ஆட்களைக் கொண்டு இரண்டு நாட்களாக, பெயிண்ட் அடிக்காத குறையாக வீட்டை சுத்தப்படுத்திவிட்டாள்.

மும்பையில் இவர்களை வசதியாக, அன்பாகப் பார்த்துக் கொண்ட ரகுவீரிடம் இயற்கையான பாசம் வந்தது. ராகினியின் வளர்ப்பு பிள்ளை, அதைவிட முக்கியமானது அவன் ஜானகியின் கணவன்.

 நத்தம் திண்டுக்கல் சாலையிலிருந்து பிரிந்து உள்ளே இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஊர் இது. அந்த ஊரின் பெரிய தனக்காரக் குடும்பம் முருகப்பன் உடையது. முருக பவனம் எனப் பெயர் கொண்ட பெரிய வீடு அது. வீட்டின் முகப்பில் ஐந்து படி ஏறிச் செல்லும் இரு பக்கமும் திண்ணை உண்டு.

மதிற்சுவர் தாண்டினால் காற்றுக்காகக் கம்பி கிராதியோடு கூடிய மேல் திண்ணை, இதுவே பத்தடி அகலம் இருக்கும். அதன்பின் கூடம், ஹால் ஹை சீலிங் மேலே கட்டை லாந்தப் பட்டு வெண்டிலேட்டர் போல் ஜன்னல் வைக்கப்பட்ட பெரிய ஹால் எப்போதும் குளுமையாக இருக்கும். அதில் இரண்டு புறமும் தலா இரண்டு என நான்கு அறைகள் உண்டு. அதனைத் தாண்டி முற்றம், நடுவே மழை நீர் வடியும் படி சுற்றி தாழ்வாரம் உண்டு.

 அதில் ஒருபக்கத்தில் மாடிக்குப் படி போகும். முற்றத்தின் வலது புறம் பெரிய டைனிங் அதன் நேரே அடுப்படி, இடது புறம் ஸ்டோர் ரூமும் புழக்கடை பகுதியும் உண்டு. மாடியில் ஹால் ரூம் என இரண்டு புறமும் உண்டு. பழைய கால வீட்டை பிள்ளைகள் வசதிக்குப் பாத்ரூம் டாய்லெட்டோடு மாற்றி அமைத்தனர்.

 மூன்று கார்களில் சிவகுருநாதன் குடும்பம் வந்தது. காலை உணவுக்கே வரவேண்டும் என்ற அன்பு கட்டளைக்கு அடிபணிந்து இதோ வந்துவிட்டனர். தேனு உள்ளே குரல் கொடுத்தது, அமிர்தா, அவள் அண்ணிகள் இருவரும் ஆரத்தியுடன் வந்தனர்.

 ரகுவீர், எதிர்புறம் இருந்த மரநிழலில் காரை நிறுத்திவிட்டு, இறங்கினான். பின்னால் இருந்து தாத்தா, அப்பத்தா இறங்கினர். கை கொடுத்து அப்பத்தாவை இறக்கிவிட்டான் ரகுவீர். சுற்றி முற்றி ஊரே எட்டிப் பார்த்தது. எல்லாருக்கும் ரகுவீரே வேடிக்கைப் பொருள். ஹிந்தி பட ஹீரோ போல் இருந்த ஜானகி மாப்பிள்ளையை அதிசயமாகப் பார்த்தனர்.

 தாத்தா, அப்பத்தாவோடு சேர்ந்து வந்த இளம் ஜோடியைப் பார்த்திருந்தனர். அடுத்தடுத்து அமுதன், சண்முகம் டிரைவ் செய்யக் கார்கள் வந்து சேர்ந்தன.

 "ஏண்டி முதல் ஆலாத்தி எனக்குத் தானே?" என வம்பிழுத்தார் சிவகாமி. "ஆமாம் அப்பத்தா, நீங்க தானே இந்த வீட்டு மூத்தமகள் பெண் வாரிசு தாத்தாவோடு சேர்ந்து நில்லுங்க." என்றாள் கவிதா.

 சிவகாமிப் பாட்டிக்கு வெட்கம் வந்தது. "போகுது போ, இன்னும் இரண்டு மாசத்தில் என்பதாம் கல்யாணம் நடக்கும் அப்ப எடு." என்றவர், உள்ளே சென்றார். பாண்டி பிரதர்ஸ், "வாங்க ஆச்சி, வாங்கத் தாத்தா." எனக் கும்பிட்டு உள்ளே அழைத்துச் சென்றனர்.

 ரகுவீர், ஜானகியை அமிர்தா வரவேற்றாள், "அண்ணா வெல்கம் டூ அவர் ஹவுஸ். ஜானி வாடி!" என்றாள்.ரகுவீர், தலை அசைத்து ஏற்றுக் கொண்டான். வெளியே இவர்களைக் காணக் கூட்டம் ஏறிக் கொண்டே போனது. கவிதா, சித்ராவும் முகமன் கூறி வரவேற்றனர். 

ரகுவீர், ஜானகியிடம் " ஏண்டி நம்மளைப் பார்க்கிறதுக்கு அம்ரூ டிக்கெட் போட்டுட்டாளா? இவ்வளவு ஆளுங்க இருக்காங்க!" என ரகசியமாகக் கேட்டான். "வீரூஜி, அது என்னைப் பார்க்க வந்த கூட்டம் இல்லை, உங்களைப் பார்க்க வந்த கூட்டம். நீங்க ஹிந்தி ஆக்டர் மாதிரி இருக்கீங்கலாம்." என்றாள் ஜானகி ஒரு சிரிப்போடு.

 "நீ சிரிக்கிறதைப் பார்த்தா எனக்குச் சந்தேகமா இருக்கே?" என்றான். அதற்குள், "அண்ணா ஜானி பக்கத்தில் நில்லுங்கள்." என்றாள் அமிர்தா.

 இருவரையும் வாசலில் நிறுத்தி, சூடம் ஏற்றி ஆராத்தி எடுத்தனர். "வீரூஜி, மூணு பேருக்கும் பணம் போடுங்க." என்றாள். பர்சை எடுத்து மூன்று இரண்டாயிரம் நோட்டுத் தாள்களை அமிர்தா கையில் கொடுத்தான். கவிதா ஆரத்தியை தெருவில் ஊற்றி வந்தாள். அத்தை, மாமா, பாண்டியன் ப்ரதர்ஸ் கைக் கூப்பி வணக்கம் சொல்லி வாங்க என்றனர். ஜானகி அத்தை மகன்களுடன் வாயாடிக் கொண்டே, உள்ளே வந்தாள்.

ரகுவீர் உள்ளே வரவும், முருகானந்தம், சுந்தரவள்ளியின் காலைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்க, குனிந்து ஜானகியைப் பார்த்தான். "ஆயி!" என ஓடி வந்து அவளும் சேர்ந்து வணங்கி எழுந்தனர். பாண்டியன் ப்ரதர்ஸ் கண்களால் அவளைக் கிண்டல் செய்தனர்.

"என்ன அத்தானுங்களா, ஓவரா ஓட்டுறீங்க. இது அவுங்க பழக்கம், ஆசீர்வாதம் தானே வாங்குறோம்னு போறேன்." என்றாள் ஜானகி. 

"எது எப்படியோ, தம்பி ஒரு பார்வை பார்க்கவும் ஓடின பாரு, அதுதான் பார்க்கச் சந்தோஷமா இருக்கு." எனச் சொன்னான் சந்தனப் பாண்டியன்.

"ஆத்தா ஜானகி, அப்புறம் போயி கதை பேசுவ, வா பாலும் பழமும் சாப்பிட மகனோடு வந்து உட்கார்." என்றார் சுந்தரவள்ளி.

ஷோபாவில் ஜானகி ரகுவீரை உட்காரவைத்து, வாழைப்பழமும் பாலும் தந்தனர். சிவபரங்கிரி ஐயா ஒரு சேரில் உட்கார்ந்து இருந்தார். சிவகுரு நாதன், சண்முகமும் வரவும், அவர்களையும் முறைப்படி வரவேற்றனர். 

தெய்வா நேராக அடுப்படிக்குத் தான் சென்றார், மருமகன் ருசிக்கு ஏற்றவாறு சமைத்து வைத்திருக்கிறார்களா எனப் பார்க்கச் சென்றார்.

மஞ்சரி, மயூரி, ராகினியோடு வந்தனர். அமிர்தா வரவேற்று, கிராமத்து வீட்டைச் சுத்திப் பார்க்கச் சென்றனர். அமுதன், ரகுவீரோடு உட்கார்ந்தான்.

"வீருஜி, கார் கீயை தாங்க!" என்றாள். இரு வர்றேன், என அவனே வந்து ஸ்வீட்ஸ், கிப்ட்ஸை எடுத்துக் கொடுத்தான். பேக் அப்புறம் எடுத்துக்குவோம். என இருவருமாகக் கைக் கொள்ளாமல் கொண்டு வந்தனர். "வீருஜி, உள்ளே வாங்க." எனக் கூட்டிச் செல்ல, பாலன் ரகுவீர் கைகளிலிருந்ததை வாங்கிக் கொண்டான்.

ஹால் தாண்டி உள் கட்டை அடைந்தனர். மயூரி மஞ்சரியும் அங்கிருந்தனர். உள் திண்ணை முற்றம் எனச் சிலுசிலு வெனக் காற்றாட இருந்தது. அமிர்தா, "அண்ணா, இது கிராமத்து வீடு. உங்கள் ஹவேலி மாதிரி இல்லை. வசதி குறைவு தான்." என்றாள்.

 "அம்ரூ, அன்பான மனசு இருந்தால் போதும், எங்கேயும் இருக்கலாம். ஆனால் இது அழகான உயிரோட்டம் உள்ள வீடு. ஒரு மனநிறைவு இருக்கு." என்றான்.

 அத்தை எல்லாரையும் சாப்பிட அழைத்தார். பெரியவருக்கும், சிவகுரு, முருகானந்தம் இவர்களுக்கு மட்டும் மேசையில் வைத்து மற்றவருக்குக் கீழே பந்திப் பாய் விரித்து இலை போட்டிருந்தனர்.

 "அத்தானுக்கு  கீழே உட்கார்ந்து பழக்கம் இருக்காது மேலே வைக்கச் சொல்லு." என அமிர்தாவை அழைத்து அமுதன் சொல்லவும்.

"இல்லை அண்ணா, வீரூஜி கீழே உட்காரட்டும்." என்றாள் ஜானகி. அதற்குள் ரகுவீரை கைகழுவ அழைத்து, பொண்ணு மாப்பிள்ளைக்கு என ரத்தினக் கம்பளம் விரித்து ரகுவீரை அமர்த்தி இருந்தார் சுந்தரவள்ளி. ஜானகியையும் அழைத்துப் பக்கத்தில் அமர்த்தினார்.

 பின்னர் இவர்களுக்கு முதலில் கேசரி, பால் பணியாரம், வடை என வரிசையாக வைக்கவும், ஜானகி அத்தை கை பக்குவத்தை ருசிக்க ஆரம்பித்தாள். இட்லி, இடியாப்பம், பூரி சப்பாத்தி குருமா எனச் சேர்ந்தன. மஞ்சரி வெளுத்துக் கட்டினாள். இதன் பெயர், அதன் பெயர் எனக் கேட்டுக் கொண்டவள், "ஜானி இதெல்லாம் உனக்குச் செய்யத் தெரியுமா?" என, கேட்டாள்.

"ஜானகிக்குத் தெரியாத சமையலே கிடையாது, எல்லாமே நல்லா செய்வா." என்றாள் அமிர்தா.

"அப்ப விடு, எனக்குப் பிரச்சினை இல்லை, ஜுஜூ நாம நல்லா வயிறார சாப்பிடலாம்." என்றாள் மஞ்சரி.

"ஆமாம்டி, வீரூஜி என்னை வீட்டில் உட்கார வைப்பார், நீ சமையற்கட்டில் கட்டிப் போடு. இதுக்கு ,எதுக்கு எம்பிஏ படிக்கனுமாக்கும்?" என்றாள் ஜானகி.

"ஜானி, நானும் இதையே தான் கேக்குறேன். இந்த ஸ்வருக்காக நானும் படிக்க வேண்டியதாகப் போயிடுச்சு." என்றாள் மஞ்சரி.

சாப்பிட்டு எழுந்த பின்னர் மாடிக்குக் கூட்டிச் சென்றாள் அமிர்தா, அங்கும் ஷோபா  செட்டுகள் போட பட்டிருந்தன. பேசிக் கொண்டிருக்கும் போது, ரகுவீர் அமிர்தாவின் மில் வேலையைப் பாராட்டினான். "அம்ரூ இதையே நீ கண்டின்யூ பண்ணு முதலில் இப்படி ஆர்டர் மட்டும் ஃபாலோ பண்ணு. உன் ஷாதி முடியட்டும் நாம ஒரு மில் ஓப்பன் பண்ணலாம்." என்றான் ரகுவீர். 

"அண்ணா, இப்ப செய்யறதே அதிகம் தான். இருக்கட்டும் அண்ணா!" என்றாள் அமிர்தா.

"அப்ப அண்ணாங்கிறது வாய் வார்த்தை, நீ என்னை அண்ணனா நான் நினைக்கலை அப்படித்தானே?" என்றான் ரகுவீர். "வீரூஜி, இதென்ன அமித்துகிட்ட இப்படிப் பேசறீங்க?" என்றாள் ஜானகி.

"ஏ மிர்ச்சி நீ வாயை மூடு. பாயி பஹன்னுக்குள்ள நீ வராதே!" என்றான் ரகுவீர். அவள் வாயை அழகு காட்டி, முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

"என்ன அண்ணா இப்படிச் சொல்றீங்க. நான் உண்மையான பாசத்தில் தான் சொல்றேன். மும்பையில் முதன்முதலில் ஏர்போர்ட்டிலிருந்து காரில் வீட்டுக்குப் போகும் போதே, ஜானிக்கான மாப்பிள்ளை, எங்கள் அண்ணன் இவர் தானென்று முடிவு பண்ணிட்டேன். உங்களோடு வேலை செய்ததே எனக்குப் பெரிய பாக்கியம் தான்." என்றாள் அமிர்தா.

"அம்ரூ, பய்யாவோட பாசமே, நமக்கு ஏதாவது செய்து சந்தோஷப்படுறது தான், அதனால் எதையும் மறுக்காதே." என்றாள் மயூரி.

"ஆமாம்டி பிஸ்னஸ் மேகனட் ஆக வாழ்த்துக்கள்." என்றாள் மஞ்சரி. தொடர்ந்து, "ஜீஜூ, உங்கள் பாசமெல்லாம் சிஸ்டர்ஸோட நிறுத்திக்கங்க. நான் மிஸஸ் ராஜ்வீர் ஆனால் போதும் குஷ்." என்றாள் மஞ்சரி.

"இரண்டு பேரும் உங்கள் சாசுமா மாதிரி வீட்டில் உட்கார ப்ளான் பண்ணாதீங்க. ஜூவல்லர்ஸ் பாபுஷாக்கு பிறகு நீங்க தான் பார்க்கனும்." என்றான் ரகுவீர்.

"நான் புள்ளைக் குட்டியெல்லாம் பெத்துக்கனும். இதில் எல்லாம் இழுத்து விடாதீங்க." என்றாள் மஞ்சரி. ஜானகிக்குத் தான் அவஸ்தையாக இருந்தது. இவளைப் பேசவே விடக் கூடாது என நினைத்தாள்.

"வாழ்க்கை பூரா பெத்துக்குவியா, இரண்டோ மூன்றோ தானே, சைட் பை சைட் பழகிக்கோ!" என்றான் ரகுவீர். இவர்கள் வாக்குவாதம் தொடர்ந்தது.

"வீரூஜி, முதலில் ராஜுடன் அவளுக்கு ஷாதி பண்ணி வைங்க மத்தது அப்புறம்." என்றாள் ஜானகி.

"ஜானி, ஐ லவ்யூ டி. இன்னைக்குத் தான் உருப்படியா ஒரு வார்த்தை சொல்லியிருக்க." என்றாள் மஞ்சரி.

"சரி உனக்காகத் தான் இங்கே இருக்கலாம்னு வந்தேன், வேண்டாம்னா சொல்லு, நாளைக்கே டிக்கெட் போடுறேன் மும்பை போகலாம். நான் பிஸ்னஸ் பார்க்கிறேன். இவர்கள் ஷாதியை முடிச்சு வேல்ட் டூர் அனுப்பிடலாம்." எனச் சிறிது காட்டமாகச் சொன்னான் ரகுவீர்.

 

கீழே இருந்த அமுதன் கூப்பிடவும் மயூரி கிளம்பினாள், அதோடு. ஜானகி, ரகுவீரை தனித்து விட்டு மற்றவர் கிளம்பினர்.

ரகுவீர், ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டு நின்றான். பின்னால் சென்று அவனைக் கட்டிக் கொண்ட ஜானகி, "என்ன வீரூஜி, இவ்வளவு கோபப்படுறீங்க. அவள் ஷாதி, ஷாதிங்கிறா அதுக்குத் தானே சொன்னேன்." எனக் கொஞ்சினாள்.

"பேசாதடி, படிப்பு முடிந்ததிலிருந்து ஓடுறேன், இங்க வரும் முன்னே வேலையை முடிச்சிட்டு வந்தேன், இரண்டு நாள்னு  போய்ட்டு இரண்டு வாரம் ஆச்சு. நீயும் என்னைக் கொல்லு. போங்கடி சைன்னு வருது." என்றான் ரகுவீர்.

மேலும் அவனோடு ஒட்டிக் கொண்ட ஜானகி, "வீரூஜி, சாரி வாங்க, இனிமே இங்கே இருக்கிற நாட்கள் எல்லாம், மெமரபிள் டேஸ்  தான்." என அவனைக் கொஞ்சி, கெஞ்சி சமாதானம் செய்து, கீழே அழைத்து வந்தாள். 

மதியம் உணவுக்கு முன் நிறைய நேரம் இருந்தது. தேனு, மானு ரகுவீரை பிடித்துக் கொண்டன. தேனுவுக்கு ஒரு மூன்று வயது தம்பி இருந்தான். உள் திண்ணையில் உட்கார்ந்து ஜானகி அவர்களுக்குச் சமமாகத் தாயம் விளையாடினாள்.

 செல்லபாண்டி எனப் பெயர் கொண்ட தம்பி தோற்கும் நிலை வரவும், ஜானகி அவனைத் தூக்கிக்கொண்டு நம்ம தேனு மானுவை நம்ம கல்லுதான் குதிரை, அதை வைத்து அடிப்போம். எனத் தாயத்தை உருட்ட ஆரம்பித்தாள்.

 ஒவ்வொரு காய்க்கும் பெயர் வைத்து டொக், டொக் எனச் சொல்லி, ஆட்டத்தைச் சுவாரஸ்யமாக்கினாள். ரகுவீருக்கும் அவளது விளையாட்டில் ஆர்வம் வந்தது. இதைப்பார்த்த மயூரி மஞ்சரியும் ஆளுக்கு ஒருவரை சப்போர்ட் செய்தனர். நான்காவது பக்கத்துக்கு ரகுவீரையே உட்கார வைத்தனர். ஒன்று, இரண்டு மூன்று எனக் கேம் ஓடிக்கொண்டே இருந்தது.

 நடுநடுவே, மஞ்சரி, மயூரி, ஜானகி கமெண்டும் சேர்ந்தது, அமுதனும், பாலனும் மயூரி, மஞ்சரிக்கு சப்போர்ட்டுக்கு வந்து உட்கார்ந்தனர். அமிர்தா கொறிப்பதற்கும், குடிப்பதற்கும் ஏதாவது கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தாள்.

 கவிதா, சித்ராவும், தெய்வாவிடம், "சித்தி அங்க தான் வேலைப் பார்க்கிறீங்க, இங்க பிறந்த வீட்டிலாவது   ரெஸ்ட் எடுங்க. நாங்க பார்த்துக்கிறோம். " என அனுப்பி விட்டனர். சப்பாத்தியை மெனுவில் சேர்த்தார். மயூரி நான் வெஜ் சாப்பிடாது என அவளுக்குத் தனியாகச் சாம்பார் உருளைக் கிழங்கு வைத்தனர்.

 

ராகினி, தெய்வாவும் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்தனர். சிவகாமி அப்பத்தா, சுந்தரவள்ளி காதில் சில விசயங்களைச் சொல்லி, ஜானகிக்கு மனதில் ரகுவீர் மேல் அன்யோன்யம் வரும்படி செய்யச் சொன்னார்.

 சண்முகம் சுற்றிக் கொண்டே இருப்பவர் ஆதலால் கார் எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பி விட்டார். சிவகுரு தனது தங்கை மாப்பிள்ளையுடன் பேசிக் கொண்டிருந்தார். தாத்தா ரூமில் ஓய்வு எடுத்தார்.

 மதியம் உணவு பரிமாறினர். மஞ்சரி இங்கு வந்து இரண்டு மாதத்தில் இங்குள்ள ருசிக்குப் பழகி இருந்தாள். ரகுவீர் முழித்தான். "வீரூஜி, ஃபிஷ் சாப்பிடுவீங்களா, மட்டன்." எனக் கேட்டு அவனுக்குப் பிடித்தது போல் முள் நீக்கி கொடுத்து, சப்பாத்தியில் கிரேவி தொட்டுச் சாப்பிடச் சொன்னாள். அவனுக்குப் பார்த்துப் பரிமாறிச் சாப்பிட்ட பின்னரே தான் சாப்பிட்டாள் ஜானகி.

 ஜானகியின் செயலை மற்றவர் வியந்துப் பார்த்தனர். ரகுவீரின் சாப்பாட்டு முறையை அவ்வளவு புரிந்து வைத்திருந்தாள் ஜானகி. "ஏம்மா, நீ என்னமோ சொன்ன, அங்க பாரு எம் மருமகளை, மகனை எப்படிக் கவனிக்குது." என ரகசியம் பேசினார் சுந்தரவள்ளி. 

"இதெல்லாம் நல்லா தான் செய்வா, கொஞ்சறது, கட்டிக்கிட்டுத் தூங்குறது எல்லாம் சரி தான். அதுக்கு மேல தாண்ட மாட்டாள். வம்சம் வளரனுமா வேண்டாமா?" என்றார் சிவகாமி.

 மதிய உணவுக்குப் பின், கொழுந்து வெற்றிலை சுண்ணாம்பு, நெய் சீவல், சாமுண்டி வாசனைப் பாக்குச் சோம்பு கிஸ்மிஸ் பழம் எனக் கிண்ணத்தில் நிறைத்து, வெற்றிலை ஒரு தட்டில் கொண்டு வந்த வைத்தனர். அதிலும் ஜானகி தன் கைவண்ணம் காட்டினாள், முதல் பீடா அப்பா ஜானுக்கு என ஊட்டினாள்.

 ரகுவீருக்கு, எல்லாம் பக்குவமாய்க் கலந்து மடித்துத் தந்தாள். ஒவ்வொன்றாகச் சில வெற்றிலைகளைக் குல்கந்து நெய் சீவல் மட்டும் வைத்துக் கொடுத்தாள். அவள் தரும் வெற்றிலையை ரசித்துச் சுவைத்தான்.

 மதியம் நேரம் மொத்தக் குடும்பமும் உள்கட்டுத் திண்ணையில் உட்கார்ந்து, தமிழ் ஹிந்தியில் கலந்து கட்டி மொழி பெயர்த்து கலாய்த்து ஓட்டிக் கொண்டிருந்தனர்.

 "ஏய் ஆத்தா ஜானகி, நான் அன்னைக்கே போன்ல சொன்னேனா என்ன, உன்னை அடக்க ஒரு வீரன் வருவான்னு, அதே மாதிரி மகன் வந்திடுச்சு பாரு." என்றார் சுந்தரவள்ளி.

 

"அத்தை இன்னும் மூன்று கண்டிசன் பாக்கி இரூக்கு. காளை மாடை அடக்கனும், இளவட்டக்கல் தூக்கனும், ரேக்ளா வண்டி ஓட்டனும்." என்றாள் ஜானகி.

 "அது தான் கழுத்தில் தாலி ஏறிடுச்சே, இனிமே எப்படிக் கிராக்கி பண்ணுவ." என்றார் அத்தை. "நான் ஆசைபட்டா வீரூஜி செய்வாங்க." என்றாள்.

"போட்டி வச்சா பந்தயம் பொருள், பரிசு வேண்டும். என் மகன் ஜெயிச்சா நீ பத்தாம் மாசம் புள்ளைய பெத்துக் குடுப்பியா?" என்றார் சுந்தரவள்ளி. ஜானகி அமைதியானாள்.

 "அதுக்கும் உங்கள் மகன் தான் ஏற்பாடு பண்ணணும்." என்ற சின்ன மருமகள் பேசும் போதே உமட்டி, புழக்கடைப் பக்கம் ஓடினாள். சந்தனப்பாண்டி பின்னாடியே சென்றான்.

 "அம்மா உன் சின்ன மகன் ஏற்பாடு பண்ணிட்டான் போல!" எனச் சங்கரப் பாண்டி நமட்டுச் சிரிப்பு சிரித்தான். கவிதா, "விவஸ்தை கெட்ட மனுசா!" என இடித்து விட்டு சித்ராவைப் பார்க்கப் போனாள். எல்லாம் முகத்திலும் புன்னகை பூத்தது. ரகுவீர் ஜானகியைப் பார்த்து என்ன எனக் கண்களால் வினவினான். அவள் சைகையில் தொட்டில் போல் காட்டவும் சிரித்தான்.

 முகம் கழுவி வந்து அமர்ந்தவளுக்குத் தண்ணீர் எலுமிச்சை ஜூஸ் தந்தாள் கவிதா. "எத்தனை மாசம்" எனச் சிவகாமிப் பாட்டி கேட்கவும். "பொங்கலுக்கு முன்னே ஆனது." என அவள் கணக்குச் சொன்னாள். அவள் நாடியைப் பார்த்து, "ஆமாம்டி என் சமத்தே. இவள் கல்யாணம் சமயமா?" எனச் சிவகாமி வேண்டுமென்றே ஜானகியைக் காட்டி கேட்டார்.

 விசயம் தெரியாத மஞ்சரி தான், "ஜானி இது நமக்கு அவமானம் சீக்கிரம் என்னைச் சாசிஷாவா ஆக்கு. ஜீஜூஷா, இரண்டு நாளில் வரேன்னு, இருபது நாள்  கழித்து வரக்கூடாது. இவளையும் சேர்த்துக் கூட்டிட்டுப் போங்க." என யோசனையும் சொன்னாள்.

 ரகுவீர் ஜானகி முகமாற்றத்தைக் கவனித்தான். முன்பிருந்த பதட்டம் மாறி வருத்தம் மட்டுமே தெரிந்தது. "மஞ்சரி, நாங்கள் வேல்டு டூர் போய்ட்டு வந்து பெத்துக்குவோம். கொஞ்ச நாள் கமிட்மெண்ட் இல்லாமல் ஜாலியா என்ஜாய்ப் பண்ணிக்கிறோம்." என்றான் ரகுவீர்.

 "போய்ட்டு வாங்க ஜீஜூ, யூரோப் ஹனிமூன் போய்ட்டு வாங்க, அப்பத் தான் அடுத்து நாங்கள் போக முடியும்." என்றாள் மஞ்சரி. 

"அது தானே படே பையா, ஜானி மேல அக்கறை வந்திருச்சோன்னு நினைச்சேன்." என்றாள் மயூரி. பேச்சோடு அவர்கள் இருவருக்கும் வாழ்த்துச் சொன்னார்கள். வெயில் தாழவும், வயல் தோப்பு, தோப்பு வீடு, கிணறு என ஜானகி லீலைகள் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று காட்டினர். இவர்களைப் பார்க்க கிராமத்தில் ஒரு கூட்டம் இருந்தது.

 மாலையில் சிவமாளிகைக்கு ஜானகி ரகுவீரைத் தவிர மற்றவர் கிளம்பினர். மேலே உள்ள அறையை ஜானகிக்கு அமிர்தா தயார் செய்து வைத்திருந்தாள். ரகுவீர் எளிமையாகப் பழகியது அனைவருக்கும் பிடித்தது. "நாளைக்கு, ரேக்ளா வண்டி ஓட்டச் சொல்லித் தர்றோம்." என்றனர் பாண்டியன் பிரதர்ஸ்.

 இரவு ஜானகி ரகுவீர் உடை மாற்றிப் படுத்தனர். அமிர்தாவிடம் பால் கொண்டு வரச் சொல்லிக் கலந்து கொடுத்தான் ரகுவீர். அவன் மார்பில் தலை வைத்துக் குறுக்காகப் படுத்திருந்த ஜானகி,"வீருஜி, எத்தனை நாளைக்குத் தூக்க மாத்திரையில் தூங்கிறது. நான் இப்படியே இருந்திடுவேனா. எனக்கு உங்களோடு வாழனும். இன்னைக்குச் சித்ராக்கா எவ்வளவு சந்தோஷமா இருந்தது, அத்தான் முகத்திலும் அப்படி ஒரு பெருமிதம்." என்றாள் ஜானகி.

"புரியாதவங்களுங்கு ஏதாவது சொல்லலாம், உனக்குத் தான் எல்லாமே புரியுதே, உன்னையும் மீறிய விசயத்துக்கு என்ன பண்றது. நீ அதைப் பற்றிப் பேசத் தயாரா சொல்லு, நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்." என்றான்.

ஜானகி தைரியம் வந்தவளாக, "ந்யுடா கிடந்தாங்க வீரூஜி. என்னை மெண்டல் ஹராஸ் பண்ணத் தான் இதைச் செய்கிறான் அதுக்கு இடம் தரக் கூடாதுன்னு  நினைச்சேன். ஆனால் கண்ணைத் திறந்தாளே வக்கிரமான போஸ்!" என ஓங்கரித்தாள். எழுந்து உட்கார்ந்து, அவளைக் கை வளைவில் கொண்டு வந்தவன்.

"அவர்கள் நிதானமாக இருந்தார்களா ஜானுமா?" எனத் தலையைத் தடவினான். யோசித்தவள், "இல்லை வீரூஜி, போதையில் இருந்தாங்க!" என்றாள்.

"அப்ப இது மாதிரி ஏதாவது ஹார்மோன் தூண்டும் ஊசி போட்டுகிட்டு செய்வாங்களா இருக்கும்." என்றவன்.

 ஜானும்மா நான் இன்னோன்னு கேட்கிறேன் பதில் சொல்லு." என்றான். "கேளுங்க!" என்றாள். "அங்க கிடந்தவனும் வீரூவும் ஒன்றா?" என்றான்.

"சீ வாயைக் கழுவுங்கள் அது சனியனுங்க. நீங்க என் வீரூஜி, மை டார்லிங்!"என ஆசை மேலிட அவனைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் கடித்தாள்.

 "ஏய் வலிக்குது விடுடி." என்றான். "அப்புறம் ஏன் என் உடம்பை அவங்களோட கம்பேர் பண்ற, நான் சர்ட் மாற்றின கூட ஓடிப் போற, நான் எதார்த்தமா இருக்கிறது கூட உன்னை ஹேர்ட் பண்ணுமோன்னு பயம்மா இருக்கு." என்றான் ரகுவீர்.

 

ஜானகி பதில் சொல்லமுடியாமல் தவித்தாள். ரகுவீர், "ஜானும்மா படுத் தூங்குவோம்." எனப் படுத்தவன், அவளைத் தன் கணவன் எனத் தன்னை உணரவைக்க  அவள் இடையில் தன் கையால் வருடினான். ஜானகி நெளிந்தாள், "வீரூஜி என்ன இது?" என்றாள். 

"இனிமே இப்படித்தான் வேணும்னா பக்கத்தில் படு, இல்லைனா தள்ளிப் படு!" என்றான் ரகுவீர். அவன் பிடிவாதம் அறிந்தவள் எனவே விலகிப் படுத்தாள்.

 அவனும் அவளுக்கு முதுகு காட்டிப் படுத்தான். சிறிது நேரம் கழித்து வந்து அவனோடு ஒட்டிக் கொண்டாள், "வீரூஜி!" என்ற சிணுங்கலோடு. தனது தொடுகைக்கு அவளைப் பழக்க வேண்டும் என்பதில் ரகுவீர் உறுதியாக இருந்தான். திரும்பிப் படுத்து அணைத்தான்.

 அவர்களின் திருமண வாழ்வின் அடுத்த நகர்வாக அதில் வெற்றிக் கண்டான். அருவருப்புப் பயம் கடந்து சுகமும், பாதுகாப்பும் அவனது கரங்கள் தருவதை உணர்ந்தாள்.

 அடுத்த நாள் காலையில் வாக்கிங் செல்லும் நேரம் முழிப்பு வந்தது. முகம் கழுவி கீழே வந்தனர். சித்ரா குழந்தைகளைத் தவிர மற்றவர் விழித்து இருந்தனர். பில்டர் காபியின் மணம் மூக்கைத் துளைத்தது. அடுப்படியில் சென்று இருவருக்குமாக எடுத்து வந்தாள்.

 முன் ஹாலில் மாமாவுடன் உட்கார்ந்து இருவரும் காபி அருந்தினர். அமிர்தாவும் அவர்களோடு சேர்ந்துக் கொண்டாள். முருகானந்திடம் அமிர்தாவின் வேலை அவள் திறமையைப் புகழ்ந்து பேசினான் ரகுவீர்.

 சந்தனப் பாண்டி, வயலுக்குச் சென்று பார்த்து விட்டு வந்தான். "அப்பா மருது ரொம்ப முரடா எகுறுது, சேர விடனும் போல, பார்த்துப் பேசிட்டு வந்தேன். தேங்காய் லோடு ஏற்றி இன்றைக்கு அனுப்பனும்." என விவரங்களை அப்பாவோடு பகிர்ந்தான்.

 ரகுவீரைப் பார்த்து, "தம்பி, ஆயில் மசாஜ்க்கு ஆளை வரச் சொல்லியிருக்கேன் , காபி குடிச்சிட்டு வாங்க. நான் பாய்லரில் தண்ணீர் போடுறேன்." என்றான்.

 "அத்தான், வீரூஜிக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை, உடம்புக்குச் சேராமல் போயிடும்." என அவசரமாக மறுத்தாள்  ஜானகி.

இதற்கு முன் அத்தான்கள் இரண்டும் எண்ணைக் காப்பு சாற்றிய ஐயனார் போல் உட்கார்ந்து, அக்காள்கள் இருவரும், கடலை மாவு சீயக்காய் என முதுகு தேய்த்ததையும் பார்த்து இருக்கிறாள். மாதம் இருமுறை கட்டாயம் இது போல் நடக்கும்.

 "ஏத்தா, இளரத்தம் இதெல்லாம் சேராமல் போகுமா, நம்ம வீட்டுக்கு வந்ததைத் தம்பி மறக்கக் கூடாதுல்ல நீங்க போங்க தம்பி." என்றார் முருகானந்தம். இவள் ஏன் வேண்டாம்னு சொல்லனும் என ரகுவீர் யோசித்தான். அவள் முகத்தைத் தூக்கி வைக்கவும், "வேண்டாம் ப்ரோ, ஜானு சொல்ற மாதிரி சேரலைனா?" என்றான்.

 "அவள் கிடக்கா நீ வாப்பா, நீ உம்புருஷனுக்கு ஒண்ணும் செய்ய வேண்டாம், நான் எம் மகனைக் குளிக்க வச்சுக்குறேன். சிவகாமி பேத்தியாக்கு வர வர சோம்பேறித் தனம் ஜாஸ்தி ஆயிடுச்சு." என நொடித்தபடி சென்றார்  சுந்தரவள்ளி.

 "தம்பி, செயின் மோதிரம் எல்லாம் ஜானகியிடம் கழட்டி கொடுத்துட்டு வாங்க, நீ தம்பிக்கு மாற்று உடை எடுத்துட்டு வா!" என்றான் சந்தனப் பாண்டி. ரகுவீரை கட்டாயப் படுத்தி இழுத்துச் சென்றான்.

 புழக்கடையில் ஒரு ஸ்டூல் போட்டு இடுப்பில் துண்டோடு உட்கார வைத்தனர். ரகுவீருக்கே சங்கடமாக இருந்தது, அதனால் கவிதாவும் அந்தப் பக்கம் போகவில்லை. அண்ணன் தம்பி இருவரும் உட்கார்ந்து கதைப் பேசிக் கொண்டு இருந்தனர்.

 மாடிக்குச் சென்ற ஜானகி, ஜன்னல் வழியே கீழே பார்க்க ரகுவீர் துண்டோடு அமர்ந்திருந்தது தெரிந்தது. முதலில் பார்க்கத் தயங்கினாள், பின்னர் ரகுவீர் முதல் நாள் இரவில் கேட்டது நினைவு வந்தது. "அங்க கிடந்தவனும் வீருவும் ஒன்றா???" என அவன் குரல் கேட்டது.

 ஜானகி தவித்தபடி நின்றாள், கண்கள் பார்த்ததை மனதில் பதியாமல் இருந்தது. ஏதோ விழுந்த சத்தத்தில் தன்னிலை வந்தவள் முன் ரகுவீருக்கு செய்யப்பட்ட மசாஜ் கருத்தில் பட்டது. மசாஜ் செய்பவரின் செயலை கவனித்தாள், அதிலேயே கண்கள் தன்னைப் போல் வீருஜியை சைட் அடிக்க ஆரம்பித்தாள். 

ரகுவீர், உதய்பூரில் ஒரு முறை சட்டையைக் கழட்டி ஆர்ம்ஸை காட்டியது நினைவில் வரக் கன்னங்கள் செம்மையுற்றது. தன்னைப் போல அன்று இவள் திட்டியதும் நினைவில் வந்தது. 'இவரைப் பார்க்கத்தான் தவம் இருந்தமாக்கும், விவஸ்தை கெட்டவன்.' என அமரேனிடம் சொன்னதும் நினைவில் வந்தது.

  'இப்ப என்னடி செய்யிற என மனசாட்சி' கேள்வி எழுப்பியது. என் புருஷன் நான் பார்க்காமல் எவப் பார்ப்பாள் என மனதிடம் சண்டையிட்டவள், புழக்கடைப் பக்கம் தூரத்தே நின்று சிலர் ரகுவீரை பார்ப்பது தெரிந்தது. அதற்குள் பொசசிஸ்னெஸ் வந்தது. அவனுக்கு மாற்றுத் துணியோடு கீழே இறங்கி விட்டாள்.

 இவள் போகும் போது, உடலெல்லாம் உருவி விட்டு, கால்களைத் தேய்த்துக் கொண்டிருந்தார் மசாஜ் செய்பவர். "ப்ரோ சூப்பரா இருக்கு , சுகமா இருக்கிறது தாங்க்ஸ் ப்ரோ." எனச் சந்தனப் பாண்டியைப் பாராட்டிக் கொண்டிருந்தான் ரகுவீர்.

 ஜானகி கீழே வந்தவள் புழக்கடை தாண்டி வெளியே இருந்த கதவை அடைத்தாள். அத்தையும், மகன்களும் சிரித்தனர். இவள் முறைத்தபடி படியில் வந்து உட்கார்ந்து , ரைட் ராயலாக ரகுவீரைப் பார்க்க ஆரம்பித்தாள். ரகுவீரும்

களஞ்சியம்
69- ஜானகியின் முயற்சி

 

 அன்பின் ஆழத்தை நாமறிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு பிரிவு போதும், அதுவும் சூழ்நிலை கைதியாகித் தவிக்கும் சூழல், இராமாயணத்தில் ஊர்மிளை பதினான்கு வருடம் அனுபவித்த பிரிவாற்றாமையை ஒரு ஆசிரியர் விளக்கும் போது, ஊர்மிளை மேல் கருணை வரும். இது அவ்வளவு பெரிய துயர் எல்லாம் இல்லை நம் ஜானகிக்கு. ஆனால் ஜானகி மனதில் ஒரு பயத்தை உண்டு செய்தது மட்டும் உறுதி. சிவகாமி அப்பத்தாவும், தெய்வா அம்மாவும் செய்த போதனைகள், கணவனோடு சேர்ந்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தியது.

சிவகாமி, ஒரு படி மேலே போய்ச் சத்தம் போட்டார். இதற்கெல்லாம் ஜானகி விடை தேடினாள். அது ஒரே புள்ளியில் வந்து நின்றது. அதற்கு மனம் ஒத்துக் கொள்ளவும் இல்லை. என்ன செய்யக் காத்திருக்கிறாள் ஜானகி. அவளுக்கே தெளிவில்லை.

ரகுவீர், ஜானகியின் அந்தக் காலைப் பொழுதை அழகாக்கினான். அழுகையோடு பிரிவை ஆற்றிக் கொண்டவள், இனிமே ஓரிரு நாட்களானாலும் அவனோடே பயணிப்பேன் என்ற அறிவிப்பையும் தந்தாள்.

ஜானகியோடு ரகுவீர் கீழே இறங்கி வந்தான். ஆளாளுக்கு இதுதான் உங்கள் ஊரில் இரண்டு நாள் ட்ரிப்பா, எனக் கலாய்த்து, என்ன இப்படிப் பண்ணிட்டிங்க எனக் கோவித்து, ஏன்பா இத்தனை நாளாயிற்று எனக் கரிசனையாக, எல்லாம் நல்லபடியா முடிந்ததா, என மாமனார்களும் விசாரித்து முடித்தனர்.

ஜானகியை, கார் பார்க்கிங் பகுதிக்கு, கூட்டிட்டுப் போய்க் காரைக் காட்டினான். "பூஃபாஷா ஆர்டர் பண்ணது. இது, இது மாற்றியிருக்கு, இது சேர்த்திருக்கு." எனச் சொல்லிக் கொண்டிருந்தான்.

"இதில் தான் மும்பையிலிருந்து வந்தீங்களா?" என நெற்றிக் கண்ணை திறந்தாள் ஜானகி."என்னைப்  பார்த்தா கிறுக்கன் மாதிரி இருக்கா?. நானே என் லுகாயியைப் பார்க்கனும்னு தவிச்சுப் போய் வந்தேன்." என அவள் நெற்றியில் முட்டியபடி சொன்னான்.

 "கார் ஒரு வாரம் முன்னாடியே வந்திருச்சு. நான் தான் லேட்!" என்றான். அமிர்தா, ஆபிஸ் வேலைகளைப் பற்றிப் பேசத் தயாராக வந்தாள். " இரண்டு பேரையும் கொன்னுடுவேன். வீரூஜி இப்ப தான் வந்திருக்காங்க போடி!" என்றாள் ஜானகி.

ரகுவீர் சிரித்து விட்டு, "நான் அப்புறம் கேட்டுக்குறேன் நீ வச்சுருடா அம்ரூ." என்றான்.

"அண்ணா, அப்பா, அம்மா விருந்துக்குக் கூப்புடுறாங்க. நிறையத் தடவை கேட்டுட்டாங்க. வாங்க அண்ணா, எங்க ஊரில் இருப்பது உங்களுக்கு வித்தியாசமான அனுபவமா இருக்கும்." என்றாள்.

"இப்ப தானடா வந்திருக்கேன், மானு, தேனு லீவை ஒட்டி வர்றோம்." என்றான் ரகுவீர். "ஆமாம்டி நாங்க தோப்பு வீட்டில் தான் தங்குவோம். அத்தை கிட்டச் சொல்லி சுத்தம் பண்ணி வைக்கச் சொல்லு." என்றாள்.

"வீரூஜி, மூன்று கண்டிசன் ஞாபகம் இருக்கா. அத்தை ஊரில் தான் இளவட்டக்கல் இருக்கிறது. மாட்டு வண்டி எல்லாமே இருக்கு. சவாலுக்கு ரெடியா?" என்றாள்.

"இவ்வளவு தானடி உன் ஆசை ஓகே டன். செய்து முடிச்சா என் லுகாயி எனக்குக் கிடைப்பாளா?" எனக் கண்களால் கேட்டான் ரகுவீர். அவன் பார்வையில் ஜானகி மௌனமானாள்.

காரிலிருந்து சில பொருட்களை எடுத்து வந்த ரகுவீர், பாம்பே ஸ்வீட்ஸ் முதலில் கொடுத்தான். வித்தியாசமான சாக்லேட் கலெக்ஷன் கொண்ட பாக்ஸ், பெண்கள் நால்வருக்கும் தனித்தனியாக  கொடுத்து விட்டு. இன்னும் நான்கு பாக்ஸை தேனு மானுவுக்காகப் பிரிட்ஜில் வைக்கச் சொன்னான்.

மயூரிக்கு ஒரு பார்சல் சாசிஷா கொடுத்தாங்க. ஜானு இது உனக்கு மாஷா கொடுத்தது. பூபி இது உங்க மாஷா கொடுத்தது. மஞ்சரியிடம் ராஜ் தந்த ரிடர்ன் கவர். என அவரவர்க்குப் பிரித்துக் கொடுத்து, கதை பேசியே அந்த நாளை கடத்தினான்.

மதியம் சாப்பிட்டு, ஓய்வெடுக்க அறைக்குச் செல்லும் போதும் ஜானகி அவனிடம் ஒட்டிக் கொண்டாள். வீரூஜி, வீருஜி என அழைத்துக் கதை பேச அவளுக்கு அவ்வளவு விசயம் இருந்தது. அவனும் படுக்கையில் சாய்ந்து கொண்டே 'ம்' கொட்டிக் கொண்டே, பிரயாண களைப்பு, இத்தனை நாள் ஓய்வின்றி உழைத்தது எல்லாம் சேர்ந்து, மனைவியின் அருகாமையில் நிம்மதியாக உறங்கி விட்டான். அவனையே பார்த்திருந்த ஜானகி, மனதில் ஓர் முடிவு செய்தாள்.

 இரவு உணவுக்கு வீட்டில் அனைவரும் கூடி இருந்தனர். அமுதன், பாலன், மயூரி, மஞ்சரி, அமிர்தா ஆகியோருடன் கச்சேரி களைகட்டியது. அனைவரும் பாலனை ஓட்டிக் கொண்டு இருந்தனர். அமிர்தாவிடம் ஸ்கூல் பையன் போல் கைக்கட்டி நின்றதாக மஞ்சரி கேலி செய்தாள்.

 

அமிர்தா, "ஆமாடி, நீ ராஜ் அண்ணாவை படுத்துற பாடு எனக்குத் தெரியாது." என்றாள். "நான் வேலை மெனக்கெட்டு, ஜீஜூஷா கிட்டப் பேச்சு வாங்கி, ஒரு கவரை கொடுத்து விட்டால், ராஜ் பேபி வேலை பிசியில் அதைப் பார்க்க கூட இல்லை." என்றாள் மஞ்சரி "அப்படி என்னடி கொடுத்த?" என்றாள் மயூரி.

"போட்டோ கொலாஜ். எங்கள் இரண்டு பேரோடதும் சேர்த்து, இவர்கள் மேரேஜில் எடுத்த எல்லாத்தையும் சேர்த்து, டே ஃபுல்லா உட்கார்ந்து செய்தேன்." என்றாள்.

"அப்ப எம்பிஏ ப்ராஜெட் வேலை ஒண்ணும் நடக்கிறது இல்லை. என் சிஸ்டர்ஸ் இரண்டு பேரும் தான் சின்சியர்னு சொல்லு." என்றான் ரகுவீர்.

"ஜீஜூ, அதென்ன அப்படிச் சொல்லீட்டிங்க, ஜானி இல்லாமல், உங்கள் காண்ட்ராக்ட் கிடைச்சிருக்குமா, அதுக்காக இரத்தம் சிந்தி, உங்களை ஷாதி பண்ணி எவ்வளவு தியாகம் பண்ணியிருக்கா. நான் மட்டும் சும்மாவா, உங்கள் பஹனா படிக்க அவள் கூடக் குப்பை கொட்டுகிறேன். நான் வரலைனா அவளை இங்கே அனுப்பி இருப்பீங்களா. அமுதன் பாயீ யோட சகாயீ தான் நடந்திருக்குமா?" என்றாள் மஞ்சரி.

"ஏ சோரி, என் வீருவை கட்டிக்கிட்டது, ஜானகி செய்த தியாகமா? அவள் தான்  என் அண்ணன் மகனைப் பார்த்து உருகி நின்னா!" என்றார் ராகினி. ரகுவீர் அருகில் அமர்ந்து அவனை அணைத்துக் கொண்டே பேசினார்.

ஜானகி தன் தந்தை பக்கத்தில் அமர்ந்து கையைப் பிடித்துக் கொண்டு, "அப்பாஜான் பார்த்திங்களா, அண்ணன் மகன் தான் பெரிசாம்." என வம்பு பேசினாள்.

"ஆமாம் போடி, நீங்க எல்லாரும் என் வாழ்க்கையில் வரும் முன்னே வந்தவன் என் வீரூ." என்றார் ராகினி. "அம்மா, 'வீரூ' க்கு அப்புறம் தான் உங்கள் அப்பாஜானே, உன் மாதாஜிக்குச் சொந்தம்." என அவரும் வம்பிழுத்தார்.

 ரகுவீர் சிரித்துக் கொண்டான். "பொறாமை படாதே மிர்ச்சி டியர்." என்றான். அமுதன், "அப்பப் பிறந்த வீட்டு ஆளுங்கள் வந்துட்டா, பெற்ற புள்ளைங்க இரண்டாம் பட்சம், ஏம்மா?" என அவன் பங்குக்குப் பேசினான்.

 "ஸுன்யேஜி, எங்கள் புவாஷாவை எதுக்கு வம்பு பேசுறீங்க. இவ்வளவு நாள் உங்களைத் தானே கொஞ்சுனாங்க?" என்றாள் மயூரி.

 "ஆமாம் அமுதா, மாதாஜி மயூரியை கொஞ்சுவாங்க, அவள் உனக்கு ட்ரான்சர் பண்ணுவா, இனி நீ மாதாஜியோட நேரடி தொடர்பு கிடையாது." என்றாள் ஜானகி. "ஏய், மிர்ச்சி உனக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் குதர்க்கமா யோசிக்கத் தெரியும்." என்றான் ரகுவீர்.

 இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, பக்க வாட்டு வாசலில் மருதன் வந்து நின்று ஜானகியை சைகையில் அழைத்தான். அவள் பேச்சை மயூரி, மஞ்சரி பக்கம் திருப்பி விட்டாள். மஞ்சரி பிடித்துக் கொண்டு பேசினாள்.

 ஜானகி யார் கருத்தும் தன் மேல் படாத வண்ணம், மருதன் இருக்குமிடம் சென்றாள். "தங்கச்சிம்மா, நீங்க சொன்ன இடத்தில் பார்சல் வாங்கி அறையில் வச்சுட்டேன்." என்றான். "சரிண்ணா!" என அவனை அனுப்பினாள்.

தெய்வாவிடம் சென்றவள், "அம்மா பசிக்கிது, இப்பவே சாப்பிட குடுங்க." என்றாள். சீக்கிரம் சாப்பிடும் பழக்கம் உடைய தாத்தா அப்பத்தாவோடு சேர்ந்து அமர்ந்தாள்.அம்மா, "பால் சாதம் போதும்." என்றாள். அப்பத்தாவின் பார்வை ஜானகியை அளந்து கொண்டிருந்தது. ஜானகி படபடப்பாகத் தான் இருந்தாள்.

"ஜானகி கண்ணு, இதற்கு எல்லாம் பயப்படக் கூடாது." என அவளின் முழு விசயம் தெரியாத அப்பத்தா தேற்றினார். தாத்தா இயல்பாக நீண்ட நாள் பிரிந்த தம்பதி எனப் புன்னகையோடு நினைத்துக் கொண்டார். ஜானகி சாப்பிட்டதாகப் பெயர் பண்ணி தன் அறைக்குச் சென்று விட்டாள்.

 கூடத்தில் அரட்டை சுவாரஸ்யமாகச் சென்றது. ரகுவீர் மஞ்சரியை வாரிக் கொண்டு இருந்தான். ஒரு மணி நேரம் சென்று இரவு உணவுக்கு வந்தனர். ரகுவீர் ஜானகியைத் தேடினான்.

 "ஜானகி சாப்பிட்டு மேலேப்  போய்." எனத் தெய்வா அவனிடம் தெரிவித்தார்.

"நீங்க இல்லாத போது, இப்படியே சாப்பிட்டு பழகிட்டாள்." என்றாள் அமிர்தா.

 ரகுவீருக்கு ஏதோ சரியில்லை எனத் தோன்றியது. சாப்பிட்டவுடன் ராகினி ஃப்ரூட் சாலட் கொடுத்து உட்கார வைத்து விட்டார். எல்லாரும் அதில் அரை மணியைக் கடத்தி பின் மாடி ஏறினர். ரகுவீர் மெதுவாகவே ஏறினான். மதியம் தூங்கியது அவனுக்குத் தூக்கம் வரவில்லை.

 மஞ்சரி, மயூரி, அமிர்தா சென்று விட்டனர். அமுதன், பாலன் ரகுவீருக்காகத் தயங்கி நின்றனர்.

"நீங்க இரண்டு பேரும் போங்க. இந்த நேரம் தான் வொர்க் முடிச்சே  வருவேன். மும்பை ட்ராபிக் பற்றித் தான் உங்களுக்குத் தெரியுமே?" எனவும், குட் நைட்டோடு தங்கள் அறைக்குச் சென்றனர்.

 ஜானகி, முதலில் அறையைப் பூட்டி வைத்திருந்தவள், ரகுவீர் சத்தம் கேட்கவும், உள் தாழ்ப்பாளை மட்டும் நீக்கி விட்டுப் படபடப்பாகத் தன்னைப் பெரும் மூச்சு எடுத்துச் சமாளித்துக் கொண்டு நின்றாள்.

 ரகுவீர் கதவைத் திறந்து உள்ளே வந்தான், வாசனை மெழுகுவர்த்தி அங்கங்கே ஒளிர்ந்தன. அறையில் மெல்லிய பெர்ப்யூம் அவனின் ரசனைக்கேற்ப இருந்தது. ரோஜா இதழ்களால் படுக்கையை அலங்கரித்து வைத்திருந்தாள். மிதமான ஏசியின் சப்தம் மட்டுமே மன்மதனின் வாசஸ்தலமாக இருந்தது ஜானகி தேவி அறை.

 ஜானகியை மட்டும் காணவில்லை. ரகுவீர் யோசனையோடு, சிறிதே அதிர்ந்த படி அறைக்குள் வந்து தாழிட்டான். படுக்கையறை ரகசியம் கணவன் மனைவிக்குள் இருக்கும் வரை மட்டுமே மதிப்பு. எனவே கதவை தாழிட்டான்.

 முன்னறை தாண்டி படுக்கை அறையிலும் அவள் இல்லை. அதைக் கடந்து பால்கனியில் பார்த்தான் அங்கும் இல்லை. "ஜானு!" எனக் குரல் கொடுத்தான்.

"வர்றேன்." என்ற அவளின் குரல் பதட்டமாக வந்தது. ட்ரெஸ்ஸிங் அறைக் கதவைத் திறந்து பார்த்த ரகுவீர் அவள் கோலம் கண்டு அதிர்ந்து நின்றான்.அவனை, அவளிடம் ஈர்க்கும் விதமாக, வளைவுகள் தெரியும் இரவு உடை. ஸ்பாட் லைட் மட்டுமே எரிந்தது. கண்ணாடியைப் பார்த்து அவனுக்கு முதுகு காட்டி நின்றாள். ரகுவீர் கண்ணாடியை உற்று நோக்கினான். கைகளைப் பிசைந்து கொண்டு, அவஸ்தையாக முகம் வேர்த்து இருந்தது.

 மீண்டும் குரல் கொடுத்தான், "ஜான்வி!" என நீண்ட நாள் பின்பு நீட்டி அழைத்தான். அவளுக்கு அது மனதில் பதியவில்லை. தன்னை அவசரமாகச் சரி செய்து கொண்டு, அவனை நோக்கித் திரும்பி வந்தாள்.

 "வீரூஜி, நான் ரெடி." என அவனிடம் வந்து முகத்தை அவனுள் புதைத்து ஒட்டிக் கொண்டு சொன்னாள். பதட்டத்தை மறைக்கவே தன்னை அணைக்கிறாள் என்பதை உணர்ந்த ரகுவீர், எதுவரை செல்வாள் பார்ப்போம் என அமைதியாக இருந்தான். அவனிடமிருந்து எதிர்வினை இல்லாததில் குழம்பிய ஜானகி, "வீரூஜி நான் ரெடி!" என்றாள். அந்த அறை டியூப் லைட்டைப் போட்டான் ரகுவீர். பளிச்சென அவள் மேனித் தெரிய கூனி குறுகிய ஜானகியின் மேனி சில்லிட்டது.

 அவளைத் தூக்கி வந்து கட்டிலில் போட்டான் ரகுவீர். அவள் கண்ணை இருக்க மூடிக் கொண்டாள். கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்த ரகுவீர், ஜானகியை ஓங்கி ஓர் அறை விட்டான். ஜானகி அதிர்ந்து கன்னத்தைப் பிடித்துக் கொண்டாள். கண்களிலிருந்து கண்ணீர் அருவியாகக் கொட்டியது.

 "ஏண்டி இப்படிப் பண்ண, நான் உன்னைக் கேட்டனா. எனக்கு உன் உடம்பு தான் வேணும்னு நினைச்சியா?" எனக் கண்களில் தீ பறக்க, அவள் தாடையை இறுக்கிப் பிடித்து அவள் கண்களைப் பார்த்துக் கேட்டான்.

 "எனக்குத் தான் வேணும் வாங்க." என என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் அவன் சட்டைக் காலரைப் பிடித்துத் தன் மேல் அவனை இழுத்தாள். அவள் செய்கையை எதிர் பாராதவன், அவள் மேலே விழுந்தான். அவள் சரியான மனநிலை இல்லை என்பதை உணர்ந்த ரகுவீர். அவள் கை காலை அசைக்க முடியாமல் இறுக்கமாகப் பற்றினான்.

 ஜானகியின் வேகமெடுத்த மூச்சுக்கள் மெல்ல அடங்க, அப்படியே மயங்கினாள். அவளை அணைத்த வண்ணம் தூக்கி உட்காரவைத்து. ப்ளாஸ்கில் இருந்த பாலை ஊற்றி, அவள் கன்னம் தட்டி மெல்லப் புகட்டினான். அப்படியே அணைத்திருந்தவன், அவள் தூங்கவும் படுக்கையில் கிடத்தினான்.

 படுக்கை அறை மெழுகு திரிகளை அணைத்தவன், சிதறிக் கிடந்த பூக்களைக் கூட்டி அள்ளி டஸ்ட்பின்னில் போட்டான். ஜானகி செய்த ஏற்பாடுகளின் சுவடு தெரியாமல் அறையை மாற்றியவன். அவளின் உடையையும் மாற்றி, வழக்கம் போல் அவளை மார்பில் அணைத்துக் கொண்டு தூங்கினான். அவள் உடல் அவ்வப்போது அதிர்ந்தது.

 ரகுவீருக்கு மூடிய கண்ணில் தூக்கம் என்பதே இல்லை, கண்ணீர் தான் வெளியேறியது. இத்தனை நாள் எதை மனதில் நினைத்துச் சிரமப்பட்டாளோ என வேதனையாக இருந்தது. இனி யாரை நம்பியும் ஜானகியைத் தனியாக விடுவதில்லை என முடிவெடுத்தான். வெகுநேரம் சென்று அவளின் மன உளைச்சலைத் தனதாக்கிக் கொண்டு, அசதியில் தன்னை மறந்து தூங்கிப் போனான்.

 காலையில் அரைத் துயில் களைந்த ஜானகிக்கு முதலில் எதுவும் தோன்றவில்லை. பக்கத்தில் படுத்திருந்த வீரூஜியைக் கட்டிக் கொண்டு முத்தம் கொஞ்சி மீதி தூக்கத்தைத் தொடர்ந்தாள்.

 இருவரும் எழ ஏழு மணியாகி இருந்தது. ஜானகிக்குத் தலை கொஞ்சம் பாரமாகத் தோன்றியது. எழுந்தவள் தடுமாற ரகுவீர் பிடித்துக் கொண்டான். அவன் கைபிடியில் முகம் கழுவி ப்ரஸ் செய்தாள். "வீரூஜி படுத்துக்கவா, கொண்டு போய்த் தள்ளுது." என்றாள்.

 "வா." என அழைத்து வந்து படுக்க வைத்தான். ராகினியிடம் தனக்குக் காபியும் அவளுக்குப் பாலும் கொடுத்து விடச் சொன்னான். அழகு கொண்டு வந்து கொடுத்தாள். ஒரு நிமிடம் என அவளைச் சைகையில் நிற்கச் சொன்னவன், டஸ்ட்பின்னைக் காட்டி எடுத்துப் போகச் சொன்னான். பால்கனியில் நின்று டாக்டரிடம் போனில் பேசினான்.

 காலை உணவை மேலே அனுப்பச் சொன்னான். ராகினி என்னவெனக் கேட்க வந்தார். அவரைப் பேசி சமாளித்தவன். "புவாஷா இன்னைக்கு மதியத்துக்கு மேல் ஸ்கூலுக்குப் போங்க. இளையவர்கள் கிளம்பட்டும். பூபாஷா, மாமா அத்தை, தாத்தா அப்பத்தாகிட்ட பேசனும். நானே ஜானுவை தூங்க வச்சிட்டு வர்றேன்." என்றான்.

"ஏன் வீரூ, ஏதாவது பிரச்சனையா?" எனக் கலக்கமாகக் கேட்டார் ராகினி. "ஒன்றும் இல்லை, நான் வர்றேன். " என்றான்  ரகுவீர்.

 காலை ஒன்பது மணி அளவில் ஜானகி சாப்பிட்ட பின், இயல்பாகக் கம்பெனியில் நடந்த விசயங்களைப் பேசிக் கொண்டு இருந்தான். தலைவலிக்கு மாத்திரை என அதையும் போட வைத்தான். அவள் தூங்கிய பின் கீழே வந்தான்.

அழகு கொண்டு வந்த டஸ்ட்பின்னை தெய்வா பார்த்திருந்தார், எனவே அவருக்குக் கொஞ்சம் பதட்டம் இருந்தது . கெஸ்ட் ரூமிற்க்கு அவர்கள் அனைவரையும் அழைத்த ரகுவீர், ஜானகி எழுந்தால் சொல்ல வென அழகை மாடியில் வேலைப் பார்க்கச் சொன்னான்.

 மூன்று தம்பதியினரும் அங்கே அமர்ந்திருந்தனர். ரகுவீர் மௌனமாக இருந்தான். பின்னர் ஒரு பெரும் மூச்சுடன் பேச ஆரம்பித்தான் அப்பத்தாவிற்கு மட்டுமே மொழி பெயர்க்க வேண்டிய அவசியம் இருந்தது.

சிவகுரு நாதன், மருமகன் என்ன சொல்லப் போகிறாரோ எனக் கவலையாகப் பார்த்திருந்தார்.

"நான் சொல்றதை யாரும் தப்பா எடுத்துக்க வேண்டாம், உங்கள் மனசுக்குக் கடுமையான வார்த்தையாகப் பட்டால் அதுக்காக மன்னிப்பும் கேட்டுக்குறேன். எனக்கு வேற வழியில்லை." என பீடிகையோடு ஆரம்பிக்க,

"எதுவாக இருந்தாலும் தயக்கமில்லாமல் சொல்லுங்க பேராண்டி, நம்மவங்க  கிட்டப் பேச என்ன தயக்கம்?" என்றார் தாத்தா. நேரே விசயத்திற்கு வந்தான் ரகுவீர். 

"ஜான்வி, நீங்க நினைக்கிற மாதிரி நல்ல மனநிலையில் இல்லை. அவள் கடத்தப்பட்ட போது , உடலளவில் எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் மனதளவில் பாதிக்கப்பட்டாள். இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் ஷாதியே பண்ண மாட்டான்னு, அவள் யோசிக்கும் முன்ன ஷாதி பண்ணிக்கிட்டேன்.

 புனிதமான தாம்பத்தியத்தைப் பற்றி அவள் மனதில் அசிங்கமான நினைவுகளைப் பதியவச்சுட்டான் ரெனாவத்." எனச் சொல்லும் போது ரகுவீருக்கு மனதில் வலியும், ராகேஷ் மேல் கோபமும் ஏற்பட்டது. சிவகுருவைத் தவிர மற்றவர்கள் அதிர்ந்தார்கள்.

 "அவளுக்கு நடந்தது, மெண்டல் ஹராஸ்மெண்ட். இதன் பாதிப்பு அவள் தாம்பத்தியத்தை நினைத்தாலே பயப்படுறா. நான் அவளை ஹேண்டில் பண்ணிக்கிட்டேன். என் மேல் இருக்க அளவு கடந்த காதல், என்னுடைய அருகாமையை ஏத்துகிறா. அந்த நம்பிக்கையை நான் உருவாக்கி ,அவள் மனசுல பதிய வச்சிருக்கேன்.

 நீங்கள் எல்லாரும் எங்கள் மூத்த தலைமுறை, அவள் விசயத்தைச் சாதாரணத் தயக்கமா பார்த்திருக்கீங்க. அது இல்லை இது. 'இந்தக் கடத்தலுக்கு முன்னாடின்னா, தாலி கட்டாமல் கூட உன் பிள்ளையை, என் பாக்கியமா நினைத்து வயிற்றில் சுமந்திருப்பேன் இப்ப எதுக்கும்  பிரயோஜனம் இல்லாமல் இருக்கேன்னு என்கிட்டையே சொல்றா." எனும்போது ரகுவீர் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.

  சிவகுருவும், ராகினியும், மருமகனை  அணைத்துக் கொண்டனர். அங்கிருந்த அத்தனை கண்களிலும் கண்ணீர் வந்தது. தன்னைச் சமாளித்துச் செருமிக் கொண்டவன், "மும்பையில் இருந்தால், மாஷா எதார்த்தமா, குழந்தை, குட்டின்னு சொல்லும் வார்த்தையும் அவளைக் காயப்படுத்தும்னு தான் இங்க கூட்டிட்டு வந்தேன்.

 நான் ஊருக்கு நிஜமாகவே இரண்டு நாளில் வந்திடலாம்னு நினைச்சுதான் போனேன். தொழில் பார்க்க வேண்டியதாகிடுச்சு. சரி தாம்பத்தியம் பத்தின  கவலை இல்லாமல் இருப்பானு நினைச்சேன் . ஆனால் இல்லை, அது இல்லாததால் நான் அவளை விட்டுட்டுப் போனதாக நினைக்கிறா. நேற்று நைட், தன்னையே ஏமாற்றிக் கிட்டு தயார்னு  வந்தாள். ஆனால் அதில் ஸ்ட்ரெஸ் ஜாஸ்தி ஆயிடுச்சு." 

"மறுபடியும் சொல்கிறேன், தப்பா நினைக்காதீங்க, யாரும் அவளுக்கு அட்வைஸ் பண்ணாதீங்க. அது அவள் உயிருக்கே ஆபத்தாக முடியும்." என்றவன் ,

 "என்னால் அவளுக்கு ஏதாவது வந்திருமோன்னு நினைக்கிறதே கூடத் தாங்க முடியலை. இந்த வீடு அவள் பலம்னு கூட்டிட்டு வந்தேன். இல்லைனா  இதுக்குச்  சம்பந்தமே இல்லாமல் வெளிநாட்டில் தான் செட்டில் ஆகனும் ." என முகத்தை மூடி அழுதான்.

 ரகுவீர் சொல்லச் சொல்ல, அங்கிருந்த அவளது பெற்றவர்களின் துடிப்பு அதிகரித்தது. சண்முகமும், தெய்வாவும், எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியம் இப்படி ஒரு மருமகன் கிடைக்க என அதிசயித்தனர்.

 தாத்தா சிவபரங்கிரி தன் அனுபவத்தால் பேசினார், அப்பத்தா யோசித்துக் கொண்டிருந்தார்.

"பேராண்டி நீங்க சொல்றது சரிதான். நாங்கள் யோசிக்காத பிரச்சினை எங்கள் பேத்தியாவுடையது. ஆனால் அதுக்கும் ஒரு முடிவு வேணுமே. தன்னால் சரியாகட்டுமானு கையைக் கட்டிக்கிட்டு உட்கார்ந்து இருக்க முடியாது. இயல்பான தாம்பத்தியம் உங்களுக்குள் நடக்கும் வரை இப்படியே பயந்துகிட்டே இருப்பீங்களா?" என்றார்.

 "டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகலாமே மாப்பிள்ளை?" என்றார் சண்முகம். "மும்பையில், அவளுக்கே ட்ரீட்மெண்ட் னு தெரியாமல் கூட்டிட்டுப் போனேன். அப்சர்வேஷன் தான் இருக்கா." என்றான் ரகுவீர்.

 "மதுரையில் காட்டலாம், குரு யாராவது டாக்டரைப் பார். மூன்றாம் மனிதர் பேசினால் சரியா வரும்னா அவங்களைத் தான் கூப்பிடனும்." என்றார் தாத்தா.

 "ஸுன்யேஜி, ஸ்கூல்க்கு வர்ற  கவுன்சிலர் சின்னப் பிள்ளையில் இருந்து அவளுக்குப் பழக்கம். அவர்களை வரச் சொல்லுவோம்." என்றார் ராகினி.

 "அதுவும் சரிதான் மா. மாப்பிள்ளை, அவங்களுக்கு ஜானகியின் குணமும் தெரியும். நீங்க இரண்டு பேரும் ஸ்கூலுக்குப் போற மாதிரி போங்க. அவளை அவங்ககிட்ட விட்டுட்டு, நீங்க வெளியே இருங்கள்." என யோசனை சொன்னார் சிவகுரு. எல்லாருக்கும் இதுவே சரி எனப்பட்டது.

"மாப்பிள்ளை, அண்ணன் வாழ்க்கையில் அண்ணி வந்ததை, அதிசயமானப் ப்ராப்தம்னு சொன்னோம். அதை விட நீங்க எங்கள் ஜானகிக்குக் கணவனா வந்தது எங்கள் பாக்கியம்." என ரகுவீர் கைகளைப் பிடித்துக் கொண்டு கலங்கினார் சண்முகம்.

 சிவகாமி அப்பத்தா எதுவுமே சொல்லவில்லை, ரகுவீர் அவர்களிடம் சென்று, "நான் சொன்னது உங்களுக்குப் புரிஞ்சதா" என்றான்.

"புரிஞ்சது பேராண்டி, இதிலிருந்து இரண்டு நாளில் வெளியே வரும் தைரியம், அறிவு எல்லாம் என் பேத்திகிட்ட இருக்கு . சீக்கிரம் வந்துடுவா." என்றார் சிவகாமி. ராகினி மொழி பெயர்த்தார்.

"நீ தமிழ் கத்துக்கப் பேராண்டி, நீ பேசறதுக்கெல்லாம் உங்கள் அத்தை முகத்தைப் பார்க்க முடியாது." என்றார் அப்பத்தா. ரகுவீர், இதே போல் தமிழ் கற்றுக் கொள்ளச் சொன்ன தன் மனைவியை நினைத்தும்  சிரித்துக் கொண்டான்.

ராகினி, சிவகுரு கவுன்சிலரைப் பார்க்கக் கிளம்பினர். சண்முகம் ரகுவீரோடு நடந்தவர் தயங்கி, "மாப்பிள்ளை, இராத்திரி நேரம் நீச்சல் குளத்துக்குப் போகும் போது கவனமா போங்க. மலைப்பிரதேசம், விதவிதமா பாம்பு திரியும்." என்றார். ரகுவீர் அதிசயமாகப் பார்த்தான்.

  அவர் ஒரு முறுவலோடு, "நீங்க போய்ட்டு வந்து படுக்கும் வரை நாங்கள் முழிச்சு  இருப்போம். அண்ணன் ரூம் லைட்டும் அப்புறம் தான் அணையும்." என்றார்.

 "நான் ரகசியமா போறதா நினைச்சேன், வீட்டில் எல்லாருக்கும் தெரியுமா?" என்றான்."அமுதன் தான், அந்தப் பக்கம் இன்னும் இரண்டு லைட்டை சேர்த்துப் போட சொன்னான்." என்றார்.

 "தங்கச்சியம்மா எந்திரிச்சிட்டாங்க." என வந்தாள் அழகு. ரகுவீர் வேகமாகப் படி ஏறினான். ஜானகி, படுக்கையில் அமர்ந்து முகத்தைக் கவிழ்ந்து இருந்தாள். "ஜானும்மா ஆர் யூ ஓகே?" என்றபடி வந்தான் ரகுவீர்.

"வீரூஜி, சாரி" என்றாள். "காலையில் தலை வலித்தால் தூங்கலாம் தப்பு இல்லை, அதுக்கு எதற்குச் சாரி?" என்றான்.

 "அதுக்கு இல்லை, இப்ப தான் ஞாபகம் வந்தது, நேத்து நைட் நடந்துகிட்டதுக்குச் சாரி." எனவும் ,ரகுவீர் உடல் விரைத்து முகத்தைத் திருப்பிக் கொண்டான். எதுவும் பேசாமல், ஷோபாவில் உட்கார்ந்து மொபைலை நோண்ட ஆரம்பித்தான்.

"நான், அப்படி நடந்திருக்கக் கூடாது சாரி." என மீண்டும் சொன்னாள்.

"என்னை இதைவிடக் கேவலப்படுத்தவே முடியாது. எனக்கு வேணும்னு யோசிக்கிறது கூடத் தப்பில்லை. அது இல்லாததானால் தான் மும்பையில் தங்கிட்டேன்னு நினைச்ச பார். போடி, இன்னைக்குப் பூரா பேசாத. அது தான் உனக்குத் தண்டனை." என்றான்.

 கண்ணீர் தளும்பியது ஜானகிக்கு. "ஐயம் சாரி." என மீண்டும் மீண்டும் சொன்னாள். ரகுவீர் அசைவதாக இல்லை.

 "சரி பேசாமல் இருக்கிறது தான் தண்டனை பேசலை, ஆனால் உங்கள் பக்கத்தில் தான் இருப்பேன்." என்றவள், அவன் மடியில் தலைவைத்து ஷோபாவில் படுத்துக் கொண்டாள். ரகுவீர் அசைவே காட்டவில்லை. அன்று முழுவதும் அவளிடம் பேசவும் இல்லை. ஜானகியின் செயலுக்கு மௌனமாகவே எதிர்ப்பைக் காட்டினான். இனி இதுபோல் முயற்சிக்க  கூடாது என்ற எண்ணத்தை அவள் மனதில் பதிய வைத்தான்.

 அடுத்தநாள், ராகினியின் பள்ளியைப் பார்க்கச் சென்றனர். அங்கும் ஜானகி வழவழத்துக் கொண்டே வந்தாள். ஸ்கூல் பசங்களுக்காக வரும்  மனநல ஆலோசகர், அவளை எதேச்சையாகப் பார்ப்பது போல் பேச்சில் பிடித்தார்.

 ரகுவீரிடம் ஒரு பணியாள் வந்து, ராகினி அழைப்பதாகக் கூறினார். அவன் ஜானகியைப் பார்த்தான். "நீங்க போங்க வீரூஜி நான் ஆண்டியிடம் பேசிட்டு வர்றேன்." என அவனை அனுப்பினாள். 

மனநல ஆலோசகர், ஜானகியை அறைக்குள் அழைத்துச் சென்று, பெண்கள் பிரச்சினை பற்றிய கருத்தரங்கு, நேஷனல் லெவல் செமினார் என ஏதேதோ கதைச் சொல்லி அவளையும் பேச வைத்தார். அவள் பேசுவதை முழுமையாகக் கேட்டவர், சில இடங்களில் மறுத்தும், அதற்கான வழிமுறை தீர்வு எனப் பேச்சை நகர்த்தினார். ஜானகிக்குக் கொஞ்சம் மனபாரம் இறங்கியது. அடுத்த வாரம் நான் வருவேன் ஜானகி, அப்போது இதைப் பற்றி யோசித்துச் சொல்லு எனச் சில ஆலோசனைகளைச் சொல்லி அனுப்பினார். ஜானகி அவரோடு பேசிய பின்னர், தன் அன்னையின் அறைக்கு வந்தாள். இருவரும் அங்கு இல்லை.

 ரகுவீர், ப்ளஸ்ஒன், ப்ளஸ் டூ மாணவர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தான். அவனும் ரெசிடின்சியல் பள்ளி மாணவன் ஆகையால், அவர்கள் பிரச்சினை, சமாளிக்கும் விதம் என அவர்களை உற்சாகப் படுத்திக் கொண்டு இருந்தான். ஜானகி மெய்மறந்து தன் கணவனைப் பார்த்து நின்றாள்.

 அடுத்த நாள் ஜானகியின் அத்தை சுந்தரவள்ளி  வீட்டுக்கு விருந்து என மொத்த குடும்பமும் கிளம்பிச் சென்றனர். அமிர்தாவின் செல்லக் கட்டளை, முருகானந்தத்தின் அழைப்பு எனத் தட்ட முடியாமல் அனைவரும் கிளம்பினர். ரகுவீருக்கு சவாலும், ஜானகியின் குறும்புகள் நிறைந்த விருந்தாக இருக்கும் அத்தை வீட்டு விருந்து.

 

களஞ்சியம்
68-பிரிவாற்றாமை 

 

 ராத்தோட்ஸ் ஸ்வர்ன மஹல், ரகுவீர் தன் மாஷாவின் அன்பு மழையில் நனைந்து கொண்டிருந்தான், கூடவே அவர் ஜானகி, மயூரி, ராகினி என அனைவரையும் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். எல்லாருக்கும் பதில் சொல்லி ஒரு வழியாகத் தன் அறைக்குச் சென்றான். மணி பத்து ஆனது.

 தன் உடையைக் களைந்தவன், ஜானகி போட்டு விட்ட சட்டை பட்டன்களைப் பார்த்து, அதன் முன் பின் இதழொற்றல்களை நினைத்து லயித்திருந்தான். அதே ஆசையில் போன் போட்டு விட்டான். ஜானகி அமிர்தாவிடம் சொல்லிவிட்டு தனது அறைக்கு வந்தாள். 

"வீரூஜி, எங்க இருக்கீங்க?" என்றாள். "நம்ம ரூமிற்கு வந்துட்டேன். ஐ மிஸ் யூ டி மேரி ஜான்." என ஆசை வழிந்தது அவன் குரலில். "நானும் தான், பால் குடிச்சிட்டேன். உங்களைக் கட்டிக்கிட்டா தானே தூக்கம் வரும், இப்ப என்ன பண்றதாம். நல்லா பழக்கி வச்சிருக்கீங்க." என்றாள். ஹாஹா எனச் சிரித்தான் ரகுவீர்.

"ஜானு டியர், நீ போட்டு விட்ட சட்டையைக் கழட்டவே மனசு வரலைடி." என்றான். அதைக் கேட்டு கலகலவெனச் சிரித்த ஜானகி, "அதுக்காக நீங்க அதே சட்டையைத் திரும்பி வர்ற வரைக்கும் போட்டுக் கிட்டே இருக்காதீங்க. ப்ளைட்டில் ஏற்ற மாட்டான்." என்றாள்.

"ஏன் ஏற்ற மாட்டான், செண்ட் அடிச்சுக்கலாம் ஒன்றும் தெரியாது." என்றவனை ஜானகியின் சிரிப்பு கூடச் சேர்ந்து நகைக்க வைத்தது.

"வெயிட் பண்ணு, டிரஸ் சேன்ஞ் பண்ணிட்டு வரேன்." என்றவன் சர்ட் பட்டனைக் கழட்டியவன்  மார்பில் அவள் நெற்றிக் குங்குமம் இருந்தது. அதை ரசித்துப் பார்த்தவன், அவளிடம் மீண்டும் வந்தான். நிறையப் பேச்சு ஸ்வீட் நத்திங்க்ஸ் எனப் பேசினான்.

"வீரூஜி, பாட்டுப் பாடுங்க, ரெக்கார்ட் பண்ணிக்கிறேன்." என்றாள். "நீயும் பாடு நானும் ரெக்கார்ட் பண்ணிக்கிறேன்." என்றான்.

"தனு இத்னா மே ப்யார்... என ஆரம்பித்து, இருவரும் மாற்றி மாற்றிப் பாடிக்கொண்டு இருந்தனர்.

மஞ்சரி, ராஜ்வீருடன் பேசிக் கொண்டிருந்தாள். இன்னும் ராஜ் அந்தக் கவரை பிரித்துப் பார்க்கவில்லை. "இரு பேபி பார்த்துட்டு வருகிறேன்." என்றான். அமுதன், மயூரியை மொட்டை மாடிக்குக் கூட்டிச் சென்றான். அங்கிருந்த பென்சில் ஜோடியாக உட்கார்ந்து, அவள் முக அழகை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

 

"உங்கள் பையா ஜானு, ஜானுன்னு உருகுறார். வழி நெடுக ஜானு புராணம் தான். போனால் போகிறதென்று உன் பேச்சு இரண்டு தரம் எடுத்தார்." என வம்பிழுத்தான்.

"உங்களுக்கு, பையாவை சொல்லி என்னை வம்பிழுக்கனும், உங்களை நம்பி என்னை விட்டுட்டுப் போறாங்களே, அதுக்கே சுக்ரியா சொல்லுங்க. டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டா பார்க்க விடமாட்டாங்க. கூட்டிட்டு போய்டுவாங்க." என்றாள் மயூரி.

"அது எப்படி, உன் ப்ராஜக்ட் முடியாமல் போவ, நான் சர்டிவிகேட் தர மாட்டேன்." என்றான்."நீங்களே வச்சுக்குங்க, அடுத்த முறை ஜானியும், பையாவும் கிளம்பும் போது நானும் கிளம்பிடுவேன்." என்றாள்.

"ஏன்டி இந்தக் கொலைவெறி, உன் அத்தான் பாவமில்லை." என்றான். "அது யார் அத்தான், நீங்க பையாவை கூப்பிடும் வார்த்தை தானே இது." என்றாள் மயூரி.

" உன் பையாவுக்காக மட்டும் இல்லை. நீயும் என்னை அப்படிக் கூப்பிடலாம். அத்தை மகன், மாமா மகனை அப்பிடி கூப்பிடுவோம், அமிர்தா கூடக் கூப்பிடுவாளே!" என்றான் அமுதன்.

"அப்ப, ஜானி ஏன் பையாவைக் கூப்பிடலை?" என்றாள். "அது அவளைத் தான் கேட்கனும். நீ வேணும்னா, உன் பையா முன்னாடியே கேளு." எனச் சிரித்தான். காலை ரகுவீர் ஜானகி உரையாடலைக் கேட்டிருந்தான். "அவள் தான் வீரூஜின்னு உருகுறாளே, நீ என்னை எப்படிக் கூப்பிடுவ?" என அவளை நெருங்கினான் அமுதன்.

"அமுதன்னு கூப்பிடுறேனே, இல்லைனா ஸுன்யேஜி தான். பூபேரா பாயீ ன்னு, ராஜஸ்தானியில் அப்படித்தான் சொல்லுவோம், கூப்பிடவா பாயீன்னு?" என்றாள்.

 "ஓ, என் மாமன் மகளே அப்படி எல்லாம் கூப்பிடாத என் மனசு உடைஞ்சிடும். டேய் அமுதான்னு கூடக் கூப்பிட்டுக்கோ." எனக் கை எடுத்துக் கும்பிட்டான்.

 அவளின் நகைப்பொலியில் தன்னைத் தொலைத்த அமுதன், கிறக்கமாக அவளை நெருங்கினான். "ஸுன்யேஜி, கீப் த டிஸ்டன்ஸ், சகாயி தான் முடிஞ்சிருக்கு." என அவனைத் தள்ளினாள். அதில் வீம்பு பிடித்து மயூரியை கை வளைவில் கொண்டு வந்தவன், அவள் காது மடல்களில் கிறக்கமாக, "ஷாதி முடிந்தால் என்ன பண்ணுவியாம், ஒரு ட்ரைலர் காட்டு." எனக் கைகளை அவள் இடையைச் சுற்றி சரசம் ஆடினான்.

 

"சோடியேஜி, லிமிட் கிராஸ் பண்றீங்க." என்றாள். "ஸ்வர்ணி, எதுடி என் லிமிட்?" என அவள் கூந்தலை முகர்ந்து, அதை முன்னே ஒதுக்கி, குர்தி மறைக்காத இடங்களை இவன் முகத்தால் மறைத்தான். மீசை குறுகுறுத்தது. மயூரிக்கு அவஸ்தையாக இருந்தது. அவளின் 'சோடியேஜியும்' ஒலி குறைந்தது. கடைசியாக அவளைத் திருப்பி, மூச்சு முட்ட அணைத்தவன், இனி தாங்காது என உணர்ந்து, முத்தத்தோடு அவளை விடுவித்தான்.

மயங்கிய அவள் தன்னிலை மறந்து, ஏக்கம் மேலிட பின்னனிருந்து அவனை அணைத்துக் கொண்டு மயங்கி நின்றாள். விலக்க முடியாமல் தவித்தான் அமுதன். "ஸ்வர்ணி போதும்டி!" என அவள் கைகளில் முத்தமிட்டு ஒரு பெரும் மூச்சுடன் போகலாம் என்றான்.

தன் செயலை உணர்ந்த மயூரி அங்கிருந்த ஸ்டோன் பென்ஞ்சில், உட்கார்ந்து முழங்காலில் முகத்தை மூடிக் கொண்டாள். அவளுக்கும் குற்ற உணர்வு வந்தது.

 அமுதன், "என்னடா?" என்றான். "நீங்க கீழே போங்க அமன். நான் கொஞ்சம் நேரம் கழிச்சு வர்றேன்." என்றாள்.

"இந்த நேரம், இங்கே இருக்கக் கூடாது வா போகலாம்." என்றான். அவள் முதுகு குலுங்கலில் 'என்னடா' எனப் பதறினான் அமுதன்.

"அப்படி என்ன கண்ட்ரோல் இல்லாமல், எனக்கே என் மேல் கோபம் வருது. பாபுவும், மாஷாவும் என்னை நம்பி தானே அனுப்பி இருக்காங்க?" என்றாள்.

"அப்ப முதலில் என்னைத் தான் சொல்லனும். டர்டியா நடந்துக்குறேன்னு." என்றான் அமுதன். "உங்க மேல் என்ன தப்பு, மர்த் அப்படித் தான் இருப்பாங்க. பொண்ணுங்களுக்குத் தான் கண்ட்ரோல் வேண்டும்." என்றாள்.

"இது என்னமா, இந்தக் காலத்தில் இப்படிப் பேசுகிற, இரண்டு பேரும் சமம் தான், நமக்கு உரிமை இருக்குறதால கொஞ்சம் ஓவராப் போனோம். அதுவும் தப்பு தான். இனிமே இப்படிச் சந்திக்க வேண்டாம்." என்ற முடிவுடன் படி இறங்கினர்.

பாலன், அமிர்தாவைச் சமாதானம் செய்து கொண்டிருந்தான். ரூமின் உள்ளே அவள் திரும்பிக் கைக்கட்டி நின்று கொண்டு, அவனை வெளியே நிறுத்தியிருந்தாள். "அம்முக் குட்டி சாரிடி!" எனக் காதை பிடித்துக் கேட்டுக் கொண்டிருந்தான்.

 "இது எதற்கு?" என நகைப்பினூடே அமுதனைக் கேட்டாள் மயூரி. "அமிர்தாவை நாட்டுப்புறம்னு ஒரு ஃப்லோல சொல்லிட்டான். அது தான்!" என்றான்.

"போய் டவுன்காரியா பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோ, நான் உனக்குச் செட் ஆகமாட்டேன்." என விரட்டிக் கொண்டிருந்தாள் அமிர்தா.

 அமுதன், மயூரி வருவதைப் பார்க்கவும், "இங்கே நின்று சீன் கிரியேட் பண்ணாத, அப்புறம் நாளைக்கே கிளம்பிடுவேன்." என அவன் முகத்தில் கதவை அடைத்து விட்டுப் போனாள் அமிர்தா.

பரிதாபமாக முழித்து நின்ற பாலனை அமுதன், தோளோடு அணைத்து, "நாளைக்குச் சமாதானம் செய்யலாம். இன்றைக்கு விடு." என்றான்.

 ஜானகி அறைக் கதவை முழுதாக அடைக்காமல், ஒருக்களித்து வைத்திருந்தாள், எனவே பாட்டுச் சத்தம் கேட்டு மூவரும் எட்டிப் பார்க்க, ஜானகியும் ரகுவீரும் காதலாகிக் கசிந்துருகி, நிஜமாகவே நன்றாகப் பாடிக் கொண்டிருந்தனர்.

நடுநடுவே, இவள் வீரூஜியும், அவனின் மேரிஜான் அழைப்பும். இவர்கள் ரொமான்டிக் பிச்சர் பார்ப்பது போல் பார்த்தனர். வீடியோ காலில் ஓடிக் கொண்டிருந்த அந்தாக்சரி, ரகுவீர் கண்களைத் திறந்து பார்க்க, ஜானகி ஸ்கிரீனில் மூவரும் பின்னிருந்து தெரிந்தனர். பாட்டை முடித்து. "மேரிஜான், என்னடி நம்மப் பாட்டைக் கேட்க டிக்கெட் போட்டியா?" என்றான்.

"வீரூஜி, என்ன சொல்றீங்க புரியலை?" என்றாள். "பின்னாடி திரும்பிப் பார் உன் உடன் பிறப்புகளை, படம் பார்க்கிறாங்க. ஸ்வரூ யூ டூ!" என்றான்.

அசடு வழியே உள்ளே வந்தனர் மூவரும். "அத்தான் கச்சேரி களைகட்டுது. அருமையா பாடுறீங்க, நான் மட்டும் பெண்ணா பிறந்திருந்தால், இவளுக்கு முன்னாடி நான் உங்களைக் கரெக்ட் பண்ணியிருப்பேன் அத்தான்." என்றான் அமுதன்.

ரகுவீர், ஹாஹா எனச் சிரித்தான், "சாலேஷா காலையில் ஒட்டுக் கேட்டுட்டியா?" என்றான் ரகுவீர்.

ஜானகி அமுதனை, "டேய் அண்ணா, எனக்கும் வீரூஜிக்கும் நடுவில் யார் வந்தாலும் மர்டர் தான்." என்றாள். "அத்தான் கேட்டுகிட்டிங்களா!" என்றான் அமுதன்.

"பையா, ஜானி எனக்கு ஒரு சந்தேகம், அமுதனும் பாலன், கணேஷ் கூடப் பையாவை அத்தான்னு கூப்பிடுறாங்க. ஏன் ஜானி அப்படிக் கூப்பிட மாட்டேங்குறா?" என்றாள் மயூரி.

ரகுவீருக்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்தது, "அப்படி கேளுடா சோட்டி!" என்றான். ஜானகிக்குக் கன்னம் சிவந்தது, "எனக்குத் தூக்கம் வருது கிளம்புங்கள் எல்லாம்." என்றாள்.

"ஜானும்மா, அப்ப அத்தானை, அத்தான்னு கூப்பிட மாட்டியாடி?" என்றான் பாலன். "போங்கடா, எனக்கு எப்ப கூப்பிடுடனும், எப்படிக் கூப்பிடனும்னு தெரியும்." என முகத்தை மறைத்துக் கொண்டாள் ஜானகி. 

"அத்தான், என்னத்தான், அவர் என்னைத்தான்... எப்படிச் சொல்வேனடி." எனக் கோரஸ் பாடினர் அமுதனும், பாலனும். "ஹேய் கைஸ், இது நிஜமாகவே சினிமா பாட்டா?" எனக் கேட்டான் ரகுவீர்.

"ஆமாம் அத்தான், நிறைய 'அத்தான்' பாட்டு இருக்கு உங்களுக்கு லிங்க் அனுப்புறோம்." என்றனர். ஜானகி கையில், தலையணையைத் தூக்கி இருவரையும் அடித்தாள். மயூரி சிரிப்பினூடே குட் நைட் பையா எனக் கிளம்பினாள்.

 ஒரு சுற்று ஓடி முடிந்து, "வீரூஜி குட் நைட்!" என்றாள் ஜானகி."குட நைட் மேரி ஜான்!" என்றான் ரகுவீர்.

 அன்றைய பொழுது நன்றாக முடிந்தது. அதற்கடுத்து வந்த நாட்கள், ரகுவீர் ஜானகிக்குச் சோதனையாக அமைந்தது. அடுத்த நாள் ஃபேக்டரி சென்ற ரகுவீருக்குச் சோதனை தொழிலாளர்கள் மூலம் வந்தது.

 ஒரு தொழிலாளி விழுந்து அடிப்பட்டான், அவனை மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். இருந்த போதும் யூனியன் ஆட்கள், தொழிலாளர் பாதுகாப்பு, காம்பன்சேஷன் எனக் கோரிக்கை வைத்தனர். அதைப் பேசி முடிவு செய்யும் முன் யூனியன் லீடர் குட்டையைக் குழப்பினான். ரகுவீர் மேலும் மூன்று நாட்கள் தங்குவது போல் ஆனது.

 ஒரு வழியாகத் தங்கள் லாபத்தில் பெரும் பகுதியை விட்டுக் கொடுத்துச் சமாதானம் செய்தனர். அதோடு பாதுகாப்பு ஏற்பாட்டுக்காக நிறைய செலவும் வந்தது. செலவு வந்தது போல் அடுத்து வருமானத்துக்கு வழியும் வந்தது.

 ஒரு அமெரிக்க நிறுவனம், இவர்கள் கம்பெனி துணிகளின் தரம் பார்த்து ஒப்பந்தம் பேச வந்தது. இது ரகுவீர் இல்லாமல் ஆகாது. அதுவும் சாம்பிள் பீஸ் செய்து உறுதியாகும் வரை நகர முடியவில்லை.

 அந்தக் கம்பெனி எல்லாம் முடித்துக் கிளம்பவே ஆசைப் பட்டது. இந்த ஒப்பந்தம் முடிந்தால் மூன்று வருடம் நல்ல லாபத்தில் கம்பெனி செல்லும், விரிவாக்கம் செய்யவும் உதவும். எனவே ரகுவீர் மும்பையில் தங்கி விட்டான். இரண்டு நாட்களில் வருகிறேன் எனச் இரண்டு வாரங்கள் சென்றும் வந்த பாடு இல்லை.

 

ஜானகி முதலில், சாதாரணமாக வந்துவிடுவான் எனத் தெம்பாக இருந்தாள். தொழிலாளர் பிரச்சினை எனவும், இவளும் கரிசனையாகப் பிரச்சனைகளைக் கேட்டு ஆலோசனை கூடச் சொன்னாள். ரகுவீர் வந்துவிடுவான் எனக் காத்திருந்தவள், அடுத்து அமெரிக்கன் கம்பெனி டீலிங் எனவும் சோர்ந்து போனாள்.

 வீட்டில் இருப்பவர்கள், பல விதமாக முயன்றனர், அவர்கள் முன் சந்தோஷமாக இருப்பது போல் நடிப்பாள். தனிமையில் அழுது கரைவாள். ரகுவீர் தினமும் போன் செய்து விசாரிப்பான், சாரி சொல்வான். "நீங்க பார்த்துக்கிட்டு வாங்க வீரூஜி, நான் இருந்துக்குவேன். பிறந்ததிலிருந்து இருக்கும் வீடு தானே!" என்றாள்.

 பிறந்ததிலிருந்து இருக்கும் வீடு, மற்றொருவனுக்கு மாலையிட்ட பின் அந்நியமாகத் தோன்றுகிறதோ, எனக் குழம்பினாள். இரவு நேரத்தில் தெய்வா கட்டாயம் மாத்திரை கலந்துக் கொடுத்துக் குடிக்க வைப்பார். அதன் வீரியத்தில் இரவு துங்கி விடுவாள். இரண்டு நாட்கள் அவனில்லாமல் சிரமப் பட்டதும் கூட மாறிவிட்டது.

 வீட்டினர் யாராவது துணைக்குப் பேசியபடி இருந்தனர். ராகினி மகளின் தனிமையைப் போக்க, பள்ளி சம்மந்தப்பட்ட சில கிரியேடிவ் வேலைகளைக் கொடுத்தார். இவளுடைய ஸ்மார்னெஸ் சீக்கிரம் முடித்து விட்டாள்.

 தாத்தா சிவபரங்கிரி ஐயா, காலையில் தேவாரம், திருவாசகம் வாசிக்கச் சொல்வார். அதில் லயித்து வலைத்தளத்தில் பண் இசையோடு பாடிக் காட்டுவாள். அதில் ஒரு அமைதிக் கிடைத்தது.

 தெய்வா செய்யும் சமையலை, யூடியூப் சேனலில் அவர் செய்ய இவள் வர்ணனையோடு பதிவேற்றினாள். சிவகாமி அப்பத்தாவின் வைத்தியமும் வீடியோவானது. இப்படித் தன்னை மும்மரமாக வைத்திருந்தாலும், ஒரு சோகம் இழையோடியது.

 மஞ்சரி, மயூரி ப்ராஜெடில் பிசியாக இருந்தனர். இவளும் அமிர்தாவுக்குமான ப்ராஜெட்டில் வீட்டிலிருந்தே ஜானகி ரிபோர்ட் தயார் செய்தாள்.

அமிர்தா, ஆபீஸுக்கு வரச் சொல்லும் போது, "அது உனக்கான அடையாளம், நீ பாருடி." என்று சொன்னாள்.

 சிவகாமி அப்பத்தாவும், தெய்வாவும், தலைக்குச் சாம்பிராணி காட்டி தலையைக் காய வைக்கும் போது, தலை சீவும் போது என நேரம் கிடைக்கும் போதெல்லாம் கணவனைச் சந்தோஷமாக வைத்துக் கொள்ளப் பாடம் எடுத்தனர்.

அப்பத்தா, ஒரு நாள் சுறுக்கென்று, "நீ உம் புருஷனை தள்ளி வச்ச, இப்ப அவர் செய்யறாரு. லகானை விட்டுபுட்டு, எங்கிருந்து குதிரையைப் பிடிப்ப, வந்த பிறகாவது புத்தியோடு பிழைத்துக்கொள்." என்றார்.

 இது அவள் மனதில் ஆழப்படிந்தது. மனதளவில் மிகுந்த பாதிப்புக்கு ஆளானாள். கண்களில் கருவளையம் விழுந்தது. உடலில் மெலிவும் வந்தது. பசலை நோய் கண்ட பாவையானாள் ஜானகி.

 மயூரி, மஞ்சரி உற்சாகப்படுத்த, ஏதேதோ செய்தனர், அவர்கள் மனம் கோணாமல் அதற்கும் சிரித்து வைத்தாள். "பழைய ஜானி இல்லையே?" என வருந்தினர்.

 மயூரி, ரகுவீரிடம், "பையா ஒன்று நீங்க வாங்க, இல்லைனா அவளையாவது அழைச்சுக்குங்க. உங்களைப் பிரிந்து ரொம்பக் கஷ்டப்படுறா!" என்றாள்.

"எனக்கும், அதே கஷ்டம் தான் சோட்டி, சீக்கிரம் வரப் பார்க்கிறேன்" என்றான்.

 மஞ்சரி ராஜைப் பிடித்துக் கொண்டாள், "உங்களுக்குப் பிஸ்னஸ் தான் முக்கியம். ஜீஜூ ஷாதிக்கு முன்னாள் இப்படி இருந்தார் சரி, ஷாதி முடிந்தும் இதே வேலையா, எதுக்கு ஜானியை ஷாதி பண்ணனும். பாவம் அவள்." எனச் சண்டை இட்டாள். ரகுவீர் வீட்டுப் பெரியவர்களிடமும், அவன் நிலையை எடுத்துச் சொல்லியிருந்தான் அவர்களும் வியாபாரம் செய்பவர்கள் எனவே அவனைப் புரிந்து பேசாமல் இருந்தனர்.

 காலை நேரம், வீட்டின் பின்னால் இருக்கும் ஸ்டோன் பென்சில் அசோகவன சீதையாக அமர்ந்திருப்பாள். மாலையில் முன்பக்கம், வேறு யாராவது சேர்ந்து தேநீரோடு அமர்ந்து இருப்பார்கள்.

 ராத்தோட்களும், மாமாஷாக்கள், மாமிஷா, தாதாஷா, தாதிஷா, ரன்வீர், ராஜ்வீர் முதற் கொண்டு யாராவது மாற்றி மாற்றிப் பேசுவார்கள்.

 ரகுவீருக்குக் கடைசியில் பேசும் சந்தர்ப்பமும் அமையாது, போனிலும் பேசமுடியாது போனான். நேற்று, இரண்டு முறை கூப்பிட்டாள், ராஜ்வீர் அட்டண்ட் செய்து, "டீல் ஃபைனல் லெவலில் இருக்கு. பையா பிஸி." என்றான். இரவு அவன் அழைக்கும் போது அவள் உறங்கிவிட்டாள்.

 அந்த நாளும் வந்திடாதோ என்பது போல், ரகுவீர் ஒரு வழியாக வேலையை முடித்து, மதுரைக்கு ப்ளைட்டில் வந்தான். முதலில் சிவகுரு பரிசளித்த ஆடிக் கார் மதுரை வந்து விட்டது. யாருக்கும் தெரியாமல் சஸ்பென்சாக, மதுரையிலிருந்து தானே டிரைவ் செய்து சிவ மாளிகையை அடைந்தான்.

 

ஜானகி தனது அறையில் தான் இருந்தாள். ரகுவீர் காரை நிறுத்திவிட்டு சத்தமில்லாமல் மேலே ஏறி விட்டான். கீழே சிவகுரு மருமகனைப் பார்க்கவும் நிம்மதி அடைந்தார். அவரிடம் கண்களால் ஒரு இறைஞ்சலுடன் மேலே சென்றுவிட்டான். கதவைத் தட்டி விட்டு, உள் பக்கம் வந்து டோரில் சாய்ந்து நின்றான். படுக்கையிலிருந்த ஜானகி, சத்தத்தில் கண்ணைத் திறந்து பார்த்தாள்,

"போங்க வீரூஜி, தினமும் இதே வேலையா, நீங்க தான்னு ஓடிவந்து பிடிச்சா, அந்த இடத்தில் இருக்கிறதே இல்லை. பெரிசா சொல்லிட்டுப் போணீங்க. மாயக் கண்ணன் இல்லை உன் புருஷன்னு, என்ன பார்வை. முழு லூசாதான் மாறிக்கிட்டு இருக்கேன். அத்தான்னு கூப்பிட்டா வருவீங்களான்னு, வீரூ அத்தான்னு கூப்பிட்டேன் வந்திங்களாக்கும், முழுசா பிச்சியாகிடுவேன் அப்ப வாங்க. உங்க கிட்டயே என் வீரூஜி எங்கன்னு கேட்பேன்." எனக் கண்களை மூடிக் கொண்டாள்.

ஜானகி தமிழில் புலம்பவும், புரியாமல் பயந்துப் போன  ரகுவீர், கதவை அடைத்துத் தாழ் போட்டு விட்டு, "ஜானும்மா, மேரிஜான் உன் அத்தான் நிஜமாவே வந்துட்டேன்டி." எனப் படுக்கையில் உட்கார்ந்து அவளை வாரி அணைத்துக் கொண்டான்.

கனவென இருந்தவள், அவன் ஸ்பரிசம் உணரவும், தன்னைக் கிள்ளிப் பார்த்தாள் வலித்தது. அவன் அவளை மடியில் ஏந்தியிருக்க, அவன் முகத்தைக் கைகளில் ஏந்தி, நிஜமாவா எனக் கண் மூக்குக் கன்னம், உதடு எனத் தொட்டுப் பார்த்தாள். அதில் உருகியவன், அவள் முகமெங்கும் முத்தமழைப் பொழிந்து, இதழில் வந்து சஞ்சாரம் செய்தான்.

 அவளை இறுக்கி அணைத்து கைகளால் அவள் முதுகைத் தடவி விட்டான். நீண்ட முத்தம் முடிய ஜானகி கண்களில் கண்ணீர் வழிய வீரூஜி, என அழுதபடி, ஆக்ரோஷமாக அவன் முகத்தில் இதழை அசைத்து, அசைத்து அங்குலம் அங்குலமாக முத்தம் கொடுத்தாள். அந்த ஆலிங்கனத்தில் காமம் இல்லை பிரிவாற்றாமை இருந்தது. அவனின் அங்கமாக அவள் மாறிப் போனாள்.

"ஐ லவ் யூ வீரூஜி!" எனக் கண்களில் நீர் வடியச் சொன்னாள். "ஐ லவ் யூ!" எனச் சொல்லியபடி, நெஞ்சில் குத்தினாள். "இங்க நான் இல்லவே இல்லை, அதுதான் விட்டுட்டுப் போய்ட்டீங்க." என அவன் மார்பில் அழுத வண்ணம் புதைந்தாள். அவளை இறுக்கிக் கொண்டு உச்சந்தலையில் முத்தமிட்டான்.

"மேரி ஜான், அழாதடி, இவ்வளவு தூரம் பறந்து வந்தது, நீ அழறதைப் பார்க்கவா?" என மீண்டும் அணைத்துக் கொண்டான். ஒரு வழியாக ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் அழுகை ஓய்ந்தது. இரண்டு நாட்கள் எனப் போனவன் இரண்டு வாரம் சென்று பதினாறாம் நாள் மனைவியைப் பார்க்கிறான் ரகுவீர் சிங் ராத்தோட்.

 

பிரிவுத் துயர் துடைக்க இதயங்கள் போராடிக் கொண்டிருக்கின்றன. இவர்களுக்குத் தனிமை கொடுத்துச் செல்வோம். அடுத்தச் சரணத்தை எப்படித் தொடங்குவர் என்பதை பொறுத்துப் பார்ப்போம்.

 

களஞ்சியம்
67- பிரியாவிடை 

 

ரகுவீர் சிறுமலை வந்து பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. வேலை செய்தே பழகியவன் ஆதலால், இங்கும் ராமின் மில் வேலைகளை ஆரம்பித்து விட்டான்.

 தினமும் காலையில் ஜானகியுடன் வாக்கிங், பின்னர் வந்து கீழே தாத்தா, மாமா, பூஃபாஷா என முறைக் கொண்டாடிப் பேசிக் கொண்டிருப்பவன், ஜானகி குளித்துக் கீழே இறங்கவும், இவன் தயாராகி வருவான். காலை உணவு முடிந்து அவரவர் வேலைக்குக் கிளம்பவும், இவனுக்கென அமுதன் வடிவமைத்த அலுவலகத்தில் அமிர்தாவைக் கொண்டு மேலும் இருவரை வேலைக்கு அமர்த்தினான். ராமுடன் மீட்டிங், மில் விசிட் என மதியம் வரை பார்த்து விட்டு வருவான். அமிர்தா மீதி வேலைகளையும்  அலுவலகத்தையும்  பார்த்துக் கொள்வாள்.

மதியம் வீட்டினரோடு உணவு, அதன் பிறகு ராஜ்வீரோடு மும்பை கம்பெனி வேலைகளை ஆன்லைனில் பார்ப்பான். சிறிது ஓய்வு, மாலையில் ஜிம் அல்லது டென்னிஸ், வெளியே எங்காவது செல்வது.

இரவு அனைவருமாக உட்கார்ந்து கதைப் பேசுவார்கள். இதுவே பத்து மணிவரை ஓடும். பின்னர்த் தூக்கம் எனப் பொழுது ஓடிவிட்டது. அமிர்தா வீட்டிலிருந்து விருந்துக்கு அழைத்துக் கொண்டே இருந்தனர். ஆபீஸ் வேலை முடிந்து வருவதாக வாக்குக் கொடுத்திருந்தான். 

ஜானகிக்குத் தான் ரகுவீர் இல்லாத நேரங்களில் பொழுது போவது சிரமமாக இருந்தது. இப்போது அந்த நேரத்தில் ரகுவீருக்கு பிடித்த உணவுகளைச் சமைக்க ஆரம்பித்து இருந்தாள். அவனும் தமிழ்நாட்டு உணவு வகைகளை விரும்பி சாப்பிட பழகி இருந்தான்.

இரவு நேரங்களில் ஜானகிக்குக் கொடுக்கும் மாத்திரை வீரியத்தில் அவள் சீக்கிரம் தூங்கி விடுவாள். அதன் பின்னர், சில நாட்கள் பால்கனியில் அமர்ந்து இருப்பான். அதுவும் முடியாமல் ஸ்விமிங்க் செய்ய ரிசார்டுக்கு போய் வருவான், ஜிம்மில் வொர்க் அவுட் செய்வான். உடல் ஓய்ந்து அலுத்துத் தூங்குவதற்கு ஏதாவது செய்தே தூங்குவான். ஜானகிக்கு இது எதுவுமே தெரியாது.

சண்முகம், அறைக்கு மேலே தான் ஜானகி அறை இருக்கும், எனவே பால்கனியில் வெளிச்சம், மற்ற அவனது செயல்களை அவர் கவனித்து, ஸ்விமிங்க் செல்லும் வழியை மின் விளக்குகளால் பகலாக்கி வைத்தார். சிவகுரு அவன் போவதைப் பார்த்தாரெனில், திரும்பும் வரை முழித்திருப்பார்.

 சண்முகம், முதல் முறை கேட்ட போது, "இப்படி ரெஸ்ட் எடுத்து பழக்கமே இல்லை மாமா, பிஸ்னஸ்க்கு வந்தே ஆறு ஏழு வருஷம் ஆச்சு. அது தான் தூக்கம் வரலை." என்றான்.

 சண்முகம், தெய்வாவிடம் கேட்டார், " மாப்பிள்ளையை இராத்திரியில் அலைய விட்டுட்டு உன் மகள் என்ன பண்றா. நீ பேசிப் பார்." என்றார். 

"அவளுக்கு இவர் இப்படிப் போறதே தெரியாது. மாப்பிள்ளை வெளியேறவும் அவளைச் சத்தம் போட தான் ஒரு நாள் போனேன். அசந்து தூங்குறா. பச்சைக் குழந்தையைத் தூங்க வைக்கிற  மாதிரி தூங்க வச்சிட்டு தான் போறாரு." என்றார். "அம்மாவையாவது பேசிப் பார்க்கச் சொல்லலாம்ல!” என்றார்.

 "அதெல்லாம் உங்கள் மகள் டாப்பிக்கே எடுக்க விட மாட்டாள். அதுக்கும் மேல் மாப்பிள்ளை, அவளை அங்கிருந்தே கடத்திடுவார்." என்றார்.

 "இவங்களுங்குள்ள அப்பத் தாம்பத்தியம்." என்றார் சண்முகம். "ஏன் அத்தான் அது இருந்தா, மாப்பிள்ளை ஏன் வெளியே சுத்துறார். பொண்டாட்டி கூடச் சண்டை சச்சரவுன்னு இருந்தாலும் பரவாயில்லை, ஊடல் கூடல்னு  வழி பிறக்கும். உங்கள் மகள் தான், அந்த விசயத்தைத் தவிர மற்றதில் எல்லாம் "வீரூஜி, வீரூஜி" ன்னு உருகுறாளே. அதுவே அவருக்குச் சிரமம் தான்." என்றார் தெய்வா. 

"அண்ணன், அண்ணிக்குத் தெரியுமா?" என்றார் சண்முகம். "பெரியத்தானுக்குத் தெரியுமா இருக்கும், மருமகன் திரும்பி வருகிற வரை முழிச்சு இருப்பாங்க. அக்காக்கு அப்படி எல்லாம் கவனிக்கத் தெரியாது. அவர்களுக்கு, மருமகன், மருமகள் இங்க இருக்கிறதே பெரிய சந்தோஷம்." என்றார் தெய்வா.

 இவர்கள் இரவில் பேசிக் கொண்டிருக்கும் போது ரகுவீர், பதினொன்றரை மணிக்கு அறைக்குத் திரும்பினான். அவன் செல்லவும், சிவகுரு அறையின், முன் அறை ஸ்பாட் லைட்டும் அணைந்தது. தெய்வா அதையும் கவனித்துச் சொன்னார்.

 ரகுவீர் கதவை அடைத்து விட்டு, ஜானகியோடு படுத்தால் காலை ஆறு மணிக்கு தான் விழிப்பு வரும். காலையில், இன்று வேறு ஒரு பக்கம் கூட்டிக் கொண்டு போனாள் ஜானகி.  "வீரூஜி, நான் சொன்ன மாந்தோப்பு. நம்மது தான். மாங்காய் வாசம் சூப்பர்." என ஒரு காயைப் பறிக்க எம்பினாள் முடியவில்லை.

 "ஜானு இருடி, அத்தான் இருக்கும் போது இதுக்குக் கவலைப் படலாமா?" என்று அவளைத் தூக்கி உயர்த்தினான். அவள் மாங்காய் பறிக்கும் ஆவலிலிருந்தாள். இறக்கும் போது, ரகுவீர் கண்களில் மனைவிக்கான பார்வையைப் பார்க்கவும், மூச்சடைத்தது ஜானகிக்கு. வளைவுகள் உரச ஹார்மோனும் வேலை செய்தது. அவன் சிரித்தவாறே இறக்கி விட்டான்.

 "மேரிஜான், ஞாபகம் இருக்கா, ஷாதிக்கு முன்னாடி நம்ம ரூமில் வந்து, என் ட்ரெஸ்ஸை செல்பில் மாட்டறதுக்கு இதே மாதிரி எம்புனியே?" என்றான்.

 அவளுக்கு அதற்கடுத்த செயல்களும் ஞாபகம் வந்தது, "வீருஜி, அன்னைக்கே உங்களோடு கூடியிருந்தால் கூடப் பரவாயில்லை, தாலி கட்டாமல் உங்கள் பிள்ளையைச் சுமக்கிற பாக்கியமாவது இருந்திருக்கும். இப்ப எதற்கும் லாயக் இல்லாமல் இருக்கேன்." என அவன் மார்பில் தஞ்சமடைந்து அழுதாள்.

"ஹே பாகல் கைகி, நீ இப்ப சொன்ன வார்த்தையே போதும்டி. இவ்வளவு ஆசை வைத்திருக்க, அப்புறம் அன்னைக்கு எதுக்கு அழுதுகிட்டே ஓடின?" என்றான்.

"அது நீங்க சாரி கேட்டதுக்கு." என ஜானகி சொல்லவும், காதை தேய்த்து விட்டுக் கொண்டான் ரகுவீர்.

"உங்களுக்குச் சரியாகத் தான் கேட்டுருக்கு, அப்பத் தான் வீருஜி அந்த ராதா கிருஷ்ணா வரைஞ்சுட்டு வந்தேன். நீங்க என் மேல் எடுத்துக்கிட்ட உரிமையில் சந்தோஷமா இருந்தேன். ஏன்னா நான் உங்கள் ஜானு, என்கிட்ட எல்லா உரிமையும் உங்களுக்கு மட்டும் தான் உண்டு."  எனவும்,

"இப்பையும் இருக்கா ஜானும்மா, ட்ரை பண்ணிப் பார்க்கலாமா?" என்றான். ஜானகிக்குக் கண்ணீர் அருவியாகக் கொட்டியது. "ஏய், சும்மா கிண்டல் பண்ணேன்டி." என்றான் ரகுவீர். 

" உங்களை ஏதாவது ஹேர்ட் பண்ணிடுவேன்னு, எனக்குப் பயமா இருக்கு." என அழ, மூடை மாற்றும் விதமாக . "சரி அன்னைக்கு நடந்த விசயத்துக்கு வா." என்றான்.

"நீங்க நிறையத் தரம் சாரி சொன்னீங்களா, சிருஷ்டியை ரிஸ்தா, பேசும் போது என்கிட்ட, ஒரு ஈர்ப்பில் அப்படி நடந்துகிட்டு சாரி சொல்றீங்கன்னு நினைச்சேன்." என்றாள்.

 "ஹேய், மேரிமா, இங்க உங்களுடைய வளர்ப்பு தொட்டுக் கூடப் பேசமாட்டிங்க, இப்ப நானும், மஞ்சரியும் இருக்கிறோம், நிறைய நாள் கழித்துப் பார்க்கும் போது இயல்பா தழுவிக்குவோம். ஆனால் இங்கே அப்படி இல்லையே, நீ முதல் நாள் ஐ லவ் யூ வேற சொன்னியா, உன்னையவே நினைச்சுகிட்டு  இருந்தவன் உன்னைப் பார்க்கவும் கண்ட்ரோல் இல்லாமல் போயிடுச்சு. அதுவும் இங்கே ஒரு கேப் வேற." என அவள் இடையைச் சுற்றி கைகளால் அணைத்தான்.

 

"நான் தான் ,உங்கள் புவாஷா மகளா இல்லாமல் இருந்தால் ஷாதி பண்ணியிருப்பீங்களான்னு,தேவையில்லாமல் மனசைப் போட்டுக் குழப்பிக்கிட்டு இருந்துருக்கேன்.?" என்றாள். 

"இதென்ன கேள்வி, கட்டாயம் என் ஜான்வி தான் என் லுகாயி. உன்னை லவ் பண்ண ஆரம்பிக்கும் போது நீதான், என் புவாஷா பெத்த லாட்லின்னே எனக்குத் தெரியாதே. என்ன இவ்வளவு சீக்கிரம் ஷாதி நடந்திருக்காது. இரண்டு வீட்டையும் சம்மதிக்க வைக்கக் கொஞ்சம் டைம் எடுத்திருக்கும்." என்றான். ரகுவீர் சொன்னதில், மனதின் ஓரத்திலிருந்த ஐயமும் தெளிவானது.

 அதே நேரம், ரகுவீர் போன் அடித்தது. "ராஜ்வி, குட்மார்னிங். சப் டீக்ஹை!" என்றான்.

"அச்சா, டீக்ஹை, அவள் புரிஞ்சுக்குவா, ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை. டிக்கெட் போட்டுட்டுயா? நைட்டே கூப்பிட்டு இருக்கலாமே, ஓகே. நான் வந்துடுறேன்." எனப் போனை வைத்தான். இவன் பேசப் பேச ஜானகிக்கு டென்ஷன் ஏறியது. அவள் கேள்வியாக ரகுவீரை பார்த்த வண்ணம் இருந்தாள். அவளைப் பார்த்து, ஒன்றும் இல்லை எனத் தலையை ஆட்டியவன், அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான். 

"ராஜ்வி, போனை வைடா, ட்ராவல்ல பேசுறேன்." என்றவன். "ஜானு, மும்பைக்குக் கிளம்பனும். நான் போனால் தான் பிரச்சனை சரி பண்ண முடியும். இரண்டு நாளில் வந்துடுறேன், சரியா?" என வினவ,  "நானும் வரேன் வீரூஜி." என்றாள்.

"இரண்டு நாளில் வந்துடுவேன்டி மேரி ஜான். செக்யூரிட்டி சைட் ப்ராப்ளம், வொர்க் ஸ்பாட்லையும் நான் இருக்க வேண்டியது அவசியம். ராஜ் உன்கிட்ட சாரி சொல்லச் சொன்னான். மூன்று மாசம் ரெஸ்ட்டுன்னு சொல்லிட்டு இப்ப கூப்பிடுறானாம். அதெல்லாம் ஜானு புரிஞ்சுப்பான்னு சொல்லிட்டேன். வாடா நான் கிளம்பவேண்டும். இன்னும் த்ரி அவர்ஸ்ல மதுரையில் இருக்கனும்." என அவளின் தயக்கத்தை உணர்ந்து கட்டி அணைத்தவன், "நீ இப்படிப் பார்காதடி, சரின்னு சொல்லு அப்போ தான் என்னால் போக முடியும்." என்றான்.

அவனோடு ஒன்றிக் கொண்ட ஜானகி, "இரண்டு நாளில் வந்துடுவீங்க தானே, ஆனால் இரண்டு நாள் ஆச்சே வீரூஜி?" எனக் கண் கலங்கினாள். 

"எனக்கு மட்டும் உன்னை விட்டுட்டுப் போக ஆசையா என்ன? ராஜ் சமாளிக்க முடியாமல் திணறுறான்." என அணைத்த வண்ணம் பேசிக் கொண்டே நடந்தவர்கள், அடுத்தப் பத்தாவது நிமிடம் வீட்டிலிருந்தனர்.

 

"அமுதன், எனக்கு ஏர்போர்ட் போகனும், பதினோரு மணிக்கு ஃப்ளைட்டு. மும்பை போறேன், பிஸ்னஸ் அர்ஜென்ட்!" என்றான் ரகுவீர்.

"நானே ஏர்போர்ட் க்கு வர்றேன் அத்தான். மதுரையில் எனக்கும் வேலை இருக்குது. இதோ கிளம்புகிறேன்." என்றான்.

"புவாஷா, ராஜ் போன் பண்ணான், மும்பையில் ஒரு பிஸ்னஸ் எமர்ஜென்சி, நான் கட்டாயம் போகனும் கிளம்புறேன்." என ராகினியிடமும் சொல்லவும், "ஜானகியை கூட்டிட்டுப் போறியா?" என கேட்டார் ராகினி. 

"அவள் இங்கே இருக்கட்டும், இரண்டு நாளில் வந்துடுவேன், பூபாஷா கிட்ட சொல்லிடுங்க, நான் மேலே போய்ட்டு் கிளம்பி வர்றேன்." என மாடி ஏறினான். ஜானகி வதங்கிய முகமாகப் பின்னோடு சென்றாள்.

 அவன் பரபரப்பு இவளுக்கும் தொற்றியது, “நீங்க வாஷ்ரூம் போங்க, நான் டிரஸ் எடுத்துட்டு வர்றேன்”என்றவள், அவனுக்கான உடைகளைத் தேர்வு செய்தாள். அவள் எடுக்கும் முன் குரல் கொடுத்தான்.

"வீருஜி, இதோ வந்துட்டேன்." என டிரெஸ்ஸிங் ரூம் சென்றவள் இமை தாழ்த்திக் கொண்டு அவன் உடைகளை நீட்டிக் கொண்டிருந்தாள். "அடேங்கப்பா, மிர்ச்சி முன்னேற்றம் தான், ஊருக்குப் போறேன்கிற தெம்பு." என வம்பிழுத்தான்.

ஒவ்வொரு உடையாக அணிந்தவன், சர்ட் அணிந்து பட்டன் போடும் முன், அவள் இமை தழைத்த கண்களிலிருந்து, கண்ணீர்த் துளிகள் உருண்டோடுவதைக் கண்டு, ஒரே எட்டில் அவளை அணைத்தவன், "சும்மா பேசறதுக்கெல்லாம் அழக் கூடாது." என்றான். 

அவன் வெற்று மார்பில் சாய்ந்து, முகத்தை அவனுள் புதைத்திருந்தாள் ஜானகி. பின்னர் முகம் உயர்த்தி அவன் முகத்தைப் பார்த்தவ ள், "வீரூஜி, இரண்டு நாளில் வந்துடனும்  இவளால் என்ன யூஸ், ஒரே நியூசென்ஸ்னு அங்கேயே இருந்துடாதீங்க." என்றாள் .

"என் லுகாயி என்ன யூஸ் இல்லாமல் போய்ட்டா, அதான் அத்தானுக்கு ட்ரெஸ் எல்லாம் எடுத்துத் தர்றாளே!" எனக் கண்ணடித்தான். கண்களின் பார்வை மாறி அவளோடு இறுக்கமாக நெருங்கி, அவள் முகத்தை நோக்கிக் குனிந்து, இதழால் இதழைச் சிறை பிடித்தான். அவன் சொல்லில் சொல்லாத உணர்வுகளை இதழ் வழி அவளுள் இறக்கி விட்டான். சற்றே நீண்ட அந்த முத்தம் அவள் மூச்சுக்குத் திணறவே முடிவுக்கு வந்தது.

அவள் கிறங்கி நின்றாள், அவள் காதுகளில், "மேரிஜான், எனக்காகக் காத்திருடி, வந்து மற்ற பாடமெல்லாம் சொல்லித் தர்றேன். அத்தானையே நினைச்சுக்கிட்டு இருக்கனும். செய்வியா. உன் வீருஜி இப்போ பாலகோபாலனும் இல்லை மாயக் கண்ணனும் இல்லை, உன் புருஷன் சரியா. திரும்பி வரும் போது எனக்கு என் பொண்டாட்டி வேணும். கண்டுபிடித்து வை." என அத்தனை வார்த்தைகளையும், அவள் கழுத்தில் கோர்க்கப்பட்ட முத்து மாலை போல், முத்த மாலைகளாகக் கழுத்தைச் சுற்றி முத்திரை பதித்து, நீ என் மனைவி, எனக்காகக் காத்திரு என அவள் மூளைக்குக் கட்டளை இட்டான்.

ஒரு பெருமூச்சுடன், "சர்ட் பட்டனைப் போட்டு விடு." என்றான். ரகுவீரின் மகுடி நன்றாக வேலை செய்தது. கண்களில் காதலோடு, ஏக்கத்தோடு, சர்ட் பட்டன் போட்டு, அவன் பேண்டில் இன் செய்யவும் ஓவர் கோர்ட்டை மாட்டி விட்டாள்.

"நேரமாச்சுடி, என் லேப்டாப், செல்போன்." எனக் கேட்கக் கேட்க அவன் ப்ரீவ் கேஸூம், செல்லையும் நீட்டினாள்.

 "ஜானும்மா, நேரத்துக்குச் சாப்பிடு, நைட் தெய்வா அத்தையிடம் சொல்லிட்டுப் போகிறேன், பால் குடி, நல்லாத் தூங்கு. வீட்டில் எல்லார் கூடவும் சண்டை போடு. என்ன செஞ்சாலும், அத்தானை நினைச்சுக் கிட்டே இரு." என்றான். மண்டையை ஆட்டியவள், தன் இதழ்களைப் பற்களால் கடித்து, அழுகையைக் கட்டுக்குள் கொண்டு வந்தாள். அவள் உதட்டை கைகளால், அவள் பற்களிலிருந்து சிறை மீட்டவன். ஸ்மைலி போல் அவள் உதட்டை விரித்து, "சீக்." என்றான்.

அமுதன் "அத்தான்!" எனக் குரல் கொடுத்தான். "ஜானும்மா உன் சௌத்தன்." என்றான். அதன் அர்த்தம் புரிந்து கண்கள் குழிய அவள் சிரித்தாள், அப்படியே அவளோடு சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டான், அவன் வெளியேறப் போகையில் ஜானகி அவனை இழுத்து, இறுக்கமாக அணைத்து, இதழ் கதைப் பேசி, விடுவித்தாள். ரகுவீர், மயக்கம் வருவது போல் ஆக்ஷன் செய்தான். அவன் முதுகில் கை வைத்து வெளியே தள்ளிக் கொண்டு வந்தாள்.

படியில் இறங்கும் போது மயூரி வந்தாள், "என்ன பையா திடீர் ட்ரிப், ஸப் டீக் ஹை?" என்றாள்.

"ஸப் டீக் ஹை, உனக்குத் தான் தெரியுமே, செக்யூரிட்டி கோடில் என் ஃபிங்கர் ப்ரிண்ட் வேண்டுமே. ஏதோ லாகின் மாறினதில் எரர் காட்டுதாம். சாசாஷா இரண்டு பேரோடு என்னுதும் வேணும். மஞ்சரி எங்கே?" என வினவினான். அவள் கீழே நின்றாள்.

"ஜீஜூஷா, இது ராஜ்க்கு என ஒரு கவரை நீட்டினாள்." மஞ்சரி. "கொரியர் பாய் ஆக்கிட்ட." என்றான் ரகுவீர். அவள் சிரித்துக் கொண்டாள். சிவகுரு நாதன் மருமகனையே பார்த்த வண்ணம் நின்றார். "பூபாஷா அர்ஜெண்ட் வேலை, இரண்டு நாளில் வந்துடுவேன்." என்றான்.

 

"போய்ட்டு வாங்க மாப்பிள்ளை. முதலில் உட்கார்ந்து சாப்பிடுங்கள்." என்றார். ஜானகி, ரகுவீர் அமுதன் இருவருக்கும் தட்டை வைத்திருந்தாள். முகம் வாடிக் கிடந்தது. பாலன், "என்னத்தான் திடீர் ட்ரிப்?" என்றான்.

 "ஆமாம் எமர்ஜென்சி. பாலன், அம்ரூகிட்ட போகும் போது பேசிடுவேன். வேற ஏதாவது உதவி வேணும்னா கொஞ்சம் பார்த்துக்கோ." என்றான் ரகுவீர்.

"அத்தான், நீங்க சொல்லனுமா என்ன." என்றான். "ஆமாம் ஜீஜூ கரும்பு திண்ணக் கூலியா?" என மயூரி தமிழில் கலாய்த்தாள்.

 "இதைத் தான் வளர்த்த கடா மாரில் பாய்றதுன்னு சொல்லுவாங்க. ட்ரேன்ஸ்லேட் குருவையே போட்டுப் பார்குறியே." எனத் தமிழ் ஹிந்தியில் கலந்து சொன்னான் பாலன். 

ரகுவீருக்கு அமுதன் மொழி பெயர்த்தான். ராகினி, தெய்வா பரிமாறினர். ஜானகி பக்கத்தில் உட்கார்ந்து இருந்தாள். தான் ஒரு வாய் சாப்பிட்டு, அவளுக்குத் தோசை ஒரு பீசை ஊட்டி விட்டான் ரகுவீர்.

மஞ்சரி கிண்டலடிக்கவும், "ராஜ்விகிட்ட கவரைக் கொடுக்கனுமா, வேண்டாமா?" என்றான். மஞ்சரி வாயை கையால் மூடிக் கொண்டாள்.

 ஜானகிக்கும் பாதியை ஊட்டிவிட்டே எழுந்தான். கை கழுவி வரும்போது, கோர்ட் பாக்கெட்டில் இருந்து, மாத்திரை ஸ்ட்ரிப்பை, யாரும் அறியாத வண்ணம் தெய்வாவிடம் கொடுத்தான்.

"நைட் தூத் மே ஏ கோலி மிலாகர் தீஜியே." (இரவு பாலில் ஒரு மாத்திரை கலந்து கொடுங்கள்) அவர் புரிந்து கொண்டு. "நான் பார்த்துக்குறேன் தம்பி." என்றார் தெய்வா.

தாத்தா, அப்பத்தா அங்கே வரவும், காலைத் தொட்டு வணங்கி, "ஊருக்குப் போய்ட்டு இரண்டு நாள் வந்துடுவேன்." என்றான்.

"நல்லபடியா போய்ட்டு வாங்க." என வாழ்த்தி அனுப்பினர். மயூரியிடம் வந்தவன், "சோட்டி டே கேர்" என அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டான். "மிஸ் யூ பையா, சீக்கிரம் வாங்க." என்றாள். 

சிவகுரு, ராகினி கால்களைத் தொட்டான். "நல்லபடியா போய்ட்டு வா." என்றார் ராகினி. "ஆல் தபெஸ்ட் மாப்பிள்ளை." என்றார்.

 சண்முகம் காலைத் தொட வர, கைகளை விரித்துக் கொண்டார், ஒரு முறை தழுவி "வர்றேன் மாமா, உங்க மகளைப் பார்த்துக்குங்க." என்றான் ரகுவீர்.

ராகினி ஒரு புட் பேக், சப்பாத்தி ரோலைக் கொடுத்தார். "புவாஷா ஏர்போர்ட் ல பார்த்துக்குறேன்." என்றான்.

 

"எனக்குத் தெரியாதுப்பா, உன் சாசுமா கொடுத்தது." எனத் தெய்வாவைக் கைக் காட்டினார் ராகினி."சரி குடுங்க." என வாங்கிக் கொண்டான். ஜானகியை அணைத்தவாறே படி இறங்கினான்,

அமுதன் ரகுவீர் பரிசளித்த காரோடு வந்து நின்றான். "ஜானும்மா, அத்தானை நினைச்சுக் கிட்டே இருடி, பொழுது போய்டும்." என மெல்லிய குரலில் சொல்லி கண் சிமிட்டியவன்.

 "யாரும் தப்பா எடுத்துக்காதீங்கப்பா, ஷாதியாகி என் லுகாயியை முதல் தடவை விட்டுட்டுப் போறேன். அந்தப் பக்கம் திரும்பிக்குங்க." என அவன் சொல்லவும், அத்தனை பேர் முகத்திலும் புன்னகை. ஜானகியை அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டான். "ஜீஜூஷா ஆச்சா?" என்றாள் மஞ்சரி. 

"ஷாதி முடிச்சு ராத்தோட் மேன்ஷன் தானே வருவ, நானும், என் லுகாயியும் அப்ப பார்த்துக்குறோம் உன்னை!" என மஞ்சரியை வம்பிழுத்து. ஜானகியை கொஞ்சி, கெஞ்சி சிரிக்கவைத்து கிளம்பினான்  ரகுவீர் சிங் ராத்தோட்.

அந்த ஆடிக்கார் சீறிப் பாய்ந்து புள்ளியாக மறைந்தது. ஜானகியை சிரிக்க வைக்க, மஞ்சரி, பாலன் மயூரி டீம் பல உத்திகளைக் கையாண்டது.

சிவகுரு, முகம் வாடிக் கிடந்த மகளை அணைத்துக் கொண்டு, "ஜானும்மா அப்பா ஜானுக்கு இன்னைக்குக் கொஞ்சம் டல்லா இருக்கு. நீதான் கம்பெனிக் குடுக்கனும்." எனத் தன் அறைக்கு அழைத்துச் சென்றார்.

ரகுவீர், மாலை ஐந்து மணிக்கு எல்லாம் மும்பை போய்ச் சேர்ந்து விட்டான். டிரைவர் காரோடு ரெடியாக ஏர்போர்ட்டில் நின்றார். நேரே ஆபீஸ் சென்றுவிட்டான். இவனுக்காகக் கஜேன், அமரேன் காத்திருந்தனர். ராஜ் ஓடிவந்து அழைத்துக் கொண்டான். "சாரி பையா, உங்களை வரவச்சுட்டேன்." என்றான்.

"ராஜ்வி, எமர்ஜென்சி இல்லைனா நீ கூப்பிட மாட்டேங்கிறது எனக்குத் தெரியும்." என்றான் ரகுவீர்.

சிறுமலையில் ஜானகியை நாள் முழுதும், சிவகுரு வேறு பேச்சுகள், வேலையில் ஈடுபடுத்தி அவரோடே வைத்துக் கொண்டார். தன் வாழ்வின் ஆரம்பக் காலத்தில் ராகினியுடனான தயக்கம், வாழ்க்கை என மனதை திறந்துப் பேசிக் கொண்டிருந்தார்.

"உங்க அம்மாவுக்கு என் மேல் விருப்பம் இருந்தது, ஆனால் ஒரு நாளும் வாயைத் திறந்து சொன்னதே இல்லை. வாழ்க்கையை ஆரம்பிக்கவே ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு." என நிறுத்தினார்.

"அப்பாஜான், நீங்களும், மாதாஜியும் அவ்வளவு அன்யோன்யமா இருப்பீங்ககளே?" என்றாள்.

"ஆமாம் டா, அதெல்லாம் அதுக்கு அப்புறம். அவள் முகத்தில் ஒரு சோகம் அப்பியிருக்கும், அதனால் எனக்கு நெருங்கவே பயம், ஆனால் இப்ப அளவு பெரிய வீடு இல்லையே, அசந்தர்ப்பமாக அவளைப் பார்க்க நேரும் போது கணவனா நிறையக் கஷ்டப்பட்டேன்." என்றார்.

 ஜானகி தன் அப்பாவையே பார்த்திருந்தாள். "எப்படிச் சமாளிச்சீங்க அப்பாஜான்?" என்றாள். "உடல் ஓயும் வரை வேலை செய்வேன். வந்து படுக்கவும் தூங்குற மாதிரி." என நிறுத்தினார். இப்போது தான் ரகுவீர் பார்வையில், தங்கள் பிரச்சினையை நோக்கினாள்.

 அவளைக் கொஞ்ச நேரம் யோசிக்க விட்டவர், "தாம்பத்தியம் உடல் தேவையை மட்டும் பூர்த்திச் செய்றது இல்லை ஜானும்மா. மனதளவில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும். இறுக்கம் தளரும். முறையான தாம்பத்தியம் புனிதமானது. ஆத்மாக்களுக்கு இடையேயான பந்தம் வரும்." என நிறையப் பேசினார். ஜானகி கேட்டுக் கொண்டாள்.

மாலை நேரம், அமிர்தா வந்து சேர்ந்தாள். ஜானகிக்கு அவளைப் பார்க்கவும் ஆறுதலாக இருந்தது. கொஞ்ச நேரம் அலுவலகம் பற்றிப் பேசினர்.

 மஞ்சரி, மயூரியும் சேர்ந்துக் கொண்டனர். பெங்களூர் கூட்டணி கூடியது. எம்பிஏ ப்ராஜெட் சப்மிஷன், வைவா இதைப் பற்றிப் பேசிக் கொண்டனர். வீடு களைக்கட்டியது. அமுதன், பாலனும் சேர்ந்துக் கொண்டனர்.

 "இன்னும், கொஞ்ச நேரத்தில் போன் வரும் பார், ஜானும்மா சாப்பிட்டியா, தூங்குனியான்னு?" என மஞ்சரி கிண்டல் செய்தாள்.

 "ஏண்டி, நீ விடிய விடிய பேசுற. ராஜ் பையா அந்தப் பக்கம்,' ம்' மட்டும் தான் சொல்லுவாங்க. மத்தது எல்லாம் இவள் தான் பேசுவா." என்றாள் மயூரி.

"அத்தாச்சி, அதுக்கு நடுவில் அப்பப்ப, 'ஐ லவ் யூ பேபி' சொல்லுவாளே, அதை விட்டுட்டீங்க." என்றான் பாலன்.

"அது எப்படிடி அத்தனை தடவை சொல்ற?" என கேட்டாள் அமிர்தா.

 "நான் ,என் ராஜ் பேபியை அவ்வளவு லவ் பண்றேன், ஐ லவ்ராஜ் பேபி. இந்த மயூவால தான் எம்பிஏல்லாம் படிக்கிறேன்." என குறைப் பட்டவள் , "ஸ்வரூ, ஒரு நாளைக்கு அமுதன் ப்ரோ கிட்ட எத்தனை தடவை சொல்லுவ?" என விவஸ்தை இல்லாமல் கேட்டாள்.

 அமுதன், மயூரி இருவரும் வெட்கப்பட்டார்கள். "பத்து, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்னு." என மஞ்சரி கேட்டுக் கொண்டே போனாள்.

 

அவளை ஒரு அடி வைத்த மயூரி, "இதென்ன ரேசன் வாங்குற மாதிரி கேக்குற, இதுக்கெல்லாமா கணக்கு வைப்பார்கள்." என்றாள் மயூரி, அமுதன் அவளையே பார்த்திருக்கவும், விக்கியது போல் நடித்துத் தண்ணீர் குடிக்க ஓடினாள்.

 மஞ்சரி, அடுத்து அமிர்தாவைப் பார்க்கவும், "மயூவை தண்ணீர் குடிக்க வச்சுட்ட, நீ இதெல்லாம் உன் ப்ரோ கிட்ட வச்சுக்க. அவர் தான் உன்னை மாதிரி விவஸ்தை இல்லாமல் பேசுவார்." என்றாள் .

 "ப்ரோ, என்ன இவள் இப்படிச் சொல்றா?" என்றாள் மஞ்சரி. "விடுமா, அது ஒரு நாட்டுப் புறம்." என்றான் பாலன். அமிர்தாவின் தீப் பார்வையில், மஞ்சரி சிரித்தாள்.

 "மாட்டிக்கிச்சே, மாட்டிக்கிச்சே, பாலா பையன் மாட்டிக்கிச்சே" என,மஞ்சரியோடு ஹை பை கொடுத்தவாறு, பாடினாள் ஜானகி,  

"ஜானும்மா, நீ கலாய்க்காத, ரொம்ப எகுறுவா." என்றான் பாலன்.

"என்ன ராத்தோட் பஹூஸ் சேர்ந்து எங்களைக் கலாய்க்கிறீர்களா. கொஞ்ச நேரத்தில் இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு போனை பிடிச்சிட்டு போவாளுங்க." என்றாள் மயூரி. அமிர்தா சிரித்தாள்.

 "ஆமாம், நாங்கள் போனை தான் தூக்கிட்டுப் போகமுடியும்." என மஞ்சரி ஏற்ற இறக்கமாகப் பேசினாள்.

"அம்ரூ, யோசித்துப் பாருடி இதுக இரண்டும் சேர்ந்துச்சுனா, ராத்தோட்ஸ் என்ன ஆவாங்கன்னு. பாவம் என் பையா இரண்டு பேரும்." என்றாள் மயூரி.

 "ரொம்பப் பாவம் பார்க்காதே, உங்களைத் தெரியாதாடி, புதுப் பொண்டாட்டியை விட்டுட்டுப் பிஸ்னஸ் தான் முக்கியம்னு ஓடுங்க. ஜானி, நீயும் நானும் தாண்டி உட்கார்ந்து இருக்கனும்." என்றாள் மஞ்சரி.

 "நம்மளும் ஏதாவது செய்வோம்." என்றாள் ஜானகி. "ஜானி பேபி நான் வேலை எல்லாம் செய்ய மாட்டேன், என்னை விட்டுடு." என்றாள் மஞ்சரி.

"சம்பாதிக்கிறதை, அவங்க பார்த்துக்கட்டும், நம்ம செலவு பண்ணுவோம்." என்றாள் ஜானகி. "இந்த டீல் ஓகே!" என்றாள் மஞ்சரி.

"ஜானி பேபி, பேக் டு டாபிக், நீ உன் 'வீரூஜி' கிட்ட ஒரு நாளைக்கு எத்தனை தடவை லவ்யூ சொல்லுவ?" எனக் கேட்டாள்.

 

தண்ணீர் ஒரு சிப் குடிக்கப் போனவளுக்குப் புரை ஏறியது. அவளை அமுதனும், பாலனுமாக, தலையில் தட்டி முதுகில் தடவி ஆசுவாசப் படுத்தினர்.

 "ஜீஜூஷா நினைச்சுருப்பார்." எனும் போதே வீடியோ காலில் ரகுவீர் வந்தான். ஜானகி தொண்டையைச் செருமி தன்னைச் சரி செய்து கொண்டிருந்தாள். அதனால் மஞ்சரி எடுத்தாள்.

"ஹாய் ஜீஜூஷா, வேலை முடிஞ்சுதா?" என்றாள்.

"இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும், அதுக்குள்ள ஜானுகிட்ட பேசலாம்னு கூப்பிட்டேன்." என்றான்.

"இவ்வளவு தீவிரமா நினைக்காதீங்க. உங்கள் லுகாயி பிறந்த வீட்டில் தான் இருக்கா. யாரும் கடிச்சு சாப்பிட மாட்டாங்க." என்றாள்.

"அவங்க சாப்பிட மாட்டாங்க, ஆனால் உன் கிட்ட விட்டுட்டு வந்துருக்கேனே, பேசியே கொன்னுடுவ" என்றான் ரகுவீர் சிரித்துக் கொண்டே.

"ஜீஜூ, இதெல்லாம் கொஞ்சம் ஓவர். உங்கள் லுகாயியா ஆகும் முன்னமே அவள் என் ஃப்ரண்டு. நானும் அவளும், ஒரு வருடம் ஒரே வீட்டிலிருந்தோம். நீங்க ஜஸ்ட் ஒரு மாசம் தான். எங்கள் நட்பு தான் மூத்தது." என்றாள.

"மஞ்சி, நீ சொல்றதை எல்லாம் ஒத்துக்குறேன், பத்து நிமிடம் ப்ரேக், திரும்பி வேலை இருக்கு, அவள் கிட்ட கொடு." என்றான் ரகுவீர். "அது." என ஜானகியிடம் நீட்டினாள்.

 ஜானகி நடந்து, வலது பக்கம் இறங்கி கார் பார்க்கிங் பக்கம் போனாள். "ஜானும்மா, என்னடா பண்ற?" என்றான்.முகத்தைப் பார்த்து, "ஏன் கண்ணெல்லாம் சிவந்து இருக்கு அழுதியா என்ன?" எனப் பதறினான்.

 "வீரூஜி, பேச விட்டீங்கனா தான் பதில் சொல்ல முடியும். புரை ஏறிடுச்சு. கரெக்டா நீங்க போன் பண்ணும் போது தான் புரை ஏறுச்சு. ஐயம் ஓகே. அங்க ப்ராப்ளம் சரியாயிடுச்சா?" என்றாள் .

 "அன்னைக்கு நைட்டு, நீ ஐ லவ் யூ சொன்னியே, அன்னைக்கு, அப்டேட் ஆனது, திருப்பி அப்டேட் ஓடுகிறது. அங்கே ஏதாவது அப்டேட் இருக்கா?" என்றான்.

 "நீங்க கேட்கிறதே புரியலை. இங்க இருக்கச் சிஸ்டம் பத்தி எனக்கு என்ன தெரியும்?" என இழையோடிய சிரிப்போடு, கேட்டாள்.

 

களஞ்சியம்
66- திருமண வரவேற்பு.

 

 ஜானகி தேவி-ரகுவீர் சிங் ராத்தோட் திருமண வரவேற்பு.

 ரகுவீர், அடர் வண்ண க்ரே சூட்டில் வரவேற்பு நிகழ்ச்சிக்காகத் தயாராகிக் கொண்டிருந்தான். அந்த எலைட் மஹாலின் மாப்பிள்ளை அறையில் பார்லரில் இருந்து வந்த சிப்பந்தி அவனுக்கு உதவி கொண்டிருந்தார். ஃபிட்டட் கோர்ட் சூட், அவனது உயரம் கலர் உடற்கட்டுக்கு ஏற்றதாக, அவனது மேன்லி லுக்கிற்க்கு மேலும் மெருகூட்டும் விதமாக ஹேண்ட்சமாக இருந்தான்.

 

மயூரியிடமிருந்து போன் வந்தது. "பையா, கொஞ்சம் ஜானி ரூம் வரைக்கும் வாங்க ப்ளீஸ், நாங்க என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்குறா. நல்ல பிட்டட் டிசைனர் வேர் வேண்டாம் னு சொல்றா. நீங்க வாங்க பையா!" என்றாள் அவளது குரலில் பதட்டம் இருந்தது.

"சோட்டி, ரிலாக்ஸ் இதோ வர்றேன்." என்றவன். இப்ப எதுக்குத்  தகறாருன்னு தெரியலையே என யோசித்தபடி விரைந்தான்.

 ஜானகி ரூமின் வாசலில் மஞ்சரி கோபமாக நின்றாள், "ஜீஜூ உங்கள் லுகாயி ரொம்பத் தான் பண்ற, செமயா இருக்கு  ட்ரெஸ், அவளைப் பார்த்தால் எனக்கே ஆசையா இருக்கு ஆனால் அவளுக்கு வேண்டாமாம்.போங்க!" எனப் பொரிந்தாள்.

மயூரி வெளியே வந்தவள், "பையா! யூ லுக் சோ நைஸ். அந்த ட்ரஸில் அவளைப் பாருங்கள். உங்களுக்குப் பொருத்தமா இருப்பாள், கொஞ்சம் சொல்லுங்க. வேற ட்ரெஸ் உடனே அரேஞ்ச் பண்ண இது மும்பையா என்ன?" என குறைப் பட்டாள்.

 "உள்ளே வேற யார் இருக்கா?" என்றான். "அம்ரூ மட்டும் தான் இருக்கா.டிசைனர், ப்யூட்டிசின் அங்க நிற்கிறாங்க." என காட்ட, அவர்கள் ரகுவீரை தான் வாய் பிளந்து பார்த்து நின்றனர்.

 ரகுவீர் கதவைத் தட்டினான், அமிர்தா திறந்தவள், "உப் அண்ணா நீங்களாச்சு, உங்கள் பொண்டாட்டி ஆச்சு. எப்படியாவது, ரிஷப்சன் ஸ்டேஜ் ஏறுங்கள் போதும்.” என்று விட்டுச் சென்றாள். வரிசையாக, ஜானகியின் அழகை பெண்களே புகழ்ந்து பேச,ரகுவீருக்கு தன் லுகாயியை பார்க்கும் ஆர்வம் மேலிட்டது, 'அப்படி என்ன ட்ரெஸ் ஜானு வேண்டாமென்று சொல்றா!' என உள்ளே நுழைந்தான். .

பார்த்தவன் கண்கள், தன் லுகாயியை விட்டு அகலவில்லை. அழகில் மயங்குவது என இதைத் தான் சொல்வார்களோ என்பது போல் ரகுவீர் தேனில் சிக்கிய வண்டு போல், அவளைப் பார்க்கவும், தன்னை மறந்து சீட்டி அடித்தான். ஜானகி விழி உயர்த்திப் பார்த்து, "உங்களை யாரு வரச் சொன்னா, ஐயோ போங்க!" என்றவளின், 'போங்க'வில் வாங்க என்ற அழைப்பு இருந்தது. 

அவள் அருகில் சென்றான், கண்ணாடியில் பேக்லெஸ் ப்ளவுஸ் தெரிந்தது. சிக்கென அவள் உடலைப் பிடித்திருந்த, லெஹங்கா சோலி, முன்னே பின்னே வளைவுகளை எடுத்துக் காட்டிய ஸ்லீவ்லெஸ் வேறு. இளம் ஆரஞ்சு இழையோடிய லைட் கலர் ப்ளவுஸில் வொயிட் ஸ்டோன் ஹெவி ஒர்க். கீழே ப்ளார்ட் அலையலையாய் திரண்ட லெஹங்கா ஸ்கார்ட். ஒரு மெல்லிய ஷால் மட்டுமே. நிச்சயமாக அழகு தேவதையாக இருந்தாள். 

அவளை நெருங்கிய ரகுவீர், "ஹேய் மேரிஜான், ட்ரெஸ் நல்லா தானே இருக்கு என்ன பிரச்சனை, கண்ணாடியில் பார்." என அவளைத் திருப்பினான்.

 "எனக்கு ஒண்ணும் இந்த ட்ரெஸ் வேண்டாம். பாருங்க பேக்லெஸ், ஸ்லீவ் லெஸ். எல்லாமே கம்மியா இருக்கு. நான் எப்படிப் போடுவேன். நான் இது மாதிரி போட்டதே இல்லை!" என சிணுங்கினாள். 

"ஆமாம் ஜானும்மா போடாதே. நீ இப்படி ட்ரஸ் பண்ணிட்டு வந்தால், பொண்ணுங்களும் உன்னைத் தான் பார்ப்பாங்க. சிம்பிளா உங்கள் ஊர் பட்டுச் சேலையைக் கட்டிக்கோடி. அப்பத் தான் யங் கேர்ள்ஸ் என்னை மட்டும் பார்ப்பாங்க. இப்ப உள்ளே வரும் போது, வெளியே இரண்டு கேர்ள்ஸ் சைட் அடிச்சாங்க." என்றான்.

அவன் முன்னால் திரும்பி இடுப்பில் கை வைத்து நின்ற ஜானகி, "ராத்தோட்ஷாவுக்கு இந்த யோசனை வேற இருக்கா, கொன்னுடுவேன். வேற எவளாவது பார்த்தால்னா அவளையும்  கொல்லுவேன்." என அவன் கன்னங்களைப் பிடித்துக் கிள்ளினாள்.

"விடுடி, ரிஷப்ஷனில் நிற்கனும். சரி இதிலேயே வரீயா, புவாஷாவை சேலை கொண்டு வரச் சொல்லவா?" என்றான்.

"வீரூஜி, நான் இது மாதிரி எல்லாம் போட்டதே இல்லையே. அரைகுறையா இருக்க மாதிரி இருக்கு. நீங்க கூட வெயிட் போடுறேன்னு சொன்னீங்களே தொப்பை தெரியுதா, ஆபாசமா இருக்கா?" என்றாள்.

அவள் சொல்லும் இடங்களில் ரகுவீர் கண்கள் மேய்ந்தன, ஆனாலும் அவளுக்கு விகற்பமாகத் தோணவில்லை, கணவனின் பார்வைக்குப் பழகுகிறாள் நம் நாயகி. அவன் அவளைக் கண்ணாடியை நோக்கித் திருப்பி அவளோடு பின்னால் ஒட்டி நின்றான் ரகுவீர். 

தூக்கிப் போடப்பட்டிருந்த கொண்டையில், ஒரு க்ளிப்பை எடுத்து விடவும் தோளில் சரிந்தது அவள் குழல். அவள் ஷாலை தாவணி போல் மாற்றி விட, அவனோடு சேர்ந்த அவள், சரியான ஜோடியாக இருந்தாள். இடது கையால் அவள் இடையை அணைத்து வலது கையில் அவளது கையை ஏந்தி முத்தமிட்டான்.

"மேரி ஜான், பார்க்கிறதுக்கு ரொமான்டிக்கா இருக்கடி ஓகே. என் கூட நிற்கும் போது யாரும் உன்னை வேற மாதிரி பார்க்க மாட்டாங்க. யூ லுக் பியூட்டிஃபுல், ஜுவல்லரி போட்டுக்கோ, மோடியா(குண்டாக) இல்லை, இப்போதைக்கு உன் அத்தானுக்கு மேட்ச், ஓகே." என்றவுடன் கன்னம் சிவந்தாள். அதைப் பாரத்து மேலும் சிரித்தவன், அவள் கழுத்து வளைவில் முத்தமிட்டான்.

 

"ஜானும்மா அது மட்டும் இல்லைடி, உனக்காக ஆசைப்பட்டு மயூவும், மஞ்சுவும் காஸ்ட்யூம் அரேஞ்ச் பண்ணியிருக்காங்க. ஏன் வேண்டாம்னு சொல்ற இந்த ட்ரெஸ் போட்டேனா அவங்களும் ஹேப்பி, போட்டுக்கோ சிம்பிள். கிளம்புமா நேரமாகுது." என்றபடி அவன் அவளோடு இழைந்து கொண்டிருந்தான். அவளுக்கு வித்தியாசமாகத் தோன்றவும் இல்லை.

அவள் திரும்பி, எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள், " வீரூஜி லிப்ஸ்டிக்!" எனவும் அவன் வேகமாகக் கண்ணாடியைப் பார்த்தான், "இன்னும் போடலை." என்றாள் ஜானகி.

"இதுக்கு என்ன அர்த்தமாம்?" என்றவன் அவள் இடையோடு வளைத்து, குனிந்து இதழ் ஒற்றி  அவள் கன்னச் சிவப்பை ஏற்றி விடுவித்தான்.

 "சீக்கிரம் வா.ஐயம் வெயிட்டிங்!" எனச் சென்றான். வெளியே சென்ற ரகுவீரை, அழகு பதுமைகளாக முழு அலங்காரத்திலிருந்த மங்கையர் மூவரும் , ஆவலாகப் பார்த்தனர்.

 ரகுவீர் கட்டை விரல் தூக்கி தம்ஸ் அப் காட்டினான். "ஹேர் ஸ்டைல் மட்டும் அவள் சொல்ற மாதிரி மாத்துங்க. சோட்டி சீக்கிரம்." என்று தன் அறை நோக்கிச் சென்றான்.

 ராஜ்வீர், ரன்வீர் தயாராக வந்திருந்தனர். "பையா, யூ லுக் ஹேண்ட்சம்." என்றான் ரன்வீர். "ஹேய், நம்ம ராத்தோட்ஸ், ஆல்வேஸ் லுக் ஹேண்ட்சம் தான். எனக்கு ஷாதி ஆயிடுச்சு, இவன் என்கேஜ்டு, சோ நீ தான் எலிஜிபிள் பேச்சுலர், எத்தனை கேர்ள்ஸ் கனவில் ரன்வீர் வருவானோ?" எனக் கிண்டல் செய்தான் ரகுவீர்.

ராஜ்வீர், தன்னையே கிள்ளிக் கொண்டான், "பையா நிஜமாகவே நீங்க தான் பேசுறீங்களா. இப்படி எல்லாம் கூடப் பேசுவீங்களா?" என ஆச்சரிய படும் நேரம் அமுதன், பாலன், கணேஷ் உள்ளே வந்தனர்.

"எல்லா எங்க அக்காள் செய்த மாயம், சரிதானே அத்தான்?" எனக் கையில் வைத்திருந்த கேமராவில் படங்களை கிளிக்கினான் கணேஷ்.

"ஆமாம், ஆமாம் ஜானி மேஜிக், பையா பேர் சொல்லலாம்ல, பாபிஷான்னு கூப்பிடனுமா?" என்றான் ராஜ்.

"ராஜ்வி, டோன்ட் பீ சில்லி, அது நீயாச்சு, ஜானுவாச்சு!" என்றான்.

ரகுவீரை நிற்க வைத்து விதவிதமாக போட்டோ எடுத்தான். அமிர்தா விடமிருந்து பாலனுக்குப் போன் வந்தது.

"அத்தான் ஜானகி ரெடி. வாங்கப் போட்டோ சூட், ஃப்ரெஸ்ஸா இருக்கும் போதே எடுத்துவிடுவோம்." எனக் கூட்டிச் சென்றனர். 

ஜானகி  மாடல் அழகியாக வந்தாள், ரகுவீர் கைப்பிடித்து அழைத்துக் கொண்டான். கணேஷ் முக்கால் மணி நேரம் அவர்களை ஆட்டிவைத்தான் அதில் ஜானகி ரகுவீரின் அருமையான புகைப்படங்கள் கிடைத்தன.

 ஹரிணி, அமர்சிங் பிள்ளைகளுடன் வந்து சேர்ந்தனர். அவர்களோடும் சேர்ந்து போட்டோ எடுத்தனர். "ஜானிம்மா, சாலேஷா நல்லா வச்சுக்குறாரா? இல்லையென்றால் சொல்லு ஒரு கை பார்த்திடலாம்." என்றான் அமர்சிங்.

 "ஸுனியேஜீ, இப்ப இருக்கிறது ஜானியுடைய ஊரில், இந்தக் கேள்வியை நான் தான் ரகுவி கிட்டக் கேட்கனும்." என்றாள் ஹரிணி.

 "தீதீ, யூ ஆர் ரைட், ஆனால் ஒரு திருத்தம், எந்த ஊர்லயா இருந்தாலும், "ஜான்வி உன்னை நல்லா பார்த்துகிறாளான்னு?" தான் நீங்க கேட்கனும். மும்பைலையும் இவள் தான் தாதா. அடியாள் வச்சிருக்கா. கம்மாகனி ராணிஷான்னு இவள் பேச்சைக் கேட்க ஆள் இருக்கிறது." என்றான் ரகுவீர்.

 "சாலேஷா, என்ன தான் இருந்தாலும், பெட்ரூம் ரகசியத்தை இங்கே சொல்லாதே, நீதான் அந்த அடியாளென்று எங்களுக்குத் தெரியும்." என்றான் அமர்சிங். ஜானகி அடக்கமாட்டாமல் சிரித்தாள். அவளின் வெள்ளிமணி கொட்டிய சலங்கைச் சிரிப்பில் ரகுவீர் மனதை தொலைத்து நின்றான்.

ரோஹன், ஹாசினி ஓடிப்பிடித்து விளையாட ஹரிணியும், அவள் பின்னால் அமர்சிங்கும் விழா மண்டபத்துக்குச் சென்றனர்.

 தனிமையிலிருந்தனர் ரகுவீர், ஜானகி. "ஜீஜுக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்குல்ல, நான் தான் உன் முதல் அடிமைங்கிறதை,அது தான் கண்டு பிடிச்சிட்டார்,." என்றான் ரகுவீர்.

"ஐயே, உங்கள் அடிமை வேலை என்னன்னு எங்களுக்குத் தெரியாது. கேப் கிடைத்தால் போதும், சந்தில் சிந்து பாடிடுவீங்க. என்னை ஏமாற்றிச் செய்ற மாதிரி நினைப்பு. போனாப் போகிறது வீரூ காஞ்சு கிடைக்குதேன்னு என்னைக் கட்டுப் படுத்திக்கிட்டேன்." என்றாள் ஜானகி.

"ஆஹா! உங்கள் கருணையை என்ன சொல்கிறது ராணிஷா." என்றான் ரகுவீர்.

ராஜ், மஞ்சரி, அமிர்தா, பாலன் வந்தனர். "குருஅப்பா, அறிமுக உரை குடுக்குறாங்க, இந்தக் கதவைத் திறந்தால் நேரா ஹால் தான் அதனால், இன்ட்ரோ கொடுத்து உடனே நீங்கள் முன்னாடிப் போங்க. தேனு மானு உங்கள் கூட வருவாங்க." என்றான் பாலன்.

 அதே நேரம் ஜானகி போலவே சின்ன லெஹங்காவில் வந்து சேர்ந்தனர்."ஹேய் ஹேண்ட்சம்!" என ரகுவீருடன் கை குலுக்கினர் இருவரும். "தேனு, மானு அவர் என் புருஷன்டி." என்றாள் ஜானகி.

 " தெரியும், தெரியும், இருந்தாலும் உன் கலருக்குச் சித்தா கொஞ்சம் ஜாஸ்தி தான். ஐ லவ்யு சித்தா!" என் ஆளுக்கு ஒரு ஃப்ளையிங் கிஸ் கொடுத்தனர். ரகுவீர் இரண்டையும் பிடித்து நெஞ்சில் வைப்பது போல் ஆக்ஷன் செய்தான்.

 " எங்க நீ சொல்லு?" என ரகுவீர் ஜானகியைப் பார்த்துக் கேட்டான் அவள் முறைத்தாள்.

 "ஜீஜூஷா, இதுக்கே கெஞ்சிக் கிட்டு தான் அலையறீங்களா? இவள் ஒண்ணும் சரியில்லை ராஜ், லேட்டா ஷாதி பண்ணாலும் இவளுக்கு முன்னாடி நான் புள்ளை பெத்துடுவேன்." என்றாள் மஞ்சரி.

ராஜ்விக்குத் தான் வெக்கம் வந்தது."இன்னும் நமக்கு ஷாதியே நடக்கலை." என்றான் ராஜ்.

 "ஜீஜூஷா, உங்களுக்குப் புண்ணியமா போகுது, மாட்டை அடக்கியாவது இவளை கரெக்ட் பண்ணுங்கள். வீ ஆர் ஆல் வெயிட்டிங்." என்றாள் மஞ்சரி.

"ராஜ், போகிறப் போக்கைப் பார்த்தால், டார்கெட் டேட் ஃபிக்ஸ் பண்ணுவா போல உன் கர்வாலி." என்றான் ரகுவீர்.

 "அதுவும் நீங்க தான் சொல்லிட்டு வந்தீங்க. மூன்று மாசம், ஜீஜூ உங்களை நம்பி தான் இருக்கேன், இவனுங்க அடுத்த ஒரு கோர்ஸ் என்னைச் சேர்க்கும் முன்னே, என் ஷாதிக்கு வழிவிடுங்கள்." என்றாள் மஞ்சரி.

ரகுவீர் சிரித்து விட்டு, "ஓகே டன்." என்றான். ஜானகி முறைத்தாள். இவர்கள் பேசுவது, தேனு மானுவுக்குப் புரியவே இல்லை. "ஆண்டி கொஞ்சம் வாயை மூடுங்கள். சிவா தாத்தா ஏதோ பேசப் போறாங்க." எனச் சொல்லவும், மஞ்சரி வாயை நிஜமாகவே கைகளால் பொத்திக்  கொண்டு சரியா எனத் தலை ஆட்டினாள். அதுகளும் தம்ஸ் அப் காட்டின. 

அரங்கம் நிரம்பி இருந்தது. அழைத்திருந்த அத்தனை விருந்தினரும் வந்திருந்தனர். அமிர்தாவின் குடும்பம் வரவேற்பிலிருந்து பந்தி வரை அவள் அப்பா,அம்மா அண்ணன்,அண்ணிகள் அனைவரும் ஓடியாடி வேலை செய்தனர். ராம் அப்பா அம்மா சகிதம் குடும்பமாக வந்திருந்தான்.

 தாதாஷா, தாதிஷா, தாத்தா, அப்பத்தா முன் வரிசையில் அமர்ந்து இருந்தனர். தாத்தா, தாதாஷாவிற்கு இடையில் நட்பு உருவாகி இருந்தது. மருமகளைப் புகழ்ந்து சிவபரங்கிரி ஐயா பேசுவதைத் தாதாஷா ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பார்.

 வரவேற்பு விழாவை ஆரம்பித்து வைக்கச் சிவகுரு நாதன் ராகினி தம்பதியினர் தெய்வா சண்முகம் பின்னால் நிற்க மேடை ஏறினர்.

 

"எங்கள் அழைப்பை ஏற்று வருகை தந்த சொந்த பந்தங்கள், நண்பர்கள், வியாபார உறவுகள் அனைவரையும் எங்கள் குடும்பம் மற்றும் எஸ்.எஸ் இன்டர்நேஷனல் க்ரூப்ஸ் சார்பாக வரவேற்கிறோம். 

எங்களை அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும், நானும், எனது மனைவி ஸ்வர்ன ராகினியும் கலப்பு மணம் புரிந்தவர்கள் என்பது. எங்கள் உறவுகளும் எங்களை அன்புடன் ஏற்றுச் சொந்தம் கொண்டாடி வருகிறீர்கள். அதில் மற்றொரு பரிமாணமாக என் மனைவி வழியில் அவர் பிறந்த வீட்டோடு இரண்டு சம்பந்தம் செய்திருக்கிறோம். மும்பையில் வசிக்கும் இராஜஸ்தானியர், உதய்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட பரம்பரை, ராத்தோட் குடும்பத்தோடு மற்றும் இரண்டு சம்பந்தங்களை இணைத்திருக்கிறோம்." என்றவர்.

 ராத்தோட் குடும்பத்தைத் தாதாஷா, தாதிஷா முதல் ராகினியின் சகோதரர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

 "எனது மகன் சிவகுக அமுதனுக்கு, எனது சிறிய மச்சினர் அமரேந்தர் சிங் ராத்தோடின் மகள் , ஸ்வர்ண மயூரி ராத்தோடை நிச்சயம் செய்து, மும்பையில் நிச்சயதார்த்தம் முடித்து விட்டோம்." என அமுதன், மயூரி, அமரேன், பூனத்தை மேடையேற்றி அறிமுகம் செய்து வைத்தார்.

 "அடுத்து விழா நாயகன், நாயகியைப் பற்றி, பெண்ணைப் பெற்ற அப்பாக்களுக்குத் தெரியும், மகள் என்பவள் அவர்கள் வாழ்வின் மூலாதாரம் என்பது. பெற்ற தாய், உடன் பிறந்த சகோதரி, வாழ்க்கைத் துணை மனைவி என நமது பாசத்துக்குரிய பெண்மணிகளின் ஒட்டு மொத்தக் கலவையான பிரதிபிம்பம் மகள் இல்லாமல் வாழ்க்கை எப்படிப் பூரணம் அடையும்.

 ஜானகியைக் கண்டெடுத்த அந்தக் காவிய தந்தை ஜனகனை விட , ஜானகியைப் பெற்றெடுத்த இந்தச் சிவகுரு நாதன் புண்ணியம் செய்தவன்.

 என் மகள் செய்த குறும்புகளை ரசித்து மகிழ்ந்திருந்த தருணங்கள் ஏராளம், மகிழ்ந்திருந்த தருணத்தால் அவள் மங்கையானதை மறந்துவிட்டேன்.

 சீதைக்கு ஒரு ராமனாய், அவள் மனம் கவர்ந்த வீரூவாய், என் மகள் மனம் சுமந்த ரகுவீரனின் காதலில் கண்டேன் என் மகள் மணமாலை ஏற்கத் தயாரானதை. எனக்கும் மேல் என் மகளை நேசிக்க ஒரு திருமகன் வருகையில் வேறென்ன வேண்டும். தாரை வார்த்துத் தந்து விட்டேன் என் செல்வமகளை." எனக் கண் கலங்கியவர், தன் கண்ணாடியைக் கழட்டி மாற்றினார். அவர் அழுததில் சண்முகம், ஹேமந்த் உட்படச் சில தந்தைகளும் கண்கலங்கினர்.

 

ராகினி பக்கத்திலிருந்து அவர் தோள் தொட, "இதோ என் செல்வ மகளும், அவர் உள்ளம் கவர்ந்த என் மருமகனும்." எனப் பேச முடியாமல் அவர் தவிக்க, அமுதன் மைக்கை வாங்கி வரவேற்றான்.

 இதனை அறையிலிருந்தபடி கேட்ட ஜானகி உணர்ச்சிவயப்பட்டு, கண்ணீர் மல்க நின்றாள். ரகுவீர் அவள் கைகளை அழுத்தவும், வந்தாள் கண்ணீரை உல் இழுத்து, விரலால் மீதியை சுண்டினாள். அமிர்தா, அவசரமாக டிஸ்ஸுக்கு கொண்டு கலங்கிய  கண்களின் மேக்கப்பை சீர் செய்தாள்.

 ஜானகி, தந்தை பேச்சில் உணர்ச்சி பூர்வமாக வந்தாள். அமிர்தா ரகுவீருக்கு சிவகுரு பேசியதை மொழி பெயர்த்து இருந்தாள். அமுதனின் வரவேற்பு உரையோடு, ஜானகியின் கைத்தலம் பற்றி ரகுவீர் அரங்கில் அடியெடுத்து வைத்தான்.

"நான் எனது அருமை மைத்துனர் திரு ரகுவீர் சிங் ராத்தோட்டையும், எங்கள் வீட்டு இளவரசி என் செல்லத் தங்கை ஜானகி தேவி ரகுவீர் சிங் ராத்தோடையும், இதயப் பூர்வமாக வருக, வருக என வரவேற்கிறேன்."

எனச் சொல்லவும், அரங்கின் வாசல் பகுதியிலிருந்து, தேனு, மானு சிறுமிகள் முன்னே வர, ரகுவீர், ஜானகியின் கைக் கோர்த்தவாறு, தலை அசைப்புடன், ரெட் கார்பெட்டில் வந்தான். அவர்கள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், மேலிருந்து வகை வகையாய் வண்ண மலர்கள் பூமாரி பொழிந்தன. 

"ஜானகி தேவி, எங்கள் ராமனை ரகுவீரனைத் தேடி இருவிழி வாசலில் வைத்திருந்தாள். இவள் விழிகள் தேடுவதை அறியாமலே அதில் வந்து சிறைப் பட்ட வீரூ அவர்." என்றான் அமுதன்.சகோதரர்கள்  கரவொலி  எழுப்பினர்.

"எங்கள் அத்தானுக்காக என் தங்கை எதுவும் செய்வாள். வாளெடுத்து வீசுவாள், தூரிகையின் துணை கொண்டு ஓவியமாய் அவரைச் சிறையெடுப்பாள், மாயக் கண்ணன் பின் ஓடும் ராதையாய் தவமிருப்பாள். பசியமர்த்தும் அன்னையாய் உருவெடுப்பாள். மதியூக மந்திரியாய் அவர் மனதில் குடியிருப்பாள். அதேபோல் அத்தானும் சளைத்தவரில்லை .

என் தங்கை மனதில் இடம் பிடித்தல் அத்தனை எளிதல்ல, ஜானகியை அறிந்த அனைவருக்கும் அது தெரியும். அத்தானின் பிரயத்தனம் எத்தனை இருந்திருக்கும் யோசித்துக் கொள்ளுங்கள். மோதலில் தொடங்கிய காதல், அத்தானின் அன்பால் மலர்ந்து, சிறை மீட்ட அவர் தீரத்தால் உயிர்த்து, கரம் பிடித்த அவர் காதலால் முகிழ்ந்து உள்ளது." எனப் பூமழையோடு அமுதனின் புகழ் மாலையும் அவர்களை வரவேற்றது.

 

நடுவில் ஜானகி கையை அழுத்திய ரகுவீர், "உங்கள் அண்ணன் என்னடி சொல்கிறான்." என்றான். "வீருஜி, அவன் மட்டும் பொம்பளை புள்ளையா இருந்திருந்தால், எனக்குச் சௌத்தன்(சக்களத்தி) அவன் தான்." என்றாள். "அத்தான் அத்தானென்று உருகுறான்." என்றாள். "என்னன்னு?" என்ற ஒரே கேள்வியில் ஜானகியின் செம்மை அதிகமானது.

 இவர்கள் பின்னால் ராஜ்வீர், மஞ்சரி சற்று இடைவெளி விட்டு ஜோடியாக வந்தனர். அவர்களுக்குப் பின்னே அமிர்தா, பாலன் வந்தனர். 

ஜானகி அசைந்து வரும் சிற்பமாக வந்தால் எனில் ரகுவீர் அவளை வழி நடத்தும் ஆணழகாக வந்தான். இவர்கள் ஜோடியைப் பார்த்தவர்கள் இமைக்க மறந்தனர். எல்லார் மொபைலிலும் இவர்கள் சிறைப் பட்டனர். ராத்தோட்ஸ் ஆடிட்யுடில் அவர்கள் வளம் தெரிந்தது. மேடை ஏறிய ஜானகி, சிவகுருவை "அப்பாஜான்!" என அவர் மார்பில் சாய்ந்தாள். அவரும் உச்சி முகர்ந்து ரகுவீர் அருகில் நிறுத்தினார். 

ராஜேன், ஷப்னம், கஜேன், ஸர்குனை ராகினி அறிமுகம் செய்து வைத்தார்.விருந்தினர் முன்பாக ரகுவீர் ஜானகி ஜோடி மாலை மாற்றிக் கொண்டனர். இவர்கள் திருமணத்தைக் காணாதவர்களுக்காக அந்த ஏற்பாடு. ஜானகி அந்த நேரம் காதலாகிக் கசிந்துருகி நின்றாள்.

 விருந்தினர் ஒவ்வொருவராக மேடையேறி ஆசி வழங்கி போட்டோ எடுத்துக் கொண்டனர். சிவகுரு மகளுக்குப் பக்கத்தில் நிற்க ராகினி வீரூவின் அருகில் நின்றார். ஒரு மணி நேரம் வரிசையாக விருந்தினர் வந்து கொண்டே இருந்தனர்.

 இவர்களுக்கு ஓய்வு தரவென, ரகுவீர் ஜானகி காதல் கதையை அமிர்தாவும் கணேஷும் வீடியோ போட்டோ க்ளிப்பிங்காகத் தந்தனர். ஏர்போர்ட் போட்டேஜும் இருந்தது. அவர்கள் யோசனையாகப் பார்க்க, ராஜ்வீர் உபயம்.

 ஜானகி தன் புவாஷாவின் மகள் எனத் தெரிந்த நொடி ரகுவீரின் எக்ஸ்பிரஸன், ஆ என ஜானகிப் பார்த்தாள். இவர்கள் சகாயீ முதல் எல்லாச் சடங்குகள், முகூர்த்தம் கடைசியாக, இவர்கள் பந்தம் ஏழேழு ஜென்மமாகத் தொடர்கிறது என்பதும் மெய் தானோ எனப் படி தாதி, தாதா போட்டோ இவர்கள் போட்டோவையும் பக்கத்தில் போட்டு, மார்பிங் செய்தும் காட்டி முடித்தனர். பயங்கரக் கைத்தட்டல் இருந்தது.

 உறவுகள், பிஸ்னஸ், ஸ்கூல் என எல்லாத் தரப்பும் வந்தனர். எல்லோரையும் தக்கபடி கவனித்து வழியனுப்பி வீட்டுக்கு வர பதினோரு மணி ஆனது. பெரியவர்கள், ராத்தோட்களை தெய்வா அழைத்துச் சென்றார். வரவேற்பு சிறப்பாக முடிந்தது. சிவ மாளிகை வந்து சேர்ந்தனர். தெய்வா ஆரத்தியை தயாராக வைத்திருந்தார், ஆலம் சுற்றி உள்ளே அழைத்தார்.

 

ஹாலில் கூடியிருந்த இளையவர்கள் அனைவரையும், கிழக்கு நோக்கி அமர வைத்து மிளகாய் எடுத்து வந்து சுற்றினார். ஊர் கண்ணு... அதைச் சொல்லிக் கொண்டே சுற்றினார். அடுத்து வந்த ராகினி சிவகுரு சண்முகம் இவர்களுக்கும் சுற்றி விட்டு, தணல் போட்டு வைத்திருந்ததில் அதைப் போட ஒரு நெடி, காரம் இல்லை.

 இதற்கான விளக்கத்தை ஹரிணி கேட்டாள். ராகினி விளக்கிச் சொன்னார். மிளகாய் சுற்றி நெருப்பில் போடும் போது காரம் நெடி வரவில்லை எனில் கண் திருஷ்டி பட்டுள்ளதென்றார்.

"இதை நான் எங்க வெளியே மீட்டிங் போய் விட்டு வந்தாலும் தெய்வா செய்யும், இன்றைக்கு அது மகள் வேற இவ்வளவு பேர் கண்ணில் பட்டுருக்காளே அதனால் தான் திருஷ்டி கழிச்சாச்சு." என்றார் ராகினி.

" புவாஷா, உங்கள் பேமலியே அமேசிங், வசதி இருக்குதேன்னு நாங்கலாம் வீட்டோடு இருந்துட்டோம், ஆனால் நீங்க ஸ்கூல் வச்சு கலக்குறீங்க. அந்த ஐஏஎஸ் ஆபிஸர், மாம்-டாட் ன்னு உங்களைச் சொல்லும் போது, எனக்கே பொறாமையா இருந்தது. ரகுவி உங்களைப் பிரிஞ்சு ஏக்கத்தில் நிறைய நாள் அழவும் , இடமாற்றம்னு சொல்லி டூன் கான்வெண்ட்ல சேர்த்தார்கள். இரண்டு பேரும் அங்கேயே தான் படித்தோம். ஸ்கூல் நல்லா வசதியா இருக்கும், ஆனால் இன்னைக்கு அந்த ஆபிஸர் சொல்லவும் ஏக்கமா போச்சு." என்றாள் ஹரிணி.

ரகுவீர், அவளருகில் உட்கார்ந்து, தோளோடு அணைத்துக் கொண்டான். "புவாஷா, உங்களுக்கு அப்புறம் தீதீ தான் எனக்கு எல்லாம்!" என உணர்ச்சி வசப்படவும் ராகினி இருவரையும் சேர்த்து அணைத்துக் கொண்டார்.

"உங்கள் இரண்டு பேர் ஞாபகத்தில் தான் ஒரு பள்ளியில் வொர்க் பண்ண ஆரம்பிச்சேன் . அமுதன், பாலன், ஜானகி ன்னு வரிசையா வரவும், எனக்காக உங்கள் பூஃபாஷா இந்த ஸ்கூல் ஆரம்பிச்சாங்க. நான் சக்ஸஸ் புல்லா இருக்க வீட்டில் இருக்கிறவங்க  சப்போர்ட் முக்கியம். நான் இவங்க இரண்டு பேரையும் பெத்ததோட சரி, தெய்வா தான் வளர்த்தது. 

அத்தை, மாமா, தம்பி எல்லாரும் பாரத்துப்பாங்க. ஜானகி பிறந்த போது மதர்ஃபீடிங் இல்லாமல் போனது, பாலனும் சின்னப் பையன், அவனுக்கு நிறுத்திட்டு ஜானகிக்கு கொடுக்க ஆரம்பித்தது தெய்வா!" எனக் கண் கலங்கினார் ராகினி. இவர்கள் அன்பில், ராத்தோட் சகோதர, சகோதரிகள் வியந்தனர்.

 

"நம்ம கதை பேசிக்கிட்டே  இருக்கலாம் ஸ்வர்னி , புள்ளைங்க களைச்சு போய் இருப்பாங்க. போய் ரெஸ்ட் எடுக்கட்டும்." என அனுப்பினார் சிவகுரு. 

"ராஜ், ரன்வீர் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க, ரிசார்ட் போகலாம்." என அமுதன், அழைக்க "எல்லாரும் போறீங்களா?" என்றான் ரகுவீர்.

" பையா ஒன்லி பேச்சுலர்ஸ், நீங்க நாட் அலோட்." என்றான் ராஜ்வீர்.

 "நானும் பேச்சுலர் தான் அவளைத் தூங்க வச்சுட்டு வர்றேன்." என வாய்த் தவறினான் ரகுவீர். அங்கே ராஜ், அமுதன் மட்டுமே இருந்தனர். அமுதன், "அத்தான்!!!" என்றான். எதையோ எடுக்க வந்த சிவகுருவும் இதைக் கேட்டுக் கண்டுகொள்ளாமல் போய் விட்டார்.

"ஏய் கூல்  இப்ப தானடா ஷாதி முடிஞ்சது. ஜானகிக்கு ஸ்பேஸ் கொடுக்கனும்." என எங்கோ பார்த்தான். அவர்களுக்கும் விசயம் தெரியும் என்பதால், அவனை தழுவி ஆறுதல்  தந்தனர். "அத்தான், ஆனாலும் என் தங்கச்சி உங்களை விடமாட்டாள். ஒரு இடம் ரிசர்வ் பண்ணி வைக்கிறோம், முடிச்சா வாங்க." என்றான்.

ரகுவீர் தெய்வாவிடம் சென்று, "அத்தை." என அழைத்தான். தெய்வா முதல் முறை மருமகன் கூப்பிட்டதில் மகிழ்ந்து, "சொல்லுங்க தம்பி." என்றார். "ஜானகி கேலியே, தூத் சாஹியே!" என்றான். இரண்டு டம்ளரும், ஒரு ஃப்ளாஸ்க்கும் தயாராக வைத்திருந்தார். அவன் அதிசயமாகப் பார்க்கவும்.

"இரண்டு நாளா பார்க்கிறேன் நீங்களே வந்து எடுத்துட்டுப் போறீங்க!" என்றவர், "ஏதாவது மாத்திரை கலந்து குடுக்குறீங்களா?" எனச் சைகையோடு சேர்த்துக் கேட்டார். ரகுவீர் கண்களில் ஆச்சரியம் தெரிந்தது. 

"நான் வளர்த்த மகள், எனக்குத் தெரியாதா?" எனக் கண் கலங்கினார்.

ரகுவீர், எப்படி ரியாக்ட் செய்வது என அறியாமல், அவர் கையைப் பிடித்துக் கொண்டு, "நான் பார்த்துக்குறேன் நீங்க கவலை படாதீங்க!" என்றான். அதற்குள் ஜானகியிடமிருந்து போன் வந்தது.

 "வீரூஜி, கால் வலிக்குது, தெய்வா அம்மாகிட்ட ஏதாவது தைலம் வாங்கிட்டு வாங்க." என்றாள்.

"இருடி தரேன், நான் பேசறது அவங்களுக்குப் புரியாதே?" என்றான்.

"ஹிந்தி புரியும், திருப்பிப் பேச வராது. இத்தனை வருஷம் மாதாஜி கூடக் குப்பை கொட்டுறாங்களே!" என்றாள்.

ரகுவீர் ஜானகி சொன்னதைச் சொல்லவும், ஒரு தைலத்தைக் கொண்டு வந்து தந்தார். இரண்டையும் எடுத்துக் கொண்டு மேலே போனான் ரகுவீர்.

 

அவள் உடைமாற்றாமல் அப்படியே இருந்தாள், "இந்த நெக்லெஸ் முடியில் சிக்கி இருக்கு." என திரும்பினாள். பொறுமையாக எடுத்து அவளை அனுப்பினான், "பேக் ஹூக்!" என்றாள்.

" ஜீஜூஷா சொன்னது சரிதான், நான் தான் முதல் அடிமை. அம்ரூக்கு ரீப்ளேஸ் நான், சரிதானே?" என்றான்.

"கரெக்ட்டா கண்டு பிடிச்சீங்க பதிதேவ்." என அவன் கன்னத்தில் முத்தமிட்டுச் சென்றாள். அவன் ட்ரெஸ்ஸை கட்டில

களஞ்சியம்
65- பூர்வ ஜென்ம பந்தம். 

 

 "தனிமையிலே இனிமை காண முடியுமா.

நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா?"

பால்கனியில் அமர்ந்திருந்த ரகுவீரின் நிலை இது தான். ஜானகிக்குப் பாலில் கலந்து மாத்திரையைக் கொடுத்து விட்டான். அதனால் அவள் நன்றாகத் தூங்கிவிட்டாள். எப்போதும் நிற்க நேரமில்லாமல் அலைந்தவன், இப்போது நேரம் இருந்தது, அலுப்பு இல்லாத நிலையில், புது மனைவி அருகில் இருந்தும் நெருங்க இயலாத நிலை, இல்லை அவள் நெருங்குவாள், அதன் அடுத்த சரணத்திற்கு இயல்பாக முன்னேறினாலும் ஆபத்து என கவனமாக இருக்க வேண்டிய நிலை. எனவே அவளை தூங்க வைத்து விட்டு பால்கனியில் குடியேறினான்.

சிறிது நேரம் வானத்தை வெறித்தவன் பின்னர் லேப்டாப் எடுத்து வந்து, வெகு நாட்களாகப் பார்க்க யோசித்து வைத்திருந்த, ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்த்தான். ஜானகிக்கு டிஸ்டர்ப் ஆகாமல் இருக்க, பால்கனி கதவைச் சாத்தி விட்டு, ஹெட் போன் மாற்றிக் கொண்டான். ஷோபாவில் சாய்ந்து டீபாயில் காலை வைத்தவன் படம் பார்த்துக் கொண்டே தூங்கி விட்டான். அதிகாலை மூன்று மணி குளிர் தாக்கவும். ரூமிற்க்குள் வந்தான்.

காலை ஆறரை மணிக்கு ட்ராக் சூட்டோடு, ஜானகியை எழுப்பினான். "வீரூஜி தூக்கம் வருது." என மீண்டும் தூங்க முயன்றாள். "இப்படியே தூங்கு, மோட்டி ஹோஜாவோகி. இந்தப் பஹன்ஜி யாருன்னு  கேட்பாங்க." என்றான்.

ஜானகி விருட்டென எழுந்து கொண்டாள். "நான் ஒண்ணும் பஹன்ஜி ஆக மாட்டேன்." என்றவள், முகம் கழுவி ட்ராக் சூட்டில் வந்தாள். கீழே ஜாக்கிங் செல்ல வந்தனர். சிவகுரு நடைப்பயிற்சி சென்று வந்திருந்தார், ராகினி அவருக்குக் காபி எடுத்து வந்தார்.

"வீரூ, இரு உனக்கும் கொண்டு வருகிறேன்." என்றார்.

"புவாஷா போய்ட்டு வந்து குடிக்கிறேன், இல்லைனா உங்கள் லாட்லீ, இப்படியே அரட்டையடிக்க உட்கார்ந்துருவா." என அவளைக் கூப்பிட அதற்குள், அப்பாஜான் கப்பிலிருந்து காபியில் பாதியை உறிஞ்சி இருந்தாள் ஜானகி.

"அடிப்பாவி, புவாஷா என்ன இது?" என்றான் ரகுவீர். "அது அப்படித்தான் இந்தா நீயும் குடி, அப்பத் தான் இவளோடு அலைய முடியும்." என்றார் ராகினி. அமுதனும் மயூரியும் இவர்களோடு இணைந்தனர்.

ரகுவீர் இரண்டு சிப் குடிக்கவும், அதையும் வாங்கிக் குடித்தாள் ஜானகி, "ஏண்டி நீதான் குடிச்சியே?" என்றார் ராகினி. " மாதாஜி, ரொம்பக் கொடுமை, அப்பாஜானுக்கு ஏன் சர்க்கரையே கண்ணுல காட்டலை." என்றாள் ஜானகி.

"போட்டிருக்கிறேன் டி, அப்பா தான், இப்ப எல்லாம் சுகரை குறைச்சிட்டாங்க." என்றார் ராகினி. "அப்பாஜன் நிஜமாகவா?" என்றாள். "ஆமாம்டா, சுகர் பார்டர்ல இருக்கு, சரி நீங்க கிளம்புங்க வெயில் வந்திடும்." என அனுப்பி வைத்தார்.

நால்வரும், மெதுவாக ஓடினார்கள். மயூரி, அமுதனோடு பழகி இருந்ததால் சாதாரணமாக வந்தாள். ஜானகி பழக்கம் விட்டுப் போனதால், கொஞ்சம் சிரமப்பட்டாள். ரகுவீர் அவளுக்காக மெதுவாக வந்தான்.

ஓரிடத்தில் பாலத்தின் சுவர் இருந்தது, அதில் முன்னால் சென்ற அமுதனும், மயூரியும் உட்கார்ந்து இருந்தனர். ரகுவீர் ஜானகிக்காக ஜாக்கிங்கை  வாக்கிங்காக மாற்றி இருந்தான். ரகுவீருக்கு இந்த ஊரும், க்ளைமேட்டும் மிகவும் பிடித்திருந்தது. அதை அப்படியே சொல்லவும் செய்தான்.

 "அத்தான், எங்களுக்குப் பழகிடிச்சு புதுசா வரவங்களுக்கு முதலில் எக்சைட்டடா இருக்கும், அப்புறம் கொஞ்சம் போரடிக்கும். வேற பொழுது போக்கும் கிடையாதே." என்றான் அமுதன்.

" நீ சொல்றது சரிதான் அமுதன், ஆனால் என்னை மாதிரி பிஸ்னஸ் மேன், மும்பையிலிருந்தாலும் கடமையேன்னு பாட்டிக்குப் போவோம். சினிமால்லாம் ஹோம் தியேட்டரில் பார்த்திருப்பேன். பப்ளிக்கா போய்ப் பார்த்ததே இல்லை." என்றான் ரகுவீர்.

"வீரூஜி, அப்ப நம்ம செட்யூல்லில் கட்டாயம் சினிமா உண்டு. எங்க ஊரில் சுமாரான தியேட்டர் தான் இருக்கும். பரவாயில்லை போவோம்." என்றாள் ஜானகி. "ராணிஷா உத்தரவு!" என்றான் ரகுவீர்.

"அது என்ன ராணிஷா?" என்றான் அமுதன்.

"அது உனக்குத் தெரியாதா, உன் பஹனை ருத்ரநாத் பவாரியா அப்படித்தான் கூப்பிடுவான் கேள்." என்றான் ரகுவீர்.

"அப்ப நீங்க ராஜாஷாவா பையா?" என்றாள் மயூரி. 

"அது தான் இல்லை, உன் பாபியை தான் ராணிஷான்னு சொல்லுவான். என்னை ராத்தோட்ஷான்னு சொல்லுவான்." என்றான் ரகுவீர்.

"கம்மாகனி ராணிஷா, ஆசீர்வாதம் பண்ணுங்கள்." என்றாள் மயூரி.

"ம்ம், கனி கம்மா சோரி, சுபஸ்ய சீக்கிரம் ப்ராப்தி ரஸ்து." என ராணியாக உட்கார்ந்து சொன்னாள் ஜானகி. அவள் சொன்ன விதத்தில் எல்லாருமாகச் சிரித்தனர்.

" ஸ்வர்ணி, நீ இவங்களோட மெதுவா வா, நான் வெளியே கிளம்பனும்." என்றான் அமுதன். "நானும் வரேன், இவர்களுக்கு நடுவில் நான் எதற்குக் கரடி." என்றாள் மயூரி.

"ஏய், உனக்கு உன் வுட்பீயோட ஹனிபீயா போகனும்னா போ, எங்களைக் கைக் காட்டாதே." என்றாள் ஜானகி.மயூரி, ரகுவீரை கண்ணால் கேட்டாள், "நீ போ, நான் இவள்  கூட ஊர் சுத்திட்டு வர்றேன்." என்றான் ரகுவீர்.

இவர்கள் சென்ற பாதையிலிருந்து, பக்கவாட்டில் ஒரு பாதையில் ரகுவீரை அழைத்துச் சென்றாள் ஜானகி. ஊருக்குள் செல்லும் பாதை, பாதித் தூரத்தில் ஒரு டீக்கடை இருந்தது. காலையில் பணியாரம் சுட்டுக் கொண்டிருந்தது அந்தப் பாட்டி

 "லட்சுமி பாட்டி நல்லா இருக்கீங்களா?" என்றாள் ஜானகி. அவர் நிமிர்ந்து பார்த்து, "யாரு பெரிய வீட்டுப் பேத்தி சானகியா? வா தாயீ." என்றார்.

"கல்யாணம் கட்டிக்கிட்டனு சொன்னாங்க. மாமன் மகனாம்ல, இவுக தானா அது?" என்றார் தொடர்ந்து, "ஆமாம் என் வீட்டுக்காரர்." என ரகுவீரை கை காட்டினாள். ரகுவீர் அப்போது தான் போனில் தன் வீட்டினரோடு பேசிக் கொண்டிருந்தான். "உனக்குப் பொருத்தமா, ராசா மாதிரி இருக்காரு. இரு வர்றேன் ." என ஒரு இலையில் நான்கு பணியாரத்தை வைத்து நீட்டினார் ஜானகியிடம். 

"நான் காசு கொண்டு வரலைப் பாட்டி இருக்கட்டும்." என்றாள் ஜானகி.

"ஐயே, உன்கிட்ட காசுக்காகவா நீட்டுறேன், புதுசா கல்யாணம் கட்டிக்கிட்ட இனிப்பு தரனும்ல." என்றார். 

ரகுவீரின் கண்கள் ஜானகி மீது தான் இருந்தன. பேசி முடித்து அவள் அருகில் வந்தான். பாட்டி அவனைப் பார்த்து வணக்கம் சொன்னார். ரகுவீர் பதிலுக்குச் சொன்னான்.

"சானகி, நல்ல தங்கமான புள்ளை, நல்ல மனசு, நல்லா பார்த்துக்குங்க ஐயா!" என்றார் ஜானகி மொழி பெயர்த்தாள். சிரித்தபடி தலையை ஆட்டினான். ஜானகி பணியாரத்தை நீட்டினாள். "இதற்குத் தான் இங்கே கூட்டிட்டு வந்தியா?" என்றான். "ஹலோ நான் ஒண்ணும் கேட்கலை பாட்டி தான் பாசமா தந்தாங்க, ஷாதி கிப்ட்." என்றாள்.

 "நல்லா மகராசனா, மகராசியா புள்ள குட்டியோடு நல்லா இருக்கனும்." என்றார் பாட்டி. ஜானகி மொழி பெயர்ப்பில் அவர் காலைத் தொட்டு வணங்கினான், ரகுவீர் அவளைப் பார்க்க ஜானகியும் பாட்டி காலைத் தொட்டாள். 

"நல்லா இருங்கய்யா, நல்லா இருங்க. உங்களை மாதிரியே பையனும் பொண்ணும் பிறக்கட்டும்." என முதலில் பதறி, பின்னர் மங்களச் சொற்களாக ஆசி வழங்கினார்.

 

அவரிடம் விடை பெற்றுத் திரும்பும் போது பணியாரத்தைச் சுவைத்தபடி வந்தாள் ஜானகி, "வீரூஜி இது என்ன பார்க்கிறவங்க  காலில் பொசுக்கு பொசுக்குனு விழுந்துகிட்டு, என்னையும் விழ வைக்கிறீங்க, இதில் ஒரு லுக் வேற!" என்றாள் ஜானகி.

"ஏண்டி பெரியவங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்குறது தப்பா?" என்றான்.

"தெரியுது, எதுக்குக் காலைத் தொட்டிங்கன்னு, அந்தக் கிழவி புள்ளைக் குட்டி பெத்துக்கன்னு ஆசீர்வாதம் பண்ணுச்சு அதுக்குத் தானே. அங்க சுத்தி, இங்க சுத்தி அதுல தான் வந்து நிற்பீங்க." என்றாள் ஜானகி.

"நான் எதார்த்தமா தான் செஞ்சேன், நீ தான் குதர்க்கமா பார்க்குற. ஆமாம் புள்ளைக் குட்டி வந்தால் தானே, போதா போதி வரும். உதய் பூர்ல சொன்னியே." என்றான். ஜானகி மௌனமானாள்.

"ஜானு ஒரு ஐடியா டெஸ்ட் ட்யூப் பேபி போயிடுவோம்டி , நோ டச்சிங்  கிஸ்ஸிங், பாடி கரஸ்பாண்டனஸ். எப்படி?" என்றான்.

"எப்படியும் அதிகப் பட்சம் ஒரு வருஷம் தானே வீரூஜி, அதுக்குள்ள மூன்று ஷாதியையும் முடிச்சிருவோம். நானே உங்களுக்குப் பொண்ணு பார்த்து ஷாதி பண்ணி வைக்கிறேன்." என்றாள் ஜானகி.

ரகுவீருக்குச் சுர்ரெனக் கோபம் ஏறியது, ஆனால் சைக்காலஜி்க்காகப் பொறாமையைத் தூண்டுவதற்காகப் பேசினான். "சரிடி ஜானும்மா, இப்பவே இருந்து நாலு  பொண்ணுங்களைப் பார்க்க ஆரம்பிச்சிடு. யாரையாவது ஷாதி பண்ணிக்குறேன். நீ ஒத்துக்கிட்டா இரண்டாவது பண்ணிக்கலாம் தப்பில்லை. நம்ம வீட்டில் ரூமுக்கா பஞ்சம், அந்தத் தேவைக்கு மட்டும் அங்க போய்கிறேன். மற்றபடி நீ தான் என் லுகாயி." என்றான் ரகுவீர்.

 ஜானகி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு முன்னால் நடந்தாள். ரகுவீருக்கு எரிந்த கல் சரியாகப் பட்டதே என்று இருந்தாலும். என்னையவே இப்படிப் பேச வச்சிட்டாளே என மனதில் நொந்தான்.

 மற்றொரு திருப்பத்தில் டவுன் பஸ்ஸுக்காக ஸ்கூல், காலேஜ் செல்லும் பிள்ளைகள் நின்றனர். "ஹாய் ஜானகி அக்கா, உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா. சார் சூப்பரா இருக்காரு!" என்றனர் பதின் வயதில் இருந்த இளசுகள். "ஆமாம்டி, சார் சல்மான்கான் மாதிரி செமயா இருக்கீங்க!" என்றாள் மற்றொருத்தி. ரகுவீருக்கு மொழி புரியாவிட்டாலும் சல்மான் என்றதில் தன்னைத் தான் சொல்கிறார்கள் எனப் புரிந்து, "தாங்க்யூ!!!" எனச் சிரித்தான். 

ஜானகிக்கு பொசுபொசுவென இருந்தது. "இவளுங்க தான் சல்மானை நேரப் பார்த்தாளுங்க." எனத் திட்டினாள் ஜானகி. "ஜானகி அக்கா, பொறாமைப் படாத, ஏதோ எங்களால் முடிஞ்சது, மாமாவை சைட்டாவது அடிச்சுக்கிறோம்." என்றாள் கல்லூரி மாணவி. 

"அடி மடியிலேயே கை வைக்காதீங்கடி, ஒழுங்கா படிக்கிற வேலையைப் பாருங்கள்." என்றாள் ஜானகி.

"தினமும் இந்த நேரம் தான் ஸ்கூல்க்கு போவீங்களா?" என ரகுவீர் ஆங்கிலத்தில் கேட்டான். "யெஸ் சார், டவுன் பஸ் வில் கம்." என்றனர்.

"அடிங்க இங்கிலீஷ் வேறையா, வீருஜி வாங்கப் போகலாம்." என்றாள் ஜானகி.

"அக்கா, மாமா பேர் என்னனு சொல்லிட்டுப் போ." என்றனர். ஜானகி ரகுவீரை இழுத்துச் சென்றாள். "மாமா வாட் இஸ் யுவர் நேம்." என்றனர்.

ரகுவீர் சிரித்தபடி திரும்பி, "மீ, ரகுவீர். ரகுவீர் சிங் ராத்தோட்!" என்றான்.

 "ரன்வீர் மாதிரி ரகுவீர். செம." என்றதுகள், ரகுவீர் கலகலவெனச் சிரித்துப் பை சொல்லிவிட்டு வந்தான். "இன்னைக்கு அக்கா அவரை வெளுத்திடும்." எனச் சிரித்தனர். அதற்குள் பஸ் வந்தது, ஏறிய இளசு, பொடிசுகள், இவர்களைக் கடக்கும் போது, "பை ரகுவீர் மாமா, பை ஜானகி அக்கா!" எனக் கை ஆட்டினர். ரகுவீர் திருப்பிக் கையை ஆட்டினான்.

பஸ் மறையவும், ரகுவீர் கைகளில் கிள்ளினாள் ஜானகி, "என்னை வச்சுக்கிட்டே என்ன ஆட்டங் காட்டுறீங்க." என்றாள்.

"இதில் என்னடி இருக்கு, நீ எனக்கு ஷாதிக்கு பெண்ணே பார்க்குறேன்னு சொல்ற அவ்வளவு நல்லவ, சும்மா கேர்ள்ஸ் கூடப் பேசுறதில் என்ன ஆகப் போகிறது?" என்றான்.

"இன்னைக்குத் தான் நம்ம மேரேஜ் ரிசப்ஸனே நடக்கப் போகுது, ஞாபகம் இருக்கட்டும்." என்றாள் ஜானகி.

"அது ஞாபகம் இல்லாமலா மேரிஜான், கூங்கட் இல்லாமல் இருப்ப, நல்லா சைட் அடிக்கலாம் என் லுகாயியை." எனக் கண்களில் ரசனையோடும், காதலோடும் சொன்னான் ரகுவீர்.

அதற்குள் ரிசார்ட்டின் பின் கேட் பக்கம் வந்திருந்தனர். "வீரூஜி, இது நம்ம ரிசார்ட், சண்முப்பா பார்த்துக்கிறாங்க. இதிலிருந்து வீட்டுக்கு ஷாட்கட் இருக்கு. என உள்ளே அழைத்து வந்தாள். 

ரிசார்ட் இரண்டு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து இருந்தது. மலை அமைப்பை ஒட்டியே டிசைன் செய்திருந்தனர். தனித்தனி சூட்டுகள், இரட்டை சூட்டுகள் என இடத்திற்கு ஏற்றார் போல் அப் அண்ட் டவுனில் இருந்தது.

ஒரு ஸ்விம்மிங் பூல் இருந்தது.முன் பக்கத்தில் ஃப்ரண்ட் ஆபீஸ், ரெஸ்டாரண்ட் எல்லாம் உண்டு. ரிஸார்ட்டின் பின் பக்க வாசலும், வீட்டின் பின் பக்கமும் ஒரு சிறிய கேட்டில் இணைத்து இருந்தனர். வீட்டு ஆட்கள் மட்டுமே இந்த வழியை உபயோகித்தனர். முன் புறம் ரோடு வழியாக வரும் போது நடுவில் அவர்கள் ஸ்கூல் வந்துவிடும்.

ரிஸார்ட்டின் அழகை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ரகுவீர். ரிசார்ட்டின் சிப்பந்திகள் ஜானகியைப் பார்க்கவும், ரகுவீருக்கும் சேர்த்து வணக்கமும் வாழ்த்தும் தெரிவித்தனர். சண்முகமும் அங்கே தான் இருந்தார்.

"வாங்க மாப்பிள்ளை, நானே உங்களைக் கூட்டிட்டு வரனும்னு நினைச்சேன். ஜானகி கண்ணு கூட்டிட்டு வந்துடுச்சு." என அவர் அருகே வந்து தொத்திக் கொண்ட மகளின் தலையை வாஞ்சையாக வருடினார்.

"அப்பா, இந்தக் கேட் கீ ஒன்னு குடுங்கப்பா, வீரூஜிக்கு ஸ்விம்மிங் பிடிக்கும் இப்படியே வந்துடுவோம்." என்றாள்.

"தர்றேன்டா உங்களுக்கு இல்லாததா, நீ இன்னும் வரலைனு அம்மா வாசலை பார்த்துகிட்டே இருக்கா." என்றார் சண்முகம்.

"இன்னொரு நாள் ரிலாக்ஸ்டா வர்றேன்  அங்கிள்." என்றான் ரகுவீர். 

"மாமான்னு கூப்பிடுங்கள் மாப்பிள்ளை, இங்க மனைவியுடைய அப்பாவை அப்படித்தான் கூப்பிடுவார்கள். அண்ணன் தான் பூஃபாஷாவாக ஆகிட்டார். அதனால் இந்தச் சொந்தம் என்னுடையது." என்றார் சண்முகம்.

இவர்கள் உறவை நெகிழ்ச்சியாகப் பார்த்த ரகுவீர், "சரிங்க மாமா என்றான். "ஜானு உங்க அம்மாவை எப்படிக் கூப்பிடுறது?" என்றான்.

"தெய்வா அம்மாவை அத்தைனு கூப்பிடுங்க. அமிர்தாவும் அப்படித் தான் கூப்பிடுவாள்." என்றாள் ஜானகி.

"ஓகே டன். நீங்களும் வீட்டுக்குத் தானே வாங்க மாமா போகலாம்." என்றான் ரகுவீர்.

"இதோ வர்றேன் மாப்பிள்ளை!" என்றவர் இரண்டு சாவியோடு வந்தார். இரண்டு பக்கமும் திறக்கும் வசதியோடு கூடிய லாக் இருந்தது. ஒன்றை ஜானகியிடம் கொடுத்தார்.

"வீருஜி, உங்கள் இஷ்டப்படும் நேரம் ஸ்விம் பண்ணலாம். தண்ணீர் டெய்லி மாத்திடுவாங்க." என்றாள் ஜானகி. ரகுவீர் புன்னகைத்துக் கொண்டான்.

அதே வழியில் சென்று, ஜிம் ரூமுக்கு அருகில் வீட்டுக்குள் சென்றது அந்தப் பாதை. "இதில் ஜிம் இருக்கிறது வீரூஜி, அங்க டென்னிஸ் கோர்ட்." என்றாள் ஜானகி.

"சூப்பரா இருக்குடி, இதை விட்டுட்டு எப்படிச் சென்னை, பெங்களூர், மும்பைனு அலைஞ்ச. எனக்கு இப்ப மும்பை வாழ்க்கை உனக்குச் சரியா வருமான்னு கவலையா இருக்கு." என்றான்.

"எல்லாம் வரும். ராமன் இருக்குமிடம் சீதைக்கு அயோத்தி, ரகுவீர் இருக்குமிடம் ஜானகியின் மாளிகை.எல்லாப் பொண்ணுங்களும்  கல்யாணத்துக்கு அப்புறம் மாறிடுவாங்க மாப்பிள்ளை." என்று விட்டு முன்னே சென்றார் சண்முகம்.

"ஜானு! அப்படியாடி?" என்றான் ரகுவீர்.

"நீங்க இல்லாத வாழ்க்கையும், இடமும் எனக்கு நரகம் வீரூஜி. அந்த நரகத்துக்குப் போறதை விட மூச்சை நிறுத்திக்குவேன்." என்றாள் ஜானகி.

ரகுவீர் அவளை அணைத்துக் கொண்டவன், "எனக்கும் இதே தாண்டி மேரிஜான், அந்த நாள் மூச்சு நிற்கும், அதுனால கொஞ்சம் முந்தி பேசுனியே, ஒரு வருஷம் ஷாதி கீதின்னு, அதெல்லாம் இனிமே பேசாதே. எனக்கு இங்க வலிக்கிறது." என இதயத்தைக் காட்டி விட்டு வீட்டுக்குள் அவளை இழுத்துக் கொண்டு நடந்தான்.

"ஏண்டி உனக்குத் தாலி கட்டின பாவத்துக்கு இந்தப் பிள்ளையை இப்படித் தான் அலைய விடுவியா?" என்றார் சிவகாமி அப்பத்தா.

"ஏம்மா இவ்வளவு நேரம்?" என்றார் தெய்வா. "சும்மா ஒரு வாக், லட்சுமி பாட்டி பணியாரம் தந்துச்சு. அதனால் பசி கொஞ்சம் குறைவாகத் தான் இருக்கிறது." என்றாள் ஜானகி.

தாதாஷா, தாதிஷா, தாத்தா, அமுதன் டையனிங்கில் இருந்தனர். ஒரு தலையசைவுடன் அப்பத்தாவைக் கடந்து, தன் தாதிஷா, தாதாஷா விடம் சென்ற ரகுவீர், "குட்மார்னிங் தாதிஷா, புது இடம் நைட் நல்லாத் தூங்குனீங்களா?" அவரை அணைத்து முத்தமிட்ட படி கேட்டான்.

"உன் தாதிஷாக்குப் பணிவிடை செய்யப் பேட்டி இருக்காளே, புவாஷா கால் வலி தைலம் தேய்ச்சு விடவும் பழைய கதை பேசியே பொழுதை போக்கியாச்சு. நல்லா நிம்மதியா தூங்கி எந்திரிச்சோம். எங்கள் ஸ்வரூவை நிறைவா பார்த்ததில் மகிழ்ச்சி. உங்களுக்குத் தான் நன்றி சொல்லனும் சம்பந்த்ஷா!" எனச் சிவபரங்கிரி ஐயா கையைப் பிடித்தார் தாதாஷா.

"சம்பந்தி, ராகினியை எங்கள் மருமகளா தாரை வார்த்துக் கொடுத்த உங்கள் அம்மாவுக்கும், அதை உரிமையாகச் செயல்படுத்திய எங்கள் அப்பாவுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும்." என்றார் தாத்தா.

"இந்தச் சம்பந்தம் தலைமுறையா நிலைக்க வேண்டும். ஜானிம்மாவை ரகுவீருக்கு ஷாதி செய்தது அவ்வளவு திருப்தி. என் மாஷாவையும், பாபுஷாவையும் திரும்பப் பார்த்த மாதிரி இருந்தது." என ராகினி அன்றொரு நாள் காட்டிய இரண்டு படங்களையும், ஹவேலியில் உள்ள படத்தையும், ரகுவீர் ஜானகி சகாயீ படத்தையும் காட்டினார். ரகுவீரே அப்போது தான் பார்த்தான்.

பார்த்த அனைவருமே அதிசயித்தனர். இரண்டு தலைமுறை தாண்டி, ஒரே ஆத்மாக்கள், சாயல் முதற்கொண்டு அதே போல் பெற்று, ஜோடி சேர முடியுமா என அமானுஷ்ய படம் பார்ப்பது போல் சாப்பிட வந்த இளைய தலைமுறை அமுதன், பாலன், மயூரி, மஞ்சரி அதிசயித்தனர்.

ரகுவீர் அந்தப் படங்களைத் தனக்கு அனுப்பிக் கொண்டான். சிவகுருவிடம் காட்டி ராகினி பேசிக் கொண்டிருந்தார். 

தெய்வா, "ஜானும்மா மாப்பிள்ளையைக் கூட்டிட்டு மேலே போ, சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம். வயிற்றைக் காயப் போட கூடாது." என்றார்.

ரகுவீர் மேலே செல்ல ஜானகி தொடர்ந்தாள். அறைக் கதவைச் சாத்திவிட்டு, அவனைக் கட்டிக் கொண்டு அழுதாள் ஜானகி.

"என்னடா, எதுக்கு இந்த அழுகை. இங்க பார்." என்றான் ரகுவீர்.

 "நாநாஷா பேசறதைப் பாருங்க, எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கார். நான் தகுதியானவளா வீரூஜி." என்றாள். 

"அந்தப் படத்தைப் பார்க்கவும் நானே ஆடிப்போய்ட்டேன். நிஜமாவே இருக்கும் போலடி மிர்ச்சி, பாரு நீயும் வாளெடுத்து வீசுகிற. இப்படி ஒருத்தி இருக்கான்னு தெரியாமலே நான் காத்திருந்தது. புவாஷா மேல் படி தாதிஷா வைத்திருந்த பாசம், ரீபெர்த்தோ என்னவோ, இது எல்லாம் உண்மையோ, பொய்யோ நம் லவ் உண்மை. ஜென்மங்கள் தொடர்ந்து வருவதும் உண்மை. சரி வா குளிப்போம்." என்றான்.

 

" என்ன சொன்னீங்க, ஆசை தான்!" என்றாள் ஜானகி. "ஆசைக்கு என்ன என்னனமோ தான் இருக்கு, நீயே வருவடி, உன் அத்தான் மேல் இருக்க ஆசையில் வருவ." என்றான் ரகுவீர்.

 "ஐயே, இந்த வார்த்தையும் பிடிச்சுக்கிட்டீங்களா, இந்த அண்ணனைச் சொல்லனும், இவன் தான் இவர் கையால தாலி கட்டிக்கிட்ட மாதிரி அத்தான், அத்தான்னு உருகுறான்." என அவனுக்கு டவல், துணிகளை எடுத்துக் கொடுத்தவாறு சொன்னாள் ஜானகி. வாஷ்ரூம் சென்ற ரகுவீர் நின்று கேட்டான், "என்னன்னு உருகுறான்?" என. ஜானகியின் கன்னங்கள் கிரிம்சன் ரெட்டாக மாறியது. "போங்க பேசாமல்." என்றாள்.

ரகுவீர் ஓடிவந்து அவள் கன்னங்களில் முத்தம் கொடுத்துவிட்டு ஓடி கதவை அடைத்தான். ஜானகியின் கன்னங்கள் இன்னும் சூடேறின. கண்ணாடியில் தன்னையே பார்த்து வெட்கப் பட்டாள்.

அன்றைய நாளும் யாராவது வரப் போக எனக் கடந்து, மாலையில் ராத்தோட்ஸ் மும்பையிலிருந்து கிளம்பி விட்டனர். ஹேமந்த், பம்மியும் இவர்களோடு இணைந்து வந்தனர். அமர்சிங், ஹரிணி குழந்தைகளோடு சென்னையில் இணைகின்றனர்.

ரிஷப்சன் அன்று காலை, சிவ மாளிகை அதிகாலை துயில் நீங்கி ராத்தோட்ஸ் வருகைக்காகத் தயாரானது. கணேஷ் இரவே வந்து விட்டான். அமுதன், பாலன் வழக்கம் போல் ஏர்போர்ட் சென்றனர். ஒரு டெம்போ ஏசி வேன் மற்றும் காரில் எல்லாரும் சிறுமலை வந்து சேர்ந்தனர்.

 ஸ்வர்ண ராகினி, சிவகுரு நாதன், தன் பிறந்த வீட்டினரான சம்பந்திகளை முறைப்படி வரவேற்றார். ஹேமந்த், பம்மியும் மிகவும் மகிழ்ந்து இருந்தனர். அமுதன், பாலன், கணேஷ் தங்கள் அறைகளை உறவினர்களுக்காக மாற்றிக் கொண்டனர். நான்கு மூத்த ஜோடிகள் முதல் தளத்தில் தங்கினர். மேல் தளத்தை ஹரிணி தம்பதிக்கு ஒன்றையும் கொடுத்து, இளைஞர்கள் ரிசார்ட்டில் தங்க முடிவெடுத்தனர்.

ராஜேன், கஜேன், அமரேன், ஹேமந்துக்கும் முழுத் திருப்தி. இன்று குடியரசு தினமாதலால் ராகினிக்கு பள்ளிக்குச் சென்று வர வேண்டியது இருந்தது.

ராத்தோட்ஸ் அனைவரும், தாங்களும் ராகினி கொடி ஏற்றுவதைப் பார்க்க வருவோம் என்றனர். பயணக் களைப்பை தவிர்த்து, காலை உணவை முடித்துக் கொண்டு எஸ்.எஸ். இன்டர்நேஷனல் ஸ்கூலில் கூடினர்.

எல்கேஜி முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை ஒரு வகுப்பில் 30 மாணவர்கள், இரண்டே பிரிவு என அதிகபட்சம் 800 மாணவர்கள் கொண்ட பள்ளி, ஐந்தாம் வகுப்பு வரை ஆப்ஷன் உண்டு பள்ளியில் தங்கியோ, வெளியே இருந்தோ வரலாம். ஆனால் ஆறு முதல் பன்னிரண்டு வரை ரெசிடென்சியல் கல்வி மட்டுமே. இந்த வருடம் இருபதாவது ஆண்டை நிறைவு செய்கிறது இவர்கள் பள்ளி.

பள்ளியின் மைதானத்தில் இந்த விழா நடந்தது. சீப் கெஸ்டாக ஒரு இளம் ஐ ஏ எஸ் ஆபீஸரை அழைத்திருந்தனர். மேடை அமைக்கப்பட்டு, அதில் சிறப்பு விருந்தினர், பள்ளி முதல்வர், கரஸ்பாண்டன்ட் கம் செகரெட்டரியாக ராகினி அமர்ந்திருந்தார். பெற்றோர் வந்திருந்தனர். மாணவர்கள் பேண்ட் குழு, ராகினி மற்றும் சிறப்பு விருந்தினரை அழைத்து வந்தனர். கேஜி பிள்ளைகள் மலர்க் கொத்தோடு வரவேற்றனர். தமிழ் தாய் வாழ்த்தோடு விழா ஆரம்பித்தது.

ஆசிரியர் ஒருவர் விழாவைத் தொகுத்து வழங்கினார். வரவேற்புரையை முதல்வர் வாசித்தார்.தலைமை உரை ராகினியும், சிறப்பு உரை சிறப்பு விருந்தினர் எனத் திட்டமிட்டு இருந்தனர்.

 விழா தொகுப்பாளர் ஆங்கிலத்தில், "குடியரசு விழாவின் முக்கிய நிகழ்ழான தேசிய கொடியை ஏற்ற ஐ ஏ எஸ் அதிகாரியும் எமது பள்ளியின் பெருமை மிகு முன்னாள் மாணவருமான ஆட்சியர் திரு. அதிரதன் அவர்களைக் கொடி ஏற்ற அழைக்கிறோம்." என்றார்.

ஒரு நிமிடம் என மைக்கை வாங்கிய ஆட்சியர், " எனக்கு மிகவும் பெருமை நான் படித்த பள்ளியில் சிறப்பு விருந்தினராக வந்து குடியரசு விழாவில் பங்கேற்பது. என்னைக் கொடி ஏற்ற அழைத்தனர். அது எனக்குப் பெருமை தான் ஆனால் எங்கள் அம்மா 'மாம்' இருக்கும் போது நான் கொடியேற்றுவது பெருமை தராது. நாங்கள் ரெசிடென்சியல் பள்ளியில் படித்தவர்கள். ஆனால் நாங்கள் எங்கள் மாம்- டேட் வுடன் தான் இருந்தோம். ஆமாம் எங்களுக்குப் பெற்றோர் குறை தெரியாமல் கல்வியோடு வளர்த்த எங்கள் 'மாம்' திருமதி ஸ்வர்ண ராகினி சிவகுரு நாதன் அவர்களைக் கொடி ஏற்ற பள்ளியின் மூத்த மாணவன் என்ற முறையில் அழைக்கிறேன்." என்றார் ஆட்சியர் 

"அதிரா நீ ஏற்று." என ராகினி சைகை செய்தார். அவர் ராகினியை கைப்பிடித்து அழைத்து வந்து இருவருமாகக் கொடி ஏற்றி சல்யூட் செய்தனர். தேசியகீதம் இசைக்கப்பட்டது, எல்லோரும் எழுந்து நின்று அட்டன்சனில் மரியாதை செலுத்தினர்.

ராத்தோட்ஸ், தங்கள் மகளின் உயரத்தை நினைத்து உணர்ச்சி வசப்பட்டு இருந்தனர். நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது. பின்னர் மார்ச் ஃபாஸ்ட் நடந்தது, ஆட்சியர் மரியாதையை ஏற்றார். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தலைமை உரை ராகினி நிகழ்த்தினார்.

சுத்தமான, எளிமையான ஆங்கிலத்தில் "மை டியர் சில்ரன், டீச்சர்ஸ், பேரண்ட்ஸ், ஸ்கூல் பிரின்ஸிபல், அண்ட் த சீப் கெஸ்ட் மிஸ்டர் அதிரதன் ஐஏஎஸ் மை டியர் சன் அண்ட் மை பேமலி." என உரையை ஆரம்பித்து, இந்தப் பள்ளி ஆரம்பித்தன் குறிக்கோள், அதை நடைமுறை படுத்தும் விதம் அதற்கான ஆதரவு என எல்லாவற்றையும் சொன்னார்.

சிறப்பு உரையில் மீண்டும் அதிரதன் பேசினார். "இந்தப் பள்ளி மற்ற பள்ளியிலிருந்து என்ன வித்தியாசம் இங்குப் போதிக்கும் கல்விமுறை, பலகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு எங்கள் 'மாம்' அவர்களால் டிசைன் செய்யப் பட்டது. உடல், மனம், புத்தி, அறிவு, ஆரோக்கியம், திறமை, ஒழுக்கம் எல்லாவற்றையும் உள்ளடக்கியது. அதிகமான மாணவர் சேர்க்கை எப்போதும் கிடையாது. அதற்கான மேலிடத்து ப்ரஸரை, எங்கள் மாம் வரை வர விடாமல் 'டாட்' பார்த்துக்கொள்வார். மாம்' க்கு ரைட் ஹேண்டா எங்கள் சண்முகம் சார். இந்த ஸ்கூல் குடும்பம் வேற வேற இல்லை. நான் என்னுடை ப்ரேயரில், 'மாம் & டாட்' நீண்ட ஆயுள் தரவும், இப்படி ஒரு லேடியை இங்க அனுப்பியதற்காகக் கடவுளுக்கு நன்றியும் சொல்வேன்." எனப் பேசினார்.

 ராகினி நெகிழ்ந்து அமர்ந்திருந்தார். ஹேமந்த் சிவகுருவின் கைகளைப் பிடித்துக் கொண்டு, "இன்றைக்கு நான் ரொம்பச் சந்தோஷமா இருக்கிறேன் சிவா. ராகினிக்கு உன்னை விட நல்ல கணவன் எங்கள் ஊரில் இருக்க மாட்டார்கள்." என்றார்.

ராஜேன், "ஜமாயீஷா, எங்கள் குடும்பத்திலிருந்ததை விட ஸ்வரூவின் அருமையை நீங்க தான் நல்லா புரிந்து அவளைச் செதுக்கி இருக்கீங்க." என்றார். தாதாஷா, தாதிஷா கண்ணீர் வடிய உணர்ச்சி மிகுதியில் நின்றனர்.

"ஜீஜூ ஷா, உங்கள் வீட்டில் மயூரியையும் கொடுப்பதில் எனக்குப் பெருமை தான்." சிவகுருவை ஆரத்தழுவியவாறு சொன்னார் அமரேன் 

"ஜீஜூ ஷா, ஒரு பெண்ணை எப்படிப் போற்றிக் கொண்டாடனும்னு உங்க கிட்டத் தான் தெரிஞ்சுக்கனும்." என்றார் கஜேன்.

"ஜானு, என் புவாஷா ஊரார் பிள்ளை எல்லாம் ஊட்டி வளர்க்க, நான் தானாகப் போடிங் ஸ்கூலில் வளர்ந்துருக்கேன்." எனக் குறை பட்டான் ரகுவீர்.

"இப்ப வந்து உங்கள் புவாஷா கிட்ட சீராடுங்க , யார் வேண்டாம்னு  சொன்னாங்க ?" என  ஜானகி, பேசிக்கொண்டிருக்க

" ஜானுமா , மேக்கப் பண்ண போகணுமே, நான் ட்ராப் பண்ணவா” என வினவ, “ நீங்க இங்க இருங்க வீருஜி , அமித்து, மயூ, மஞ்சி, ஒரு கேங்கே இருக்கு’

களஞ்சியம்
 64- சிவமாளிகை இளவரசி

 

 சிவ மாளிகையின் இளவரசி ஜானகி. அவளைச் சுற்றியே கதை நகர்கிறது. கதையின் ஆரம்பத்திலிருந்து இன்று தான் ஜானகி தனது பிறந்த வீட்டிற்கு வரப் போகிறாள். இதுவும் நம் கதையோட்டத்தின் முரண் தான்.

 சிவபரங்கிரி தாத்தா ஒரு வாரமாக இந்த நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். ஜானகியோடு அவரது பாதியான சிவகாமி அம்மாவும் வருவது தான் விசேஷம். தன் மனையாளை தலைபிரசவம் தவிர வேறெப்போதும் பிரிந்தது இல்லை சிவபரங்கிரி ஐயா.

சிவகுருவின் எதிர்பார்ப்பைச் சொல்லவும் வேண்டுமோ? வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறார். புது மணமக்களை அழைத்து வர அமுதனும் பாலனும் ஏர்போர்ட் சென்று உள்ளனர்.

இவர்கள் வருவதால் சிவ மாளிகை தன்னை அழகுபடுத்திக் கொண்டது. வீடு முழுவதையும் தெய்வா மூன்று முறை ஆட்களை வைத்துச் சுத்தம் செய்து விட்டார். ஒரு பக்கம் வரவேற்பு நிகழ்ச்சிக்காகச் சிவகுரு ராகினி அமுதன் பாலன் பத்திரிகை வைக்க அலைந்தனர். விழா ஏற்பாடுகளை சண்முகம் பார்த்துக் கொண்டார்.

வீட்டு வேலை செய்யும் மருதன், முத்து, அழகு, மலர் ஆகியோர் தங்கள் 'தங்கச்சியம்மா' வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். வாசலை அடைத்து வண்ணக் கோலம் போட்டு 'வருக வருக' என வரவேற்பும் எழுதி வைத்திருந்தனர்.

வாசல் கதவு திறந்து தயாராக இருந்தது. சிவகுரு கைப்பேசி செயலியில் கார் வருவதைப் பார்த்துக் கொண்டே செய்தி வாசித்துக் கொண்டிருந்தார்.

அமுதன், பாலன் வாகனங்கள் அடுத்தடுத்து வந்து நின்றன. ரகுவீர் வரும் வழி நெடுக தமிழ்நாட்டு அழகை ரசித்து வந்தான். அதுவும் சிறு மலை ஏற ஏற அவனுக்கு மிகவும் பிடித்துப் போனது. வீட்டின் முன் வந்து நின்ற காரின் முன் இருக்கையிலிருந்து இறங்கி தன் கூலர்ஸை கழட்டிச் சுற்றிப் பார்த்தான்.

பின் இருக்கையிலிருந்து ஜானகி இறங்கி, அப்பத்தா இறங்க உதவி செய்தாள். சிவகாமி,  "நீ உன் புருஷன் பக்கத்தில் நில்லு நான் என் புருஷனைப் பார்க்கப் போகிறேன்." 

என எல்லாரையும் கடந்து தன் கணவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு, "என்னத்தான் மெலிந்து போய்ட்டீங்க, தெய்வா சாப்பாடு போடுகிறாளா இல்லையா?" என்றார்.

"சிவகாமி, வா வா, நீயும் தான் மெலிஞ்சுட்ட!" எனப் பெரியவர்கள் பிரிவுத் துயர் நீங்கி ஆனந்தக் கடலிலிருந்தனர்.

 ரகுவீர், ஜானகியை சிவகுரு வேக நடையோடு வந்து வரவேற்றார்.

"வாங்க மாப்பிள்ளை, ஜானும்மா வாடா தங்கம்." எனக் கட்டியணைத்துக் கொண்டார். ராகினியும் வந்து அழைப்பு விடுக்க, ரகுவீர் புவாஷா, பூஃபாஷா கால்களைத் தொட்டான், ஜானகியைத் திரும்பிப் பார்த்தான், வேகமாக வந்து  அவளும் அவனோடு சேர்ந்து ஆசீர்வாதம் வாங்கினாள் ராஜஸ்தானி மருமகளான  ஜானகி.

 ராகினி, பாலன் வண்டியிலிருந்து இறங்கிய பாபுஷா, மாஷாவை காலைத் தொட்டு வரவேற்றார். சிவகுருவும் கைகூப்பி வரவேற்றார். அமிர்தா அவர்களைக் கை பிடித்து இறங்க உதவி செய்தாள், மயூரி வந்து கட்டிக்கொண்டு உள்ளே கூப்பிட்டுச் சென்றாள்.

 தெய்வாவும், சண்முகமும் பெரியவர்களை முறைப்படி வரவேற்க, சிவபரங்கிரி ஜயா, வணக்கம் சொல்லி சம்பந்தியை வரவேற்றார். சிவகாமி அப்பத்தா, "ஆயியே சம்பந்தி!" எனத் தாதிஷாவை வரவேற்றார்.(ஒரு வாரத்தில் பழகிய ஹிந்தி).

 ரகுவீர் அருகில் ஜானகியை நிறுத்தி, ராகினி சுண்ணாம்பு கலந்த சிவப்பு நீரில் வெற்றிலை வைத்து, சூடம் ஏற்றி ஆரத்தி எடுத்தார். மயூரி வந்து மஞ்சள் ஆரத்தியும், தெய்வா தேங்காயில் சூடம் வைத்துச் சுற்றி சண்முகம் கையில் கொடுத்தார். அவர் அதனை வாங்கி வீதியில் உடைத்தார்.

 "வீரூஜி, இதுதான் என்னுடைய சாம்ராஜ்யம், நான் வளர்ந்த அரண்மனை." என்றாள். ரகுவீர், "நல்லா ப்ளஸண்டா இருக்கு." என்றான்.

 "தங்கச்சிம்மா, நல்லா இருக்கீங்களா, மாமன் மகனைப் பார்க்கவும் எங்களுக்கு எல்லாம் சொல்லாமல் கல்யாணம் கட்டிக்கிட்டீங்களா?" என அழகு கேட்டாள்.

"மாப்பிள்ளை ஹிந்தி பட ஹீரோ கணக்க பிரமாதமா இருக்காங்க!" என்றாள் மலர்.

 "வணக்கம்ங்க ஐயா, தங்கச்சியம்மா வணக்கம். உள்ளே போங்க தாயீ, ஐயா காலையிலிருந்து இந்தப் படியில் ஆயிரம் தடவை ஏறி இறங்கியிருப்பாக." என்றான் மருதன், எல்லாரிடமும் தலையசைப்புடன் முகமன்னை ஏற்று உள்ளே சென்றனர். சிவகுரு அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார். 

லக்கேஜை எந்த எந்த ரூமில் வைக்க வேண்டும் என அமிர்தா சொன்னாள்.

"அம்மு பெட்டியை என் ரூமில் வைங்க மருதண்ணன்." என்றான் பாலன்.

 "அண்ணா கீழே அம்மாச்சி ரூம்லயே வைங்க." என்றவள், "சங்கரண்ணன் வர்றாங்க,  நான் வீட்டுக்குப் போறேன்." என்றாள். பாலன் பேசும் முன்பு, தேங்காயை உடைத்து வந்த சண்முகம் பேசினார், "அம்மு உள்ளே வாம்மா, ஏன் இங்கேயே நின்னு பேசிக்கிட்டு இருக்க, வா!" எனக் கையோடு கூட்டி வந்தார்.

"தெய்வா, என் மருமகளுக்குச் சூடா ஒரு பில்டர் காபி,  நம்ம ரூமுக்கு போய் முகம் கழுவிட்டு வா, அத்தை அதுக்குள்ள சூடா காபி கொண்டு வருவா." என அனுப்பி வைத்தார்.

 

"என்னவாம் உங்க மருமகளுக்கு, மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டு இருக்கா?" என்ற தெய்வாவிடம்,  "அட நம்ம ஜானகியோடவே சுத்திகிட்டு  இருந்தது, இப்ப மாப்பிள்ளை வந்துட்டாரில்லை, அது தான் டல் அடிக்கிது." என்றார் சண்முகம்.

அதற்குள் அங்கே வந்த ஜானகி,  "அப்பா அதெல்லாம் என்னைக் கழட்டி விட்டுட்டு ஆபிஸ் வேலைன்னு, அண்ணனும் தங்கச்சியும் தான் செட்டா திரியுவாங்க. இது வேற என்னம்மோ கிளம்பினதில் இருந்து இப்படித் தான் இருக்கா. கேட்டாலும் பதில் இல்லை." என்றாள் ஜானகி.

"சரி பார்ப்போம், பெரியவர்களுக்குக் கீழே இருக்க ரூம் தான் ஜானும்மா, நீ மாப்பிள்ளையை உன் ரூமுக்கு கூட்டிட்டுப் போ, காபியா, டீயா குடுத்து விடுறேன்." என்றார் தெய்வா.

"அம்மா, உங்க கையால ஸ்பெஷல் ஃபில்டர் காபி. வீரூஜியும் காபி குடிப்பாங்க அனுப்பி விடுங்க. அமித்துக்கு எந்த ரூம்?" என்றாள். "பாலன் ரூம் தான். அவன் கணேஷ் ரூமில் இருந்துக்குவான்." என்றார் தெய்வா.

தாதாஷா, தாதிஷாவை ராகினி தங்கள் அறைக்கு எதிராக உள்ள அறைக்கு  அழைத்துச் சென்றார். அமுதன், சிவகுரு, ரகுவீருடன் பேசிக் கொண்டிருந்தனர்.

"வீரூஜி வாங்க என் ரூம் மாடியில் என்றவள், சாரி சாரி நம்ம ரூம் மாடியில் இருக்கு." என்றாள். இங்கு வரவும் ஜானகியின் பாடி லாங்வேஜிலிருந்து, பேச்சு எல்லாமே மாறியிருப்பதைக் கவனித்தான் ரகுவீர்.

"மாடிப் படி தான் ஏறிடுவீங்கல்ல?" என வம்பிழுத்தாள். நான்காவது படியில் ஏறியிருந்தாள். "ஏன் ஏற முடியலைனா தூக்கிட்டுப் போவியா?" என்றான் ரகுவீர்.

"ஜவான் லட்கா இல்லையா, நான் சொன்னது தான் சரியா, இதெல்லாம் டை தானே?" என மேற்படியில் நின்று அவன் சிகையைக் கலைத்தாள்.

"ஏய், முடியைத் தொடாதே." என அவன் தலையை நகர்த்த, பேலன்ஸ் தவறினாள் ஜானகி. கீழே விழப்போனாள்.

"ஜானு!" என்றபடி அவளை அணைத்துப் பிடித்துக் கொண்டான் ரகுவீர் . முன்னே சென்ற அமுதனும், கீழே நின்ற சிவகுருவும் பதறினர்.  ஜானகியைச் சரியாக நிறுத்தி, "படி ஏறும் போதா விளையாடுவாங்க, வா!" என அவளைக் கையைப் பிடித்தே கூட்டிச் சென்றான். அமுதன், சிவகுரு இருவரிடமும் ஒன்றுமில்லை எனச் சைகை காட்டி அனுப்பினான். மேலே ஏறிய போது மஞ்சரி வந்தாள், "ஜுஜூஷா, வெல்கம் டு யுவர் ஸஸுரால்." என்ற படி அவனோடு ஒரு 'ஹக்' செய்தாள். ஜானகிக்கு பொசுபொசுவென வந்தது.

"மஞ்சரி, இந்தப் பக்கம் திரும்புனா நானும் தெரிவேன்." என்றாள் ஜானகி.

"திரும்பாமலே நல்லா தெரியிற அதுவும் டெரர் லுக்கில், நீதாண்டி என்னை வாவென்று சொல்லனும், இது உன் வீடு." என்றாள் மஞ்சரி.

"மஞ்சி ஒரு கரெக்ஷன், இது அவள் வீடு இல்லை, அவள் பிறந்த வீடு. மேரிஜானோட வீடு மும்பையிலும், உதய்பூரிலும் இருக்கு." என்றான் ரகுவீர்.

"பையா, இன்னைக்குப் பூரா பேசுவா மஞ்சி, நீங்க போய் ரெப்ரெஷ் ஆகுங்கள்." என அனுப்பினாள் மயூரி. அமுதன் ரூம் வரை வந்து விட்டுச் சென்றான். அறைக்குள் சென்றவுடன் கதவை அடைத்துவிட்டு ரகுவீர் பக்கம் திரும்பினாள் ஜானகி.

"அதென்ன நான் உங்க முடியைத் தொடக்கூடாதா, அப்படித்தான் தொடுவேன்." என எம்பி அவன் தலை முடியைக் கலைத்தாள். "ஜானும்மா விடு, அப்புறம் விளைவு மோசமா இருக்கும், என்னை ஒண்ணும் சொல்லக்கூடாது." என்றான்.

அவள், தலைமுடியைக் கலைக்க ,அவனும் திருப்பி அவள் முடியைக் கலைத்தான், அவள் அதையே தொடர "விடுடி!" என்ற படி ரூமில் ஓடி ஆட்டங்காட்டி ஒரு மரச் சேரில் உட்கார்ந்தான் ரகுவீர்.

அவன் மேல் குறுக்காகச் சேரின் கைபிடியில் அமர்ந்து அவன் தலைமுடியை மீண்டும் கலைத்தாள், அவன் கழுத்தைச் சுற்றி கைகள் இருந்தது, வாகாகக் குனிந்தவளின்  இதழ்களைத் தன் இதழ்களால் சிறைபிடித்தான், முதலில் அதிர்ந்த ஜானகி, பின் லயித்து முடிவில் மூச்சுவிடச் சிரமமாக அப்படியே மயங்கினாள்.

ரகுவீர் அவளை விடுவித்துப் பதட்டமானான், அவளை அப்படியே தூக்கி, கட்டில் கிடத்தி விட்டு, "ஜானு, ஜானும்மா எந்திரிடி. நான் தான் கண்ட்ரோலா இருந்துருக்கனும், ம்ப்ச்!" என்றவன் அங்கிருந்த தண்ணீர் ஜக்கிலிருந்து டம்ளரில் தண்ணீர் கவிழ்த்து அவள் முகத்தில் தெளிக்க வந்தான்.

அவன் பதட்டமாக அகன்றதும் ஒரு கண்ணைத் திறந்து பார்த்த ஜானகி, எழுந்து டிரெஸ்ஸிங் ரூம் அருகில் ஓடியிருந்தாள். அவன் திரும்பி கட்டிலைப் பார்க்க, "வீரூஜி ஜனவரியில் ஏமாந்தால் என்ன ஃபூல்னு சொல்லுவாங்க?" எனக் கேட்டாள். ரகுவீர் அவள் ஏமாற்றினாள் என்பதில் ஆசுவாசம் அடைந்து, "உன்னை." எனக் கையிலிருந்த தண்ணீரை அவளை நோக்கி ஊற்றினான். அதற்குள் அவள் கதவை மூடிவிட்டாள்.

 

ரகுவீர் ஒரு பெரும் மூச்சோடு பெட்டில் உட்கார்ந்தான். "குட்டி பிசாசு பயமுறுத்திட்டா!" என அவர்களின் இதழொற்றலை நினைத்து லயித்திருந்தான். கதவு தட்டும் ஓசையில் கதவைத் திறந்தான்.

 ஃப்ளாஸ்க் இரண்டு கப் எனத் தட்டை கையில் ஏந்தி வேலைக்காரப் பெண் அழகு நின்றாள். அவன் கதவைத் திறந்து ஓரமாக நின்றான், "காபி!" என்றாள், மேஜையைக் கைக் காட்டினான். அவள் வைத்து விட்டு தலையைக் குனிந்து சிரித்துக் கொண்டே போய்விட்டாள். கதவை மூடிவிட்டு அவன் நிற்கவும், ஜானகி கதவைத் திறக்கவும் சரியாக இருந்தது. "ஜானு உங்கள் சர்வன்ட் மெயிட் லூசாடி, என்னைப் பார்த்து சிரிச்சிட்டுப் போறா?" எனக் கேட்டான்.

"அவள் ஒண்ணும் லூசு இல்லை, இங்க பாருங்கள்." என அவனைத் தள்ளிக் கொண்டு போய்க் கண்ணாடியைக் காட்டினாள்.

"ஓ மை காட், என் ஹேர், லிப்ஸ்டிக் வேற. உன்னை!!!" என அவன் முன்னேற , "காபி சூடா இருக்கு, போங்க வீரூஜி ஃப்ரஸ்ஸாகிட்டு வாங்க. சண்டை அப்புறம் போடலாம்." என அவள் சொன்ன அழகில் சரி எனப் போனான்.

பால்கனி கதவைத் திறந்து காபி குடிக்க வசதியாகச் செட் செய்து வைத்தாள். ஐந்து நிமிடத்தில் முகத்தைத் துடைத்தபடி ரகுவீர் வந்தான். ரூம் கதவு தட்டப்பட்டது, திறந்தான் அமுதன் பாலன் நின்றனர்.

"வாங்க சாலேஷா!" என உள்ளே அழைத்து ஜானகியைத் தேடினான். "பால்கனியில் இருக்கா, அவள் தான் வரச் சொன்னா." என்றான் அமுதன்.

பின்னாடியே மயூரி மஞ்சரி காபியுடன் அமிர்தாவும் வந்தனர். பால்கனியில் காலை நேரக் காபி வித் ஜானி எனச் சங்கத்தைக் கூட்டியிருந்தாள்.

வடக்கே பார்த்து பால்கனி அதனால் மிதமான வெளிச்சம் மட்டுமே இருக்கக் குளுமை இருந்தது. ஆளுக்கு ஒரு கப் ஆவி பறக்கக் காபி ஊற்றி ருசித்துப் பேசியபடி பருகினர். ராகினி கீழே இருந்து குரல் கொடுத்தார், அமுதன் போனை எடுத்து அம்மாவுடன் பேசினான். "அம்மா ஜானு ரூம்ல இருக்கிறோம். சரிம்மா சரி." என வைத்தான்.

"அத்தான் சீக்கிரம் குளிச்சிட்டு கீழே வருவீங்களாம். ஸ்பெஷல் ப்ரேக் பாஸ்ட் ரெடி ஆகுது. உங்கள் ஸாஸும்மா இரண்டு பேரும், உங்களை மூக்குப் பிடிக்க டிபன் சாப்பிட வைக்கத் தயாரா இருக்காங்க." என்றான்.

"அமுதன், இப்ப தான் காபி குடிச்சிருக்கேன். கொஞ்ச நேரம் ஆகட்டும், புவாஷா கிட்ட நான் சொல்றேன்." என்றான் ரகுவீர். "பையா, அதெல்லாம் செட் ஆகாது, பெரியவங்களும் நமக்காகக் காத்திருப்பாங்க." என்றாள் மயூரி.

ரகுவீர், புவாவுக்குப் போன் செய்தான், "வீரூ குளிச்சிட்டியா? டிபன் ரெடி." என்றார் ராகினி.

 

"புவாஷா, இப்ப தான் காபி முடிஞ்சது, இப்ப சாப்பிட்டா சாம்பில் கூடப் பார்க்க முடியாது, நீங்க படே வீரூஜியை வச்சு ஆரம்பிங்க. நான் ஒன் அவரில் வந்து ஒரு கை பார்க்கிறேன் ப்ளீஸ்." என்றான். 

"இன்றைக்கு என்ன ப்ளான். நாளை மறுநாள் தானே ரிஷப்ஸன்." என்றான் ரகுவீர். "ஆமாம் அத்தான், நீங்க ரெஸ்ட் எடுங்க. ஃபங்சன் முடிந்து தான் வெளியில் கூட்டிட்டுப் போகனும்னு ஸ்ட்ரிக்ட் ஆர்டர். இங்க பக்கத்தில் உள்ள இடங்களை எல்லாம் சுற்றிக்காட்டி உங்களுக்குப் போரடிக்காமல் ஜானு பாரத்துக்குவா." என்றான் அமுதன்.

"சரி பையா, நாங்கள் கிளம்புறோம். நீங்களும் ரெடியாகுங்க. புவாஷா சாப்பிடாமல் இருப்பாங்க." எனக் கிளம்பினாள் மயூரி. 

அமிர்தாவை நிறுத்திக் கொண்டாள் ஜானகி, "அமித்து உனக்கு என்னடி பிரச்சினை உம்முன்னு  இருக்க. வீரூஜியை வேற ரூம்க்கு ஷிப்ட் பண்ணிடவா, நீ வா வழக்கம் போலத் தங்கிக்குவோம்." என்றாள் ஜானகி, ரகுவீர் அவளை முறைத்துக் கொண்டு நின்றான்.

"இல்லைடி, நேற்று மும்பையிலிருந்து கிளம்பும் போது தான், நீயும் நானும் தனியா பிரியுறோம்கிறதே புரிஞ்சது. அதே நேரம் அம்மாவும் இன்னைக்குச் சங்கரண்ணனை அனுப்புறேன் ஊருக்கு வாடின்னு சொன்னாங்க அது தான் ஒரே ஃபீலிங்." எனச் சொல்லி கண்ணீரை மடை திறந்த வெள்ளமாக வெளியிட்டாள்.

அவளை அணைத்துக் கொண்ட ஜானகி, "லூசாடி நீ. என்ன பிரியுறோம், கிரியுறோம்னு சொல்லிக்கிட்டு இருக்க, நான் அத்தைகிட்ட பேசிக்கிறேன், நான் இருக்கும் வரை நீயும் இங்க தான் இருக்கனும். உங்கள் அண்ணன் ஏதோ ஏற்பாடு செய்கிறாரே அப்புறம் என்ன?" என ரகுவீரைப் பார்த்துச் சொன்னாள்.

 "அம்ரூ, நான் பேசிக்கிறேன்டா. நிஜமாகவே இங்க எனக்கு உன் உதவி வேணும். நான் உன்னை நம்பி தான் அங்க இருந்து ஸ்டாபை இம்போட் பண்ணலை." என்றான்.

"சரிங்கண்ணா. நீங்க குளிச்சுக் கிளம்புங்கள் அத்தை இரண்டு பேரும் வெயிட் பண்ணுவாங்க." எனப் பாலன் ரூமுக்குச் சென்றாள்.

அவள் சென்ற பிறகு, "அடுத்து உன் செட்யூலைச் சொல்லு நான் பால்கனியில் உட்காரவா இல்லை நீ உட்கார்ந்துக்கிறியா, இதுக்கு அம்ரூ கிட்டச் சொன்ன மாதிரி, அவளை இந்த ரூம்ல கூப்பிட்டு வச்சுக்க. நான் வேற ரூமுக்கு போயிக்கிறேன்." என ரகுவீர், நீளமாக பேசவும், 

 

 அவனுக்குப் பதில் சொல்லாமல் அவன் உடைகளை இன்னர் முதற்கொண்டு எடுத்துக் கொடுத்தாள். "மற்றது எல்லாம் நான் சாப்பிட்டு வந்து வார்ட்ரோபில் அடுக்கிடுறேன். நீங்க குளிக்கப் போங்க." என்றவள் அவன் பின்னோடு வந்து தேவையானதை எடுத்துக் கொடுத்தாள். அவன் முகத்தைப் பார்த்தே நின்றாள்.

"என்னடி நிற்கிற, ஏன் முதுகு தேச்சு விடப் போறியா, இல்லைல போ, சட்டையைக் கழட்டினால் தான் குளிக்க முடியும்." எனச் சலிப்பாகச் சொன்னான் ரகுவீர்.

ஜானகி, அவன் கன்னத்தைத் திருகியவாறு, "சும்மா திட்டிக் கிட்டே இருக்காதீங்க. நான் தான் சகஜமா இருக்க முயற்சி பண்றேன்ல!" என்றாள்.

"கன்னத்தை விடுடி குட்டிப் பிசாசு." எனக் கிள்ளிய கையை எடுத்துவிட்டு, நெற்றியில் முட்டி,  "போ." எனக் குளிக்கச் சென்றான்.

ஜானகி, ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து குரல் கொடுத்தாள், "வீரூஜி அமித்துவைக் கூப்பிடுங்க.” என்றாள். "அவங்க எல்லாரும் கீழே போய்ட்டாங்க, நீ என்னன்னு சொல்லு மேரிமா." என்றான்.

"சரி உள்ளே வாங்க. ஆனால் அப்ப மாதிரி ஒண்ணும் செய்யக் கூடாது." என்றாள். "நான் வந்தால் மயக்கம் போடுவ, நான் வரமாட்டேன்." என்றான்.

"அப்ப நீங்க சாப்பிடப் போங்க, அமித்துவ வரச் சொல்லுங்க. நான் அப்புறம் வருகிறேன்." என்றாள். கதவைச் சத்தமாகத் திறந்து அவளைப் பார்த்தவன், மயில் கழுத்து வண்ணத்தில் ஒயிலாகச் சேலை கட்டி, அவன் வாங்கித் தந்த மயில் டிசைன் ஜுவல்லரி செட் அணிந்து, சுவரோரம் நின்றாள்.

"மறுபடி ஹுக்கா, திரும்பு. நீ வெயிட் போடுற போலடி, அது தான் ப்ளவுஸ் பத்த மாட்டேங்குது. நாளையிலிருந்து வா ஜாக்கிங் போகலாம், நமக்குத் தான் ப்ரி டைம் நிறைய இருக்கே !" என்றவாறு சில்மிசம் ஏதுமின்றி ஹூக்கை மாட்டி விட்டான். மை டப்பாவிலிருந்து துளி மை எடுத்து, அவள் காதுக்குப் பின்னால் வைத்து, "என் லுகாயியை யாரும் கண்ணு வச்சுடாமல் இருக்கனும்." என்றான்.

 

கீழே சாப்பிட இறங்கி வந்தனர். பெரியவர்கள் சாப்பிட்டு முடித்திருந்தனர். சிவகுரு, சண்முகம் இருவரும் மருமகனுக்காகச் சாப்பிடாமல் காத்திருந்தனர். ராஜஸ்தானி ரெஸிபியில், கச்சோரி பாவ், தால் ரோட்டி, நம்ம ஊரு இட்லி, இடியாப்பம், சுவியம், உளுந்த வடை, கேரட் அல்வா என டேபிள் நிறைந்து இருந்தது.

 

ரகுவீர் ஜானகி இருவரையும் உட்கார வைத்து, வெள்ளித் தட்டில் பரிமாறினர் ராகினி. "மாதாஜி, ஏதேது புதுசா இருக்கு, மருமகனுக்கு ஸ்பெஷல் கவனிப்பா, அதில் ஓரத்தில் எனக்கும் கிடைக்குது." என்றாள் ஜானகி.

"ஆமாம் உனக்கு எதுவுமே செய்ய மாட்டோம், என் வீரூவுக்காகத் தான் எல்லாமே போதுமா, சாப்பிடு." என்றார் ராகினி. தெய்வா, அமிர்தா மற்றவரையும் அமர்த்திச் சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தனர். எல்லாரும் ஜானகி வம்பிழுப்பதை ரசித்துக் கொண்டிருந்தனர்.

"உனக்காக வாங்கி வச்சசது தாண்டி என் மகன் பெத்த சீமைக் கிழங்கே. உன் சீருக்கு வாங்கி வச்சது, நான் தான் இங்கேயே எடுத்துப் பரிமாறச் சொன்னேன்." என்றார் அப்பத்தா.

"அப்பத்தா, மறு வீட்டுச் சீர்  இதே மாதிரி வேற வந்தாகனும். நீ பீரோவில் பூட்டி வைத்திருக்கப் பாத்திரம் பூரா எனக்கு வந்திரனும்." என்றாள் ஜானகி.

"இங்கபாரு உனக்குன்னு, வாங்கி வச்சத்தைக் குடுத்துடுவோம். உன் சடங்குக்கு வந்ததைக் கூடத் தூக்கிட்டுப் போ. ஆனால் பரம்பரையா இங்க உள்ளது. என் பேரன் பொண்டாட்டிகளுக்கு வேண்டும், மூன்று பேர் இருக்கானுங்கடி." என்றார் சிவகாமி.

"அடியாத்தி, சிவகாமி பேத்தின்னு வாய்க்கு வாய் சொல்ற, நகை நட்டுன்னு வந்தால் மட்டும் உன் பேரன் பொண்டாட்டிக்கு குடுப்பியோ, தாத்தா கேட்டிங்களா உங்கள் சம்சாரம் பேசுறதை." என்றாள் ஜானகி.

ரகுவீருக்கு இவள் தமிழில் பேசுவதால் ஒண்ணும் புரியவில்லை, மற்றவர் சிரித்தபடி கேட்டிருக்க ஏதோ வம்பு செய்கிறாள் என்பது மட்டும் புரிந்தது. ராகினி மொழி பெயர்த்தார்.

"ஜானும்மா, நம்ம கிட்ட ஜிவல்லரி கடையே இருக்கு, அதுவும் போகப் படி தாதிஷா நகைக்கு மும்பையே விலை பேசலாம். அப்பத்தாகிட்ட எதற்குச் சண்டை போடுற?" என்றான் ரகுவீர்.

"வீரூஜி, இது நகை பிரச்சினை இல்லை உரிமை பிரச்சினை. நீங்க பேசாமல் இருங்க." என்றாள் ஜானகி.

"தாத்தா என்ன பதிலைக் காணோம்?" என்றாள் விடாப்பிடியாக. 

"தங்கப்புள்ளை, நீயாச்சு உன் அப்பத்தாவாச்சு, உங்கள் அப்பத்தா இன்னைக்குத் தான் ஊரிலிருந்து வந்திருக்கு. என்னை இதில் இழுக்காத." எனச் சரண்டர் ஆனார் சிவபரங்கிரி. சிவகாமி அப்பத்தா வெற்றிப் பார்வைப் பார்த்தார்.

"அப்பா ஜான், சண்முப்பா நீங்க என்ன சொல்றீங்க?" என்றாள் ஜானகி.

"ஜானும்மா, கடைக்கு வா கை காட்டுறது எல்லாம் வாங்கித் தர்றோம்." என்றனர் சிவகாமியின் செல்வன்கள்.

நாநிஷா ராகினி சொன்னதைக் கவனித்து, ஜானகி அருகில் வந்தவர், "ராத்தோட் காந்தானி நகை எல்லாம் உனக்குத் தான் ஜானிம்மா. உங்கள் தாதிஷா இவ்வளவு பிகு பண்றாங்க. நமக்கு நம்ம காந்தானி நகை போட்டாலே தினம் ஒன்று ஒரு வருஷம் போடலாம்." என்றார் மயூரா தேவி.

மயூரி குறுக்கிட்டாள், "தாதிஷா, அப்ப எனக்கு?" என்றாள். "அது உன் பாபுஷா, பாய்ஷா போடுவாங்க . நாங்களும் காந்தானி நகை பஹுவுக்குத் தான் கொடுப்போம். ஜானகி மஞ்சரியைத் தான் அது சேரும்." என்றார்.

"ஆகா ஃபைட் இல்லாமலே நமக்குக் கிடைக்குது. சுக்ரியா நாநிஷா!" என்றாள் மஞ்சரி.

 "ஏண்டி உங்கள் அம்மாச்சி குந்தாணி, குந்தானிங்குதே உன்னைத் திட்டுதா?" என்றார் சிவகாமி. சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜானகிக்குச் சிரித்துப் புரை ஏறியது. இருமி மூச்சு வாங்கினாள். கண்கள் சிவந்து கண்ணீர் வந்தது. பக்கத்திலிருந்த ரகுவீர் முதுகைத் தடவி தண்ணீர் கொடுத்து அவளை இயல்புக்குக் கொண்டு வந்தான்.

அமுதன், பாலன் அடக்கமாட்டாமல் சிரித்தனர். தெய்வா அமிர்தா சமையல் கட்டுக்கு ஓடி விட்டனர். சிவபரங்கிரி ஐயா, தாதாஷா தாதிஷாவிற்கு மொழி பெயர்த்தார்.

சிவகுரு கண்கள் கலங்கச் சிரிப்பைச் சாப்பாட்டில் அடக்கினார். "உங்களுக்கும் புரை ஏறும், கொஞ்ச நேரம் கழித்துச் சாப்பிடுங்க." என்றார் ராகினி. மயூரி, மஞ்சரி, ரகுவீருக்கு அமுதன் சிரிப்பினூடே மொழி பெயர்த்தான்.

"ஏம்மா, என் மகள் சாப்பிடும் போது தான், இப்படிப் பேசுவீங்களா?" என்றார் சண்முகம். "அப்பத்தா, செம கவுண்டர்!" என்றாள் ஜானகி.

"அப்பத்தா, அது குந்தாணி இல்லை காந்தானி. அப்படின்னா பரம்பரை குடும்பமென்று அர்த்தம்." என்றான் பாலன்.

"அப்பத்தா, இங்கே வந்து தங்குறதுக்கும் கணக்கு இருக்கா, விருந்தும் மருந்தும் மூன்று நாளென்று துரத்தி விட்டுடுவியா?" என்றாள் ஜானகி.

"எப்பவும் ஞாபகம் வச்சுக்க, மாப்பிள்ளையோடு வந்தால் எவ்வளவு நாளென்றாலும் தங்கலாம்." என்றார் சிவகாமி.

 

"வீரூஜி, இவர்கள் என்னைக் கை கழுவிட்டாங்க, நீங்க எப்படி?" என ஹிந்தியில் கேட்டாள் ஜானகி. அவள் கையைப் பிடித்துத் தன் நெஞ்சில் வைத்துக் கொண்டான் ரகுவீர்.

"ராணிஷா, இப்படிக் கேள்வி எல்லாம் கேட்கலாமா. உங்களை நம்பி தான் பலபேர் இருக்கோம், பூஃபாஷா நான் சொல்றது சரிதானே?" என்றான் ரகுவீர்.

"ஆமாம் மாப்பிள்ளை  ஜானும்மா, என்னடா பேச்சு இது, அப்பத்தா உன்னை வம்பிழுக்குறாங்க அவ்வளவு தான். எங்கள் உயிரே நீ தானே!" என்றார் சிவகுரு.

அந்த நேரம் சுந்தரவள்ளி, மகன் சங்கரப்பாண்டியுடன் வந்து சேர்ந்தார். எல்லோரும் முறைக்குத் தக்கபடி வரவேற்றனர். அமிர்தாவை அணைத்துக் கொண்டார். அவரும் வந்தவர்களுக்கு வணக்கம் சொன்னார்.

அத்தையும், மருமகளும் சேர்ந்து அப்பத்தாவைத் தாக்கினர். சிவகாமி அதற்கும் ஈடு கொடுத்தார். மற்றவர் வாய் பிளந்து இந்த ட்ரையோ பேக்கைப் பார்த்திருந்தனர்.

அமுதன் மயூரியிடம், "நீயும் உன் புவாஷாவும், தாதிஷா கிட்ட இப்படிப் பேசுவீங்களா?" என வினவினான். மயூரி, " நோ சான்ஸ்!" என்றாள். மஞ்சரி அமிர்தாவின் சப் டைடிலோடு இந்தப் படத்தைச் சுவாரஸ்யமாகப் பார்த்தாள்.

பின்னர், எல்லாரும் ஹாலில் அமர்ந்திருக்கும் போது, அமிர்தாவை ஊருக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னார் அவள் அம்மா. 

ரகுவீர், சிவகுருவிடம் பேசினான். "வள்ளி, மாப்பிள்ளை சொல்றாரு, இங்க சௌந்தரராஜன் மில்லுல, ராத்தோட்ஸ் க்ரூப் வேலை நடக்குதாம். அதை மாப்பிள்ளை மூன்று மாசம் நம்ம ஊரில் தங்கிப் பார்க்கப் போறாரு. இவர்கள் ஊருக்குப் போன பிறகு அமிர்தா தான் முழுப் பொறுப்பு. அதனால் ஜானகி இருக்க வரைக்கும் நம்ம வீட்டில் இருக்கட்டுங்குறாரு." என்றார்.

"எனக்கு என்ன அண்ணன் தெரியும், நீங்களாச்சு, உங்கள் அத்தானாச்சு, அவுக கிட்ட பேசுங்கள்." என்றவர்  தொடர்ந்து, "நானும் அவுங்க அப்பாகிட்ட பேசுறேன். புள்ளையை என் கிட்ட வச்சுப் பார்த்து ரொம்ப நாளாச்சு அண்ணன். வரவேற்பு முடியவும் ஜானகி நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வரட்டும், அவுக கூடச் சேர்ந்து திரும்பி இங்கே வரட்டும்." என்றார் சுந்தரவள்ளி .

ஜானகி மறுத்துச் சொல்லப் போனாள், அமிர்தா, "இல்லைடி நான் அம்மா கூடப் போறேன். ஒரு பத்து நாள் இருந்துட்டு, அண்ணன் ஆரம்பிக்கும் போது வந்துடுறேன்." என்றாள். "சரி போ." என முகம் திருப்பினாள் ஜானகி.

 

"உன் ரிசப்ஷனுக்கு ஹெல்ப் பண்ண வந்துருவேன்டி, சரின்னு சொல்லு." என்றாள் அமிர்தா. "சரிடி, நான் சொல்லும் போது வரனும்." என அனுப்பி வைத்தாள். ரகுவீர் ஜானகி யை விருந்துக்கு அழைத்த சென்றார். மும்பையிலிருந்து வாங்கி வந்த ஸ்வீட் ஸ்நேக்ஸை தேனு மானுக்குக் கொடுத்து விட்டாள் ஜானகி.

ஹாலில் அமர்ந்து எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர். தாதாஷா தாதிஷா விற்கு, இங்குள்ள விசயங்களை விளக்கிக் கொண்டிருந்தார் சிவகுரு.

மயூரி, அமுதனோடு ஆபீஸ் ரூமிற்குச் சென்று விட்டாள். மஞ்சரி, ஜானகியோடு அமர்ந்து ரிஷப்ஸன் தீம் ட்ரெஸ் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள்.

ஶ்ரீராம் ரகுவீரை பார்க்கவெனக் கால் செய்து விட்டு வந்தான். ஜானகியை பார்த்து, "என் பேரை, சிம்மை வச்சு உன்னைக் கடத்தி இருக்கிறான். ஐயம் ஸோ சாரி. இப்படி எனக்காக எல்லாம் நீ ரிஸ்க் எடுத்திருக்கக் கூடாது." என்றான்.

"ஆமாம் நீயும் அன்னைக்கு ரிஸ்க் எடுத்து ராத்தோட் க்ரூப் சிஸ்டம் ஹேக் பண்றதை சொன்னியே!" என்றாள் ஜானகி.

"அந்த நாள், என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் ராம்." என்றான் ரகுவீர், கண்களால் ஜானகிக்குச் செய்தி இருந்தது. அந்த இரவு தான் ஜானகி தூக்கத்தில் தன் காதலைச் சொன்னாள்.

"அதற்கெல்லாம் சேர்த்துத் தான் இ

களஞ்சியம்
63- ருத்ரா

 

சிவமாளிகையில் இருந்து பிறந்த வீட்டோடு சமரசம், சம்பந்தம் பேச வந்த ராகினி, அந்த வீட்டின் மகளாய் சகல உரிமையும் பெற்று, சம்பந்தியாகவும் ஆகி மன நிறைவாகக் கிளம்புகிறார். சிவகுரு மனைவிக்காக வந்தவர் மகளின் பொற